Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நா.உ. ஜெயானந்தமூர்த்தியின் சகோதரர் சுட்டுப் படுகொலை

Featured Replies

நா.உ. ஜெயானந்தமூர்த்தியின் சகோதரர் சுட்டுப் படுகொலை

ஜதிங்கட்கிழமைஇ 20 ஓகஸ்ட் 2007இ 22:26 ஈழம்ஸ ஜந.ரகுராம்ஸ

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான சேனாதிராஜா ஜெயானந்தமூர்த்தியின் மூத்த சகோதரர் சேனாதிராஜா தியாகச்சந்திரன் (வயது 55) இன்று இரவு மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

இவர் விபத்தினால் கொல்லப்பட்டுள்ளதாக முதலில் வெளியான செய்திகள் தெரிவித்த போதிலும்இ வாழைச்சேனை மருத்துவமனை வட்டாரங்கள் அவரது உடலில் இரண்டு துப்பாக்கிச் சூட்டுக்காயங்கள் இருப்பதனை உறுதிப்படுத்தியுள்ளன.

வாழைச்சேனை கடதாசி தொழிற்சாலையில் பணிபுரியும் இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர்இ இன்று திங்கட்கிழமை மாலை வீடு திரும்பிக்கொண்டிருக்கும் போதுதான் ஓட்டமாவடிப் பகுதியில் வைத்துக் கொல்லப்பட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஓட்டமாவடிப் பகுதியில் காணப்பட்ட இவரது சடலத்தை அப்பகுதி மக்கள் எடுத்து வந்து வாழைச்சேனை மருத்துவமனையில் ஒப்படைத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மாலை சுமார் 7.00 மணியளவிலேயே சம்பவம் இடம்பெற்ற போதிலும் இரவு 9.00 மணிக்குப் பின்னர்தான் செய்தி உறுதிப்படுத்தப்பட்டது.

கொலை அச்சுறுத்தலைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் சே.ஜெயானந்தமூர்த்தி தற்போது கொழும்பில் வசித்து வருகின்றார்.

கடந்த வருடம் ஜூலை மாதம் 21 ஆம் நாள்இ சே.ஜெயானந்தமூர்த்தியின் இல்லத்தை இலக்கு வைத்து நடத்தப்பட்ட ஆர்பிஜி உந்துகணைத் தாக்குதல் ஒன்றில் அவரும்இ அவரது குடும்பத்தினரும் மயிரிழையில் உயிர் தப்பியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

புதினம்

கண்ணீர் அஞ்சலிகள்!

sympathywreath2infoyp6.gif

  • கருத்துக்கள உறவுகள்

அன்னாருக்கு ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலிகள்

திரு. ஜெயானந்தமூர்த்தி மேலே கோபத்தில் உள்ள கருணா கும்பலும், இராணுவ தரப்பும் அவரைப் பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு அரசியலே அறியாத அவரது சகோதரரைக் கொல்வது என்பது ஒரு வித சைக்கோ.

முன்பு தங்கள் இயக்கத்தினுள் ஏற்பட்ட முரண்பாட்டால் நடந்த துப்பாக்கிச் சண்டையின் பின் தப்பித்தவரின் மீதுள்ள வெறியை, அவரது சகோதரங்களைக் கொல்வதன் மூலம், கருணா குழு வெறியைச் சாதித்தது. கருணா குழுவல்ல, இவ்வாறு முன்பு அனைத்து அடிவருடிக்கும்பல்களும் செய்ய வேலைகள் தாம்.

ஆனால் 2000ம் ஆண்டு காலப்பகுதியில் நாட்காட்டியில் தமது பிள்ளைகளின் படங்கள் வந்தபோது, புலிகளால் ஆபத்து என சந்திரிக்கா அம்மையார் அழுது குழறியபோது, புலிகள் தெளிவாகச் சொன்னார்கள். எமக்கு உம் குழந்தைகள் எதிரிகள் அல்ல என்று.

இச் சந்தர்ப்பத்தில் தெரிவது என்னவென்றால் ஜெயானந்தமூர்த்தி மேல் கடுமையான வெறுப்பும், கோபமும் கொண்ட கும்பல்கள் கடுமையான வெறி கொண்டு திரிகின்றார்கள் என்பது. எனவே இச்சந்தர்ப்பத்தில் ஜெயானந்தமூர்த்தி மட்டுமல்ல, அனைத்து தமிழ் தேசிய ஆதரவாளர்களும் தங்களுடைய சுயபாதுகாப்பைத் தாங்களாகவே உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். அது தான் எதிரிகளிடம் இருந்து ஒவ்வொருவரையும் தற்காத்துக் கொள்ள உதவும்.

ஜெயானந்த மூர்த்தி தற்போது அவுஸ்ரெலிய வானொலி ஒன்றுடன் உரையாடல் ஒன்றை நடத்தினவர் அதில் அவர் குறிபிட்டு இருந்தார் அதாவது முஸ்லீம் இனத்தவர்கள் அத்துமீறி குடியேறினார்கள் அதை தடுக்க தான் ஆர்பாட்டங்கள் மற்றும் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து இருந்தேன் என்றும் இன்று அதன் தீர்பு வர இருந்தது என்றும் இவ்வாறு செய்ததால் தனக்கும் மூஸ்லீம் அரசியல் கட்சி தலைவர்களிற்கும் பாரிய பிரச்சினைகள் இருந்ததாகவும் குறிபிட்டு இருந்தார் அத்துடன் இந்த கொலை திட்டமிட்ட ஒரு கொலை என்றும் அவர் குறிபிட்டிருந்தார்.............. :(

ஜெயானந்தமூர்த்தியின் சகோதரிற்கு கண்ணீர் அஞ்சிலிகள்..............

