Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ் தேசிய அரசியல்வாதிகள்- நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா….? சொல்லுங்கள் ! ?…. அவதானி.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் அத்தனைபேரும் உத்தமர்தானா….? சொல்லுங்கள் ! ?…. அவதானி.

thumbnail_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0

இராமகிருஷ்ண பரமஹம்சர் பற்றி அறிந்திருப்பீர்கள். அவர் சிறந்த கதை சொல்லி.

அவர் சொன்ன கதைதான் இது:-

thumbnail_Ramakrishna_Paramahamsa-300x19

ஒரு காட்டில் வாழ்ந்த முனிவர், தனது சீடரான மற்றும் ஒரு முனிவரிடம் ஆசிரமத்தை பார்த்துக்கொள்ளச்சொல்லிவிட்டு, வெளிப்பிரதேசம் ஒன்றுக்கு சென்றுவிட்டார்.

அப்போது அந்த சீடர் ஒரு சிறிய கோவணத்துண்டுடன்தான் இருந்தார். ஒரு நாள் அந்தக் கோவணத்துண்டை எலி கடித்துவிட்டது. அந்தக் காட்டில் வாழ்ந்த காட்டு வாசிகள் அவரது நிலையை பரிதாபத்துடன் பார்த்துவிட்டு, எலியை பிடிப்பதற்காக ஒரு பூனையை கொண்டுவந்து கொடுத்தார்கள்.

அதற்கு தினமும் பால் தேவைப்பட்டது. அந்தச் சீடர் மக்களிடம் சொன்னார். அவர்கள் ஒரு பசுவையும் கன்றையும் அவருக்கு வழங்கினார்கள். அவர் பசுவிலிருந்து பால் கறந்து பூனைக்குத் தந்தார்.

பசுவுக்கு தினமும் புல்லும் புண்ணாக்கும் தேவைப்பட்டது. அத்துடன் அதனை பராமரிக்க ஆளும் தேவை என்றார் சீடர்.

உடனே மக்கள் அவருக்கு ஒரு வேலையாளை நியமித்தார்கள். அவனோ தனக்கு பசியெடுத்தால் உணவு வேண்டும் என்றான்.

அவனுக்கு சமைத்துப் போடுவதற்காக ஒரு பெண்ணை அந்த மக்கள் திருமணம் செய்து வைத்தார்கள். அந்தத் தம்பதிக்கு குழந்தைகள் பிறந்தன.

நாட்கள், வாரமாக மாதமாக வருடங்களாக கடந்த பின்னர், வெளியூர் சென்றிருந்த முனிவர் திரும்பி வந்தார். தனது சீடருடன் ஒரு பூனை, ஒரு பசுமாடு கன்றுக்குட்டி, அவற்றை பராமரிக்க ஒரு குடும்பம், அவர்களுக்கு பிள்ளை குட்டிகள். இத்தனை பரிவாரங்களை பார்த்ததும், முனிவர் கேட்டார், என்ன சீடரே… நான் உம்மை இங்கே விட்டுச்செல்லும் போது நீர் மாத்திரம்தானே இருந்தீர்.. இப்போது என்ன நடந்தது…?

சுவாமி எல்லாமே இந்த கோவணத் துண்டுக்காகத்தான். என்றார் சீடர்.

எங்கள் நாட்டில் தமிழ் மக்களுக்காக அரசியல் நடத்தும் தமிழ் அரசியல்வாதிகளும் அந்த சீடரின் நிலையில்தான் இருக்கிறார்கள் போலத்தெரிகிறது.

இவர்களின் தலைவர்கள் எனச்சொல்லப்பட்டவர்கள் பலர் இன்றில்லை. அவர்கள் மேல் உலகம் சென்றுவிட்டனர். அவர்களும் அந்த பெரிய முனிவர்போன்று திரும்பி வந்தால், தங்கள் சீடர்களைப்பார்த்து – ஏன் இவ்வாறு ஆட்களை கூட்டிவைத்துக்கொண்டு, ஆளையாள் கடித்து குதறிக்கொண்டிருக்கிறீர்கள்…? என்றுதான் கேட்பார்கள்.

