Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மக்கள் வங்கி ஏ.டி.எம். இயந்திரங்களில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழில். உப தபாலதிபரின் கைப்பை அபகரிப்பு!

மக்கள் வங்கி ஏ.டி.எம். இயந்திரங்களில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் வங்கி கிளைகளின் ஏ.டி.எம். இயந்திரங்களில் சுமார் ஒரு கோடிக்கும் அதிக பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை ஹிக்கடுவை, காலி, பத்தேகம பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களிலிருந்து முறையே 4 680 000, 275 000 மற்றும் 5 700 000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் குறித்த ஏ.டி.எம். இயந்திரங்களுக்கருகில் வருகை தந்த வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் பிரஜைகளால், அங்கு காணப்பட்ட சி.சி.டி.வி. கமராக்களை செயழிக்கச் செய்து, ஏ.டி.எம். இயந்திர தரவுகளை மாற்றி இவ்வாறு பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த மூன்று பிரதேசங்களிலுமே ஒரு முறையில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளமையால், ஒரே தரப்பினரே அனைத்து கொள்ளையுடனும் தொடர்புபட்டுள்ளனர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதனை அடிப்படையாகக் கொண்டு ஹிக்கடுவை, காலி, பத்தேகம உள்ளிட்ட பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1318118

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

யாழில். உப தபாலதிபரின் கைப்பை அபகரிப்பு!

மக்கள் வங்கி ஏ.டி.எம். இயந்திரங்களில் கோடிக்கணக்கில் பணம் கொள்ளை

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் வங்கி கிளைகளின் ஏ.டி.எம். இயந்திரங்களில் சுமார் ஒரு கோடிக்கும் அதிக பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

வெள்ளிக்கிழமை அதிகாலை ஹிக்கடுவை, காலி, பத்தேகம பகுதிகளில் உள்ள ஏ.டி.எம். இயந்திரங்களிலிருந்து முறையே 4 680 000, 275 000 மற்றும் 5 700 000 ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

அதிகாலையில் குறித்த ஏ.டி.எம். இயந்திரங்களுக்கருகில் வருகை தந்த வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் பிரஜைகளால், அங்கு காணப்பட்ட சி.சி.டி.வி. கமராக்களை செயழிக்கச் செய்து, ஏ.டி.எம். இயந்திர தரவுகளை மாற்றி இவ்வாறு பணத்தை கொள்ளையடித்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த மூன்று பிரதேசங்களிலுமே ஒரு முறையில் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளமையால், ஒரே தரப்பினரே அனைத்து கொள்ளையுடனும் தொடர்புபட்டுள்ளனர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

அதனை அடிப்படையாகக் கொண்டு ஹிக்கடுவை, காலி, பத்தேகம உள்ளிட்ட பொலிஸாரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2022/1318118

இலங்கைக்கு அடிமேல் அடி விழுதே🤔

  • கருத்துக்கள உறவுகள்
Quote

வெளிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் பிரஜைகளால்

யாரந்த வெளிநாட்டவர்கள்???

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, nunavilan said:

யாரந்த வெளிநாட்டவர்கள்???

பாகிஸ்தானியர் கணிசமான அளவு இலங்கையில் வசிக்கின்றார்களாம்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்

ATM இயந்திரங்களில் தொடர் கொள்ளை : இரு வெளிநாட்டவர்களை தேடும் சி.ஐ.டி.

By DIGITAL DESK 2

02 JAN, 2023 | 08:53 PM
image

 

(எம்.எப்.எம்.பஸீர்)

அரச வங்கியொன்றின் காலி பிராந்தியத்தில் உள்ள மூன்று தானியக்க பணப்பறிமாற்று இயந்திரங்களை முடக்கி  சுமார் ஒன்றரைக் கோடி ரூபா பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பில் சிறப்பு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவின் உத்தரவுக்கு அமைய, இரு வெளிநாட்டவர்களை உள்ளடக்கியதாக நம்பப்படும் இந்த கொள்ளைக் கும்பளை அடையாளம் கண்டு கைது செய்யும் பொறுப்பு சி.ஐ.டி. சிறப்புக் குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளன.

காலி, ஹிக்கடுவை மற்றும் பத்தேகம பகுதியில்  கடந்த 2022 டிசம்பர் 30ஆம் திகதி அதிகாலை 1.30 மணிக்கும் அதிகாலை 3.40 மணிக்கும் இடையே இந்த கொள்ளை இடம்பெற்றிருந்தது.

