Jump to content

நியூசிலாந்து பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

புதிய சாதனைகளைப் படைத்த பாபர் அஸாம்

By SETHU

27 DEC, 2022 | 11:50 AM
image

நியூ ஸிலாந்துடனான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில், பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அஸாம் சதம் குவித்ததுடன் பல சாதனைகளையும் முறியடித்தார்.

கராச்சியில் நேற்று ஆரம்பமான இப்போட்டியில் பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இப்போட்டியில், மைக்கல் பிராஸ்வெல் வீசிய பந்தில் சிக்ஸர் அடித்து தனது 9 ஆவது சதத்தை பாபர் அஸாம் பூர்த்தி செய்தார். 280 பந்துகளில் ஒரு சிக்ஸர், 15 பவுண்டறிகள் உட்பட 161 ஓட்டங்களை அவர் குவித்தார். 

இதன்மூலம் ஒரு வருடத்தில் அனைத்து வகையான போட்டிகளிலும் அதிக ஓட்டங்களைக் குவித்த வீரரானார் பாபர் அஸாம். 2006 ஆம் அண்டில் 2,435 ஓட்டங்களைக் குவித்து, மொஹம்மத் யூசுப் சாதனை படைத்திருந்தார். 16 வருடங்கள் நிலைத்திருந்த இச்சாதனையை பாபர் அஸாம் நேற்று முறியடித்தார். 

Barbar-Azam-Pakistan-vs-New-Zelaand---AF

2022 ஆம் ஆண்டு 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 1,170 ஓட்டங்களைக் குவித்துள்ளார் பாபர் அஸாம். இவ்வருடம் இதுவரை அதிக டெஸ்ட் ஓட்டங்களைக் குவித்த சர்வதேச கிரிக்கெட் வீரராக பாபர் அஸாம் விளங்குகிறார்.

2005 ஆம் அண்டில் 24 அரைச் சதங்களைக் குவித்து, ஒரு வருடத்தில்  அதிக அரைச்சதங்களைக் குவித்த அணித்தவைராக அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொன்டிங் படைத்த சாதனையையும் பாபர் அஸாம் கடந்து சென்றார்.

https://www.virakesari.lk/article/144214

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதல் டெஸ்டில் சம அளவில் மோதும் பாகிஸ்தான் -நியூஸிலாந்து

28 DEC, 2022 | 07:04 PM
image

 (என்.வீ.ஏ.)

பாகிஸ்தானுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையில் கராச்சியில் நடைபெற்றுவரும் 2 போட்டிகள் கொண்ட ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டி சம அளவில் மோதிக்கொள்ளப்பட்ட வண்ணம் உள்ளது.

பாகிஸ்தான் முதலாவது இன்னிங்ஸில் பெற்ற 438 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து 3ஆம்   நாளான இன்று புதன்கிழமை (28) ஆட்ட நேர முடிவின்போது 6 விக்கெட்களை இழந்து 440 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

டொம் லெதம், அணித் தலைவர் கேன் வில்லியம்சன் ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் டெவன் கொன்வே பெற்ற அரைச் சதமும் நியூஸிலாந்தின் துடுப்பாட்டத்தைப் பலப்படுத்தியது.

போட்டியின் 3ஆம் நாளான இன்று காலை விக்கெட் இழப்பின்றி 165 ஓட்டங்களிலிருந்து நியூஸிலாந்து தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்தது.

டொம் லெதமும் டெவன் கொன்வேயும் ஆரம்ப விக்கெட்டில் 183 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது கொன்வே 92 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து தனது 13ஆவது டெஸ்ட் சதத்தைக் குவித்த டொம் லெதம் 131 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க ஹென்றி நிக்கலஸ் 22 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

தனது 89ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கேன் வில்லியம்சன் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 25ஆவது சதத்தைப் பூர்த்தி செய்து 105 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

கேன் வில்லியம்சன் 4ஆவது விக்கெட்டில் டெரில் மிச்செலுடன் 65 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் டொம் ப்ளண்டெலுடன் 90 ஓட்டங்களையும் பகிர்ந்தார்.

மிச்செல் 42 ஓட்டங்களையும் ப்ளண்டெல் 47 ஓட்டங்களையும் பெற்றனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் அப்ரார் அங்மத் 143 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

https://www.virakesari.lk/article/144389

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வில்லியம்சனின் ஆட்டமிழக்காத இரட்டைச் சதம் நியூஸிலாந்தைப் பலப்படுத்தியுள்ளது

By VISHNU

29 DEC, 2022 | 07:17 PM
image

(என்.வீ.ஏ.)