சிலவேளை நீங்கள் காட்டிய வழியில்தான் நாமும் செல்கின்றோம். ஆனால், என்ன வித்தியாசம் என்றால் நாம் வார்த்தைகளை மோசமாக அள்ளி வீசுகின்றோம் என்பார்கள்.

ஒரு தமிழ்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி, தமிழ் தேசியக்கூட்டமைப்பினை விபசார விடுதி என்று வர்ணித்திருக்கிறார்.

இது விபசாரத் தொழில் செய்பவர்களை மேன்மைப்படுத்துகிறதா..? அல்லது சிறுமைப்படுத்துகிறதா..? என்பது புரியவில்லை.

மேலைத்தேய நாடுகளில் விபசாரத் தொழில் சட்டபூர்வமாக்கப்பட்டு, அந்த விடுதிகளில் வேலை செய்பவர்களை Sex Workers என அழைக்கிறார்கள். அவர்கள் தாங்கள் வாழும் நாட்டின் அரசுக்கு வரியும் செலுத்துகிறார்கள்.

அதன்மூலம் அந்த நாட்டின் பொருளாதாரத்துக்கு தங்கள் பங்கில் உதவுகிறார்கள்.

ஆனால், எங்கள் அரசியல்வாதிகளான பாராளுமன்றத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் எம்.பி.க்கள் எவரேனும் எங்காவது தொழிற்சாலைகளில் வேலை செய்து கிடைக்கும் வருமானத்திலிருந்து வரி செலுத்துகிறார்களா..?

இவர்கள் பவனி வரும் வாகனங்களுக்கும், இவர்கள் தலைநகரத்தில் தங்கியிருக்கும் வாசஸ்தலங்களுக்குமுரிய பணம் மக்களின் கடும் உழைப்பிலிருந்தும் வர்த்தகர்கள் தங்கள் வருமானத்திலிருந்தும் வழங்கும் வரிப்பணத்திலிருந்தும்தான் இத்தனை சுகபோகங்களையும் அனுபவிக்கிறார்கள்.

இவர்கள்தான் மக்களின் பிரதிநிதிகள். இந்த பிரதிநிதிகள்தான் தங்கள் தங்கள் கட்சிக்கூடாரங்களுக்குள்ளிருந்துகொண்டு வார்த்தைகளை எதிரும் புதிருமாக வீசிக்கொண்டிருக்கிறார்கள்.

தென்னிலங்கை மக்கள் – கோத்தா கோ கம போராட்டக்காரர்கள் – தன்னெழுச்சியாக போராடி, கோத்தாவை வீட்டுக்கு அல்ல, நாட்டை

விட்டே களைத்தார்கள். அவர் வேண்டாத விருந்தினராக மீண்டும் வந்துவிட்டார்.

அண்மையில் தென்னிலங்கை அரசியல்வாதியும் கடும்போக்காளருமான விமல் வீரவன்சவும் அவருடன் இணைந்திருக்கும் சில முக்கிய அரசியல் தலைவர்களும் கலந்துகொண்ட கூட்டத்தை , இவர்கள் மீது கோபம் கொண்டிருந்த சிங்கள மக்கள் தங்கள் எழுச்சியான வெறுப்பைக்காண்பித்துள்ளனர். அதனால், விமல் வீரவன்ச குழுவினர் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என ஓடிவிட்டனர்.

ராஜபக்ஷ குடும்பத்தினரையும் கோத்தாவையும் அரியணையில் ஏற்றிய மக்களின் வெறுப்பினையடுத்து, மொட்டு கட்சியும், தற்பொழுது தனது பிரசார நடவடிக்கைகளை நிறுத்தியிருக்கிறது.

