Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரையின் நிர்மாணப்பணிகளுக்கு தடங்கல் ஏற்படுத்துவது தவறான செயற்பாடு – விமல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புகைபிடித்தலை ஊக்குவித்தமை குறித்து அமைச்சர் விமல் மீது சட்ட நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!

குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரையின் நிர்மாணப்பணிகளுக்கு தடங்கல் ஏற்படுத்துவது தவறான செயற்பாடு – விமல்

குருந்தூர் மலையில் முன்னெடுக்கப்பட்டு வரும் விகாரையின் நிர்மாணப்பணிகளுக்கு தடங்கல் ஏற்படுத்துவது தவறான செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜெனீவா தீர்மானத்தை தொடர்ந்து 50 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்களின் பெயர் பட்டியல் மற்றும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தாம் அறிந்த வகையில் இந்த தீர்மானம் காரணமாக சம்பந்தப்பட்ட நாடுகளினால் வழக்கு தொடர்வதற்கான வாய்ப்பும் இருக்கிறது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒருவேளை, தமிழீழ விடுதலை புலிகளின் ஆதரவாளர்களுக்கு அது வாய்ப்பாகவும் அமைந்துவிடும் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

அதனூடாக, குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய இராணுவ உறுப்பினர்களை நிர்க்கதி நிலைக்கு தள்ளிவிடாமல் அவர்களை பாதுகாப்பதற்கான வேலைத்திட்டங்களை உருவாக்குங்கள் எனவும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவ்வாறு இல்லாவிட்டால் இராணுவ வீரர்களுக்கு நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் எனவும் விமல் வீரவங்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதேபோன்று, குருந்தூர் மலை விகாரை வரலாற்று சிறப்பு மிக்க விகாரை எனவும் அவர் கூறியுள்ளார்.

வடக்கு மற்றும் தெற்கில் ஏதாவதொரு பௌத்த விகாரைகள் இருந்தால் அதுதொடர்பில் பிரச்சினையை ஏற்படுத்துகிறார்கள்.

அதற்கு அப்பால், இந்து போன்ற வேறு சமய தேவஸ்தானங்கள் இருந்தால் அதுதொடர்பில் யாரும் கேள்வி எழுப்புவதில்லை எனவும் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

ஜெனீவா கூட்டத்தொடர் நெருங்கும்போது, வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கை சீர்குலைந்துவிட்டது அல்லது சமய பிரச்சினைகளை காரணம் காட்டி நாடகம் அரங்கேற்றுகிறார்கள் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களே இவ்வாறான பிரச்சினைகளை தோற்றுவிக்கிறார்கள் எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

அவர்களே, அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளுக்கு சென்ற அதிகாரிகள் மீது தாக்குதலை மேற்கொண்டார்கள்.

குருந்தூர் மலை விகாரையின் நிர்மாணப் பணிகளுக்கு தடங்கல் ஏற்படுத்துவது மிகவும் தவறான விடயமாகும்

திருகோணமலை போன்ற கோவில் பிரச்சினை குறித்து யாராவது கவனம் செலுத்துகின்றனரா எனவும் விமல் வீரவங்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

https://athavannews.com/2022/1303419

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

திருகோணமலை போன்ற கோவில் பிரச்சினை குறித்து யாராவது கவனம் செலுத்துகின்றனரா எனவும் விமல் வீரவங்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

அங்கேயும் ஆக்கிரமிப்பு தான். இவர் இனவாதம் பேசி வயிறு வளர்ப்பவர்.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, தமிழ் சிறி said:

ஜெனீவா கூட்டத்தொடர் நெருங்கும்போது, வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கை சீர்குலைந்துவிட்டது அல்லது சமய பிரச்சினைகளை காரணம் காட்டி நாடகம் அரங்கேற்றுகிறார்கள் எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இவர்கள் அப்பப்போ உண்மையை தங்களையுமறியாமல் கக்கிவிடுகிறார்கள். ஜெனீவா கூட்டத்தொடர் நெருங்கும்போது, வடக்கு கிழக்கு மக்களின் வாழ்க்கையை  சீர்குலைத்து, ஜெனிவாவில் தங்களுக்கு எதிராக தமிழர் போராடாமல் தடுத்து, அவர்கள் கவனத்தை திசை திருப்பி, அவர்களின் இருப்பிடத்தை கேள்விக்குறியாக்கும் தந்திரமே இது! இதை மறந்து மக்கள் ஜெனிவாவில் போராடினால்; அபகரிக்கப்பட்ட நிலம் தங்களுடையது. இல்லை இங்கு  கவனம் செலுத்தி ஜெனிவா போராட்டத்தை கைவிட்டால், ஒரு அடியில் இரண்டு மாங்காய்கள். ஜெனிவாவில் தமது  உரிமை மீறலுக்கான செயற்திட்டம் பெலயீனப்படும், ஜெனிவாவிலும் வெற்றி, நில அபகரிப்பிலும் வெற்றி. சிங்களம்  எப்போதும் தமிழர் பக்கம் இரு பக்க வாளையே சுற்றிக்கொண்டு இருக்கும். அதனாற்தான் சொல்கிறோம்; தமிழரை ஒருங்கிணைத்து பல பணிகளை பகிர்ந்து செயற்படுத்த வேண்டும்.  ஒவ்வொரு குழுவும் தமக்குரிய பணிகளை செயற்படுத்த முயற்சிக்க வேண்டும். பேச்சுவார்த்தைக்கு ஒரு குழு, கலாச்சாரத்துக்கு ஒரு குழு, வெளிநாட்டு பிரச்சனைகளை ஆராய குழு, சமய நிகழ்வுகள் ஆக்கிரமிப்புகளை ஆராய குழு,  வன பரிபாலன குழு. ஒரு செயற்திட்டமும் இல்லை எல்லா அதிகாரங்களையும்  ஒருவரே பதுக்கி வைத்துக்கொண்டு பேரம்பேசி தன் பையை மட்டும் நிரப்பிக்கொண்டு, நாட்டில என்ன நடக்கிறது, மக்களுக்கு என்ன பிரச்சனை? என்று ஒன்றும் தெரியாது, நாமே ஏகபோக பிரதிநிதிகள் என்று மக்களை ஏமாற்றிக்கொண்டு, அவர்களை ஓநாய்களின் பக்கம் தள்ளுவதே அவர்ளின் பணி. மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கை சுமையோடு போராடிக்கொண்டு, இவர்களையும் வாழ வைக்க போராடும் பரிதாப நிலையில் இருக்கிறார்கள்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.