கராச்சி விளையாட்டரங்கில் முதல் இன்னிங்ஸ்களில் கணிசமான மொத்த எண்ணிக்கைகள் பெறப்பட்ட  நியூஸிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் கேன் வில்லியம்சன் குவித்த இரட்டைச் சதம் நியூஸிலாந்தை வலுவான நிலையில் இட்டுள்ளது.

Imam-ul-Haq survived through to stumps on Day 4, Pakistan vs New Zealand, 1st Test, Karachi, 4th Day, December 29, 2022

இந்தப் போட்டியில் நியூஸிலாந்துக்கு சாதகமான முடிவு கிடைக்கக்கூடும் என்ற நிலை 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் காணப்படுகிறது.

இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடி வரும் பாகிஸ்தான் போட்டியின் 4ஆம் நாளான இன்று வியாழக்கிழமை (29) ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 77 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இமாம் உல் ஹக் 45 ஓட்டங்களுடனும் இராக்காப்பாளன் நௌமான் அலி 4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல்  உள்ளனர்.

இதன் பிரகாரம் 2ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதமிருக்க நியூஸிலாந்தை விட 97 ஓட்டங்களால் பாகிஸ்தான் பின்னிலையில் இருக்கிறது.

Michael Bracewell celebrates after breaking through, Pakistan vs New Zealand, 1st Test, Karachi, 4th Day, December 29, 2022

இதன் காரணமாக போட்டியின் கடைசி நாளான வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்கொள்ளக்கூடும் என கருதப்படுகிறது. கடைசி நாள் ஆட்டத்தின் முதல் ஒரு மணித்தியாலத்தில் விக்கெட் விழாமல் தடுப்பதைக் குறியாகக் கொண்டு பாகிஸ்தான் துடுப்பெடுத்தாட முனைவதால் அவ்வணி இயல்பாகவே நெருக்கடியை எதிர்கொள்ளும்.

இதேவேளை, வியாழக்கிழமை காலை தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 440 ஓட்டங்களில் இருந்து தொடர்ந்த நியூஸிலாந்து 9 விக்கெட்களை இழந்து 612 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது டிக்ளயார்ட் செய்தது.

அணித் தலைவர் கேன் வில்லியம்ஸன் இரட்டைச் சதத்தைப் பூர்த்தி செய்ததும் அணியின் முதலாவது இன்னிங்ஸை டிக்ளயார் செய்வதாக அறிவித்தார்.

தனது இன்னிங்ஸை 105 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த வில்லியம்சன், மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி தனது 5ஆவது டெஸ்ட் இரட்டைச் சதத்தைப் பூர்த்திசெய்தார். அத்துடன் 89ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் அவர் பெற்ற 25ஆவது சதம் இதுவாகும்.

395 பந்துகளை எதிர்கொண்டு 21 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 200 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்த வில்லியம்சன், 7ஆவது விக்கெட்டில் இஷ் சோதியுடன் 159 பெறுமதிமிக்க ஓட்டங்களைப் பகிர்ந்தார். இஷ் சோதி 65 ஓட்டங்களைப் பெற்றதுடன் டெஸ்ட் போட்டி ஒன்றில் அவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கையாகப் பதிவானது.

இவர்களைவிட நியூஸிலாந்து சார்பாக டொம் லெதம் 113 ஓட்டங்களையும் டெவன் கொன்வே 92 ஓட்டங்களையும் டொம் ப்ளண்டெல் 47 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் 42 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

திங்கட்கிழமை ஆரம்பமான இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 438 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் அணித் தலைவர் பாபர் அஸாம் 161 ஓட்டங்களையும் அகா சல்மான் 103 ஓட்டங்களையும் சர்ப்ராஸ் அஹ்மத் 86 ஓட்டங்களையும் பெற்றனர்.

https://www.virakesari.lk/article/144482

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புதுவருடத்தில் முதலாவது டெஸ்ட் சதம் குவித்தார் டெவன் கொன்வே ; நியூஸிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 309 ஓட்டங்கள்

02 JAN, 2023 | 07:25 PM
image

(என்.வீ.ஏ.)

நியூஸிலாந்துக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் கராச்சியில் இன்று திங்கட்கிழமை (02) ஆரம்பமான ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது போட்டியில் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி சதத்தைப் பூர்த்தி செய்த டெவன் கொன்வே தனது அணியை ஒரளவு பலமான நிலையில் இட்டுள்ளார்.

இதன் மூலம் புத்தாண்டில் முதலாவது டெஸ்ட் சதத்தைப் பெற்ற வீரர் என்ற பெருமையை டெவன் கொன்வே பெற்றுக்கொண்டார்.