ஜெயானந்த மூர்த்தியின் சகோதரர் நீதிமன்ற உத்தரவின் பின்னரே கொலை

வாழைச்சேனை தமிழ்ப் பிரதேசங்களில் உள்ள அரச காணிகளில் அத்துமீறிய குடியேயற்றங்கள் இடம் பெறக் கூடாது என வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் றேற்று முன்தினம் உத்தரவிட்ட பின்னரே மாலையில் ஓட்டமாவடிப் பகுதியில் வைத்து முதுகுப்புறமாக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஜெயானந்த மூhத்தி எம்.பி யின் தமையனார் சேனாதிராஜா தியாகச்சந்திரன் கொல்லப்பட்டார் எனக் கூறப்படுகின்றது.

இவரது முதுகுப் புறமாக உள்நூழைந்த இரு துப்பாக்கி ரவைகள் வயிற்றைக் துளைத்து வெளியேறியிருக்கின்றன. வாழைச்சேனைத் தமிழ்ப் பிரதேசத்தில் உள்ள அரச காணிகளில் அத்துமீறிய

குடியேற்றங்களை த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்த மூர்த்தி கடுமையாக எதிர்த்து வருபவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

அந்தக் குடியேற்றங்களுக்கு எதிராக வாழசை;சேனை நீதிமன்றம் நேற்று முன் தினம் தடை உத்தரவு விடுத்த பின்னர் இருளும் சமயத்தில் ஓட்டமாவடியில் வைத்து ஜெயானந்த மூர்த்தியின் தமையனார் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கின்றார்.

இவர் சுடப்பட்ட இடத்திலிருந்து ஒரு பக்கத்தில் சற்றும் தொலைவில் நகரப் பிதேசமும், மற்றைய இரு பக்கங்களிலும் சுமார் நூற்றியைம்பது மீற்றர் தொலைவில் சோதனைச் சாவடிகளும் உள்ளன என்றுறும் சுட்டிக் காட்டப்படுகின்றது.

உயிரிழந்த தியாகச் சந்திரனின் சடலத்தை வாழைச்சேனை நீதிவான் மாணிக்கவாசகர் கணேஷராஜா வைத்தியசாலைக்குச் சென்று நேரில் பார்வையிட்டார்.

நன்றி சுடர் ஒளி

நிலவரத்தில் ஒரு காத்திரமான உரையினை வழங்கி இருந்தார் கெயானந்த மூர்த்தி தமிழ் தேசியத்தின்பால் பற்றுகொன்ட ஜெயானந்த மூர்த்தி அவர்களை பழிவாங்குவதாக நினைத்து அவரின் சகோதரரிடம் தமது வீரத்தை காட்டியிருகின்றனர் கோழைகள்

அன்னாருக்கு என் கண்னீர் அஞ்சலிகள் அத்துடன் அன்னாரின் குடும்பத்தினருக்கு என் அனுதாபங்கள்

முஸ்லீம் குழுவினர்தான் இந்த கொலையை செய்திருகலாம் என சந்தேகிக்கின்றதாகவும் காலமானவரின் மகனை 2 முஸ்லீம்கள் மிரட்டியதாகவும் ஜெயானந்த மூர்தி அவர்கள் தெரிவித்திருகின்றார்

  • கருத்துக்கள உறவுகள்

ஓட்டமாவடியில் இயங்கும் ஆயுதக் குழுவே எனது சகோதரரின் கொலைக்குக் காரணம்.

ஜ வியாழக்கிழமைஇ 23 ஆகஸ்ட் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ

சகோதரரின் படுகொலை தொடர்பாக ஓட்டமாவடி பிரதேசத்தில் இயங்கி வரும் ஆயுதக் குழுவொன்றின் மீது தனக்கு சந்தேகமிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான எஸ்.ஜெயானந்த மூர்த்தி தெரிவித்துள்ளார். ஜெயானந்த மூர்த்தி எம்.பி.யின் மூத்த சகோதரரான சேனாதிராஜா தியாகச்சந்திரன் (வயது- 55) நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவு வாழைச்சேனை ஓட்டமாவடி பகுதியில் வைத்து ஆயுதக் குழுவொன்றால் சுட்டுக் கொல்லப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே ஜெயானந்த மூர்த்தி எம்.பி. இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது; "எனது சகோதரரின் படுகொலையானது மோசமானதொரு கோழைத்தனமான செயலாகவே நான் கருதுகிறேன். முஸ்லிம் மக்களின் நடமாட்டம் கூடுதலாக இருக்கும் பிரதேசமான ஓட்டமாவடியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இப்பகுதியில் இந்தப் படுகொலை இடம்பெற்றிருப்பதானது அங்கு இயங்கும் ஆயுதக் குழுவொன்றின் மீது எனக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. அது மாத்திரமின்றி வாழைச்சேனை தமிழ்ப் பிரதேசங்களான கறுவாக்கேணி, கொண்டையன் கேணி, சுங்கான்கேணி போன்ற பகுதிகளில் தமிழ் மக்களின் இடங்களை மையமாக வைத்து குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இது தொடர்பாக நான் எடுத்த நடவடிக்கை காரணமாகவும் அங்கு எனக்கு எதிரான பல செயற்பாடுகள் இடம்பெற்றன. என்னைப் பழி வாங்கும் வகையிலேயே எனது சகோதரர் படுகொலை செய்யப்பட்டடுள்ளா"ரென்றும் தெரிவித்தார்.

nitharsanam.com

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.