Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பெண் முறைப்பாடு : இலங்கை கிரிக்கெட் வீரர் சிட்னியில் கைது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Eppothum Thamizhan said:

https://www.forbeschambers.com.au/murugan-thangaraj-sc.html
 

ஆள் ஒரு SC (state/senior counsel) - இலங்கையில் ஜனாதிபதி சட்டதரணி, யூகேயில் KC/QC போல.

  • Replies 105
  • Views 6.5k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இது நீதிமன்றின் வேலை அல்ல.

UK இல் தெரியும்.

அவுஸ் இல் வேறுபாடு இருக்கிறது என்று நினைக்கிறேன். எவை வெளியில் வரலாம் வரக்கூடாது என்பது. 

(அப்படி கட்டுப்பாடுகள் இருப்பது நல்லது; ஏனெனில் trial  தொடங்கும் போது Judge ஜூரிக்கு  சொல்வது, இதை பற்றி வேறு எங்கும் தேடி  அறிய  கூடாது; trial இல்  நடக்கும் , சொல்லப்படும் விடயங்களை மட்டும் தான் கவனத்தில் எடுக்க வேண்டும்). 

dailymail தான் ஆனால் இதை விடயம் அறியாமல் கதைக்கமாட்டார்கள்.  

செய்தி வரும் போது குற்றம் சாட்டப்பட்டு, அவர் remand in custody இல் இருந்தார்.
 

https://www.dailymail.co.uk/sport/cricket/article-11401443/Danushka-Gunathilaka-Tinder-profile-Sri-Lankan-cricketer-accused-raping-Australian-revealed.html

"Police had been granted a suppression order restricting access on what could be reported about the 31-year-old's alleged crimes.

The suppression order will be the subject of a hearing in the Downing Centre on Wednesday."

 

 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

அவுஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் கூட (துடுப்பாட்டம் அல்ல) இதே மாதிரியான குற்றச்சாட்டில் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பாகவே ஊடகங்களில் அவர்கள் பெயர் அடிபடுவது வழமையான ஒன்று, இவர் இலங்கை அணி வீரர் என்பதற்காக ஊடகங்கள் ஒரு தலைபட்சமாக நடக்கவில்லை.

எவர் என்றாலும் இது சரி இல்லை என்கிறேன். குற்றம் இல்லை என்றாலும் trial by media நடந்திருக்கும்.

ஆனாலும் அவுஸ் இல் வேறுபாடு இருக்கிறது என்று நினைக்கிறன். எந்த விடயங்கள் வெளியிடப்படலாம் அல்லது கூடாது என்பதை சட்ட மன்றம் தீர்மானிக்க இடம் இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kadancha said:

UK இல் தெரியும்.

அவுஸ் இல் வேறுபாடு இருக்கிறது என்று நினைக்கிறேன். எவை வெளியில் வரலாம் வரக்கூடாது என்பது. 

(அப்படி கட்டுப்பாடுகள் இருப்பது நல்லது; ஏனெனில் trial  தொடங்கும் போது Judge ஜூரிக்கு  சொல்வது, இதை பற்றி வேறு எங்கும் தேடி  அறிய  கூடாது; trial இல்  நடக்கும் , சொல்லப்படும் விடயங்களை மட்டும் தான் கவனத்தில் எடுக்க வேண்டும்). 

dailymail தான் ஆனால் இதை விடயம் அறியாமல் கதைக்கமாட்டார்கள்.  

செய்தி வரும் போது குற்றம் சாட்டப்பட்டு, அவர் remand in custody இல் இருந்தார்.
 

https://www.dailymail.co.uk/sport/cricket/article-11401443/Danushka-Gunathilaka-Tinder-profile-Sri-Lankan-cricketer-accused-raping-Australian-revealed.html

"Police had been granted a suppression order restricting access on what could be reported about the 31-year-old's alleged crimes.

The suppression order will be the subject of a hearing in the Downing Centre on Wednesday."

 

 

https://amp.theguardian.com/law/2018/dec/14/suppression-orders-australia-why-you-cant-read-what-you-may-want-to
 

Suppression Order பற்றிய விளக்கம் மேலே - இது கோர்ட்டால் விலக்கப்பட்டிருக்க வேண்டும் இல்லாமல் ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டிருக்க மாட்டார்கள்.

இதை யூகேயிலும் எடுக்கலாம் ஒரு injunction ஆக. ஆனால் கோர்ட் கொடுக்காது கொடுதாலும் விலக்கி விடும்.

