Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தேர்தலை எதிர்கொள்ள கூட்டமைப்பின் புதிய உத்தி! சுமந்திரன் வெளிப்படுத்திய தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் தேசிய கூட்டமைப்பாக வேறுபட்ட வழிகளை கையாள்வதற்கு பங்காளிக்கட்சியுடன் பேசுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சுமந்திரன் தெரிவித்துள்ளார். 

இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் கட்சியின் தலைவர் மாவை சோ.சேனாதிராஜா தலைமையில்  இன்று காலை மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் நடைபெற்றது. 

கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த எம்.கே.சுமந்திரன், 

உள்ளுராட்சிமன்ற தேர்தல்

“உள்ளுராட்சிமன்ற தேர்தல் நடைபெறவுள்ள சூழ்நிலையில் அந்த தேர்தலை எவ்வாறு எதிர்கொள்வது என்ற கருத்து பரிமாற்றம் நிகழ்ந்துள்ளது. வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்திய குழு கூட்டம் நடைபெற்றபோது ஒரு சில கருத்துகள் பரிமாறப்பட்டிருந்தன.

தற்போது நடைமுறையில் உள்ள உள்ளுராட்சி முறைமைகளானது ஒரு குறித்த சபையில் ஒரு கட்சி அறுதிப்பெரும்பான்மை பெறுவது கடினமானது என்பதை நாங்கள் அனுபவத்தில் உணர்ந்திருக்கின்றோம்.

தேர்தலை எதிர்கொள்ள கூட்டமைப்பின் புதிய உத்தி! சுமந்திரன் வெளிப்படுத்திய தகவல் | Tamil National Alliance Local Election

60வீதம் வட்டாரத்திற்கும் 40வீதம் விகிதாசரத்திற்குமாக இருக்கின்றபோது வட்டாரத்த்தில் முழுமையாக வெற்றிபெற்றாலும் முழுமையாக அறுதிப்பெரும்பான்மையினை பெறுவது கஷ்டமாகும்.

சில அரசியல் கட்சிகள் சுயேட்சைக் குழுக்களை போட்டியிட வைத்து சில நூறு வாக்குகளைப்பெற்று ஆசனங்களை பெற்றதன் காரணமாக வட்டாரத்துடன் இணைந்து ஆட்சியமைப்பதற்கு உபயோகமாக இருந்திருக்கின்றது.

கூட்டமைப்பு கூடுதலான ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு 

இன்று மட்டக்களப்பில் நடந்த கூட்டத்தில் எமது மாவட்ட கிளைகள் எட்டிலிருந்தும் கருத்துகள் பெறப்பட்டிருந்தன. சென்ற கூட்டத்தில் தீர்மானித்தன் படி ஒரு தொழில்நுட்ப ரீதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் உள்ள மூன்று கட்சிகளும் தேர்தலிலே போட்டியிட்டால் வட்டார கிளையில் ஒரு கட்சி வெற்றிபெறும்போது விகிதாசாரத்தில் இன்னுமொரு கட்சி வெற்றிபெற முடியும்.

அவ்வாறு செய்யும்போது ஒட்டுமொத்தமாக சபைகளை தமிழ் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெறகூடியதாகயிருக்கும். இது இலகுவாக எண்கணிதத்திலும் அனுபவத்திலும் கண்டுகொண்ட விடயம்.

இன்று எல்லா மாவட்டங்களிலிருந்தும் இலங்கை தமிழரசுக்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பின் சின்னமான வீட்டு சின்னத்தில் தமிழரசுக்கட்சியில் போட்டியிட வேண்டும் எனவும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் உள்ள ஏனைய கட்சிகளும் அவ்வாறோ போட்டியிடுவதும் சிறந்தது என கட்சியின் மத்திய குழு உறுப்பினர்கள் அனைவராலும் தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பு கூடுதலான ஆசனங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு என்ற கருத்து ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. எதிர்வரும் 10ஆம் திகதியளவில் தமிழ் தேசிய கூட்டமைப்பாக பங்காளிக்கட்சிகளுடன் இணைந்து பேச்சுவார்த்தையினை நடாத்துகின்றபோது இன்று மத்திய குழுவில் ஏகமனதாக தெரிவிக்கப்பட்ட யோசனை முன்வைக்கப்படும்.