மொட்டுவிலிருந்து வெளியேறிய ஆறு எம். பி.க்கள் – முதலில் சுயாதீனமாக இயங்குவதாகச் சொல்லியவர்கள் – இப்போது சஜித் பிரேமதாசவின் தலைமையில் இயங்கும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் ஐக்கியமாகியிருக்கின்றனர்.

பொதுஜன பெரமுன கட்சியின் எம். பி.க்கள் சிலருக்கு அமைச்சுப்பதவி, வேண்டுமென கட்சியின் பொதுச்செயலாளர் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவுக்கு கடிதம் எழுதிக்கேட்டும் திருப்தியான பதில் கிடைக்காதமையின் எதிரொலியாகவும், ஆறு பேர் கட்சி தாவியிருக்கும் கோலத்தை அவதானிக்க முடிகிறது.

இவர்களும் தாழும் கப்பலிலிருந்து படிப்படியாக வெளியேறி கிடைக்கும் துடுப்பைக்கொண்டு கரை சேரப்பார்க்கிறார்கள்.

இது இவ்விதமிருக்க, தங்களை நம்பவைத்து கழுத்தறுத்துவிட்டார் கோத்தபாய என்று சீறிச்சினக்கிறார் டலஸ் அழகப்பெருமா.

விகிதாசார தேர்தல் முறை இல்லையென்றால், முன்னாள் நீதியரசர் விக்னேஸ்வரன் இன்று எம்.பி. ஆகியிருக்கமுடியாது என்கிறார் யாழ். மாவட்ட முன்னாள் எம். பி. சரவணபவன். தனக்கு வந்திருக்கவேண்டிய எம்.பி. பதவி, விக்னேஸ்வரனுக்கு வந்துவிட்டதே என்ற ஆதங்கம் இவருக்கு.

தனக்கு வந்திருக்கவேண்டிய ஜனாதிபதி பதவி, ராஜபக்ஷ குடும்பத்தினரால், ரணிலுக்கு போய்விட்டதே என்ற ஆதங்கம் டலஸ் அழகப்பெருமாவுக்கு.

இவ்விடத்தில் சரவணபவனும் டலஸும் ஒரு புள்ளியில் சந்திக்கிறார்கள்.

மொத்தத்தில் இவர்கள் அனைவருக்கும் பாராளுமன்ற ஆசனத்திலும் பதவி ஆசனத்திலும்தான் கண்கள் பதிந்துள்ளன.

ஆனால், இவர்கள் அனைவருமே தங்களை நம்பி வாக்களித்த மக்களின் வளமான வாழ்வு குறித்து சிந்தித்து தங்களால் இயன்றதை அவர்களுக்கு செய்து வருகிறார்களா..?

பாராளுமன்றத்திற்கு முதல் முதலில் பிரவேசித்த பின்னர், இவர்கள் சேர்த்துள்ள சொத்துக்கள் பற்றி மக்களுக்கு தெரியவருகிறதா..?

thumbnail_%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0

இராமகிருஷ்ண பரமஹம்சர் சொன்ன அந்தக்கதையிலாவது கோவணத்துடன் இருந்த அந்த சீடனுக்கு வந்துசேர்ந்தவை தெரியவருகிறது.

ஆனால், இந்த மக்களின் பிரதிநிதிகள் எனச் சொல்லப்படும் அரசியல்வாதிகளுக்கு பாராளுமன்ற ஆசனங்களின் மூலம் கிடைத்த – கிடைக்கப்போகின்ற வரப்பிரசாதங்கள் தெரியவராது.

இந்த அரசியல்வாதிகள் அடுத்து வரவிருக்கும் பாரளுமன்றத் தேர்தலின் மூலம் கிடைக்கவிருக்கும் ஆசனத்தை நோக்கியே தங்கள் நிகழ்ச்சி நிரலை நகர்த்துவார்கள். அதற்காக சந்தர்ப்பவாத கூட்டணிகளுக்கும் தயாராவார்கள்.

அதற்காக ஆளையாள் அறிக்கைகள் மூலம் காலை வாரிவிடுவார்கள்.

