Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பயங்கரவாதிகளிடமிருந்து முழு நாட்டையும் கைப்பற்றுவோம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பயங்கரவாதிகளிடமிருந்து முழு நாட்டையும் கைப்பற்றுவோம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு

வீரகேசரி நாளேடு

எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொண்டு விரைவில் முழு நாட்டையும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடனும் அமைதியாகவும் வாழ்வதற்கான தேசத்தை கடியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுகிகன்றேன் என்று ஜனாதிபதி மஹிந் ராஜபக்ஷ தெரிவித்தார்.

கண்டி பெரஹெரவை கண்டுகளிப்பதற்காக வந்திருந்த அம்பாறை மாவட்டத்தின் டீ.எஸ் சேனாநாயக்க, திவுலான வித்தியாலயம், சம்மந்துறை பாடசாலை மற்றும் உகன மகா வித்தியாலயங்களின் மாணவர்கள் கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று ஜனாதிபதியை சந்தித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

கிழக்கு மாகாணம் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்க்கப்பட்டமையினாலேயே தமக்கு கண்டி பெரஹெரவை கண்டுகளிக்க முடிந்தது என்று பாடாசலை மாணவர்கள் இதன்போது ஜனாதிபதி மஹிந் ராஜபக்ஷவிடம் தெரிவித்துள்ளனர்.

ஜனாதிபதி இங்கு மேலும் கூறுகையில்: விரைவில் முழு நாட்டையும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுப்போம். எமது தாய்நாட்டை எமது தாயைபோன்று நாம் பாதுகாக்கவேண்டும். சிறப்பாக கல்வி கற்று நாட்டின் சிறந்த பிரஜைகளாக மாணவர்கள் உருவாகவேண்டும். அதற்கான அமைதியான சூழலை கட்டியெழுப்ப எனது தலைமையிலான அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்படும் என்று கூறினார்.

இதன்போது தமது பாடசாலைகளில் நிலவுகின்ற ஆசிரியர் பற்றாக்குறை தொடர்பாக இங்கு மாணவர்கள் எடுத்துக்கூறியதுடன் அவற்றை நிவர்த்திக்க நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பயங்கரவாதிகளிடமிருந்து முழு நாட்டையும் கைப்பற்றுவோம் என்று ஒரு பயங்கரவாதி சொல்லுறார்! எல்லாம் காலம்! :D

  • கருத்துக்கள உறவுகள்

"எத்தகைய தடைகள் ஏற்பட்டாலும் அவற்றை எதிர்கொண்டு விரைவில் முழு நாட்டையும் பயங்கரவாதிகளிடமிருந்து மீட்டெடுத்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையுடனும் அமைதியாகவும் வாழ்வதற்கான தேசத்தை கடியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுகிகன்றேன் என்று ஜனாதிபதி மஹிந் ராஜபக்ஷ தெரிவித்தார். "

3000 கோடிக்கு மிக் வாங்க வெளிக்கிட்டால் நாட்டை எங்கை கட்டி எழுப்பிறது. மகிந்துவின் வீட்டை தான் கட்டி எழுப்பலாம்.

பயங்கரத்தைத் தோற்றுவிப்பவர்களைத்தான் பயங்கரவாதிகளெனக் கூறவேண்டும். வடகிழக்கில் மட்டுமல்ல இலங்கையின் சகலபாகங்களும் பயங்கரவாத நடவடிக்கைகளால் சூழப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் யார் காரணம்? அடக்குமுறை ஆட்சியைக் கொண்டு நடத்தும் சிங்களப் பேரினவாத நடவடிக்கைகள்தானே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பயங்கரவாதிகளிடமிருந்து முழு நாட்டையும் கைப்பற்றுவோம் என்று ஒரு பயங்கரவாதி சொல்லுறார்! எல்லாம் காலம்! :D

<<<

கலைஞா. முந்தி விட்டீர்கள், செய்தி வாசித்ததும் எனக்கும் மனசில் உடன் தோன்றியது இதுதான்!. இவர்களிடம் இருந்து தமிழ் மக்களாகிய புலிகள் நாட்டை மிக விரைவில் கைப்பற்றுவோம்!!

இதைத்தான் தமிழர்கள் சொல்கின்றோம் பயங்கரவாதிகளிடமிருந்து எம் நாடான தமிழீழத்தை மீட்போம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சவாலை எதிர்கொண்டாலும் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும்

[30 - August - 2007]

* கண்டியில் ஜனாதிபதி ராஜபக்‌ஷ

-எம்.ஏ.எம்.நிலாம்-

சவால்கள், தடைகளை எக்கோணத்தில் எதிர்கொள்ள நேரிட்ட போதிலும் பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டும் முயற்சியிலிருந்து தான் பின்வாங்கப் போவதில்லையெனத் தெரிவித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ எதிர்காலச் சந்ததியினர் நிம்மதியாக வாழக்கூடிய நிலையை உருவாக்குவதில் உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

பயங்கரவாதத்தை ஒழிக்கும் முயற்சியை தொடரும் அதேசமயம் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியும் தீவிரப்படுத்தப்படுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியிருக்கின்றா

பயங்கரவாதிகள் எண்டு ஜனாதிபதி சொல்வது ஜேவீபி, சிங்கள் உறுமய, ஐதேக கட்சிகளையாம்... அவர்களிடம் இருந்து மீட்டு ஜனாதிபதி குடும்பமே ஒட்டு மொத்தமாக நாட்டை காலம் காலத்துக்கு பொறுப்பெடுக்க உள்ளதாம்... ( பாக்கிஸ்தானை போல)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.