இதுவரையான விசாரணைகளில்,  கார் ஒன்றில் வரும் கும்பலில்  உள்ளடங்கும் இரு வெளிநாட்டவர்களின் உருவ அமைப்பை ஒத்தவர்கள் இருவர் மட்டும் இறங்கிச் சென்று,  சிறிய தொழில் நுட்ப கருவி ஒன்றினை தானியக்க  பணப் பரிமாற்று இயந்திரப் பகுதியில் பொருத்தி, கட்டமைப்பை ஹெக் செய்து அதில் உள்ள அனைத்து பணத்தினையும் கொள்ளையிட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

தானியக்க  பணப் பறிமாற்று இயந்திரத்தில்  பணத் தொகையை பெற முடியாமல் இருப்பது தொடர்பிலும், கட்டமைப்பில் பணம் இயந்திரத்தில் இருப்பதாக காண்பித்த நிலையும், அது தொடர்பில் தேடிப் பார்த்த போதே இக்கொள்ளை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந் நிலையில், மேலதிக விசாரணைகளில், கடந்த 2022 டிசம்பர் 26 ஆம் திகதி அதிகாலை அதே அரச வங்கியின்  நாரஹேன்பிட்டி கிளையிலும் வெளிநாட்டவர்கள் இருவர் என சந்தேகிக்கப்படுவோர் தானியக்க பணப் பரிமாற்று  இயந்திரத்தில் கொள்ளையிட முயற்சித்துள்ளமை குறித்தும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

இந் நிலையில் அது குறித்தும் விசாரணையாளர்களின் அவதானம் திரும்பியுள்ளதாக அறிய முடிகின்றது.

காலி சம்பவம் தொடர்பிபில் முன்னெடுத்துள்ள விசாரணைகளில், இந்த வெளிநாட்டவர்களை உள்ளடக்கிய கொள்ளை கும்பல் கொள்ளைக்காக வந்த கார், கம்பஹா பகுதியில் ஒருவருக்கு சொந்தமானது எனவும் அது வாடகைக்கு வழங்ககப்பட்டிருந்த நிலையில் கொள்ளைக் கும்பலால் பெற்றுக்கொள்ளப்பட்டு இலக்கத் தகடும் மாற்றப்பட்டு கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இதனைவிட, அம்பலாங்கொடை பகுதியிலிருந்து அதிவேக பாதை ஊடாக  கொள்ளையர்கல் வந்துள்ளமை தொடர்பிலும்  முதலில் ஹிக்கடுவை பகுதியில் உள்ள தானிக்க பணப் பரிமாற்று இயந்திரத்தை  டிசம்பர் 30 அதிகாலை 1.30 மணிக்கு  கொள்ளையிட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது.

பின்னர்,  காலி - கராபிட்டிய தானியக்க பணப் பரிமாற்று இயந்திரம் அதிகாலை 3.22 மணிக்கும் அதனை தொடர்ந்து பந்தேகம இயந்திரமும் கொள்ளையிடப்பட்டுள்ளன.

இக்கொள்ளைகளின் போது நேரடியாக தானியக்க பணப் பறிமாற்று இயந்திரங்களுக்குள் நுழையும் இரு வெளிநாட்டவர்கள் என நம்பப்படும் நபர்களும் முகத்தை மறைக்கும் முகக் கவசமும் , தொப்பியும் அணிந்திருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந் நிலையிலேயே சி.ஐ.டி. சிறப்புக் குழுவொன்று சிறப்பு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. 

https://www.virakesari.lk/article/144787

  • கருத்துக்கள உறவுகள்

வங்கிகளின் ATM இயந்திரங்களில் பணம் திருட்டு : மீகஹதென்னை பொலிஸ் நிலைய நிர்வாகப் பகுதி பொறுப்பதிகாரி கைது! 

By NANTHINI

09 JAN, 2023 | 04:54 PM
image

ங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் திருடப்பட்டமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்  அடிப்படையில் மீகஹதென்னை பொலிஸ் நிலைய நிர்வாகப் பகுதி பொறுப்பதிகாரி கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஹிக்கடுவ, பத்தேகம, காலி, கராப்பிட்டிய ஆகிய பிரதேசங்களில் அமைந்துள்ள அரச வங்கிகள் பலவற்றின் கணினியை ஊடுருவி பெருந்தொகையான பணத்தை வெளிநாட்டவர்கள் இருவர் திருடியதாக கிடைத்த தகவலின் அடிப்படையில்,  அவர்களை கைதுசெய்து முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணைகளையடுத்தே மீகஹதென்னை பொலிஸ் நிலைய நிர்வாகப் பகுதி பொறுப்பதிகாரி சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

குறித்த பொலிஸ் பரிசோதகர் பிடிகல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அமுகொட பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/145353

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.