0201_aga_salman_pak_vs_nz.jpg

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்களை இழந்து 309 ஓட்டங்களைப் பெற்று ஓரளவு பலனமான நிலையில் இருக்கிறது.

நியூஸிலாந்தின் முதல் 2 விக்கெட்களுக்கான இணைப்பாட்டங்கள் சிறப்பாக அமைந்தபோதிலும் அதன் பின்னர் 5 விக்கெட்கள் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தன.

டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 134 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்துக்கு சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர்.

கராச்சியில் கடந்த வருட இறுதியில் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் சதம் குவித்த டொம் லெதம் இப் போட்டியிலும் மிகத் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 71 ஓட்டங்களைப் பெற்றார்.

டொம் லெதம் ஆட்டமிழந்த பின்னர் டெவன் கொன்வேயுடன் ஜோடி சேர்ந்த அணித் தலைவர் கேன் வில்லியம்சன் 2ஆவது விக்கெட்டில் சரியாக 100 ஓட்டங்களைப் பகிர்ந்தார்.

ஆனால், அதன் பின்னர் 45 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 5 விக்கெட்கள் சரிந்தன.

0201_tom_latham_nz_vs_pak_2nd_test...jpg

டெவன் கொன்வே, கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் 9 பந்துகள் இடைவெளியில் ஆட்டமிழந்தனர்.

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய டெவன் கொன்வே 16 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் அடங்கலாக 122 ஓட்டங்களைப் பெற்றார்.

முதலாவது டெஸ்டில் ஆட்டமிழக்காமல் இரட்டைச் சதம் குவித்த கேன் வில்லியம்சன் 36 ஓட்டங்களுடன் வெளியேறினார்.

அவர்களைத் தொடரந்து ஹென்றி நிக்கல்ஸ் (26), டெரில் மிச்செல் (3), மைக்கல் ப்றேஸ்வெல் (0) ஆகிய மூவரும் ஆட்டமிழந்தனர்.

0201_devon_convay_nz_vs_pak_2nd_test.jpg

டொம் பளண்டல் 30 ஓட்டங்களுடனும் இஷ் சோதி 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதுள்ளனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் அகா சல்மான் 55 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் நஸீம் ஷா 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/144790

Link to comment
Share on other sites

  • nunavilan changed the title to நியூசிலாந்து பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர்
  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்து சார்பாக ஹென்றி, பட்டேல், பாகிஸ்தான் சார்பாக இமாம் உல் ஹக் துடுப்பாட்டத்தில் அசத்தல்

03 JAN, 2023 | 08:28 PM
image

(என். வீ. ஏ.)

பாகிஸ்தானுக்கு எதிராக கராச்சியில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் துடுப்பாட்டத்தில் அசத்தி நியூஸிலாந்தை பலப்படுத்திய மெட் ஹென்றி, அஜாஸ் பட்டேல் ஆகிய இருவரும் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்டனர்.

பாகிஸ்தான் சார்பாக இமாம் உல் ஹக் மீண்டும் பிரகாசித்து அரைச் சதம் பெற்றுள்ளார்.

நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் பெற்ற 449 ஓட்டங்களுக்கு பதிலளித்து துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான் போட்டியின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க்கிழமை (03) ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

0301_mat_henry_nz_vs_pak_batting.jpg

போட்டியின் இரண்டாம் நாளான இன்று காலை தனது முதல் இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 309 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 449 ஓட்டங்களைப் பெற்றது.

இன்றைய ஆட்டத்தின் முதலாவது பகுதியில் சீரான இடைவெளியில் 3 விக்கெட்களை இழந்த நியூஸிலாந்து 9 விக்கெட்களை இழந்து 345 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

அதன் பின்னர் 10ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த கடைநிலை ஆட்டக்காரர்களான மெட் ஹென்றியும் அஜாஸ் பட்டேலும் பெறுமதிமிக்க 104 ஓட்டங்களைப் பகிர்ந்து நியூஸிலாந்தைப் பலப்படுத்தினர்.

0301_mat_henry_nz_vs_pak_bowling.jpg

திறமையாகத் துடுப்பெடுத்தாடிய மெட் ஹென்றி 8 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் அடங்கலாக 68 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். டெஸ்ட் இன்னிங்ஸ் ஒன்றில் அவர் பெற்ற அதிகூடிய எண்ணிக்கையாக இது அமைந்தது.

அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கிறைஸ்ட்சேர்ச் விளையாட்டரங்கில் 7 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் அவர் பெற்ற 66 ஓட்டங்களே இதற்கு முன்னர் அவரது தனிப்பட்ட அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது.

