Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கூட்டமைப்பே நிபந்தனையின்றி பேச்சுக்கு செல்லாதே - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பே நிபந்தனையின்றி பேச்சுக்கு செல்லாதே

image_7e1b5303cd.jpg

க. அகரன்

வவுனியா மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இன்று (30) முன்னெடுக்கப்பட்டது. 

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும், பதாதைகளையும் ஏந்தியிருந்த உறவுகள் 'ராஜபக்‌ஷ குடும்பம் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழும் போது நாங்கள் பேரக் குழந்தைகளைத் தேடி வீதியில் அழுது திரிகிறோம், நிபந்தனையின்றி ரணில் அரசுடன் பேசாதே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும், ஐ.நாவே எமக்கான தீர்வைப் பெற்றுத்தா, வடக்கு - கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு, கூட்டமைப்பே நிபந்தனையின்றி பேச்சுக்கு செல்லாதே' என கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

image_0452add963.jpg

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களை புலிகள் என கொண்டு சென்றிருக்கலாம் என அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். இக் கருத்துக்கு எமது எதிர்ப்பை வெளிப்படுத்துகின்றோம். நாங்கள் யுத்தம் முடிவடைந்த பின் இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைத்த பிள்ளைகளையும்,  வைத்தியசாலையில் இருந்தும், வீடுகளில் இருந்தும் இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்ட எமது பிள்ளைகளையுமே தேடுகின்றோம். அதற்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிபந்தனையின்றி அரசுடன் பேச்சுக்கு செல்லாது தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.

image_192df5665c.jpgimage_a45d972000.jpgimage_3949d51142.jpg

 

 

https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/கூட்டமைப்பே-நிபந்தனையின்றி-பேச்சுக்கு-செல்லாதே/150-309865

  • கருத்துக்கள உறவுகள்

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கவனயீர்ப்பு போராட்டம்!

By DIGITAL DESK 5

30 DEC, 2022 | 04:01 PM
image

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா பழைய பேருந்து நிலையம் முன்பாக குறித்த போராட்டம் இன்று (30) இடம்பெற்றது.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் படங்களையும், பதாதைகளையும் ஏந்தியிருந்த உறவுகள் 'ராஜபக்ச குடும்பம் பேரக்குழந்தைகளை கொஞ்சி மகிழும் போது நாங்கள் பேரக் குழந்தைகளைத் தேடி வீதியில் அழுது திரிகிறோம்.

நிபந்தனையின்றி ரணில் அரசுடன் பேசாதே, காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு சர்வதேச நீதி வேண்டும், ஐ.நா.வே எமக்கான தீர்வைப் பெற்றுத் தா, வடக்கு - கிழக்கில் இருந்து இராணுவமே வெளியேறு, கூட்டமைப்பே நிபனந்தனையின்றி பேச்சுக்கு செல்லாதே' என கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

IMG_2428.JPG

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களை புலிகள் கொண்டு சென்றிருக்கலாம் என அமைச்சர் அலிசப்ரி தெரிவித்துள்ளார். இக் கருத்துக்கு எமது எதிர்ப்பை வெளிப்படுதின்றோம்.

IMG_2421.JPG

நாங்கள் யுத்தம் முடிவடைந்த பின் இராணுவத்தினரிடம் கையில் ஒப்படைத்த பிள்ளைகளையும், வைத்தியசாலையில் இருந்தும், வீடுகளில் இருந்தும் இராணுவத்தினரால் கொண்டு செல்லப்பட்ட எமது பிள்ளைகளையுமே தேடுகின்றோம். 

IMG_2408.JPG

அதற்கு நீதி கிடைக்கும் வரை எமது போராட்டம் தொடரும். தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் நிபந்தனையின்றி அரசுடன் பேச்சுக்கு செல்லாது தமிழ் மக்களின் அபிலாசைகளுக்காக செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர். 

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, கிருபன் said:

நிபந்தனையின்றி ரணில் அரசுடன் பேசாதே,

பேசுவதெல்லாம் பேசி முடிஞ்சாச்சுது என்கிறார்கள்? உங்கள் குரலொலி எல்லாம் அவர்கள் காதில் விழாது, அவர்கள் இப்போ பார்ட்டியில் கலந்து சிங்களத்தின் புகழாரத்தை கேட்டு மகிழ்ந்து கொண்டிருப்பார்கள். உங்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டாம், திரும்பிபாக்கவே மனமில்லை அவர்களுக்கு, அவர்கள் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்று உறுதி செய்து இழப்பீடு வாங்கப்போயிருக்கிறார்கள். இனி வருவார்கள் ஆறுதலாக, தாம்தான் உங்கள் பிள்ளைகள் கொலை செய்யப்பட்டதை கண்டு பிடித்தமாதிரி. எங்களுக்கு வாய்ச்சமாதிரி தலைவர்கள் உலகில்  வேறு எங்கும் இருக்கக்கூடாது.  

  • கருத்துக்கள உறவுகள்

கூட்டமைப்பு வெறும் சொல்லாத்தான் இருக்குது. 1998 முதல் 2009 வரை  இருந்த கூட்டமைப்பு அல்ல இன்றிருப்பது. எந்த சனநாயகத் தன்மையும் அற்ற பதவி ஆசை பிடித்த சம் சும் கும்பலின் வெட்டி வரட்டுக்கெளரவ அமைப்பாக சிங்கள கூலி அமைப்பாகத்தான் அது இருக்குது இப்ப. 

அது யாருடன் பேசியும் தமிழ் மக்களுக்கு எள்ளளவும் பயனில்லை.. எதையும் சாதிக்கப் போவதும் இல்லை. இருந்த ஒற்றைமையை குலைப்பதுதான் அதன் நோக்கம். தமிழ் தேசிய சிந்தனையை சிதறடிப்பதுதான் இவர்களுக்கு சிங்களத்தால் வழங்கப்பட்டுள்ள புரஜெக்ட். அதனை நோக்கி தான் அவர்கள் செயற்படுவார்கள்.

இவர்களிடம் காணாமல் போன உறவுகளின் சொந்தங்கள் கூடிய எதிர்பார்ப்பை வைக்கக் கூடாது. ஏமாற்றங்களே மிஞ்சும். நீங்களாக ஒரு உருப்படியான அமைப்பை உருவாக்கி உங்கள் தேவைகளை நோக்கங்களை சர்வதேசப் பிரதிநிதிகளிடம் கொண்டு செல்லுங்கள். வெறுமனவே ஐநா.. மேற்கு நாடுகள்.. அமெரிக்கவோடு நிற்காமல்.. சீனா.. ரஷ்சியா.. கியூபா உட்பட்ட லத்தீன் அமெரிக்க நாடுகள்.. ஆபிரிக்க நாடுகள் என்று உங்கள் பிரச்சனையை சர்வதேச மயப்படுத்துவதுதான் ஏதேனும் உருப்படியா நிகழ வழி வகுக்கும். சிங்களவனிடமும் சிங்களக் கூலிகளிடம் கதறிக் கொண்டிருப்பதால் எந்தப் பயனும் இல்லை... கொலைகாரனிடமே.. நீதி கேட்பது எப்படி நீதிக்கு வழிவகுக்கும். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இழந்தது, துன்பப்படுவது எல்லாம் சாதாரண மக்களே, அவர்கள் எதையும் இழக்கவில்லை இன்னும் பலமடங்கு பெற்று அனுபவிக்கிறார்கள். அவர்களுக்கு எங்கே எங்களின் வலி, இழப்பு புரியப்போகுது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.