Right to fair trial பாதிக்கப்படும் (IRA) அல்லது தேசிய பாதுகாப்பு போன்ற காரணங்களுக்காகவே இது நீடித்து வழங்கப்படும்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kadancha said:

ஆனாலும் அவுஸ் இல் வேறுபாடு இருக்கிறது என்று நினைக்கிறன். எந்த விடயங்கள் வெளியிடப்படலாம் அல்லது கூடாது என்பதை சட்ட மன்றம் தீர்மானிக்க இடம் இருக்கிறது.

இது சரி. ஆனால் இது குற்றவாளியின் right to fair trial ஐ பாதிக்கும் விடயங்களுக்கு மட்டுமே பொருந்தும். அதாவது ஜூரிக்கு தெரியகூடாத தகவல்கள். பொலிஸ் அறிக்கையில் இருப்பவை அல்ல.

உதாரணமாக previous convictions. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

மிகவும் பலவீனமான வழக்கு. 75% குற்றம் அற்றவர் என தீரவே வாய்ப்பு உள்ளது.

25% கொடுப்பது கூட அவுஸ் யூரி ஒரு ஆசியர் என இவரை குற்றம் காணலாம் என்பதனாலேயே.

 

உங்களது  நிலைப்பாடே  சரியென நினைக்கின்றேன்

எல்லாவற்றிற்கும்  உடன்பட்டே  தனது  வீட்டுக்கு அழைத்து  சென்று நடந்திருக்கிறது

கிரிக்கெற்  பணத்துடன் சம்பந்தப்பட்டது  என்பது  நாம்  அறிந்ததே...

('ஒக்டோபர் 29 ஆம் திகதி டேட்டிங் அப் ஒன்றின் மூலமாக இப்பெண்ணை தனுஷ்க குணதிலக்க தொடர்புகொண்டார். அதையடுத்த நாட்களில் அவர்கள் எழுத்து மற்றும் வீடியோ மூலமாக உரையாடினர்.

தன்னை சந்திப்பதற்கு பிரிஸ்பேன் நகருக்கு வருமாறு அப்பெண்ணிடம் குணதிலக்க கோரினார்.  அதற்கு அப்பெண் மறுத்தார்.

எனினும், நவம்பர் 2 ஆம் திகதி சிட்னியில் ஒபாரா பாரில் நேரில் சந்திப்பதற்கு இருவரும் இணங்கினர்.

பின்னர் அவர்கள் ஹண்டர் வீதியிலுள்ள பீட்ஸா விடுதியொன்றுக்கு சென்றனர். அதன்பின் அப்பெண்ணின் வீட்டுக்குப் படகுமூலம் செல்வதற்கு சேர்கியூலர் கீ துறைமுகத்துக்கு சென்றனர்.

இந்த ஜோடியினர் பல தடவைகள் மதுபானம் அருந்தினர். எனினும் இவர்கள் அல்கஹோலினால் பாதிக்கப்படவில்லை என அப்பெண் நம்புகிறார்.

படகுச் சவாரியின்போது, அப்பெண்ண் மது குணதிலக்க தனது உடலை அழுத்தியதுடன் பலவந்தமாக முத்தமிட்டார். 

அப்பெண்ணின் வீட்டுக்கு இவர்கள் இருவரும் வந்த பின்னர், குணதிலக்க பலவந்தமாக உறவுகொண்டார்.  ஒரு தடவை அப்பெண்ணினால் சுவாசிக்க முடியாத அளவுக்கு பலமாக மூச்சுத் திணறச் செய்யப்பட்டது' எனவும் மேற்படி ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பெண் அதிகாரிகளுக்கு நவம்பர் 5 ஆம்  திகித முறைப்பாடு செய்தார். அத்துடன் றோயல் பிரின்ஸ் அல்பிரெட் வைத்தியசாலைக்கு சென்றார். அங்கு அவர் பாலியல் தாக்குதல்கள் தொடர்பான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதுடன், மூச்சுத் திணறச் செய்யப்பட்டதால் மூளையில் ஏதேனும் காயம் ஏற்பட்டுள்ளதா என்பதை அறிவதற்காக மூளையில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது எனவும் மேற்படி ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணுறை அணிந்துகொள்ளுமாhறு குணதிலக்கவை தான் கோரியபோதிலும், மேற்படி பாலியல் தாக்குதல்களின்போது, தனது படுக்கைக்கு அருகில் தரையில் ஆணுறை கிடந்ததை தான் கண்டதாவும் அப்பெண் தெரிவித்தார் என மேற்படி ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.)

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, vasee said:

அவுஸ்ரேலிய விளையாட்டு வீரர்கள் கூட (துடுப்பாட்டம் அல்ல) இதே மாதிரியான குற்றச்சாட்டில் நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்குவதற்கு முன்பாகவே ஊடகங்களில் அவர்கள் பெயர் அடிபடுவது வழமையான ஒன்று, இவர் இலங்கை அணி வீரர் என்பதற்காக ஊடகங்கள் ஒரு தலைபட்சமாக நடக்கவில்லை.

