Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ததேகூ பிளவும் உள்ளூராட்சி சபை தேர்தலும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

 

"ததேகூ பிளவும் உள்ளூராட்சி சபை தேர்தலும்" | நிக்ஸன் மற்றும் சிறீநேசன்

 

 

  • கருத்துக்கள உறவுகள்

உள்ளூராட்சி தேர்தல் பற்றி பேசுகிறவர்கள் இந்த காணொளியையும் செவிமடுத்தால் கூடுதல் விபரங்கள் கிடைக்கும்.

முக்கியமாக ஏன் சுயேட்சைக் குழுவாக கேட்கிறார்கள் என்று தெரியாமல் இருந்துது.

இந்த காணொளி கேட்ட பின்னர் நிறையவே தெளிவடைந்துள்ளேன்.

இணைப்புக்கு நன்றி நுணா.

  • கருத்துக்கள உறவுகள்

பேரினவாத கட்சிகளை வட கிழக்கில் அனுமதித்தது செயற்திறனற்ற தமிழரசுக்கட்சியே. இப்போ தமிழ்த்தேசியம் என்பதை உடைத்து பேரினவாத கட்சிகளின் காலடியில் விழ வைப்பதும் தமிழரசுக்கட்சியே. முன்னைய சுமந்திரனின் பேச்சுக்களை கேட்டால் புரியும் அதாவது தமிழரசு, தமிழ்த்தேசியம் என்று சொன்னால் சிங்களவர் பயப்படுகிறார்களாம் அதை வெறுக்கிறார்களாம். அதற்காகவே இந்த சிங்கள கட்சிகளை வட கிழக்கில் திட்டமிட்டு உள்நுழைய விடுகிறார்கள் போலுள்ளது. தமிழ்த் தேசியக்கட்சிகள்  பிரிந்து நின்று போட்டியிடுவதால் ஏற்படும் நன்மைகளை போன தேர்தலில் தாம் உணர்ந்து கொண்டதாக ஒத்துக்கொள்ளும் இவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை தூங்கிவிட்டு தேர்தல் நெருங்கும்போது பங்காளிக்கட்சிகளை வெளியேற்றுவதும் த. தே. கூட்டமைப்பின் சின்னத்தை பாவிக்கக்கூடாது என்று  தடுப்பதும் அவர்களை அரசியல் அனாதைகளாக்குவதுபோல் தெரியவில்லையா? பத்திரிகைகளில் செய்தி வந்த போதும் இல்லவே இல்லை என்று ஏன் சாதித்தார்கள்? இது ஒரு திட்டமிட்டு அவர்களை ஓரங்கட்டும் செயல். அதாவது தமிழ்த்தேசியத்தின் மேல் மக்கள் விருப்பு வைத்திருக்கிறார்கள் ஆகவே அதை அவர்களிடம் இருந்து தடுத்து தமிழரசுக்கட்சிக்கு விழும் வாக்குகளை அதிகப்படுத்தி தமது சர்வாதிகாரத்தை பலப்படுத்தும் உள்நோக்கம் கொண்டது. உண்மையிலேயே இவர்களது திட்டம் வாக்கை தக்க வைப்பதாயிருந்தால் பங்காளிக்கட்சிகளோடு பேசி, தெளிவுபடுத்தி, ஆயத்தப்படுத்தி சேர்ந்து தேர்தலை சந்தித்திருக்கலாம். ஒரு பக்கம் தாடியர் தனக்கு விழும் வாக்குகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்த தேசியக்கூட்டணி என்று பயப்படுகிறார். ஆனால் மக்கள் இங்கே கட்சியின் சின்னத்தில், கூட்டணியில் குறுகிய காலத்தில் புரிதல் இல்லாமல் தடுமாறி தமிழரசுக்கட்சியில் உள்ள வெறுப்பில் பேரினவாதக்காட்சிக்கு வாக்களிக்கும் நிலையை உருவாக்கி தமிழ்த்தேசியத்தை உடைத்த பெருமையை தமிழரசுக்கட்சியின் சிலர் செய்திருப்பதோடு அதை நிஞாயப்படுத்தவும் முயற்சிக்கிறார்கள். ஏற்கெனவே பங்காளிக்கட்சிகளை போடுதடியாக நடத்தியவர்கள் இனிமேல் காலில் போட்டு மிதிப்பதற்காக செய்யப்பட்ட சதிவேலை இது! தங்கள் சதிவேலையை நிறைவேற்றுவதற்காக, சரியான காரணத்தை காலந்தாழ்த்தி அறிவித்து சாதித்திருக்கிறார்கள். இன்று சொல்லி மற்றவர்களை குற்றம் சாட்டுபவர்கள் இதுவரை எங்கே போயிருந்தார்கள் உரிய தரப்பினருடன் ஆலோசிக்காமல். இதெல்லாம் குறுக்கால பாய்ந்து எதிரிக்கு வழிவிடும்  சாணக்கியம். 