அஜாஸ் பட்டேல் பெற்ற 35 ஓட்டங்கள் அவரது அதிகூடிய இன்னிங்ஸ் எண்ணிக்கையாக அமைந்தது.

முதலாம் நாள் ஆட்டத்தில் டெவன் கொன்வே 122 ஓட்டங்களையும் டொம் லெதம் 71 ஓட்டங்களையும் டொம் ப்ளண்டெல் 51 ஓட்டங்களையும் கேன் வில்லியம்சன் 36 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.

பாகிஸ்தான் பந்துவீச்சில் அப்ரார் அஹ்மத் 149 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் நசீம் ஷா 71 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் அகா சல்மான் 75 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிவரும் பாகிஸ்தான் அதன் முதல் இன்னிங்ஸில் 3 விக்கெட்களை இழந்து 154 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முதலாவது டெஸ்டில் போன்றே மீண்டும் திறமையாகத் துடுப்பெடுத்தாடிவரும் இமாம் உல் ஹக் 74 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார். பாபர் அஸாம் துடுப்பாட்டத்தை சிறப்பாக ஆரம்பித்தபோதிலும் 24 ஒட்டங்களுடன் வெளியேறினார்.

பாகிஸ்தானின் 3ஆவது வீக்கெட் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 99 ஓட்டங்களாக இருந்தது. எனினும் இமாம் உல் ஹக், சவூத் ஷக்கீல் (13 ஆ.இ.) ஆகிய இருவரும் பிரக்கப்படாத 4ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து வீழ்ச்சியைத் தடுத்தனர்.

பந்துவிச்சில் அஜாஸ் பட்டேல் 30 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மெட் ஹென்றி 35 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

https://www.virakesari.lk/article/144887

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு எல்லாம் இந்திய உபகண்டத்தில் பாகிஸ்தான் பிட்சுகள் லைவ்லியாக இருந்தன. இப்ப இந்தியாவைப் பின்பற்றி ப்ளாட் பிட்சுகளை அமைக்கின்றார்கள். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நியூஸிலாந்துடனான டெஸ்டில் 319 ஓட்டங்கள் வெற்றி இலக்கு; இக்கட்டான நிலையில் பாகிஸ்தான்

06 JAN, 2023 | 11:09 AM
image

(என். வீ. ஏ.)

நியூஸிலாந்துக்கு எதிராக கராச்சியில் நடைபெற்றுவரும் 2ஆவது ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் 2ஆவது போட்டியில் 319 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடும் பாகிஸ்தான், போட்டியின் 4ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு ஓட்டமும் பெறாமல் 2 விக்கெட்களை இழந்து  இக்கட்டான நிலையில் இருக்கிறது.

இரண்டாவது பந்தில் ஆரம்ப வீரர் அப்துல்லா ஷபிக்கின் விக்கெட்டை டிம் சௌதீ நேரடியாகப் பதம் பார்த்ததை அடுத்து இராக்காப்பாளனாக கடைநிலை ஆட்டக்காரர் மிர் ஹம்ஸாவை பாகிஸ்தான் ஆடுகளம் அனுப்பிவைத்தது. ஆனால், அவர் 3ஆவது ஓவரில் இஷ் சோதியின் பந்துவீச்சில் போல்ட் ஆனார். அத்துடன் 4ஆம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இமாம் உல் ஹக் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

போட்டியின் கடைசி நாளான நாளைய தினம் பாகிஸ்தான் அணி நிதானத்துடனும் பொறுமையுடனும் துடுப்பெடுத்தாடத் தவறினால் நியூஸிலாந்தின் வெற்றியை அவ்வணியினால் தடுக்க முடியாமல் போகும்.

போட்டியின் 4ஆம் நாளான இன்று வியாழக்கிழமை (05) காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 9 விக்கெட் இழப்புக்கு 407 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பாகிஸ்தான் 408 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது.

தனது 5ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடி கன்னிச் சதம் குவித்த சவூத் ஷக்கீல் 125 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

0501_nighwatchman_mir_hamza_bowled_by_is

0501_nz_players_celebrate_the_wicket.jpg

நியூஸிலாந்து பந்துவீச்சில் அஜாஸ் பட்டேல், இஷ் சோதி ஆகியோர் தலா 3 விக்கெட்களைக் கைப்பற்றினர்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 48 ஓட்டங்களால் முன்னிலையில் இருந்த நியூஸிலாந்து 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 277 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது இன்னிங்ஸை நிறுத்திக்கொண்டது.