முக்கியமாக சட்டங்கள் மனித உணர்வுகளின் விளிம்பில் விளையாடுவதாலும், மற்றும் முக்கியமாக பெண்கள் பெரும் புள்ளிகள் என்றவுடன் வழக்கை தொடர்வதும் (வெளியில் பணம் கறக்கும் நோக்கத்துடன்) 

இங்கே uk இல் ஓர் கால்பந்தாட்ட வீரருக்கு எதிராக வழக்கு நடக்கிறது; அதை கேட்டால் - முறைப்பாடு கொடுத பெண் அவர் நண்பிக்கு, நடக்க முதல், இன்று நான் என்னை குறிப்பிட்ட நபரிடம், அவர் வீட்டில் அவருக்குபுணர்ச்சிக்கு உள்ளாக்குகிறேன் என்று text  பண்ணி விட்டு, எல்லாவற்றையும் செய்து விட்டு; முறைப்பாடு; police உம் அதை முறைபாடாக எடுத்து, வழக்கு)  

வேறு, சாதாரண நபர் ஆயின், அந்த பெண் முறைப்பாடு செய்து இருப்பாரா என்ற பெரும் கேள்வி இருக்கிற .

இதுவும் அதை போலவே தெரிகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விசுகு said:

படகுச் சவாரியின்போது, அப்பெண்ண் மது குணதிலக்க தனது உடலை அழுத்தியதுடன் பலவந்தமாக முத்தமிட்டார். 

சில இடங்களில் மொழிபெயர்ப்பு மொத்த அர்த்தத்தையும் தலைகீழாக்கி விட்டிருக்கண்ணை.

சிலதை எழுதாமலே விட்டுள்ளார்கள்.

ஆங்கில அறிக்கையில் பலமாக (பலவந்தமாக அல்ல -forcefully not forcibly ) என்றுதான் இருக்கு.

பலமாக முத்தமிடுவது குற்றம் இல்லைத்தானே?

அதே போல் படகுக்கு காத்திருக்கும் போது அவரின் பின்புறத்தை இவர் பலமாக தட்டிய போது அவர் “oi”  என்று சொன்னதாக உளது. “Oi” என்பது மறுப்பல்ல. அது ஒருவகை செல்ல “ஊடல்” இற்குரிய சொல் என கருதவும் இடமுண்டு.

வீட்டில் வைத்து “தயவு செய்து மெதுவாக செய்யுங்கள்” என்ற தொனியில் கூட சொல்லியுள்ளார்.  இதை ஒரு மறைமுக இசைவாகவே (consent) கருத இடமுண்டு.

இப்படி பல இடங்களில் வழக்கு தடுமாறுகிறது.

 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, goshan_che said:

சில இடங்களில் மொழிபெயர்ப்பு மொத்த அர்த்தத்தையும் தலைகீழாக்கி விட்டிருக்கண்ணை.

சிலதை எழுதாமலே விட்டுள்ளார்கள்.

ஆங்கில அறிக்கையில் பலமாக (பலவந்தமாக அல்ல -forcefully not forcibly ) என்றுதான் இருக்கு.

பலமாக முத்தமிடுவது குற்றம் இல்லைத்தானே?

அதே போல் படகுக்கு காத்திருக்கும் போது அவரின் பின்புறத்தை இவர் பலமாக தட்டிய போது அவர் “oi”  என்று சொன்னதாக உளது. “Oi” என்பது மறுப்பல்ல. அது ஒருவகை செல்ல “ஊடல்” இற்குரிய சொல் என கருதவும் இடமுண்டு.

வீட்டில் வைத்து “தயவு செய்து மெதுவாக செய்யுங்கள்” என்ற தொனியில் கூட சொல்லியுள்ளார்.  இதை ஒரு மறைமுக இசைவாகவே (consent) கருத இடமுண்டு.

இப்படி பல இடங்களில் வழக்கு தடுமாறுகிறது.

 

அதே....

நாம் சிங்களவன் அல்லது நமது எதிரி நாட்டவன் என்ற கோணத்தில் பார்ப்பதால் நீதி சட்டம் சார்ந்து சிந்திக்க தவறுகிறோம்? 

7 minutes ago, goshan_che said:

 

வீட்டில் வைத்து “தயவு செய்து மெதுவாக செய்யுங்கள்” என்ற தொனியில் கூட சொல்லியுள்ளார்.  இதை ஒரு மறைமுக இசைவாகவே (consent) கருத இடமுண்டு.