  • கருத்துக்கள உறவுகள்

 எழுபத்தொன்பது வருடம் அரசியல் செய்த, தமிழ்மக்களின் ஏகோபித்த கட்சி இப்பதான் உண்மையை புரிந்ததாம், அதுவும் முஸ்லிம் கட்சிகளிடமிருந்து. ராஜதந்திரம் என்கிற பெருமை வேற! 

On 15/1/2023 at 08:02, ஈழப்பிரியன் said:

முக்கியமாக ஏன் சுயேட்சைக் குழுவாக கேட்கிறார்கள் என்று தெரியாமல் இருந்துது.

இருந்தபடியே கூட்டாக தேர்தலில் போட்டியிட்டுக்கொண்டு சுயேட்க்ஷையாகவும் இறங்கியிருந்தால் இவ்வளவு குழப்பம், வெறுப்பு வந்திருக்காதே!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, satan said:

இருந்தபடியே கூட்டாக தேர்தலில் போட்டியிட்டுக்கொண்டு சுயேட்க்ஷையாகவும் இறங்கியிருந்தால் இவ்வளவு குழப்பம், வெறுப்பு வந்திருக்காதே!

இதைத் தான் நெறியாளர் கேட்கும் போது 70 வருட அனுபவசாலிகள் ஆமல்ல என்கிறார்கள்.

ஒரு சின்ன விடயத்திலேயே இவ்வளவு கோட்டை விடுகிறார்கள்.

இவர்களெல்லாம் எமது தலைவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இது வேண்டுமென்றே பங்காளிக்கட்சிகளை ஓரங்கட்டும், அவமானப்படுத்தும் செயல். செயற்பட்ட விதம் விளக்கத்திற்கு பதிலாக சொன்ன செய்தி. இப்போ கொஞ்சம் மண்டையில ஏறுது, வினயமாக சிறி நேசன் கோரிக்கை வைக்கிறார். ஒருவேளை.... பங்காளிக்கட்சிகள் வென்று தமிழரசுக்கட்சி அவர்களோடு இணைய வந்தால் சுமந்திரனை வெளியில் தூக்கிப்போட்டு விட்டு இணைத்துக்கொள்ளலாம். இவ்வளவு விரிவாக பொதுவெளியில் சொல்ல முடிந்ததை ஏன் அன்று நான்கு சுவருக்குள் அவர்களுக்கு விளக்க முடியவில்லை? அல்லது அதற்குப்பின்தான் காரணத்தை தேடினார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது. அவர் சொல்லும்போது சொன்ன ஒரு கருத்து; போன தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழரசுக்கட்சிக்கே அதிக வாக்குகள் விழுந்தன அதாவது தாங்கள் தானே வெல்லப்போகிறோம், இந்த முறை  அதிக அனுகூலமாக தங்கள் பக்கம்  பிரச்சார பீரங்கி இருக்கிறார் முழு வாக்குகளையும் அள்ளுவார்    இவர்கள் அதில் எதற்கு பங்காளிகளாக வைத்திருக்க வேண்டும் என்று நினைத்தார்களோ?  இவர்களுக்கு என்ன விளக்கம் கொடுப்பது நாங்கள், இவ்வளவு உதாசீனம் செய்தும் ஓட்டிக்கொண்டு இருபவர்கள்தானே இருந்துவிட்டுப்போகட்டுமேன் என்கிற தெனாவெட்டா? அவர்கள் கேட்டபோது, பத்திரிகைகள் வெளியிட்ட போதுங்கூட மறுதலிக்க காரணம் என்ன? தங்களுடைய சர்வாதிகாரப்போக்கை தங்களோடல்லவா வைத்திருக்க வேண்டும். அவர்கள்தான் மறுத்துவிட்டார்கள் என்று எப்படி குறை கூற முடியும்? அவர்களுக்கும் தன்மானம் உண்டு, அவர்களும்  மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள்தானே? 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்களை பாக்க முந்தி தாடியரைச் சுற்றி நின்ற ஆட்கள் போல இருக்கிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.