Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்கள் மத்தியில் தன்னை பற்றி காணப்படும் தவறான எண்ணத்தை மாற்றுவதற்கு கோட்டாபய முயற்சி?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் பணத்தை செலவிடவில்லை, தனது சொந்தப்பணமே என்கின்றார் கோட்டா !!

மக்கள் மத்தியில் தன்னை பற்றி காணப்படும் தவறான எண்ணத்தை மாற்றுவதற்கு கோட்டாபய முயற்சி?

மக்கள் மத்தியில் தன்னை பற்றி காணப்படும் தவறான எண்ணத்தை மாற்றுவதற்கான நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆரம்பித்துள்ளார்.

பலநாடுகள் புகலிடம் வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, நாட்டிற்கு திரும்பியுள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மக்கள் மத்தியில் தன்னை பற்றிய எதிர்மறையான அபிப்பிராயங்களை மாற்றியமைத்து தன்னைமீண்டும் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மக்கள் மத்தியில் தன்னை பற்றி காணப்படும் தவறான கருத்தினை மாற்றுவதற்கும் தன்னை சுற்றியிருந்தவர்கள் தவறான முடிவுகளை எடுக்குமாறு தன்னை தவறாக வழிநடத்தினார்கள் என கிராம மக்களிற்கு தெரிவிப்பதற்குமான இரகசிய பிரசார நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி ஆரம்பித்துள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாகயிருந்தவேளை சென்ற கிராமங்களிற்கு ஊடகபிரமுகரும் பெரும் வர்த்தகருமான ஒருவரின் ஏற்பாட்டில் குழுவொன்று செல்கின்றது இவர்கள் முன்னாள் ஜனாதிபதி பற்றிய தவறான கருத்தினை மாற்றுவதற்காக மக்களுடன் உரையாடவுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

ராஜபக்ஷ தவறாக வழிநடத்தப்பட்டுள்ளார் என்றும் அவரது குடும்பத்தினர் உட்பட அவருக்கு நெருக்கமானவர்கள் அவரை தவறாக வழிநடத்தியுள்ளனர் என இவர்கள் கிராம மக்கள் மத்தியில் தெரிவித்து வருகின்றனர் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2022/1302843

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be a cartoon

  • கருத்துக்கள உறவுகள்

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டாபய தேடுவது ஆதரவையா ? அனுதாபத்தையா ?

By DIGITAL DESK 5

09 OCT, 2022 | 03:28 PM
image

சிவலிங்கம் சிவகுமாரன்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பெயர்  அரசியல் வட்டாரங்களில்  மீண்டும் அடிபட தொடங்கியுள்ளது. மக்கள் எதிர்ப்பாலும் போராட்டங்களினாலும் நாட்டை விட்டு வெளியேறிய அவருக்கு எந்த நாடுகளும் புகலிடம் அளிக்க தயாராக இருக்கவில்லை. 

இதன் காரணமாக எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் தான்  இலங்கையில் இருப்பதே பாதுகாப்பானது என்பதை உணர்ந்த அவர் நாடு திரும்பியிருந்தார். முன்னாள் ஜனாதிபதிக்குள்ள வரப்பிரசாதங்களுடன் அவர் பாதுகாப்பாக தற்போது இருக்கின்றார். 

எனினும் தற்போது மீண்டும் தனது ஆதரவு மட்டம் எந்தளவுக்கு மக்கள் மத்தியில் உள்ளது என்பதை பரீட்சித்துப் பார்க்கும் நடவடிக்கைகளில் அவர் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. 

அதிபுத்திசாலி குழுவினர் என்ற அடையாளத்துடன் கோட்டாபய தன்னருகே வைத்திருந்த ‘வியத்மக’ குழுவினர், அவரது ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் உச்ச அளவில் தமது பங்களிப்பினை வழங்கியிருந்தனர். 

அவர்களோடு இணைந்து  பெளத்த பிக்குகளும்  ஒவ்வொரு பிரதேசத்திலும் அமைந்திருந்த விகாரைகளின் ஊடாக மக்கள் சந்திப்புகளை நடத்தி கோட்டாபயவின் வெற்றிக்கு உழைத்திருந்தனர். பொதுபல சேனா அமைப்பு இதில் பிரதான இடம் வகித்தது. ஆனால் இவை மிகவும் இரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தன.

எனினும் அவர் தேர்தலில் வென்ற பிறகு வியத்மக குழுவினரின் ஆலோசனைகளையெல்லாம் பொருட்படுத்தவில்லை. தனது சகோதரரும் அனுபவ அரசியல்வாதியுமான மஹிந்தவின் பேச்சையே அவர் கேட்கவில்லை. 