முன்னாள் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் DSK வின் வழக்கில் பெண்ணின் இசைவுடன் நடந்துகொண்டு இருந்தாலும் நிறுத்து என்று பெண் சொன்னால் நிறுத்தணும். நிறுத்த தவறினால் அதுவும் வன்புணர்வு தான். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kadancha said:

முக்கியமாக சட்டங்கள் மனித உணர்வுகளின் விளிம்பில் விளையாடுவதாலும், மற்றும் முக்கியமாக பெண்கள் பெரும் புள்ளிகள் என்றவுடன் வழக்கை தொடர்வதும் (வெளியில் பணம் கறக்கும் நோக்கத்துடன்) 

இங்கே uk இல் ஓர் கால்பந்தாட்ட வீரருக்கு எதிராக வழக்கு நடக்கிறது; அதை கேட்டால் - முறைப்பாடு கொடுத பெண் அவர் நண்பிக்கு, நடக்க முதல், இன்று நான் என்னை குறிப்பிட்ட நபரிடம், அவர் வீட்டில் அவருக்குபுணர்ச்சிக்கு உள்ளாக்குகிறேன் என்று text  பண்ணி விட்டு, எல்லாவற்றையும் செய்து விட்டு; முறைப்பாடு; police உம் அதை முறைபாடாக எடுத்து, வழக்கு)  

வேறு, சாதாரண நபர் ஆயின், அந்த பெண் முறைப்பாடு செய்து இருப்பாரா என்ற பெரும் கேள்வி இருக்கிற .

இதுவும் அதை போலவே தெரிகிறது.

 

இதில் பொலீசை குற்றம் சொல்ல முடியாது.

ஏலவே மேற்கத்தைய நாடுகளில் போதிய அளவு வன்கொடுமை வழக்குகள், குற்ற தீர்ப்பில் முடிவதில்லை என்றும், வழக்கே போடுவதில்லை என்றும், ஆணாதிக்க மனோபாவ பொலிசாரின், அரச சட்டத்துறையின் போக்கே இதற்கு காரணம் எனவும் பலத்த புகார் உண்டு.

இப்படியான வழக்குகளில் let’s go where the evidence takes us என்பதே அவர்களின் நடைமுறையாக இருக்கும். அதுவே சரியும் கூட.

அத்தோடு இசைவு என்பது சிக்கலான சட்டம் + தரவு (law+fact), சம்பந்தபட்ட, தன்சார்பு, பொதுச்சார்பு (subjective, and objective tests) பரிசோதனைகள் உள்ள விடயம்.

உதாரணமாக எனக்கு இசைவு இல்லை என ஒரு பெண் வாயை திறந்து சொல்ல வேண்டியதில்லை.

ஆரம்பத்தில் இசைவு இருந்ததா, அது தொடர்ந்து இருக்கிறதா என்பதை ஆண்தான் உறுதி செய்ய வேண்டும். அப்படி அவர் உறுதி செய்தமைகான பதில் (பொலிஸ் இண்டர்வியூவில்) திருப்திகரமாக இல்லை என அறிக்கை கூறுகிறது.

வழக்கு மிக பலவீனமானதுதான் - ஆனால் வழக்கு போடும் அளவுக்கு முகாந்திரம் இல்லாமல் இல்லை.

ஆண்களை பொறுத்த மட்டில் - சிக்கலை தவிர்க்கும் ஒரே முறை - சம்மதம்தானே என வாய் விட்டு கேட்டுவிடுவது, தொடர்ந்து நிறுத்த சொல்லும் போது நிறுத்தி விடுவது.

சுருங்க சொன்னால்,

”அவளை (கேட்காமல்) தொடுவானேன், அவதிப்படுவானேன்”🤣

 

 

 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, விசுகு said:

அதே....

நாம் சிங்களவன் அல்லது நமது எதிரி நாட்டவன் என்ற கோணத்தில் பார்ப்பதால் நீதி சட்டம் சார்ந்து சிந்திக்க தவறுகிறோம்? 

முன்னாள் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் DSK வின் வழக்கில் பெண்ணின் இசைவுடன் நடந்துகொண்டு இருந்தாலும் நிறுத்து என்று பெண் சொன்னால் நிறுத்தணும். நிறுத்த தவறினால் அதுவும் வன்புணர்வு தான். 

1. ஓம் 

2. நிச்சயமாக. இசைவு என்பது தொடர்ந்து இருக்க வேண்டும். அத்துடன் நிபந்தனையின் பேரில் (ஆணுறை அணிய வேண்டும்) இசைவை பெற்று விட்டு, நிபந்தனையை மீறினால் - அது சுத்துமாத்தின் மூலம் பெறபட்ட (deception) இசைவு என்பதால் - இசைவாக கருதப்படாது.

ஆகவே வழக்கை ஏன் பொலீசார் போட்டார்கள் என்பது தெரிகிறது.