டொம் லெதம், டொம் ப்ளண்டெல், மைக்கல் ப்றேஸ்வெல் ஆகியோர் அரைச் சதங்களைப் பெற்றனர்.

எண்ணிக்கை சுருக்கம்

நியூஸிலாந்து 1ஆவது இன்: 449 (டெவன் கொன்வே 122, டொம் லெதம் 71, மெட் ஹென்றி 68 ஆ.இ., டொம் ப்ளண்டெல் 51, அப்ரார் அஹ்மத் 149 - 4 விக்., நசீம் ஷா 71 - 3 விக்.)

பாகிஸ்தான் 1ஆவது இன்: 408 (சவூத் ஷக்கீல் 125 ஆ.இ., இமாம் உல் ஹக் 83, சர்பராஸ் அஹ்மத் 78, அஜாஸ் பட்டேல் 88 - 3 விக்., இஷ் சோதி 95 - 3 விக்.)

நியூஸிலாந்து 277 - 5 விக். டிக்ளயார்ட் (மைக்கல் ப்றேஸ்வெல் 74 ஆ.இ., டொம் பளண்டெல் 74, டொம் லெதம் 62)

பாகிஸ்தான் 2ஆவது இன்: ஒரு ஓட்டமும் பெறாமல் 2 விக்கெட்களை இழந்துள்ளது.

https://www.virakesari.lk/article/145110

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தான் அணிக்கு இலகு வெற்றி

By DIGITAL DESK 5

10 JAN, 2023 | 01:34 PM
image

(எம்.எம்.எஸ்)

நசீம் ஷாவின் துல்லியமான பந்துவீச்சு, மொஹமடர் ரிஸ்வான், பாபர் அசாம், பக்கார் ஸமான் மூவரின் அரைச்சதத்தின் உதவியுடன், நியூஸிலாந்து அணிக்கெதிரான முதலாவது சர்வதேச ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் பாகிஸ்தான் அணி  6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது.

3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் இரண்டு அணிகளும் பங்கேற்று வருகின்றன். இந்நிலையில், நேற்றைய தினம் (9) பாகிஸ்தானின் கராச்சி மைதானத்தில்  பகலிரவு போட்டியாக  நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட நியூஸிலாந்து அணி  9 விக்கெட்டுக்களை இழந்த 255 ஓட்டங்களை குவித்தது.

352282.webp

துடுப்பாட்டத்தில் நியூஸிலாந்து அணி சார்பாக ஒருவர்கூட அரைச்சதம் அடிக்கவில்லை. மைக்கல் பிரேஸ்வெல் (43), டொம் லெதம் (42) 40 ஓட்டங்களைக் கடந்தனர்.

பந்துவீச்சில் பாகிஸ்தானின் இளம் வேகப்பந்துவீச்சாளரான நசீம் ஷா 5 விக்கெட்டுககைளை வீழ்த்தி அசத்தினார். அவரைத் தவிர உஸாமா மிர் 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

352272.webp

சுமாரான ஓட்ட இலக்கை நோக்கி பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான்  48.1 ஓவர்களில்  4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 258 ஓட்டங்களை குவித்து 6 விக்கெட்டுக்களால் வெற்றியீட்டியது. துடுப்பாட்டத்தில் மொஹமட் ரிஸ்வான் ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களையும், அணித்தலைவர் பாபர் அசாம் 66 ஓட்டங்களையும், பக்கார் ஸமான் 56 ஓட்டங்களையும் விளாசினர்.

352293.webp

பந்துவீச்சில் மைக்கல் பிரேஸ்வெல் 2 விக்கெட்டுக்களையும், டிம் செளத்தி,கிளென் பிலிப்ஸ் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்தனர்.

352283.webp

352285.webp

இந்த  வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி 3  போட்டிகள் கொண்ட சர்வதேச ஒரு நாள் தொடரை 1 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை வகிப்பதுடன், இந்த இரண்டு அணிகளுக்கிடையிலான இரண்டவாது போட்டி  நாளை நடைபெறும்.