தனித்துபோட்டியிடும் தீர்மானம் இல்லை

அவர்களோடு பேசி இதன் சாத்தியப்பாடுகளை ஆராய்ந்து முடிவெடுக்கப்படும். இங்கு ஊடகங்களிடம் நான் விசேடமாக தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் நாங்கள் எடுத்த தீர்மானம் தனித்துபோட்டியிடும் தீர்மானம் இல்லை. தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடப்போகின்றது என்று தயவுசெய்து எழுத வேண்டாம். தமிழ் தேசிய கூட்டமைப்பாகத்தான் போட்டியிடுவோம் தமிழ் தேசிய கூட்டமைப்புகள் உள்ள மூன்று கட்சிகளையும் நன்மையான வகையில் உபயோகப்படுத்த முடியுமா என்று தான் பார்க்கின்றோம்.

இல்லாது போனால் சுயேட்சைக்குழுக்களை வைத்து அந்த விகிதாசார ஆசனங்களை கைப்பற்ற வேண்டிய நிலையேற்படும். தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் மூன்று அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் இருக்கின்ற காரணத்தினால் அந்த மூன்று கட்சிகளையும் கொண்டு தமிழ் தேசிய கூட்டமைப்பு கூடிய ஆசனங்களைப்பெறலாம் என்பது அனைத்து கிளை உறுப்பினர்களின் கருத்தாக உள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு பிளவுபட்டுவிட்டது, தமிழரசுககட்சி வெளியேறிவிட்டது என்று ஊடகங்கள் பொய்ப்பிரசாரங்களை செய்யாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் தேசிய கூட்டமைப்பாகதான் தேர்தலை சந்திக்கும் ஆனால் தொழில்நுட்ப யுக்தியை கையாண்டு தமிழரக்கட்சியும் ஏனைய கட்சியும் தனியாக போட்டியிடும்போது சென்ற தடை எதிர்கொண்ட சிரமங்களுக்கு முகங்கொடுக்க தேவையில்லை.” என்றார். 

https://tamilwin.com/article/tamil-national-alliance-local-election-1673129383

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, பெருமாள் said:

இங்கு ஊடகங்களிடம் நான் விசேடமாக தெரிவித்துக்கொள்வது என்னவென்றால் நாங்கள் எடுத்த தீர்மானம் தனித்துபோட்டியிடும் தீர்மானம் இல்லை. தமிழரசுக்கட்சி தனித்து போட்டியிடப்போகின்றது என்று தயவுசெய்து எழுத வேண்டாம்.

அவர் எல்லாம் சரியாகத்தான் சொல்கிறார் ஆனால் இந்த ஊடகங்கள்தான் அவரை பிழையாய் சித்திரிகின்றன. ஹஹ்ஹா ...... ஒரு தடவையா? இரு தடவையா? இவர் சொல்வதெல்லாவற்றையுமெல்லோ!   ஏன் மற்றவர்கள் சொல்வதை அப்படியே எழுதுகின்றனவென்றால், இவர்தான் தமிழருக்காக மாய்ஞ்சு மாய்ஞ்சு உழைக்கிறார் என்கிற கடுப்பு பத்திரிகைக்காரருக்கும் அதை தடுத்து நிறுத்துவதற்காக செய்கிறார்கள். சொல்வதெல்லாவற்றையும் சொல்லி மக்களை குழப்புறது தான், பிறகு பத்திரிக்கைக்காரரை குற்றஞ்சொல்வது. பாழாய்ப்போன பேச்சாளர் பதவியை பிடுங்குகிறார்களுமில்லை இவரிடமிருந்து, இல்லையாயின்  இவரது தவளை வாயை அடைக்க வேறொரு வழியுமில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பங்குபிரிக்கும் காலம் வரும்போது இவரின் எண்கணிதமும்  தொழில் நுட்பமும் வேலை செய்யாது நினைவிருக்கட்டும். பின்னர் கதிரை பிடிக்க அடிதடி புடுங்குப்பாடு தான். நீங்கள் போடும் இந்த வியூகம் தமிழினத்துக்கு நல்லது செய்யவா அல்லது தனிப்பட்ட இலாப நோக்கத்திற்காகவா? வென்றுதான் என்னைத்தை கிழிக்கப்போரீங்க? ரணில் இவங்களைப் பார்த்து கொடுப்புக்குள் சிரிக்கிறமாதிரி எனக்குப்படுகிறது?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.