Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீனா இணக்கம் - IMF அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சீனா இணக்கம் - IMF அறிவிப்பு

சீனா இணக்கம் - IMF அறிவிப்பு

உலகின் பல்வேறு நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி குறித்து விவாதிக்க வட்டமேசை விவாதத்தில் கலந்துகொள்ள சீனா ஒப்புக்கொண்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா இதனைத் தெரிவித்துள்ளார்.

தனியார் துறையின் கடன் வழங்குபவர்களும் விவாதத்தில் கலந்து கொள்ள உள்ளனர்.

இலங்கை உள்ளிட்ட நாடுகள் எதிர்நோக்கும் கடன் நெருக்கடி தொடர்பில் கருத்துக்களை பரிமாறிக் கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது.
  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச பிணைமுறி கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுப்பட சீனா இணக்கம்

By DIGITAL DESK 5

17 DEC, 2022 | 05:02 PM
image

(இராஜதுரை ஹஷான்)

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடி தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு சர்வதேச பிணைமுறி கடன் வழங்குநர்களுடன் பொது பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ள சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி கிறிஸ்லினா ஜோர்ஜியேவா சர்வதேச ஊடகத்துக்கு கருத்து தெரிவித்துள்ளார்.

பொறுப்புக் கூற வேண்டிய தரப்பினர் நேரடியாக தகவல்களை பரிமாற்றிக் கொள்ளாமல் இருப்பது கடன் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாத தன்மையை ஏற்படுத்தியுள்ளது.குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் எதிர்காலத்தில் கடன் நெருக்கடியால் பாதிக்கப்படாத வகையில் வழிமுறைகளை உருவாக்க அவதானம் செலுத்தப்பட்டுள்ளது எனவும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதான குறிப்பிட்டுள்ளார்.

உலக வங்கி தலைவர் டேவிட் மெல்பாஸ் உள்ளிட்ட முக்கிய தரப்பினர் ஒன்றிணைந்து கடந்த வாரம் சீனாவின் உயர்மட்ட நிதி அதிகாரிகளுடன் முன்னெடுத்த பேச்சுவார்த்தை சாதகமாக அமைந்துள்ளது என சர்வதேச நாணய நிதியத்தின் பிரதானி கிறிஸ்லினா ஜோர்ஜியேவா தெரிவித்துள்ளார்.

இவ்வாறான பின்னணியில் குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் நாடுகள் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு,கடன் நெருக்கடி தொடர்பில் தீர்வு காண சர்வதேச பிணைமுறி வழங்குநர்களுடன் பொது பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள சீனா இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம்,உலக வங்கி,மற்றும் ஜி20 நாடுகளின் பிரதானிகள் இந்த பேச்சுவார்த்தையின் இணை ஏற்பாட்டாளர்களாக உள்ளதுடன்,கடன் பெற்ற நாடுகள் மற்றும் கடன் வழங்குநர்கள்,தனியார் துறையினர் இந்த பொது பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்த கடன் நெருக்கடியில் பொறுப்புக்கூற வேண்டிய தரப்பினர் வௌ;வேறாக செயல்படுவதும்,ஒவ்வொருவரும் நேரடியாக தகவல்களை பரிமாறிக் கொள்ளாமல் இருப்பதும் நெருக்கடிக்கு தீர்வு காண முடியாமல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உத்தேச பொது பேச்சுவார்த்தை ஊடாக கடன் நெருக்கடிக்கு தீர்வு பெற்றுக்கொள்வதுடன் கடன் நெருக்கடியால் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்படாத வகையிலான வழிமுறைகளை முன்வைப்பது அவசியமாகும் என்றார்.

சீனாவின் பங்குப்பற்றலுடன் இடம்பெறவுள்ள சர்வதேச பிணைமுறி கடன் வழங்குநர்களுடனான இந்த பொது இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தையின் முதல் சுற்று பேச்சுவார்த்தை இடம்பெறும் திகதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

இவ்விடயம் தொடர்பில் நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்கவிடம் வினவிய போது அவர் குறிப்பிட்டதாவது,

இலங்கையின் பிரதான நிலை கடன் வழங்குநர்களான  இந்தியா,சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு தொடர்பான மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை சாதகமாக நிறைவடைந்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை இம்மாதத்தின் இறுதி பகுதியில் பெற்றுக்கொள்ள எதிர்பார்த்திருந்தோம்,இருப்பினும் பிரதான நிலை கடன் வழங்குநர்களின் நிதி காப்புறுதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் எமது எதிர்பார்ப்பு எதிர்வரும் ஜனவரி மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது.

சர்வதேச பிணைமுறி கடன் வழங்குநர்களிடமிருந்து பெற்றுக்கொண்ட கடன்களை மறுசீரமைப்பது சவால் மிக்கது.ஏனெனில் சர்வதேச பிணைமுறி சந்தையில் கடன் முதலீட்டாளர்கள் மற்றும் கடன் நிறுவனங்கள் மாத்திரமே உள்ளன,நாடு என்ற அடிப்படையில் பிரநிதித்துவம் கிடையாது,ஆகவே இவ்விடயத்தின் அவதானத்துடன் செயற்பட வேண்டும்.

சர்வதேச பிணைமுறி கடன் வழங்குநர்களுடனான பொது இணக்கப்பாட்டு பேச்சுவார்த்தையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தொடர்பில் விசேட கவனம் செலுத்துவதாக சீனா,இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்குவதாக உறுதியளித்துள்ளன என்றார்.

https://www.virakesari.lk/article/143370

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.