இறுதியில் அவருக்குகெதிராக மக்கள் மத்தியிலிருந்து போராட்டம் வலுத்த பிறகும் கூட எவரினதும் ஆலோசனைகளை கேட்காமல் நாட்டை விட்டுச்சென்றதும் கூட அவரின் விருப்பப்படியே அமைந்ததாக அண்மையில் மகிந்த தரப்பு வட்டாரம் தெரிவித்திருந்தமை முக்கிய விடயம்.

இந்நிலையில் மீண்டும் தனது ஆதரவு மட்டம் மக்கள் மத்தியில் எவ்வாறு உள்ளதென்பதை ஆராய அவர் ஒரு குழுவினரை நியமித்துள்ளமை தெரியவந்துள்ளது. ஜனாதிபதியானவுடன் ‘கிராமத்துடனான கலந்துரையாடல்’  என்ற திட்டத்தை அவர் முன்னெடுத்திருந்தார். தற்போது அந்த பாணியிலேயே அவர் தனக்கு ஆதரவு தளம் கொண்ட கிராமங்களில் அவற்றை மீண்டும் அமுல்படுத்தத் தொடங்கியுள்ளார். 

நீண்ட காலமாக எந்த வித புதிய பதிவுகளையும் கொண்டிராத அவரது உத்தியோகபூர்வ  முகநூல் பக்கம் தற்போது செயற்பட ஆரம்பித்துள்ளது. இவ்வருடம் ஜுலை 13ஆம் திகதி அவர் நாட்டை விட்டு வெளியேறியிருந்தார். அன்றைய தினம் எசல போயா தினமாகும். அதைப்பற்றிய பதிவையே அவரது உத்தியோக பூர்வ முகநூல் தளம் இறுதியாக தாங்கியிருந்தது.  

ஆனால் இவ்வருடம் பெப்ரவரி மாதம் முதல் அவரது முகநூல் பக்கத்தில் பலரும் கடும் எதிர்ப்புகளை தெரிவிக்கும் கருத்துக்களை இட்டு வந்ததால் மார்ச் மாதம் 30ஆம் திகதியிலிருந்து அவரது பதிவுகளுக்கு பின்னுாட்டங்கள், இடுகைகள் இடுவது கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. 

அதன் பிறகு சுமார் மூன்று மாத கால இடைவெளிக்குப் பிறகு கடந்த செப்டெம்பர் மாதம் 12ஆம் திகதி இலங்கை கிரிக்கெட் அணியின் ஆசிய கிண்ண வெற்றி மற்றும் இலங்கை மகளிர் வலைப்பந்தாட்ட அணியின் வெற்றி குறித்து அவரது முகநூல் பக்கம் வாழ்த்து செய்தியொன்று பதிவாகியிருந்தது. 

ஆனால் அந்த பதிவுக்கு சுமார் 26 ஆயிரம் பேர் தமது பிரதிபலிப்புகளை உணர்ச்சி வெளிப்படுத்தல் குறியீடுகள் மூலம் காட்டியிருந்தனர். அதில் சுமார் 13ஆயிரம் பேர் சிரிப்பு அல்லது கிண்டல் தொனியை உணர்த்தும் வண்ணம் தமது உணர்வை வெளிப்படுத்தியிருந்தமை முக்கிய விடயம். 

பலர்  முன்னரை விட கிண்டல் தொனிக்கும் பின்னூட்டங்களை பதிவிட்டிருந்தனர். காரணம் முன்னைய கட்டுப்பாடுகள் அந்த முகநூல் பக்கத்தில் தளர்த்தப்பட்டிருந்தன. முன்னாள் ஜனாதிபதியின் வாழ்த்துச் செய்திக்கு ஒருவர் பின்வருமாறு பின்னூட்டம் இட்டிருந்தார், ‘ இலங்கையர்களாகிய நாம் மகிழ்ச்சியடைகிறோம்…ஏனென்றால் எமது நாட்டுக்கு ஆதரவளிக்க குறைந்தது ஒரு ராஜபக் ஷவாவது இருக்கின்றாரே…! 

ஆனால் அந்த பதிவுக்குப் பிறகு இந்த பத்தி எழுதப்படும் வரை அந்த முகநூல் பக்கத்தில் புதிதாக எந்த பதிவுகளும் இல்லை. ஆனால் ஆச்சரியப்படும்படியான விடயம் என்னவெனில் அந்த பக்கத்தில் அவரது விபரம் ‘இலங்கையின்  7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி’ என்றே இன்னும் உள்ளது.

 கிராமத்துடன் கலந்துரையாடல் புதிய திட்டத்தில் நியமிக்கப்பட்டிருக்கும் குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய தவறாக வழிநடத்தப்பட்டு விட்டார் என்ற விடயத்தை மக்களுக்கு அழுத்தி கூறி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

ஆனால் அது எந்தளவுக்கு எடுபடுமோ தெரியாது. ஏனென்றால் அவர் ஜனாதிபதியானவுடன் எடுத்த முதல் தவறான முடிவே இரசாயன பசளைகள் இறக்குமதியை நிறுத்தியது தான். இதன் காரணமாவே விவசாயிகள் கொதித்தெழுந்தனர். 