ஆனால் இங்கே பெண் சொல்கிறார் - உறவின் பின் ஆண் கட்டில் ஓரத்தில் இருக்கும் போது ஆணுறையை தரையில் கண்டதாக. 

அவர் ஆணுறையை நீக்கி விட்டு உறவில் ஈடுபட்டதை கண்டதாக சொல்லவில்லை. 

ஆகவே ஆணுறை எப்போ நீங்கியது? என்பது முக்கிய கேள்வியாகிறது.

இங்கேதான் இந்த கேள்விக்கு பொலீஸ் இண்டர்வியூவில் குற்றம் சாட்டப்பட்டவர் என்ன சொன்னார் என்பது மிக முக்கியமாகிறது.

என்ன சொன்னார் என்பது நமக்கு வழக்கு கோர்ட்டுக்கு வரும் வரை தெரியாது.

ஒரு சமயம் - “ஓம் நான் வேணும் என்றே முதலில் போட்டு விட்டு பின் அவர் பார்க்காத சமயம் நீக்கினேன்” என சொல்லி இருந்தால்- ஆளின் கதை ஓவர்.

இல்லாமல் - “இல்லை உறவின் பின் அது நீங்கி/நீக்கி தரையில் வீழ்ந்தது” என சொன்னால் - பின் அவர் சொல்லுவது உண்மையா இல்லையா என யூரிகள் தீர்மானிப்பர்.

 

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனுஸ்க புதிய வீட்டில் வசிப்பதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனுமதி

By RAJEEBAN

16 DEC, 2022 | 01:10 PM
image

பாலியல் வன்முறை குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள இலங்கை வீரர் தனுஸ்க குணதிலக தற்போது தங்கியுள்ள வீட்டிலிருந்து வேறு வீட்டிற்கு மாறுவதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது.

31வயது இலங்கை வீரர் இன்று சிட்னி டவுனிங் சென்டர் உள்ளுர் நீதிமன்றத்தில் ஆஜரான வேளை தற்போது தங்கியுள்ள இடத்திலிருந்து வேறு வீட்டிற்கு மாறுவதற்கான அனுமதியை கோரினார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் நீண்டகாலம் நீடிக்ககூடியவை என்பதால் அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

தற்போது தனது ஆதரவாளர் ஒருவருடன் தங்கியுள்ள தனுஸ்ககுணதில தான் தனியாக தங்கியிருப்பதற்கு அனுமதிக்கும் விதத்தில் பிணைநிபந்தனைகள் மாற்றப்படவேண்டும் என வேண்டுகோள்விடுத்தார்.

dhanushkaa.jpg

அவர் வேறு யாருடனும் வசிக்கப்போவதில்லை அவர் ஒருஅறை வீட்டில் தனியாக வசிக்கப்போகின்றார் என தனுஸ்கவின் சட்டத்தரணி  தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் அதிகமாக வாழும் சிட்னியின் இன்னர்வெஸ்ட் பகுதியில் உள்ள ரொடெசிலேயே தான் வாழப்போவதாக தனுஸ்க குணதிலக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவர் தப்பிச்செல்வதற்கான வாய்ப்புகள் குறையும் அவரது சமூக தொடர்பை அதிகரிக்கும் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கும் தனுஸ்க புதிதாக வசிக்கப்போகும் வீட்டிற்கும் இடையில் குறிப்பிடத்தக்க தூரம் உள்ளதாக நீதிமன்றத்தில் தனுஸ்க குணதிலகவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/143282

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, ஏராளன் said:

தனுஸ்க புதிய வீட்டில் வசிப்பதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனுமதி

By RAJEEBAN

16 DEC, 2022 | 01:10 PM
image

பாலியல் வன்முறை குற்றச்சாட்டுக்குள்ளாகியுள்ள இலங்கை வீரர் தனுஸ்க குணதிலக தற்போது தங்கியுள்ள வீட்டிலிருந்து வேறு வீட்டிற்கு மாறுவதற்கு அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனுமதிவழங்கியுள்ளது.

31வயது இலங்கை வீரர் இன்று சிட்னி டவுனிங் சென்டர் உள்ளுர் நீதிமன்றத்தில் ஆஜரான வேளை தற்போது தங்கியுள்ள இடத்திலிருந்து வேறு வீட்டிற்கு மாறுவதற்கான அனுமதியை கோரினார்.

நீதிமன்ற நடவடிக்கைகள் நீண்டகாலம் நீடிக்ககூடியவை என்பதால் அவர் இந்த வேண்டுகோளை விடுத்தார்.

