Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உஸ்பெகிஸ்தானில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உஸ்பெகிஸ்தானில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு!

உஸ்பெகிஸ்தானில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழப்பு!

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக, உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவின் நொய்டா நகரை சேர்ந்த மரியோன் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் டாக்-1 மேக்ஸ் என்ற மருந்தை இருமலுக்காக குடித்த 21 குழந்தைகளில் 18 குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த அனைத்து குழந்தைகளும் மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக, பெற்றோர்கள் அல்லது மருந்தக விற்பனையாளர்களால் பரிந்துரைக்கப்பட்டு மருத்துவர்களின் ஆலோசனை இல்லாமல் இருமலுக்காக இந்த மருந்தை குடித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

2-7 நாட்கள் வரை தினமும் 3 முறை 2.5 முதல் 5 மி. வரை இந்த மருந்தை பெற்றோர்கள் குழந்தைகளுக்கு வழங்கியுள்ளது தெரியவந்துள்ளது. பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாக குழந்தைகளுக்கு கொடுத்திருக்கக்கூடும்.

மேலும், இந்த மருந்துகளை ஆய்வு செய்ததில், எத்திலீன் கிளைகோல் என்ற நச்சுத்தன்மை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதனால், உஸ்பெகிஸ்தான் முழுவதும் மருந்து விற்பனையகத்திலிருந்து டாக்-1 மேக்ஸ் மருந்துகள் அனைத்தும் திரும்பப் பெறுவதாக உஸ்பெகிஸ்தான் அரசாங்கம் அறிவித்துள்ளது.

உஸ்பெகிஸ்தான் அரசாங்கத்தின் குற்றச்சாட்டை தொடர்ந்து, இந்தியா தரப்பில் மருந்துகளை ஆய்வு செய்ய விசாரணைக் குழு அமைக்கப்படவுள்ளது.

முன்னதாக கடந்த ஒக்டோபர் மாதம் மேற்கு ஆபிரிக்க நாடான காம்பியாவில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நஞ்சுத் தன்மை கொண்ட தரமற்ற 4 இருமல் சிரப்களை குடித்த 66க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்ததாக புகார் எழுந்த நிலையில், மெய்டென் மருந்தியல் நிறுவனத்தின் மருந்துகள் குறித்து உலக சுகாதார அமைப்பு விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2022/1317804

  • கருத்துக்கள உறவுகள்

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் மரணம்: “இந்திய இருமல் மருந்துதான் காரணம்” என்று குற்றச்சாட்டு

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் மரணம்: “இந்திய இருமல் மருந்துதான் காரணம்” எனக் குற்றச்சாட்டு

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மேரியோ பயோடெக் தயாரித்த இருமல் மருந்தைக் குடித்த 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதல்கட்ட பரிசோதனையில் ஒரு தொகுதி மருந்தில் எத்திலீன் கிளைகோல் என்ற நச்சுப்பொருள் இருப்பது தெரிய வந்ததாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

குழந்தைகளுக்கு டோக்-1 மேக்ஸ் சிரப் மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் வழங்கப்பட்டது.

அவர்கள் உட்கொள்ளும் அளவு, குழந்தைகளுக்குரிய நிலையான அளவைவிட அதிகமாக இருந்தது.

 

காம்பியாவில் வேறு ஓர் இந்திய நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்துகளுடன் குழந்தைகளின் உயிரிழப்புகளை இணைத்த குற்றச்சாட்டு வெளியான சில வாரங்களுக்குப் பிறகு, உஸ்பெகிஸ்தானின் இந்தக் குற்றச்சாட்டு வந்துள்ளது.

இதுகுறித்த கருத்தைத் தெரிந்துகொள்ள பிபிசி முயன்றது. ஆனால், இந்திய சுகாதார அமைச்சகமும் மேரியோன் பயோடெக் நிறுவனமும் இன்னும் பதிலளிக்கவில்லை. ராய்ட்டர்ஸ் ஓர் அரசாங்க ஆதாரத்தை மேற்கோள் காட்டி, “சுகாதார அமைச்சகம் இந்த விஷயத்தைக் கவனித்து வருவதாகக் கூறியுள்ளது.

தற்காலிகமாக சிரப் தயாரிப்பை நிறுத்தியுள்ளதாக மேரியோன் பயோடெக் நிர்வாகி ஒருவரை மேற்கோள் காட்டி ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அரசு விசாரணை நடத்தி வருவதாகவும் அதன்படி நிறுவனத்தின் நடவடிக்கை இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேரியோன் பயோடெக் டெல்லிக்கு அருகிலுள்ள நொய்டாவில் உள்ளது. அதன் இணையதளம் தற்போது செயலிழந்துள்ளது. ஆனால், நிறுவனத்தின் லிங்க்ட்-இன் பக்கம், அந்த நிறுவனம் 1999இல் நிறுவப்பட்டது என்றும் அதன் தயாரிப்புகள் “மத்திய ஆசிய நாடுகள், மத்திய மற்றும் தென்னமெரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் அதிகமாக உள்ளன” என்றும் கூறுகிறது.

இந்தியா வேகமாக வளர்ந்து வரும் சில மருந்து நிறுவனங்களின் தாயகமாக உள்ளதால், “உலகின் மருந்தகம்” என்று அழைக்கப்படுகிறது. மேலும், வளரும் நாடுகளின் மருத்துவத் தேவைகளையும் பூர்த்தி செய்கிறது.