https://www.virakesari.lk/article/145413

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இர‌ண்டாவ‌து தோல்விக்கு பாக்கிஸ்தான் தோட‌க்க‌ வீர‌ர்க‌ளும் மிடில் வீர‌ர்க‌ளும் தான் கார‌ண‌ம் 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எனது கை மணிக்கட்டில் ஒரு நோ. அப்பில் பென்சிலைப் பிடிக்க விரல்களால் முடியவில்லை. ஆக கருத்துப் படங்களை சில நாட்களுக்கு உருவாக்க வாய்ப்பிருக்காது. நேற்று வைத்தியரின் அழைப்புக்காக பார்வையாளரின் அறையில் அமர்ந்திருந்தேன். எனக்கு நேர் எதிரே அமர்ந்திருந்தவர் பத்திரிகை ஒன்றை வாசித்துக் கொண்டிருந்தார், இடையிடையே என்னையும் பார்த்துக் கொண்டார். ஏதோ என்னுடன் பேச நினைக்கிறார் என்பது விளங்கியது. பார்வையாளர் அறை என்பதால் சத்தம் போட்டு கதைக்க முடியாது. நானும் ஒரு புன்னகையை அவருக்குத் தந்துவிட்டு இருந்து விட்டேன். அவருக்கான வைத்தியரின் அழைப்பு வர, எழுந்தவர் என்னருகில் வந்து, “நீங்கள் சிறீலங்காவா?’ என்று மெதுவாகக் கேட்டார்.  ‘ஓம்’ என்று தலையாட்டினேன். உங்கள் புது ஜனாதிபதியைப் பற்றி செய்தி வந்திருக்கிறது என தான் வாசித்துக் கொண்டிருந்த  அந்தச்  செய்தித்தாளை என்னிடம் தந்து விட்டுப் போனார். Taz யேர்மனியில் வெளிவரும் ஒரு பத்திரிகை. “இலங்கையில் இடதுசாரி ஜனாதிபதி - புதிய திசைகாட்டி” அநுரகுமார திஸாநாயக்கவின் தேர்தல் வெற்றியானது நாட்டிற்கு ஒரு புதிய திசையைக் காட்டுகிறது. ஆனால் எங்கே? சீனாவை நோக்கிச் செல்கிறதா? ஊழலைக் கைவிடுகிறதா? என்று அதன் முதற் பக்கத்தில் அனுரா திஸநாயக்காவின் பெரிய படத்துடன் செய்தி இருந்தது. செய்தியின் முழு விபரங்களும் உட் பக்கத்தில் இருந்தன. தென்னிலங்கையில் உள்ள அம்பாந்தோட்டை நகருக்கு வெளியே ஒரு வீதியின் முனையில் ரசீன் முஹம்மது பொறுமையுடன் நிற்கின்றார். வெயில் அடிக்கும் சூழலில் லேசான காற்று வீசிக் கொண்டிருக்கிறது. 21.09.2024 சனிக்கிழமை,சிறீலங்காவில் உள்ள 13,000 வாக்கு நிலையங்களில் ஒன்றான புத்த கோவிலின் பக்கத்து வீதியில் …. என்று ஆரம்பிக்கும் கட்டுரை, 38 ஆண்கள் போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலில் 17 மில்லியன் பேர்கள் வாக்களார்களாக இருக்கிறார்கள் என்று சுட்டிக்காட்டுகிறது. ….55 வயதான அனுரா திஸநாயக்கா, ஒரு தொழிலாளியின் மகன். நன்கு அறியப்பட்ட வேட்பாளர்கள் மத்தியில் இருந்து ஒரு தொழிலாளியின் மகனான அவர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார்…. ….இலங்கையின் வடக்கு, கிழக்கில் உள்ள அரசியல் கட்சிகள் உட்பட தெற்கே உள்ள அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தங்கள் கைகளில் இரத்தக் கறைகளைக் கொண்டவைதான் என்று கொழும்பில் உள்ள சுகாதார நிறுவனத்தைச் சேர்ந்த கருத்துக்கணிப்பாளர் ரவி ரன்னன்-எலியா தெரிவிக்கிறார்…. என்று தொடரும் கட்டுரை இலங்கையின் பொருளாதரத்தையே பெரிதும் அலசுகிறது. …..”அதிகளவு கடன் சுமை காரணமாக நிதியளித்தல்  மற்றும் புனரமைப்புகள் மட்டுப்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் பொதுமக்களின் எதிர்பார்ப்புகளோ மிக அதிகமாக இருக்கின்றன.  இலங்கையின் தற்போதைய அந்நியச் செலவாணிக் கையிருப்பை வைத்து மூன்று மாதகால மட்டுமே இலங்கையால் இறக்குமதியைச் செய்ய முடியும் என்றும், அரசியல்துறையைச் சேர்ந்த அஷ்வின் ஹெம்மாதகம தெரிவித்துள்ளார். …..”