தற்போது தனது ஆதரவாளர் ஒருவருடன் தங்கியுள்ள தனுஸ்ககுணதில தான் தனியாக தங்கியிருப்பதற்கு அனுமதிக்கும் விதத்தில் பிணைநிபந்தனைகள் மாற்றப்படவேண்டும் என வேண்டுகோள்விடுத்தார்.

dhanushkaa.jpg

அவர் வேறு யாருடனும் வசிக்கப்போவதில்லை அவர் ஒருஅறை வீட்டில் தனியாக வசிக்கப்போகின்றார் என தனுஸ்கவின் சட்டத்தரணி  தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் அதிகமாக வாழும் சிட்னியின் இன்னர்வெஸ்ட் பகுதியில் உள்ள ரொடெசிலேயே தான் வாழப்போவதாக தனுஸ்க குணதிலக தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக அவர் தப்பிச்செல்வதற்கான வாய்ப்புகள் குறையும் அவரது சமூக தொடர்பை அதிகரிக்கும் என அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டிற்கும் தனுஸ்க புதிதாக வசிக்கப்போகும் வீட்டிற்கும் இடையில் குறிப்பிடத்தக்க தூரம் உள்ளதாக நீதிமன்றத்தில் தனுஸ்க குணதிலகவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/143282

தனுஸ்க…. தனி வீட்டில் வசிக்க விரும்புவதை பார்க்க…
வேறு பெண்களையும், கெடுக்கப் போகிறான் போலுள்ளது.
இவன் ஊரிலேயே… பயங்கர பொம்பிளை சேட்டைக் காரணம்.
ஊரில் பிரச்சினை வரும் போதெல்லாம்… தனது செல்வாக்கு,
பணபலம் போன்றவற்றால் அமுக்கி விடுவானாம்.

  • கருத்துக்கள உறவுகள்
On 16/12/2022 at 17:48, தமிழ் சிறி said:

தனுஸ்க…. தனி வீட்டில் வசிக்க விரும்புவதை பார்க்க…
வேறு பெண்களையும், கெடுக்கப் போகிறான் போலுள்ளது.
இவன் ஊரிலேயே… பயங்கர பொம்பிளை சேட்டைக் காரணம்.
ஊரில் பிரச்சினை வரும் போதெல்லாம்… தனது செல்வாக்கு,
பணபலம் போன்றவற்றால் அமுக்கி விடுவானாம்.

அந்த‌ நாட்டில் எல்லாம் த‌லைகீழா

இல‌ங்கை தீவும் இந்தியாவை போல் ஆகி விட்ட‌து 

க‌ள்ள‌ன‌ ஊரில் பிடிச்சு கொடுக்க‌
இல‌ங்கை காவ‌ல்துறை அவ‌னை 4 நாள் க‌ழித்து வெளியில் விட்ட‌வை.........

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ்க குணதிலக்கவுக்கு எதிரான பாலியல் வல்லுறவு வழக்கை சிட்னி நீதிமன்றம் ஒத்திவைத்தது

By SETHU

12 JAN, 2023 | 10:01 AM
image

இலங்கைக் கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு  எதிரான பாலியல் வல்லுறவு வழக்கை பெப்ரவரி 23 ஆம் திகதி வரை சிட்னி நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. 

இருபது20 உலகக் கிண்ண போட்டிகளில் பங்குபற்றுவதற்காக  இலங்கை அணியினர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த போது, தனது சம்மதமின்றி தன்னுடன்  தனுஷ்க குணதிலக்க, பாலியல் உறவு கொண்டதாக அவுஸ்திரேலிய யுவதி ஒருவர் அளித்த முறைப்பாட்டையடுத்து, கடந்த நவம்பர் 6 ஆம்  திகதி அவுஸ்திரேலிய பொலிஸாரால் தனுஷ்க கைது செய்யப்பட்டார். 

அவருக்கு  நவம்பர் 17  ஆம் திகதி கடும் நிபந்தனைகளுடன் நீதிமன்றம் பிணை வழங்கியது.

200,000 அவுஸ்திரேலிய டொலர் பிணையில் தனுஷ்க குணதிலக்க பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டி‍ருந்தார்,

 இந்நிலையில், தனுஷ்க குணதிலக்கவுக்கு  எதிரான பாலியல் வல்லுறவு வழக்கைபெப்ரவரி 23 ஆம் திகதி வரை சிட்னி டோனிங் சென்ரர் நீதிவான் டேவிட் பீரிஸ் இன்று ஒத்திவைத்தார்.

