Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆடை களையப்பட்ட அகதிகள்: ஐ.நா. அதிர்ச்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆடை களையப்பட்ட அகதிகள்: ஐ.நா. அதிர்ச்சி

 

ஆப்கானிஸ்தான், சிரியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 90 இற்கும் மேற்பட்ட அகதிகள் துருக்கி எல்லை அருகே ஆடைகள் களையப்பட்ட நிலையில் கொண்டுவரப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அவர்களில் குழந்தைகளும் இருந்தனர் என்பது மேலும் வேதனை தரும் விஷயம்.

மத்திய கிழக்கு நாடுகள், ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றிலிருந்து துருக்கி வரை செல்லும் அகதிகள் அங்கிருந்து கிரேக்க நாட்டின் மூலம் ஐரோப்பாவுக்குள் செல்கின்றனர். அகதிகள் சட்டவிரோதமாகவே இப்படிச் செல்கிறார்கள் என்றாலும், சர்வதேச அகதிகள் சட்டத்தின்படி அவர்கள் நடத்தப்பட வேண்டும். ஆனால், பெரும்பாலும் அவர்கள் வெவ்வேறு நாடுகளின் அரசுகளால், சட்டப்படியும் சட்டத்துக்குப் புறம்பாகவும் பல்வேறு இன்னல்களைச் சந்திக்கின்றனர். பிரிட்டன் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுக்குத் தரகர்கள் மூலம் சட்டவிரோதமாகப் படகுகளில் செல்லும்போது விபத்துக்குள்ளாகி கடலில் மூழ்கி இறக்கும் சம்பவங்களும் அவ்வப்போது நடக்கின்றன.

இந்நிலையில், துருக்கியின் வடக்கு எல்லைக்கு அருகே குழந்தைகள் உள்ளிட்ட 92 அகதிகள் ஆடை களையப்பட்ட நிலையில் இருந்தது தெரியவந்திருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் ஆப்கானிஸ்தான், சிரியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள். தங்கள் நாடுகளில் நடக்கும் பயங்கரவாதச் செயல்கள், அடக்குமுறைகள், உள்நாட்டுப் போர், வறுமை போன்ற துன்பங்களிலிருந்து விடுதலை கிடைக்க வேண்டும் என உயிரைப் பணயம் வைத்து இப்படியான ஆபத்தான பயணங்களை மேற்கொள்பவர்கள்.

இவர்கள் எவ்ரோஸ் ஆற்றைக் கடந்து படகுகளில் வந்ததாக கிரேக்கப் பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். முன்னதாக அவர்களைத் துருக்கி இராணுவ வேன்களில் அழைத்துவரப்பட்டு அந்தப் பகுதியில் இறக்கிவிடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர்களில் சிலருக்கு உடலில் காயங்கள் இருந்ததும் தெரியவந்திருக்கிறது. நிர்வாணமாக அவர்கள் நிற்கும் படங்கள் சமூகவலைதளங்களில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தச் சம்பவம் ஆழ்ந்த அதிர்ச்சியும் வேதனையும் தருவதாகக் கூறியிருக்கும் அகதிகளுக்கான ஐநா ஆணையம் (யு.என்.ஹெச்.சி.ஆர்), இதுதொடர்பாக விசாரணை நடத்துமாறு கிரேக்கம், துருக்கி ஆகிய இரு நாடுகளிடமும் கேட்டுக்கொண்டிருக்கிறது.

இந்த விவகாரத்தில், துருக்கியும் கிரேக்கமும் ஒன்றையொன்று குற்றம் சாட்டிக்கொள்கின்றன. ஆனால், அகதிகளிடம் மனித உரிமை மீறல்களில் தாங்கள் ஈடுபட்டதாக ஒரு சம்பவம்கூட இல்லை என்று துருக்கி கூறுகிறது.

அகதிகள் பிரச்சினையைக் கையாளும் வகையில், 2016-ல் துருக்கியுடன் ஐரோப்பிய ஒன்றியம் ஓர் ஒப்பந்தத்தை செய்து கொண்டது. அதன்படி, அகதிகள் ஐரோப்பாவுக்குள் நுழைவதைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு துருக்கிக்கு வழங்கப்பட்டது. அதற்காக அந்நாட்டுக்கு பில்லியன் கணக்கில் யூரோக்கள் வழங்கப்படும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தை நினைவூட்டியிருக்கும் கிரேக்கம், அதைப் பின்பற்றி நடக்குமாறு துருக்கியிடம் வலியுறுத்தியிருக்கிறது.

