Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு... இனி விரைவில் தமிழகத்தில் ஆதார் ஐடி போல் மக்கள் ஐடி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக அரசின் சூப்பர் அறிவிப்பு... இனி விரைவில் தமிழகத்தில் ஆதார் ஐடி போல் மக்கள் ஐடி!

IMG-20221227-214316.jpg

தமிழ்நாட்டின் வசிப்பவர்களுக்கு 10 முதல் 12 இலக்கங்கள் கொண்ட மக்கள் ஐடி வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.இந்தியாவில் ஆதார் எண் என்பது அனைவரும் பயன்படுத்து முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. வங்கி கணக்கு, மொபைல் எண், பான் கார்டு, வாக்காளர் அட்டை, மின் இணைப்பு எண் என அனைத்திலும் ஆதார் இணைக்கப்பட்டு வருகிறது. இது அனைவரது அடையாளங்களையும் கொண்ட முக்கிய ஆவணமாக மத்திய அரசு இந்தியா முழுவதும் மக்களுக்கு வழங்கி வருகிறது. தற்போது இந்திய அளவில், பான் கார்டு மற்றும் வாக்காளர் அட்டைகளில் ஆதார் எண்ணை இணைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் அரசு நலத்திட்டங்கள் உட்பட மின் இணைப்பு எண்ணுடன் இணைக்க அறிவுறுத்தப்பட்டு தற்போது அந்த பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், தற்போது தமிழக அரசு சார்பில் தமிழகத்தில் வசிக்கும் மக்களுக்கென புதிய ஐடி எண் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது 10 முதல் 12 இலக்கங்களுடன் வரும் மக்கள் ஐடி MAKKAL ID ஆக இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதன் நோக்கம் தமிழக அரசின் சமூக நலத்திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக பயன்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை மூலம் செயல்படுத்துவதற்கான பணிகள் தொடங்கப்பட உள்ளதாகவும், இதற்கான பணியை மாநில குடும்ப தரவு தளம் தமிழ்நாடு அரசின் மூலம் உருவாக்கப்பட உள்ளதாகவும் தமிழக அரசு தெரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

https://tamil.economictimes.com/news/general/tamilnadu-government-will-create-makkal-id-for-tamilnadu-peoples-same-like-aadhar/articleshow/96541431.cms

டிஸ்கி

முதலில் " திராவிட கார்டு" என பெயரிடாமைக்கு வாழ்த்துவம் 💐.இரண்டாவது நோகாமல் நோன்பு கும்பிடும் வடவர்களுக்கு ஆப்பு..👍

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

டிஸ்கி

முதலில் " திராவிட கார்டு" என பெயரிடாமைக்கு வாழ்த்துவம் 💐.இரண்டாவது நோகாமல் நோன்பு கும்பிடும் வடவர்களுக்கு ஆப்பு..👍

இதை பற்றி ஏனைய எதிர் கட்சிகள் என்ன சொல்கிறன?

பிஜேபி எதிர்க்கும் என்றே நினைக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

பிஜேபி எதிர்க்கும் என்றே நினைக்கிறேன்.

 

2 hours ago, goshan_che said:

💐.இரண்டாவது நோகாமல் நோன்பு கும்பிடும் வடவர்களுக்கு ஆப்பு..

வடக்கில் இருந்து மக்களை கொண்டு வந்து  தமிழ்நாட்டில் இறக்குவதில் பிஜேபி தான் மும்முரமாக ஈடுபடுகிறது. கட்டாயம்  அவர்கள் எதிர்ப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, nunavilan said:

 

வடக்கில் இருந்து மக்களை கொண்டு வந்து  தமிழ்நாட்டில் இறக்குவதில் பிஜேபி தான் மும்முரமாக ஈடுபடுகிறது. கட்டாயம்  அவர்கள் எதிர்ப்பார்கள்.

ஓம். கோவை பக்கம் இப்பெல்லாம் ஒரே பானி பூரி ஹை என்று கேள்வி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, goshan_che said:

இதை பற்றி ஏனைய எதிர் கட்சிகள் என்ன சொல்கிறன?

பிஜேபி எதிர்க்கும் என்றே நினைக்கிறேன்.

 

5 hours ago, nunavilan said:

 

வடக்கில் இருந்து மக்களை கொண்டு வந்து  தமிழ்நாட்டில் இறக்குவதில் பிஜேபி தான் மும்முரமாக ஈடுபடுகிறது. கட்டாயம்  அவர்கள் எதிர்ப்பார்கள்.

