Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

டக்ளஸ் தரப்பினரின் தீர்மானத்தினால் சிக்கலில் மணிவண்ணன்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன் வவுனியா வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்

டக்ளஸ் தரப்பினரின் தீர்மானத்தினால் சிக்கலில் மணிவண்ணன்!

யாழ்.மாநகர சபையின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம்  மீதான வாக்கெடுப்பு இன்று(புதன்கிழமை) இடம்பெறவுள்ள நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாலை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாநகர சபை உறுப்பினர்களுக்கும் கட்சித் தலைமைக்கும் இடையிலான கலந்துரையாடலின்போதே வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக  வாக்களிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்.மாநகர சபையின் முன்னாள் முதல்வரின் இரண்டு வரவு செலவுத் திட்டங்கள் தோற்கடிக்கப்பட்டமையினால் புதிய முதல்வர் தெரிவு இடம்பெற்ற நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் பூரண ஆதரவுடன் யாழ் மாநகர முதல்வராக மணிவண்ணன் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி 2023 வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ்.மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1316458

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

யாழ். மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் தோற்கடிப்பு!

யாழ் மாநகர சபையின் 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எழு மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

யாழ் மாநகர சபையின் 2023 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இன்றைய தினம் (புதன்கிழமை) மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 11 வாக்குகளும் எதிராக 18 வாக்குகளும் பதிவாகின.

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெளிநடப்பு செய்ததுடன் வாக்கெடுப்பு இடம்பெற்றபோது பங்கேற்கவில்லை.

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ் மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும் மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1316510

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, தமிழ் சிறி said:

45 உறுப்பினர்கள் அங்கம் வகிக்கும் யாழ்.மாநகர சபையில் இலங்கை தமிழரசுக் கட்சியின் சார்பில் 16 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் சார்பில் 10 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 3 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பில் 2 உறுப்பினர்களும், தமிழர் விடுதலைக் கூட்டணி சார்பில் ஒரு உறுப்பினரும் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அத்தனை உறுப்பினர்களும் தமிழர்தானுங்களே? இல்லை, சில கட்சிகள் சிங்களக்கட்சிகளின் பெயர்களாகவுள்ளன. ஒருவேளை சிங்களவர் அங்கம் வகிக்கின்றனரோ என்றொரு சந்தேகம்  அதை உறுதிப்படுத்துவதற்காக கேட்டேன், வேறொன்றுமில்லை. இதிலேயே ஒன்றுபட முடியவில்லை இவர்களால், இதில இனப்பிரச்சனைக்கு தீர்வு கண்ட மாதிரித்தான்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலையில் மண்ணினை அள்ளிக்கொட்டியிருக்கின்றது – வி.மணிவண்ணன்

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலையில் மண்ணினை அள்ளிக்கொட்டியிருக்கின்றது – வி.மணிவண்ணன்

தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலையில் மண்ணினை அள்ளிக்கொட்டியிருக்கின்றது. இதற்காக வருகின்ற காலத்தில் புரிந்துகொள்ளுவார்கள். என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டுக்கான பாதீடு l தோற்கடித்த பின்னரான ஊடக சந்திப்பு நேற்று (புதன்கிழமை) மாநகர முதல்வரின் அலுவலகத்தில் இடம்பெற்றது.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசியக்கூட்டமைப்பு மற்றும் எந்தொரு கட்சியும் எதிர்ப்பதாக இருந்தால் ஏதாவது காரணத்தினினை சொல்லவேண்டும். வரவுசெலவுத் திட்டத்தொடரிலே முதல்வர் தன்னிச்சை சட்டம் ஊடாக செயற் படுகின்றார் என கூறுவது விடயம் கிடையாது.

அரசியல் ரீதியாக நேற்றையதினம் வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் கட்சித்தலைப்பீடம் முடிவுஎடுத்துவிட்டனர் எதிராக வாக்களிப்பது என்று. இன்று சம்பிரதாய பூர்வமாக சபைக்கு வந்து தமது எதிர்ப்பினை உறுப்பினர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு நான் மாநகர முதல்வராக பதவி வகித்ததன் பின்னர் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர் 2022 ஆம் ஆண்டு நடுநிலைவகித்தனர். காரணம் உடனடி தோற்கடிப்பு செய்யப்பட்டால் சபை கலைந்துவிடும் என்ற ரீதியாக நடுநிலைவகித்தனர்.

நான் பதவியேற்று தன்னிச்சையாக செயற்பட்டேன் என்று இல்லை. போனமுறையும் தமிழ்தேசியகூட்டமைப்பு எதிராகத்தான் வாக்களித்தது.

அரசியல் கட்சிகள் தங்களுடைய விருப்புவெறுப்பு அப்பால் தீர்மானம் எடுத்துக்கொள்ளப்பட்டது. தாங்களுடைய அரசியல் நலனுக்காக தீர்மானங்களை எடுத்துக்கொள்ளுவார்கள். இதனை தமிழ்தேசியகூட்டமைப்பு தாங்கள் நலன் என கருதி எதிர்காலத்தில் செல்வாக்கை அதிகரிக்கலாம் என எண்ணி இந் வரவுசெலவினை தோற்கடித்தனர்.

என்னை முதல்வர் பதவியில் அகற்றமுடியும் என எண்ணியிருக்கலாம். இது தாங்களின் வளர்ச்சிக்காவும், அழிந்து செல்லுவதற்காவும் இருக்கலாம். இதற்கு காலம் தான் பதில் சொல்லும் என்று தெரிவித்தார்.

https://athavannews.com/2022/1316692

  • கருத்துக்கள உறவுகள்

மணிவண்ணன் மக்களுக்கு நன்மை செய்ய நினைத்திருந்தாலும்.. சொந்த மக்களை எதிரியோடு இணைந்து நின்று கொன்று குவித்த.. சொந்த மக்களின் சொத்துக்களை குண்டு வைத்து தகர்த்து.. எதிரிக்கு காட்டிக்கொடுப்புச் சேவகம் செய்த.. செய்கிற ஈபிடிபிக்கு பின்னால் போனது மகா தவறு. அதற்கான தண்டனையை அவர் தர்மத்தின் பக்கமிருந்து பெற வேண்டியவரே. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.