தனுஷ்க குணதிலக்க இன்று நீதிமன்றில் ஆஜராகவில்லை. பெப்ரவரி 23 ஆம்  திகதி அவரின் சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜரானால், தனுஷ்க நீதிமன்றில் ஆஜராகத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எனினும், தனுஷ்க குணதிலக்கவின் கடவுச்சீட்டு நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

அவர் டேட்டிங் செயலிகள் எதனையும் பயன்படுத் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை வெளியில் செல்வதற்கும்  தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/145571

  • கருத்துக்கள உறவுகள்

இன்னும் இந்த‌ கேஸ் முடிய‌லையா 🤣😁😂

 

 

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ்க குணதிலக்க இரவில் வெளியில் நடமாடவும் வட்ஸ்அப் பயன்படுத்தவும் சிட்னி நீதிமன்றம் அனுமதி

Published By: SETHU

23 FEB, 2023 | 10:18 AM
image

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பபட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க இரவு நேரத்தில் வெளியில் செல்வதற்கான தடை நீக்கப்ட்டுள்ளது. அத்துடன் வட்ஸ் அப் சமூகவலைத்தளத்தை பயன்படுத்துவற்கும் அவருக்கு சிட்னி நீதிமன்றமொன்றினால் இன்று அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

31 வயதான தனுஷ்க குணதிலக்க, இருபது20 உலகக் கிண்ணப் போட்டிகளுக்காக இலங்கை அணியுடன அவுஸ்திரேலியாவுக்குச் சென்றிருந்த போது, அவுஸ்திரேலிய யுவதி ஒருவரின் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டையடுத்து நவம்பர் 6 ஆம் திகதி கைது  செய்யப்பட்டார். 

நவம்பர் 17 ஆம் திகதி  தனுஷ்கவுக்கு சிட்னி நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட்டிருந்த போதிலும் கடும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.

அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறத் தடை, இரவு 9 மணி முதல் காலை 6 மணிவரை வெளியில் நடமாடத் தடை, சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்தத் தடை ஆகியனவும் இவற்றில் அடங்கும்.

இந்நிலையில், இந்நிலையில், பிணை நிபந்தனைகளை மீளாய்வு செய்யக்கோரி  தனுஷ்க குணதிலக்க மனுதாக்கல் செய்தார். 

இதையடுத்து, இரவில் வெளியில் நடமாடுவதற்கான தடையை நீதிவான் ஜெனிபர் அட்கின்ஸன் நீக்கியதுடன், வட்ஸ் அப் பயன்படுத்துவத்றகும் அனுமதி வழங்கினார். எனினும், டேட்டிங் தொடர்பான விடயங்களுக்கு இதை பயன்படு;தத முடியாது என நீதிவான் கூறினார்.

இரவில் வெளியில் நடமாடுவதற்கு அரச தரப்பு சட்டத்தரணி N[hu;[; upf;]d; ஆட்சேபம் தெரிவித்தார். எனினும்,  நீதிவான் ஆட்சேபத்தை நிராகரித்து தனுஷ்க இரவில் நடமாட  ஜெனிபர் அட்கின்ஸன் அனுமதி வழங்கினார்.

https://www.virakesari.lk/article/148918

  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ் குணதிலகவை… இரவில் வெளியில் நடமாட விடுவது ஆபத்தானது.
மீண்டும் முருங்கை மரத்தில், ஏறி விடுவான் என்று அச்சமாக உள்ளது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, தமிழ் சிறி said:

தனுஷ் குணதிலகவை… இரவில் வெளியில் நடமாட விடுவது ஆபத்தானது.
மீண்டும் முருங்கை மரத்தில், ஏறி விடுவான் என்று அச்சமாக உள்ளது. 🤣

ஆஸ்திரேலியாவில் ஆப்பிள் மரத்தில் ஏறி கொப்போடு முறித்ததாக அல்லவா வழக்கு🤣?

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

ஆஸ்திரேலியாவில் ஆப்பிள் மரத்தில் ஏறி கொப்போடு முறித்ததாக அல்லவா வழக்கு🤣?

அடங்கொப்பரான…. குணதிலக கொப்பில் ஏறி, அடி மரத்தையும் பதம் பார்த்து விட்டானா. 😂
கன்றிபுரூட். 🤣

Edited by தமிழ் சிறி

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ்க குணதிலக்க மீதான 3 பாலியல் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டதாக அறிவிப்பு !

Published By: DIGITAL DESK 3

18 MAY, 2023 | 10:06 AM
image

அவுஸ்திரேலியாவில் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது சுமத்தப்பட்ட நான்கு பாலியல் குற்றச்சாட்டுகளில் மூன்று குற்றசாட்டுகள் இன்று கைவிடப்பட்டுள்ளன.

குறித்த மூன்று குற்றச்சாட்டுக்களும் அந்நாட்டு சட்ட மா அதிபரால் மீளப்பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு இடம்பெற்ற இருபதுக்கு - 20 உலகக் கிண்ண தொடர் அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றிருந்த போது தனுஷ்க குணதிலக்க விளையாடிய முதல் போட்டியில் அவருக்கு உபாதை ஏற்பட்டதால் அவர் தொடரில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்நிலையில், சமூகவலைத்தளம் ஊடாக அறிமுகமான பெண்ணொருவரை சந்தித்து, சிட்னியின் கிழக்குப் புறநகரில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு தனுஷ்க குணதிலக்க சென்றுள்ளார்.