டிசம்பர் 27ஆம் தேதியிட்ட உஸ்பெக் அமைச்சக அறிக்கை, 2012 முதல் நாட்டில் டோக்-1 மேக்ஸ் மாத்திரைகளும் சிரப் மருந்துகளும் விற்பனை செய்யப்படுவதாகக் கூறுகிறது.

“உயிரிழந்த குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, இந்த மருந்தை வீட்டில் 2-7 நாட்களுக்கு, ஒரு நாளைக்கு 3-4 முறை, 2.5-5 மில்லி என்ற அளவில் எடுத்துக்கொண்டது கண்டறியப்பட்டது. இது குழந்தைகளுக்கான மருந்தின் நிலையான அளவைவிட அதிகம்,” என்று அமைச்சகம் கூறியது.

உயிரிழப்புகள் எந்த நேரத்தில் நிகழ்ந்தன என்பதை அறிக்கை குறிப்பிடவில்லை.

பிபிசி மானிட்டரிங் பிரிவு, டிசம்பர் 23ஆம் தேதியன்று, Gazeta.uz என்ற செய்தி இணையதளத்தை மேற்கோள் காட்டி, உஸ்பெக் அதிகாரிகள் “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்தை உட்கொண்டதால் மத்திய சமர்கண்ட் பகுதியில் கடந்த இரண்டு மாதங்களில் 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாகக் கூறப்பட்டதை” விசாரித்து வருகின்றனர் எனத் தெரிவித்தது.

உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் மரணம்: “இந்திய இருமல் மருந்துதான் காரணம்” எனக் குற்றச்சாட்டு

பட மூலாதாரம்,WHO

டிசம்பர் 26ஆம் தேதியன்று, Podrobno.uz செய்தி இணையதளம் மூன்று வயதுக்குட்பட்ட 15 பேர் உட்பட 21 குழந்தைகள், “செப்டம்பர், டிசம்பர் மாதங்களுக்கு இடையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து டோக்-1 மேக்ஸை எடுத்துக்கொண்டதால் ஏற்பட்டதாகக் கூறப்படும்” கடுமையான சிறுநீரக செயலிழப்புக்கு சிகிச்சை பெற்றதாகக் கூறியது. அந்த நோயாளிகளில் மூவர் குணமடைந்துள்ளனர்.

டோக்-1 மேக்ஸ் மருந்தில் எத்திலீன் கிளைகோல் இருப்பதாக முதல்கட்ட ஆய்வுகள் தெரிவிப்பதாக அமைச்சகம் கூறியுள்ளது.

அக்டோபரில் உலக சுகாதார அமைப்பு உலகளாவிய எச்சரிக்கையை விடுத்தது. அதோடு காம்பியாவில் சிறுநீரக பாதிப்புகளால் 66 குழந்தைகள் உயிரிழந்த விஷயத்தில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நான்கு இருமல் மருந்துகளைத் தொடர்புபடுத்தியுள்ளது. இருமல் மருந்தின் மாதிரிகள் மீதான சோதனைகள், அதில் நச்சுப் பொருட்களான டைதிலீன் கிளைகோல், எத்திலீன் கிளைகோல் ஆகியவை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு இருப்பதைக் காட்டியது.

இந்திய அரசும் மெய்டன் ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனமும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளன.

டிசம்பரில் இந்தியா, நான்கு இருமல் மருந்துகளின் சோதனைகள் விவரக் குறிப்புகளுடன் இணங்குவதைக் காட்டியதாகக் கூறியது. மேலும் ஓர் அரசாங்க அதிகாரி பிபிசியிடம், உலக சுகாதார அமைப்பு இருமல் மருந்துகளைக் குறை கூறுவதில் மட்டுமீறிய நம்பிக்கை கொண்டிருப்பதாகக் கூறினார். ஆனால், எடுக்கப்பட்ட நடவடிக்கையில் தான் உறுதியாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியது.

கடந்த வாரம், காம்பியாவில் உள்ள நாடாளுமன்றக் குழு பல வாரங்கள் விசாரணைக்குப் பிறகு மெய்டன் ஃபார்மாசூட்டிகல்ஸ் மீது வழக்குத் தொடர பரிந்துரைத்தது. அந்தக் குழு நாட்டிலுள்ள அந்த நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளையும் தடை செய்வதற்கும் பரிந்துரைத்தது.

https://www.bbc.com/tamil/articles/cyew95zk3j2o

  • கருத்துக்கள உறவுகள்

மேற்கின் ஆளும் வர்க்கமும், கம்பனிகளும் எல்லாத்தையும் shareholder profits என்று பார்த்து ...

இதுவரையில் சீனாவில் உற்பத்தியாகும் மருந்து மூல பொருட்கள் (api) பற்றி எந்த குறைபாடும் இல்லை - சீனாவில் உடற்பத்தியாவது மேற்கிற்கு   பிரச்னை.

மனித வைத்திய மருந்து முழு உற்பத்தி, வளங்கள் சங்கிலியை மேற்கு அதன் நிலபுலத்தில் வைத்து இருக்க வேண்டிய கட்டாயம்..

கிந்தியா உள்ளதுக்குள்ளேயே, உள்ளுக்கேயும்  பொய், இதற்கிடையில் ஏதோ கிந்தியா ஏற்றுக்கொள்ளும் என்று. 

எப்படி 2ம் நாட்டில் அதுவும் 2 வார இடை வெளியில் - எதோ ஒய் தொடர்ச்சியான உடற்பத்தி batch இல் கசமுச, காசுக்காக?  

       

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.