 

https://thinakkural.lk/article/216374

  • கருத்துக்கள உறவுகள்

நிர்வாண கோலத்தில் 92 குடியேற்றவாசிகள் துருக்கி – கிறீஸ் எல்லையில் மீட்பு

By VISHNU

19 OCT, 2022 | 12:06 PM
image

துருக்கி- கிறீஸ் எல்­லையில் 92 குடி­யேற்­ற­வா­சிகள் நிர்­வாண கோலத்தில் காணப்­பட்­டமை குறித்து விசா­ரணை நடத்­து­மாறு ஐநா வலி­யு­றுத்­தி­யுள்­ளது.

frontex.jpg

துருக்­கி­யு­ட­னான எல்­லை­யி­லுள்ள அவ்ரோஸ் நதிக்கு அருகில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை 92 ஆண்கள் இவ்­வாறு கண்­டு­பி­டிக்­கப்­பட்­டனர் என கிறீஸ் (கிரேக்கம்) தெரி­வித்­துள்­ளது.

President_Tayyip_Erdogan.jpg

 இவர்கள் துருக்­கி­யி­லி­ருந்து எவ்ரோஸ் நதியைக் கடந்து கிறீ­ஸுக்குள் செல்ல நிர்ப்­பந்­திக்­கப்­பட்­ட­வர்கள் என கிறீஸ் அர­சாங்கம் கூறு­கி­றது. எனினும் துருக்­கிய அர­சாங்கம் இதை நிராh­க­ரித்­துள்­ளது.

Takis_Theodorikakos.jpg

மேற்­படி ஆண்­களில் பெரும்­பா­லானோர் ஆப்­கா­னிஸ்தான் மற்றும் சிரியா நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

UNHCR.png

இக் குடி­யேற்­ற­வா­சி­க­களின் வரு­கையை ஐரோப்­பிய எல்லைப் பாது­காப்பு முக­வ­ர­க­மான ஃபுரொண்டெக்ஸ் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ளது.

இக்­கு­டி­யேற்­ற­வா­சிகள் ஏறத்­தாழ நிர்­வா­ண­மாக காணப்­பட்­டனர் எனவும், சிலரின் உடலில் காயங்கள் காணப்­பட்­ட­தா­கவும் ஃபுரொண்டெக்ஸ் அதி­கா­ரிகள்  தெரி­வித்­தனர் என அம்­மு­க­வ­ர­கத்தின் பேச்­சாளர் பவு­லினா பகுலா தெரி­வித்­துள்ளார்.

அக­தி­க­ளுக்­கான ஐ.நா உயர் ஸ்தானி­க­ரா­லயம் இது தொடர்­பாக டுவிட்­டரில் வெளி­யிட்ட பதிவில், 'கிறீஸ் - துருக்கி எல்­லையில் கண­டு­பி­டிக்­கப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­படும், ஆடைகள் களை­யப்­பட்ட 92 பேர் குறித்த அதிர்ச்­சி­க­ர­மான தக­வல்கள் படங்கள் தொடர்பில் நாம் ஆழ்ந்த கவ­லை­ய­டைந்­துள்ளோம்' எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேற்­படி நபர்­க­ளுக்கு அவ­சர உத­வி­களை வழங்­கு­வ­தற்கு கிறீஸ் அதி­கா­ரி­க­ளுடன் ஃபுரண்டெக்ஸ் அதி­கா­ரிகள் இணைந்து செயற்­ப­டு­வ­தாக பவு­லினா பகுலா தெரி­வித்­துள்ளார். 

உரிமை மீறல்கள் இடம்­பெற்­றி­ருக்­கக்­கூ­டிய சாத்­தியம் குறித்து  ஃபுரொண்டெக்ஸ் முக­வ­ர­கத்தின் அடிப்­படை உரி­மைகள் தொடர்­பான அதி­கா­ரிக்கு அம்­மு­க­வ­ரகம் அறி­வித்­துள்­ள­தா­கவும் அவர் கூறி­யுள்ளார். 

குடி­யேற்­ற­வா­சிகள் தொடர்­பாக கிரேக்­கமும் துருக்­கியும் பரஸ்­பரம் குற்­றச்­சாட்­டு­களை தொடர்ச்­சி­யாக சுமத்தி வரு­கின்­றன. 

இந்­நி­லையில், சட்­ட­வி­ரோத குடி­யேற்­றத்தை துருக்கி தூண்­டு­வ­தாக கிரேக்­கத்தின் பொது­மக்கள் பாது­காப்பு அமைச்சர் தாகிஸ் தியோ­டோ­ரிகோஸ் கூறி­யுள்ளார். 

இரு நாடு­க­ளுக்கும் இடை­யி­லான எல்­லை­யா­க­வுள்ள ஆற்­றுக்கு, துருக்­கியின் 3 இரா­ணுவ வாக­னங்­களில் குடி­யேற்­ற­வா­சிகள் ஏற்­றி­வ­ரப்­பட்­ட­தாக அக்­கு­டி­யேற்­ற­வா­சி­களில் சிலர், ஃபுரொண்டெக்ஸ் முக­வ­ர­கத்திம் தெரி­வித்­தனர் எனவும் தொலைக்­காட்­சி­யொன்றில் அமைச்சர் தாகிஸ் தியோ­டோ­ரிகோஸ் கூறி­யுள்ளார்.

ஆனால், கிரேக்­கத்தின் குற்­றச்­சாட்­டு­களை துருக்கி நிரா­க­ரித்­துள்­ளது.