இந்நிலையில், தனது அனுமதி இல்லாமல் தன்னை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என குறித்த பெண் தனுஷ்கவிற்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார்.

இதையடுத்து தனுஷ்க குணதிலக்க கடந்த 2022 ஆம் அண்டு நவம்பர் மாதம் ஐந்தாம் திகதி அவுஸ்திரேலிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதன்படி, தொடரப்பட்ட 4 பாலியல் குற்றச்சாட்டுக்களில் 3 குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/155562

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

இதன்படி, தொடரப்பட்ட 4 பாலியல் குற்றச்சாட்டுக்களில் 3 குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவன்…. அவுஸ்திரேலிய சிறையில் 20 வருசம் களி தின்னுறதை பார்க்கலாம் என்று நாம் இருக்க,
ஆள்… வெளியிலை வந்திடுவான் போலை கிடக்கே…. 🙃

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தான் குற்றமற்றவன் என்று தனுஷ்க கூறுகிறார்

இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவுக்கு எதிராக சிட்னி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

தனுஷ்க எந்த வகையிலும் குற்றத்தை ஒப்புக்கொண்டிருந்தால் அவருக்கு விரைவில் தண்டனை கிடைத்திருக்கும் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எனினும் தனுஷ்க குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.

கடந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்தின் போது, சமூக ஊடகங்கள் மூலம் தொடர்பு கொண்ட இளம் பெண் ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தொடர்பாக இலங்கை வீரருக்கு எதிராக முதலில் 04 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.
கடந்த வழக்கில் அவுஸ்திரேலிய புலனாய்வு திணைக்களம் அதிலிருந்து 03 குற்றச்சாட்டுகளை வாபஸ் பெற நடவடிக்கை எடுத்தது.

இருப்பினும், எதிர் தரப்பினரின் அனுமதியின்றி பாலியல் செயல்களில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு தொடர்கிறது.

https://thinakkural.lk/article/257364

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தனுஷ்க குணதிலக்க விடுத்துள்ள வேண்டுகோள் !

07 JUL, 2023 | 12:36 PM
image
 

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க தன் மீதான வழக்கு விசாரணைக்கு ஜூரி சபையின்றி நீதிபதி முன்னிலையில் விசாரணை நடாத்தமாறு சிட்னி டவுனிங் சென்டர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவிற்கு எதிரான வழக்கு சிட்னி டவ்னிங் சென்டர் நீதிமன்றில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணிகள் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளதாக, வெளிநாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணிகள் முன்வைத்த இந்தக் கோரிக்கை தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 24 ஆம் திகதி வழங்கப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டியின் போது யுவதி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் தனுஷ்க குணதிலக்க நவம்பர் 06 ஆம் திகதி கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/159431

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியாவில் பாலியல்வன்முறை குற்றச்சாட்டில் சிக்குண்டுள்ள தனுஸ்கவை சந்தித்தார் ஹரீன்

13 JUL, 2023 | 11:29 AM
image
 

அவுஸ்திரேலியாவில் பாலியல் வன்முறை குற்றச்சாட்டில் சிக்கியுள்ள கிரிக்கெட் வீரர் தனுஸ்க குணதிலகவை அமைச்சர் ஹரின்பெர்ணாண்டோவும்  முன்னாள் வீரர் சனத்ஜெயசூரியவும் அவுஸ்திரேலியாவில் சந்தித்துள்ளனர்.

தனுஸ்ககுணதிலக தனது முகநூல் பதிவில் இதனை தெரிவித்துள்ளதுடன் இது குறித்த படத்தையும் வெளியிட்டுள்ளார்.

அவுஸ்திரேலியாவில் தன்னை வந்து பார்த்தமைக்காக அமைச்சருக்கும் சனத்ஜெயசூரியவிற்கும் தனுஸ்க நன்றியை தெரிவித்துள்ளார்.

சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன்பெர்ணான்டோவும் சனத்ஜெயசூரியவும்  அவுஸ்திரேலியாவில் சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு சுற்றுப்பயணத்தினை மேற்கொண்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபரில்  டி20 உலககிண்ணப்போட்டிகளுக்காக இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டவேளை அங்கு பாலியல்வன்முறையில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டை தனுஸ்ககுணதிலக எதிர்கொண்டுள்ளார்.

அவர் அவுஸ்திரேலியாவிலிருந்து வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

https://www.virakesari.lk/article/159888

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.