லஞ்ச ஊழலுக்கு வழிவகுக்கும் மக்கள் ஐ.டி.,; நாராயணன் திருப்பதி.

IMG-20221228-063602.jpg

தமிழக அரசு அறிவித்துள்ள மக்கள் ஐ.டி,.. லஞ்சம் , ஊழலுக்கு வழி வகுக்கும் என பா.ஜ., துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் பதிவேற்றியிருப்பதாவது,

ஆதார் எண் போல் தமிழகத்தில் வசிக்கும் அனைவருக்கும் 'மக்கள் ஐடி' என்ற பெயரில் 10 முதல் 12 இலக்க எண் வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த முயற்சி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதோடு, கடும் விளைவுகளை உருவாக்கும். மேம்போக்காக பார்க்கும் போது, மக்கள் நலத்திட்டங்களை ஒரு எண் மூலம் வழங்குவதற்கான ஏற்பாடாக கூறப்பட்டாலும், இந்த சிந்தனையின் பின்னணியில் பெரும் உள்நோக்கம் உள்ளதாகவே கருதுகிறேன்.

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் பொறுப்பு மாநில அரசுகளிடம் இருப்பதால், 2014ம் ஆண்டு வரை மாநில அரசு துறைகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளே பயனாளிகளை அடையாளம்கண்டு அவர்களுக்கு சேரவேண்டிய உதவி தொகை, சம்பளம் அல்லது மானியத்தை பணமாக செலுத்தி கொண்டிருந்தன. இடைத்தரகர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அதிகாரிகள் உள்ளிட்ட அரசு இயந்திரத்தின் மூலம் போலி பயனாளிகளை அதிக அளவில் சேர்த்து முறைகேடுகளை செய்து, பயனாளிகளை மிரட்டி, ஏமாற்றி அவர்களுக்குரிய தொகையினை செலுத்தாமல் ஏமாற்றுவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள், மோசடிகள் நடைபெற்று வந்தன.

உதாரணத்திற்கு நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்க்கு முன்பு 150 ரூபாய் தின சம்பளத்தில், ரூபாய் ஐம்பது மட்டுமே பயனாளிகளுக்கு சென்றடைந்தது. ஆனால், ரூபாய் 150 கொடுக்கப்பட்டதாக கணக்கு காண்பிக்கப்பட்டு, மீதி பணமானது இடைத்தரகர்கள், அதிகாரிகள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளால் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. இதே நிலை தான் மற்ற அனைத்து திட்டங்களிலும் நீடித்து வந்தது.

தற்போதைய பாஜக ஆட்சியில் தான் ஜன்தன், ஆதார், மொபைல் (JAM) இணைப்பு மூலம் மத்திய அரசின் மக்கள் நல திட்டங்களில் மக்களுக்கு சென்றடைய வேண்டிய மானியம் மற்றும் உதவிகள் நேரிடையாக பயனாளிகளின் வங்கி கணக்குகளில் முழுமையாக செலுத்தப்பட்டு அரசின் மானியம் மற்றும் உதவி தொகை முழுவதும் பயனாளிகளை முழுமையாக சென்றடைந்து கொண்டிருக்கிறது.

மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டம் (நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டம்), முதியோர் உதவி தொகை, விவசாயிகள் கௌரவ நிதி, எரிவாயு உருளை மானியம், உர மானியம், கல்வி மானியம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசின் திட்டங்களுக்கான மானியம் மற்றும் உதவி தொகை தற்போது நேரடியாக உரிய பயனாளிகளின் ஜன்தன் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக போலிகள் அடையாளம் காணப்பட்டு, நீக்கப்பட்டு, இடைத்தரகர்கள் அகற்றப்பட்டு முறைகேடுகள் தடுக்கப்பட்டதன் மூலம் மட்டுமே இது வரை கடந்த எட்டு ஆண்டுகளில் சேமிக்கப்பட்டுள்ள தொகை ரூபாய் 2.5 லட்சம் கோடி என்பது மகத்தான சாதனை. இதன் மூலம் பரிதவித்து கொண்டிருக்கும் மக்கள் பெருமளவில் பயனடைந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக தமிழகத்தில், தூய்மை இந்தியா திட்டத்தில் கழிப்பறைகள் கட்டுவதில் முறைகேடுகள், அனைவருக்கும் வீடு திட்டத்தில் தேவையில்லாதவர்களுக்கு நிதியுதவி, விவசாயிகள் கௌரவ நிதி திட்டத்தில் போலி பயனாளிகளை சேர்த்தது, நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் முறைகேடுகள் என பல்வேறு திட்டங்களில் நடைபெற்ற பல்வேறு மோசடிகளை ஆதார் அட்டை (JAM)மூலம் கண்டுபிடித்து பல்வேறு வழக்குகள் பதியப்பட்டுள்ளதோடு, சில திட்டங்களில் மோசடி செய்யப்பட்ட தொகையும் மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சுதந்திர இந்தியாவில் ஊழல், மோசடி செய்யப்பட்ட தொகை மீட்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை.