கடந்த காலங்களில் இங்குள்ள அனைவரும் ராஜபக்ஷக்களுக்கு வாக்களித்திருந்தார்கள். ஆனால் நெருக்கடிக்குப் பிறகு, மக்கள் வித்தியாசமாக சிந்திக்கிறார்கள். அவர்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள், அது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பை  இப்பொழுது அளித்திருக்கிறது” என ரஸீன் முஹம்மத் தெரிவிக்கிறார் என்று கட்டுரை முடிவடைகிறது. ஆனால் அந்தப் பெரிய நீண்ட கட்டுரையில் சங்கெடுத்து முழங்கிய பொதுக் கட்டமைப்பின் தமிழ் வேட்பாளரான அரியநேத்திரன் பற்றி ஒரு வரி கூட இல்லை. ஆக சர்வதேசத்துக்கு எங்களின் சங்கொலி கேட்கவில்லை. அல்லது அவர்களுக்கு வேறு வேலை இருக்கிறது. https://taz.de/Linker-Praesident-in-Sri-Lanka/!6035398/  
    • அரசியல் பின்புலம் இல்லாத ஒரு மனித உரிமைகள், சமூக உரிமைகள் செயற்பாட்டாளர்...........👍. இப்படியானவர்கள் வெகு சிலரே முழு நாட்டிலும் இருக்கின்றனர்.  புதிய மாகாண ஆளுனர்களும் நல்ல தெரிவுகள் என்றே சொல்கின்றனர். மத்திய மாகாண ஆளுனராக நியமிக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் அபயக்கோன் எங்களுக்கு ஆசிரியராக இருந்தவர். சில மனிதர்களை தங்கம் என்று சொல்வோம் இல்லையா..........👍.  
    • சம்பந்தமேயில்லாத அலட்டல் இது. அப்படியானால், அதே 2020 தேர்தலில் விக்கினேஸ்வரன் முதல், பொன்னம்பலம் வரை எல்லோரும் பெற்றவை ஊழல் சிறிலங்காவில் நிகழ்ந்த தேர்தலின் கள்ள வாக்குகள் என்று எல்லோரையும் "கள்ளா" என்று திட்டலாம் அல்லவா? அப்படி இங்கே யாரும் திட்டாமல் இருக்க என்ன காரணம்? அவர்களின் தேர்வு மட்டும் இன்னொரு நாட்டில், ஊழல் இல்லாமல் நடந்தமையாலா😂? பேசிய விடயங்கள் மத்திய குழுவுக்கும் தெரியாதாமா? அப்படியானால் அந்த 23 பேருக்கும் என்ன தெரியுமாம்? யார் அந்த 23 பேரும்? நுணாவுக்கும் தெரியாது போல இருக்கு, பேசாமல் இருக்கிறார். ஒரு கட்சி/அரசியல்வாதி பற்றி நியாயமான குற்றச் சாட்டுகள்/குறைகளை முன்வைப்பது ஆரோக்கியமானது. சும் (அதற்கு முன் சம்) ஒரு குறிப்பிட்ட அமைப்பைத் தூக்கித் தலையில் சுமக்க மறுக்கிறார்கள் என்ற காரணம் மட்டும் வைத்துக் கொண்டு தான் இங்கே பலர் குத்தி  முறிகின்றனர்😂! என்னைப் பொறுத்த வரை, தாயக மக்களுக்கு இது போன்ற அரசியலாளர்கள் தான் தேவை. வெளிநாட்டு "தீ கக்கும் தேசியவாதிகள்" இங்கேயே நாடு கடந்த த.ஈ. அரசில் வேண்டுமானால் "தீ கக்கும்" தேசிய வீரர்களைத் தேர்வு செய்து மகுடம் சூட்டி மகிழட்டும்! யார் தடுத்தது😂?
    • நாங்களும் விதைக்கப் பட்டவர்களே-பா.உதயன்  They tried to bury us. They didn’t know we were seeds.”  அவர்கள் எங்களை புதைக்க நினைத்தார்கள் ஆனால் நாங்கள் விதைகள் என்று அவர்களுக்குத் தெரியாது. இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அனுர குமாரா திசநாயக்கா சொன்ன முதல் வாக்கியம் இது. எந்த இனமாக இருந்தாலும் அந்த இனத்தின் விடுதலைக்காக போராடும் விடுதலைப் போராளிகளை ஆட்சியாளர்களும் அடக்குமுறையாளரும் கொன்று புதைக்கலாம் என்று தான் நினைகிறார்கள் ஆனால் அவர்கள் புதைக்க நினைப்பதெல்லாம் விதை என்பதை மறந்து விடுகிறார்கள். ஒரு காலம் பயங்கரவாதிகள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் இன்னொரு