துருக்­கிய ஜனா­தி­பதி தாயீப் ஏர்­தோ­கானின் உயர் ஊடக அதி­காரி பஹ்­ரிதின் அல்துன் இது தொடர்­பாக கூறு­கையில், 'அக­தி­களை மோச­மாக நடத்­து­வ­தையும் உட­ன­டி­யாக கைவி­டு­மாறும் கிறீஸை நாம் வலி­யு­றுத்­து­கிறோம்.

இந்த தோல்­வி­ய­டைந்த, அபத்­தான முயற்­சி­களின் மூலம், ஒடுக்­கப்­பட்ட மக்­களின் இப்­ப­டங்­களை வெளி­யிட்­ட­தனால், அக­தி­களின் கௌர­வத்தை தான் மதிக்­க­வில்லை என்­பதை கிறீஸ் மீண்டும் வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது' எனக் குறிப்­பிட்­டுள்ளார்.

குடி­யேற்­ற­வா­சி­களை துரு­க­கிக்கு சட்­ட­வி­ரோ­த­மாக திருப்பி அனுப்­பு­வ­தற்கு கிறீஸ் பல சந்­தர்ப்­பங்­களில் முயற்­சித்­துள்­ள­தா­கவும், சில­வே­ளை­களில் படைப்­ப­லத்தை பிர­யோ­கித்­த­தா­கவும் அரச சார்­பற்ற அமைப்­பு­களும் ஊட­கங்­களும் சுமத்தும் குற்­றச்­சாட்­டு­களை கிறீஸ் அர­சாங்கம் நிரா­க­ரித்து வரு­கி­றது.

கடந்த மாதம் ஐ.நாவில் உரை­யாற்­றிய துருக்­கிய ஜனா­தி­பதி தாயீப் ஏர்­தோகான், குடி­யேற்­வா­சிகள் தொடர்­ட­பான ஒடுக்­கு­முறை கொள்­கையின் மூலம் ஏஜியன் கடலை மயா­னா­மாக கிறீஸ் மாற்­று­வ­தாக குறு;றம் சுமத்­தினார்.

ஜேர்­ம­னியின் பேர்லின் நகரை தள­மாகக் கொண்ட மனித உரி­மைகள் அமைப்­பான மேரே லிபேரம் டுவிட்­டரில் வெளி­யிட்ட பதிவில், எவ்ரோஜ் பிராந்­தி­யத்தில் துருக்கி மற்றும் கிறீ­ஸினால் மனித உரி­மைகள் குற்­றங்கள் நாளாந்த அடிப்­ப­டையில்  இழைக்­கப்­ப­டு­கின்­றன. 

இக்­குற்­றங்கள் அர­சாங்­கங்­க­ளினால் பகி­ரங்­க­மாக கலந்­து­ரை­யா­டப்­ப­டும்­போது, அது துருக்­கிக்கும் கிறீ­ஸுக்கும் இடை­யி­லான நீண்ட கால பிரச்­சி­னையில் எண்ணெய் ஊற்­று­வ­தாக பயன்­ப­டுத்­தப்­ப­டு­கி­றது, இடம்­பெ­யரும் மக்­களை பாதுகாப்பதற்கு அல்ல' எனக் குறிப்பிட்டிருந்தது.

https://www.virakesari.lk/article/137968

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தில்... ஆடை களையப்  பட்டு, கொலை செய்த படங்களை 
ஐ.நா. பார்த்து அதிர்ச்சி அடையாமல்... ஸ்ரீலங்கவிற்கு இதுவரை 
முட்டுக் கொடுத்துக் கொண்டு தானே... இருக்கின்றது. 
இப்ப மட்டும்... என்ன இழவுக்கு ஐ.நா. மண்ணாங்கட்டி  அதிர்ச்சி அடையுது.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, தமிழ் சிறி said:

ஈழத்தில்... ஆடை களையப்  பட்டு, கொலை செய்த படங்களை 
ஐ.நா. பார்த்து அதிர்ச்சி அடையாமல்... ஸ்ரீலங்கவிற்கு இதுவரை 
முட்டுக் கொடுத்துக் கொண்டு தானே... இருக்கின்றது. 
இப்ப மட்டும்... என்ன இழவுக்கு ஐ.நா. மண்ணாங்கட்டி  அதிர்ச்சி அடையுது.

அது தானே

ஆண்கள் பெண்கள் வயது முதிர்ந்தவர்கள் குழந்தைகள் என்று ஆயிரக் கணக்கானோர் நிர்வாணமாக்கப்பட்டு பின்னர் காணாமலும் போயுள்ளனர்.

இதெல்லாம் மனித உரிமை அமைப்புகளுக்கோ உலகத்துக்கோ தெரியவே தெரியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நேட்டோவை எதிர்ப்பதற்கான ( எல்லாம் ஒரே  கும்பல் தான்) முதன்மை காரணம் இந்த இரட்டை வேடமும் சுயநலமும் தான்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.