லஞ்சம், ஊழல், முறைகேடுகளை தடுத்து பயனாளிகளுக்கு பயன் தரும் வகையில் அமைந்துள்ள இந்த நேரடியாக வங்கி கணக்கில் பணம் செலுத்தும் முறை (JAM) பயனாளிகளுக்கு பேருதவி திட்டமாகவும், ஊழல்வாதிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும் அமைந்துள்ள நிலையில், மாநில அரசு, ஏற்கனவே அமலில் உள்ள கட்டமைக்கப்பட்டுள்ள நடைமுறையை பின்பற்றாமல் தனியாக ஒரு எண் உருவாக்கப்படும் என்ற அறிவிப்பு உள்நோக்கம் கொண்டதாகவே அமையும்.

ஏற்கனவே ஒதுக்கப்பட்ட இடைத்தரகர்கள், தவிர்க்கப்பட்ட போலி பயனாளிகள், பலனடைந்த அதிகாரிகள், ஊழல் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட அரசியல்வாதிகள் மீண்டும் துளிர்த்தெழுந்து, மாநில அரசின் நலத் திட்டங்களில் மோசடி செய்ய வழிவகை செய்யவே தமிழக அரசு முன்னெடுத்துள்ள இந்த முயற்சி பயன்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமேயில்லை.

ஆகவே, உண்மையை உணர்ந்து மக்கள் நலத்திட்டங்களில் ஊழலை தடுக்க வேண்டிய தமிழக அரசு, தேவையற்ற முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், பலவேறு சட்டரீதியான பிரச்சினைகளும் இந்த விவகாரத்தில் எழுவதற்கான வாய்ப்பு உள்ளது. ஆதார் அட்டையை பயன்படுத்தி, ஊழலற்ற, முறைகேடுகளற்ற வகையில் மக்களுக்கு உதவிகளை செலுத்தும் தற்போதைய முறையை மேலும் பலப்படுத்த வேண்டுமேயன்றி, உறுதியாக லஞ்ச,ஊழலுக்கு வழிவகுக்கும் வகையில் அமைப்பை பலவீனப்படுத்தும் வகையில் தமிழக அரசு செயல்படக் கூடாது. இந்த முயற்சியை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும்.

https://m.dinamalar.com/detail-amp.php?id=3204587

டிஸ்கி

கிந்திய அரசியலை அக்குவேறு ஆணிவேறாக புரிந்திருக்கும் தீர்க்கதரிசி தோழர்கள் இருவருக்கும் வாயில் சர்க்கரை அள்ளி போட வேண்டும்..👍

Edited by புரட்சிகர தமிழ்தேசியன்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

கிந்திய அரசியலை அக்குவேறு ஆணிவேறாக புரிந்திருக்கும் தீர்க்கதரிசி தோழர்கள் இருவருக்கும் வாயில் சர்க்கரை அள்ளி போட வேண்டும்..👍

நன்றி தோழர். நுணாவை பற்றி தெரியாது, எனக்கு டயபிடீஸ் ஆகவே virtual சக்கரையாக போடுங்கோ😂.

  • கருத்துக்கள உறவுகள்

நான் தெரிந்து கொண்டது இந்திய ஆதார் என்பது இந்திய அடையாள அட்டை. எனது நாட்டில் அடையாள அட்டை இல்லை. ஆனால் ஐரோப்பிய நாடுகள் இலங்கையில் அடையாள அட்டை முறை உண்டு.
எப்படி இந்தியாவில் மட்டும் இரு அடையாள அட்டைகள்? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.