காலம் விடுதலைப் போராளிகளே. உங்களைப் போலவே ஒரு காலம் மாற்றம் வேண்டியும், சம நீதி வேண்டியும், எமக்கான சுதந்திரம் வேண்டியும், போராடிய புரட்சிகர தமிழ் போராளிகளையும் புதைத்தார்கள் நீங்கள் சொல்லுவது போலவே இந்த இளைஞர்களும் புதைக்கப்படவில்லை அவர்கள் கூட விதைக்கப் பட்டிருக்கிறார்கள். ஒரு மனிதனின் வாழ்வில் உணவு, உடை, உறைவிடம் என்பது அத்தியாவசிய தேவை. இது கிடைக்காத போது பசி, பட்டினி, துன்பம் என்று ஒரு மனிதனுக்கு வந்தால் அந்த ஆட்சியாளரை எதிர்த்து அந்த மக்கள் போராடுவார்கள். இதை தீர்த்து வைக்கும் ஒருவன் வந்தால் அவனுக்கு பின்னால் தான் எவனும் ஓடுவார்கள் இவர்களுடன் மதம், சாதி, இனவாதம் எதுகுமே கூட வராது. ஆனால் எப்பொழுது அவன் அந்த மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல் விடுகிறானோ அப்பொழுதே அவனுக்கு எதிராக மக்கள் திரும்பமும் போராட வேண்டிய நிலைமை உருவாகிறது. அது திரும்பவும் ஒரு ஆட்சி மாற்றத்திற்கு ஆயுதமாக பாவிக்கப்படும் என்பதை மறுக்க முடியாது.  இலங்கை மக்கள் கோபமும் வெறுப்புமாக பழைய ஆட்சியாளர்களை நிராகரித்து அந்த மக்கள் மாற்றங்களோடு கூடிய புதிய பாதையை தெரிந்துள்ளார்கள் இது அறகலயா என்ற போராட்டத்தின் தொடர்ச்சியே என்று கூட நினைக்கலாம். ஆகவே எல்லா மக்களுடைய எதிர்பார்ப்பையும் பெரும்பான்மையாக இருந்தால் என்ன சிறுபான்மை இனத்தவர்களாக இருந்தால்  என்ன அவர்களின் அவிலாசைகளை முடிந்த வரை நிறைவேற்ற வேண்டும். தமிழ் மக்களின் உரிமைகளுக்கு தடையாக ஒரு காலம் இருந்தது போலன்றி மாற்றங்களோடு கூடிய உண்மையான இதய சுத்தியுடன் இந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும். இதுவே சமூக நீதி கொண்ட ஒரு சமுதாயத்தை உருவாக்க உதவும்.  அறகலயா போராட்டமானது பெரும்பான்மை சிங்கள மக்கள் மனதில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தி இருந்தால் இவர்கள் இனி இனவாதத்தை நிராகரித்து இலங்கையை பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் பலப்படுத்த வேண்டுமானால் இந்த நாட்டில் புரை ஓடிபோய் இருக்கும் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மலையக மக்களின் சமத்துவ வாழ்வுக்கும் ஏனைய எல்லா இனங்களின்அவிலாசைகளையும் பூர்த்தி செய்ய வேண்டும் இதுவே உண்மையான மாற்றமாகவும் சமூக நீதியுடன் கொண்ட ஒரு தேசமாகவும் மாற உதவும். இவைகளை வைத்தே எதிர்காலத்தில் இவர்கள் உண்மையாகவே மாற்றம் செய்ய வந்தவர்கள் என்பதை மக்கள் உணர முடியும். இலங்கையில் சுதந்திரத்திற்கு பிறகு பாரம்பரிய உயர்குடியிலிருந்தும் பல சகாப்தமாக தொடரும் குடும்ப ஆட்சியிலும் இருந்தும் வெளியே ஒரு அதிபரை மக்கள் தேர்வு  செய்திருப்பது இதுவே முதல் முறை. மாற்றம் ஒன்றே மாறாதது பல சகாப்தகால குடும்ப அரசியலில் இருந்து இலங்கையை விடுவித்து ஒரு புதிய பாதையை திறந்து விட்டிருக்கிறீர்கள். மாற்றங்கள் அனைத்தையும் அவ்வளவு இலகுவில் மாற்ற முடியாது. சவால்களை தாண்டி தமிழ் மக்கள் தங்கள் சுய நிர்ணய உரிமையோடு பாதுகாப்பாக வாழக்கூடிய பாதையை திறந்து சமத்துவ தேசம் ஒன்றை கட்டி எழுப்புவீர்கள் என்ற எதிர்பார்ப்புகளுடன் மக்கள் காத்திருக்கிறார்கள். பா.உதயன் ✍️ 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.