Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழருக்கு தீர்வு வருகிறதாம்-பா.உதயன் 

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழருக்கு தீர்வு வருகிறதாம்-பா.உதயன் 

தமிழருக்கு தீர்வு தருவேன் என்றான் ஒருவன். அதுவெல்லாம் முடியாது  என்றான் இன்னொருவன். பின்பு முடியாது என்றவன் தீர்வு தருவேன் என்றான். முன்பு முதல் முடியும் என்றவன் இப்போ முடியாது என்றான். அவனிடமும் இவனிடமும் மாறி மாறி கதைத்து ஏமாந்தது தான் மிச்சம். சமஸ்டி தீர்வு என்று கதைத்தாலே சத்தி வருகிறது என்கிறார்கள் பெளத்தத் துறவியார் கூட. கொடுத்தால் பிறகு எல்லாம் நாட்டை பிரித்து எடுத்து விடுவார்களாம்.

 மாகாணசபைக்கு கொஞ்சம் கொடுத்து மடக்க நினைக்கிறார் ரணில். பெரிய நரியார் இவர் ஆச்சே கதையால் எல்லாம் மடக்குவார். 13 ம்  திருத்தம் கூட இந்தியா திணித்த தீர்வாம் பாதி உடைஞ்சு போச்சாம் பழைய கதையாய் ஆச்சாம் கிடப்பில இப்போ கிடக்காம்.  இனி என்ன நடக்கும் இருந்து பார்ப்போம். இன்னொருக்கா மீண்டும் ஏமாற்றுவார்களா பார்ப்போம். இந்தியா சும்மா இருந்தால் எதுகும் இஞ்ச நடக்காதாம் இவர்கள் ஏதும் சொன்னால் கொஞ்சமா ஏதும் கொடுக்க பார்ப்பினமாம் முந்த நாள் எங்களில் ஒருவர் எழுதி இருந்தார். இந்தியா எப்போதுமே 13 ஐ நடைமுறைப் படுத்துங்கள் என்று வழமை போலவே சொல்லிக் கொண்டே இருக்கிறது. இரு நாடுகளுமே தேசிய நலன்களோடு தங்கள் தங்கள் சுய நலன்களோடு மட்டும் பயணிக்கின்றன.

 என்னவோ தெரியாது எலக்சனும் வருகுதாம் சும்மாவா ரணில் சுத்திறார் பந்தை தந்திரமாக. எங்களில் சிலருக்கு எப்படி ஆடுவது என்று எதுகுமே புரியல்ல ரணில் தந்திரமாகவே காய்களை நகத்திறார். இலக்கு கூட ஒன்றாய் இருந்தும் எல்லா தமிழ்க் கட்சிகளும் சேர்ந்து  ஒரே கொள்கையோடு இது தான் தமிழருக்கான தீர்வாக இருக்க முடியும் என்று கதைக்கினம் இல்லை. தனித் தனியாக அறிக்கைகள் வருகுது தமிழருக்கு கூட குழப்பமாய் இருக்குது. எங்களுக்கான பலத்தை நாம் இழந்த பிறகு வேறு எங்கள் ஒற்றுமையை தவிர வேறு எதைத்  தான் எம்மால் செய்ய முடியும். இன்று இலங்கை கூட பொருளாதார ரீதியாக பலம் இழந்து நிற்கிறது ஆகவே தமிழருக்காக தீர்வு விடயத்தில் சரியான வழியில் நாம் ஒன்று சேர்ந்து நகர்த்த வேண்டும்.

இனவாதம் ஒன்று தான் இலங்கையின் இன்றைய அழிவுக்கு காரணம் என்ற தெளிவு இருந்தால் தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு ஒன்று தான் இலங்கை தப்பிப் பிழைக்க ஒரே வழி. இருந்தும் இந்த இலங்கை தேசத்திலே தமிழருக்கானா நியாயமான நீதியான தீர்வில் கடந்த எழுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழுமா என்பது பெரும் கேள்வியாகவே தமிழர் மனங்களில் உள்ளது. 

பெரும் பேரினவாதமும் பிழையான பொருளாதாரக் கொள்கையும் தான் இந்த தேசத்தை இவ்வளவு அழிவுப் பாதைக்கு இட்டுச் சென்றது. தனியவே தமிழர் அழிப்பில் மட்டும் நரித்தந்திரமான இராஜதந்திரக் கொள்கைகளை சிங்களத் தலைவர்கள் கடைப் பிடித்தார்களே அன்றி இந்தச் சிறிய நாட்டை பொருளாதார ரீதியாகவும் இன ஐக்கியத்துடனும் கட்ட மறந்து விட்டார்கள். எல்லா சட்டங்களுமே தமிழர் உரிமைகளையும் அவர் நிலங்களையும் பறிப்பதற்காகவே கொண்டு வந்தார்கள். தமிழ் இன அழிப்புக்காக கொண்டு வந்த பயங்கரவாதச் சட்டம் பெரும் பான்மை சிங்கள இனத்தை படாத பாடு படுத்தது இப்போ. எத்தனையோ தமிழன் வாழ்வை எல்லாம் இழந்தான் இதற்குள்ள கிடந்து அப்பவெல்லாம் எவனும் கேட்கவில்லை. எதுகும் இப்பதான் தெரியுது சிங்களவருக்கு கூட இதனது கொடுமை. இதை கொண்டு வர நின்ற கொடுமைக்காரர் கூட கத்துகினம் இப்போ கனக்கவெல்லாம் சொல்லி தங்களின் தலையில் வந்த பின்பு துன்பம். உங்களையும் ஒரு நாள் இது துரத்தும் என்று எங்களில் ஒருவன் சொன்னான் தெரியுமா. எது எப்படி இருப்பினும் இன்றைய தமிழர் நிலமையில் தீர்வு முக்கியமே அப்போது தான் இழந்து கொண்டிருக்கும் எங்கள் உரிமையும் நிலப் பறிப்புகளையும் காப்பாற்ற முடியும்.ஆனால் இவை எல்லாம் வெறும் கனவுகளாகத் தான் முடியுமோ என்றும் கதைக்கிறார்கள் பலர்.

பா.உதயன் 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, uthayakumar said:

இனவாதம் ஒன்று தான் இலங்கையின் இன்றைய அழிவுக்கு காரணம் என்ற தெளிவு இருந்தால் தமிழரின் பிரச்சினைக்கு தீர்வு ஒன்று தான் இலங்கை தப்பிப் பிழைக்க ஒரே வழி. இருந்தும் இந்த இலங்கை தேசத்திலே தமிழருக்கானா நியாயமான நீதியான தீர்வில் கடந்த எழுபது ஆண்டுகளாக நிகழாத அரசியல் மாற்றம் இனிவரும் காலங்களில் நிகழுமா என்பது பெரும் கேள்வியாகவே தமிழர் மனங்களில் உள்ளது. 

நியாயமான சந்தேகம் உதயன்.
இப்பவே… அமைச்சர் நசீர், உதயன் கம்மன்பில போன்றோர் எதிர்க்க ஆரம்பித்து விட்டார்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனது தான் கண்ட மிச்சம். . 

"ஆனால் இவை எல்லாம் வெறும் கனவுகளாகத் தான் முடியுமோ என்றும் கதைக்கிறார்கள் பலர்."

 

 

Edited by நிலாமதி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.