 

 

 

https://akkinikkunchu.com/?p=231010

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் இரு தடவைக்கு மேல் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கமுடியாது என சட்டம் வரவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

ஒரு தமிழ்க்கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி, தமிழ் தேசியக்கூட்டமைப்பினை விபசார விடுதி என்று வர்ணித்திருக்கிறார்.

அட.... ரெலோ நாடாளுமன்ற உறுப்பினர் தான்... 
தமிழ் தேசிய கூட்டமைப்பை விபசார விடுதி என்று வர்ணித்திருக்கிறார். 

அவர் சொன்னதில் தவறு இல்லை.

அந்த அளவுக்கு... சம்பந்தனும், சுமந்திரனும் 
தமிழ் தேசிய கூட்டமைப்பை கொண்டு வந்து நிறுத்தி இருக்கின்றார்கள்.

👇

 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கட்டுரை எழுதிய ச.அருணாசலம் இன்னொரு கட்டுரையும் எழுதியுள்ளார் .ஒக்டோபர் 7 ஹமாஸ் பயங்கரவாதிகள் பெண்கள் குழந்தைகள் மக்கள் மீது தாக்குதல் நடத்தி 1200 பேரை படுகொலை செய்ததை இஸ்ரேலிய துருப்புகள் 1200 பேர் மீதான ஹமாஸ் தாக்குதல் என்றும் அதற்கு பழிவாங்க இஸ்ரேல் பாலத்தீனிய மக்களை கொல்கின்றது என்று எழுதியவர்.
    • இது ஜப்பான முஸ்லிம் https://www.jaffnamuslim.com/2024/05/blog-post_916.html இராஜாங்க அமைச்சர் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் பேயாட்டம் ஆடிய சம்பவம் பதிவு.  Madawala News  14 hrs ago        கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .   இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது . இது மடுவலவை https://www.madawalaenews.com/2024/05/blog-post_97.html விமான நிலையத்தில் ராஜாங்க அமைச்சரின் சண்டித்தனம் Thursday, May 16, 2024  சர்வதேசம்     கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .         இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .   அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .   அப்போது, அவர் பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .   பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.   தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .   அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது .   இரண்டு முஸ்லிம் இணையமும் ஒரே மாதிரி எழுதி உள்ளன யாவரும் கவனிக்க இங்கு தேவையில்லாத பிரச்சனையை உருவாக்கி குளிர் காய்பவர்கள் யார் என்று புரிந்து கொள்க . இலங்கையில் நாங்கள் இரண்டாம் தர குடிமக்கள் போர் முடிந்தபின் வேறு வழி கிடையாது இன்னும் எழுதலாம் வேணாம் காலையில் நிம்மதியாய் எழுந்து கோப்பி குடிக்கணும் .
    • வழக்கமாக அல்லாகு அக்பர்    இறுதி வெற்றி அல்லாவுக்கே என்றில்லாமல் இறுதி வெற்றி ஜனநாயகத்துக்கே! என்கின்றார். இந்திய மீனவர்களின் ஊடுருவல்களால் நம் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதைக்கூட கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு திராணியில்லை. ரிஷாட் பதியுதீன்  நல்ல மாற்றம்.
    • பல் என்று சொல்கிறீர்கள் போலுள்ளது ....... அதை நான் ஆமோதிக்கிறேன்......!  😁
    • ஏமாற்றம் இலங்கையின் கறுப்பு பக்கம் ☹️ நான் நினைத்தேன் கடவுள் மேல் உள்ள பக்தி காரணமாக ஆண்கள் கோவிலில் ஆபாசமாக மேலே ஆடை இல்லாமல் நிற்கின்றனர், தமிழ் அரசியல்வதிகள் மற்றும் ரணில்  வாக்குகள் பெற்று கொள்வதற்காக அப்படி செய்கின்றனர்.சைக்கிளை உருட்டிக்கொண்டு கோவில் பாதையால் போன கிருபன் அய்யாவை சேட்டை கழட்ட சொன்னது பலியல் துன்புறுத்தல்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.