நாட்டில் நெற்பயிர்ச்செய்கை மாத்திரமன்றி உப உணவு பயிர்ச்செய்கையில் அதிகம் ஈடுபட்டிருப்பவர்கள் கிராமத்து சிங்கள விவசாயிகள். அவர்களின் கோபத்துக்கே முதலில் கோத்தாபய ஆளாகியிருந்தார். 

இரசாயன உரத் தடை விவகாரம் தவறானது என  அப்போது பிரதமராகவிருந்த மகிந்தவும் வெளிப்படையாக கருத்துத் தெரிவித்திருந்தார். பொதுஜன பெரமுனவின் உயர்மட்ட உறுப்பினர்கள் ஏன் ‘வியத்மக’ அமைப்பினரும் இது குறித்து கோட்டாபயவுக்கு எடுத்துக் கூறியும் தனது முடிவில் அவர் பிடிவாதமாக இருந்தார். போதுமான அளவுக்கு சேதங்கள் ஏற்பட்ட பிறகே அவர் தனது செயல் தவறானது என அறிவித்தார். 

இந்த விடயத்தில் யார் அவரை தவறாக வழிநடத்தியிருக்க முடியும்?   கோட்டாபயவுக்கு நெருக்கமானவர்களும் அவரது குடும்பத்தினருமே இவ்வாறு அவரை தவறாக வழிநடத்தி விட்டார்கள் என்ற விடயமும்  மக்களுக்கு கூறி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்படியானால் அவர் தனித்து இயங்குவதற்கு முடிவு செய்து விட்டாரோ என்ற எண்ணம் ஏற்பட்டுள்ளது.

மஹிந்த அணியினர் எந்த நிலையிலும் கோட்டாபயவை தமது பக்கம் மீண்டும் இணைத்து விஷப்பரீட்சையில் இறங்க தயாராக இல்லை. இதை மொட்டு கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் அடிக்கடி மகிந்த ராஜபக்ஷவுக்கு வலியுறுத்தி வருகின்றனர். இதை அவர் ஏற்றுக்கொண்டுள்ளதாகவே தெரிகின்றது. 

ஆனால்  கோட்டாபய மீண்டும் அரசியலில் கோலோச்ச வேண்டும் என நினைக்கும் குழுவினரும் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர். அவர் அமெரிக்க நிரந்தர வதிவிடத்துக்கு விண்ணப்பித்துள்ளாராயினும் அது கிடைப்பதற்கு நீண்ட காலம் எடுக்கும் என்று கூறப்படுகின்றது. 

அதற்கிடையில் அவர் இலங்கை மக்கள்  தன் மீது கொண்டுள்ள  கோபத்தை தணித்து, தான் எந்த பிரச்சினைகளுக்கும் காரணமில்லையென்பதை வெளிக்காட்டி விட்டு பின்பு நிரந்தரமாக அமெரிக்கா சென்று குடியேறுவதற்கு திட்டமிடுகின்றாரோ தெரியவில்லை.

கோட்டாபய ஜனாதிபதியானவுடனும் அவர் நாட்டை விட்டு தப்பிச்சென்ற பின்னரும் அவருக்கு ஆதரவான குழுவினர்  இருக்கின்றனர் என்பதை மஹிந்த ராஜபக் ஷ உட்பட மொட்டு கட்சியினர்  அறிந்தே உள்ளனர். அவ்வாறானவர்களை தமது அருகில் நெருங்க விடுவதில்லை என்பதில் மொட்டு கட்சியினர் உறுதியாக உள்ளனர். 

எனினும் தமது கட்சி மக்கள் மத்தியில் ஆதரவை இழந்தமைக்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவே காரணம் என சுட்டிக்காட்டியுள்ள கட்சி உறுப்பினர்கள் கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் வழிவகைகளை மஹிந்தவுடன் அடிக்கடி பேசி வருகின்றனர். ஆனாலும் தற்போதைய சூழ்நிலையில் கட்சியை கட்டியெழுப்புவதை விட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக இருப்பதே முக்கியம் என்பதை மறந்து தனது விசுவாசிகளுக்கு கூறி வருவதாக அவரது தரப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

கோட்டாபய இப்போதைக்கு அரசியலுக்கு வருவது குறித்து எந்த தகவல்களும் இல்லை. ஆனால் தனது சகோதரர்கள் உட்பட மொட்டு கட்சியினர் தன்னை ஓரங்கட்டுவதை உணர்ந்துள்ள அவர், மக்கள் மத்தியில் ஆதரவு தேவையில்லாவிட்டாலும் அனுதாபத்தைச் சரி தேடி வைப்போமே என நினைக்கின்றோரோ தெரியவில்லை.

https://www.virakesari.lk/article/137301

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.