Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காரைக்கால் – காங்கோன்துறை கப்பல் சேவை பெப்ரவரி மாதம் ஆரம்பம் – யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காரைக்கால் – காங்கோன்துறை கப்பல் சேவை பெப்ரவரி மாதம் ஆரம்பம் – யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம்

காரைக்கால் – காங்கோன்துறை கப்பல் சேவை பெப்ரவரி மாதம் ஆரம்பம் – யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம்

காரைக்கால் – காங்கோன்துறை கப்பல், சேவை அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் ஆரம்பிக்குமென யாழ். வணிகர் கழக தலைவர் ஜெயசேயரம் தெரிவித்துள்ளார்.

யாழ். வணிகர் கழகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்படி தைப்பொங்கலின் பின்னர் பெப்ரவரி ஆரம்பத்திற்குள் காரைக்கால் காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பிக்குமென எதிர்பார்ப்பதோடு இரண்டு நிறுவனங்கள் இதனை ஆரம்பிக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறிய கப்பல்கள் போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் அதேவேளை அவை 1000 மெட்ரிக் தொன்னிற்கும் குறைவாக கொள்ளளவுடையவை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2022/1315987

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை - இந்தியாவிற்கிடையில் பயணிகள் கப்பல் சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பம்

By T. SARANYA

19 DEC, 2022 | 04:55 PM
image

(எம்.மனோசித்ரா)

இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே பயணிகள் கப்பல் சேவை அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்பட உள்ளது. இக்கப்பல் சேவையானது காங்கேசன்துறை துறைமுகத்தையும் தமிழ்நாட்டின் புதுச்சேரியையும் இணைப்பதாக அமையவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சர்வதேச ஊடகமொன்றுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த சேவைக்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இந்த பயணிகள் கப்பல் சேவையானது சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான கலாசார உறவுகளை வலுப்படுத்தவும் வாய்ப்பாகவும் அமையும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சுட்டிக்காட்டியுள்ளார்.

தென்னிந்தியாவில் இருந்து திருகோணமலை மற்றும் கொழும்பு வரையும் பின்னர் குறித்த கப்பல் சேவைகள் விஸ்தரிக்கப்படும். அதற்கமைய துறைமுகங்களில் சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வு மற்றும் ஏனைய வசதிகள் தொடர்பான உட்கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்யுமாறு அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்த சேவையின் கீழ் உள்ள கப்பல்கள் 300 முதல் 400 பயணிகளை ஏற்றிச் செல்லக் கூடியவையாக அமையும் என்பதோடு , பயணத்திற்கு மூன்றரை மணித்தியாலங்கள் செல்லும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார். 

https://www.virakesari.lk/article/143568

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.