Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சீனர்களின் வருகை குறித்து தமிழ், முஸ்லிம்கள் கவலை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சீன தூதரக அதிகாரிகளின் விஜயங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துள்ளன. இதனால் அப்பிரதேசங்களில் வாழும் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் அச்சமடைந்துள்ளதாக ஏ.என்.ஐ செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது.  

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பான்மையான மக்கள் தொகையில் தமிழர்களும் முஸ்லிம்களுமே உள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.

சீனத் தூதரகத்தின் பதில் தூதுவர் ஹ வெய் தலைமையிலான உயர்மட்டக் குழு ஜனவரி மாதம் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டது. அங்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்குதல், பாடசாலை உபகரணங்களை வழங்குதல் மற்றும் இப்பகுதி முழுவதும் உள்ள தொலைதூர கிராமங்களில் குடிநீர் ஆலைகள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை சீன தூதரக்குழுவினர் முன்னெடுத்திருந்தனர்.

அங்கு வாழ் மக்களுக்கு சீனாவில் உற்பத்தி செய்யப்படும் அரிசியால் உணவு விஷம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமையினால்  அது விநியோகிக்கப்படுவது குறித்து பலர் கவலையடைந்துள்ளனர். மறுப்புறம் தமக்கு கிடைத்துள்ள உலர் உணவுகளின் தரம் குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டில் நாட்டின் தேவையில் 70 சதவீதத்தை பூர்த்தி செய்வதற்காக இலங்கை மாணவர்களுக்கு 5 பில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை சீருடைப் பொருட்களை வழங்கியுள்ளதாக ஏ.என்.ஐ செய்தி சேவை தெரிவித்துள்ளது. 

கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்தின் தகவலின்படி, மூன்று மில்லியன் மீற்றர் நிறைவுப் பொருட்கள் கொண்ட முதல் தொகுதி சீனாவிலிருந்து 20 கொள்கலன்களில் இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மேலும் சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் (பிஎல்ஏ) பிரசன்னம் இலங்கையில் அதிகரித்து வருவது குறித்து இந்தியா பல்வேறு கட்டங்களில் கவலைகளை வெளியிட்டதுடன்  தீவிர பாதுகாப்பு கரிசனைகளையும் கொண்டது.  

அண்டைய நாட்டில் சீனர்களின் செயல்பாடுகள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாகவும், கடற்கரையோரங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும்  இந்திய புலனாய்வு அமைப்பால் வெளியிடப்பட்ட எச்சரிக்கை குறித்தும் ஏ.என்.ஐ செய்தி சேவை சுட்டிக்காட்டியுள்ளது.

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் பணியாளர்களின் நடமாட்டம் மற்றும் செயற்கைக்கோள்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள் போன்ற உயர் தொழில்நுட்ப கருவிகளை இலங்கையின் வடக்கில் நிலைநிறுத்துவதால், தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் நிலையான கண்காணிப்பு அவசியம் என்பதை இந்திய மத்திய புலனாய்வு பிரிவு வலியுறுத்தியுள்ளது.

ஆதாரங்களின்படி, சீன மக்கள் விடுதலை இராணுவத்தினர் கடல் அட்டை பண்ணைகளை தொடங்குவதாக கூறி அதிநவீன தொழில்நுட்ப கருவிகளை  பயன்படுத்தி வருகின்றனர். முல்லைத்தீவு, பருத்தித்தீவு, அனலைதீவு, மீசாலை மற்றும் சாவக்கச்சேரி உட்பட வட இலங்கையின் பல பகுதிகளில் சீனப் பிரஜைகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர். 

இது தமிழக மீனவர்களிடையே அதிருப்தியையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளதுடன், சீனர்கள் தங்களுடைய ஒரே வாழ்வாதாரமான கடல் வளத்தை சுரண்டுவதை பின்பற்றுவதாக தமிழக மீனவர்களை சுட்டிக்காட்டி குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறானதொரு சூழ்நிலையில், இலங்கையில் உள்ள உள்ளூர் தமிழர்களிடையே பிளவை ஏற்படுத்தக்கூடும் என்றும் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழர்கள் மீதான இந்தியாவின் செல்வாக்கைக் குறைக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது

சீனர்களின் வருகை குறித்து தமிழ், முஸ்லிம்கள் கவலை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நியூசும் உபயம் அக்கினிக்குஞ்சோ என்று பயந்துவிட்டேன். 

🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 17/1/2023 at 16:06, பிழம்பு said:

அங்கு வாழ் மக்களுக்கு சீனாவில் உற்பத்தி செய்யப்படும் அரிசியால் உணவு விஷம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்படுவதாக தெரிவிக்கப்படுகின்றமையினால்  அது விநியோகிக்கப்படுவது குறித்து பலர் கவலையடைந்துள்ளனர். மறுப்புறம் தமக்கு கிடைத்துள்ள உலர் உணவுகளின் தரம் குறித்து மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இலங்கை பத்திரிக்கையின்  வதந்தி தானே இது

  • கருத்துக்கள உறவுகள்
On 18/1/2023 at 02:06, பிழம்பு said:

சீனாவின் மக்கள் விடுதலை இராணுவத்தின் பணியாளர்களின் நடமாட்டம் மற்றும் செயற்கைக்கோள்கள், ஆளில்லா விமானங்கள் மற்றும் பிற தகவல் தொடர்பு சாதனங்கள் போன்ற உயர் தொழில்நுட்ப கருவிகளை இலங்கையின் வடக்கில் நிலைநிறுத்துவதால், தமிழகத்தின் கரையோர மாவட்டங்களில் நிலையான கண்காணிப்பு அவசியம் என்பதை இந்திய மத்திய புலனாய்வு பிரிவு வலியுறுத்தியுள்ளது.

 

On 18/1/2023 at 02:06, பிழம்பு said:

இது தமிழக மீனவர்களிடையே அதிருப்தியையும் அச்சத்தையும் தோற்றுவித்துள்ளதுடன், சீனர்கள் தங்களுடைய ஒரே வாழ்வாதாரமான கடல் வளத்தை சுரண்டுவதை பின்பற்றுவதாக தமிழக மீனவர்களை சுட்டிக்காட்டி குறிப்பிட்டுள்ளது.

எல்லாம் இந்தியாவின் கவலை அதுக்குள் இலங்கைத்தமிழரை இழுத்து கரிசனை தெரிவிப்பு. அவர்களை சேர்ந்தழிக்கும்போது இது தெரியவில்லையோ? ஆமாம் தமிழர் போய் இவர்களிடம் முறையிட்டார்களாம் இவர்கள் அதை வெளிப்படுத்துகினமாம். எங்கே சீனன் வந்து ஏதாவது செய்து தங்களை விரட்டிவிடுவானோ என்கிற பயம். அதுக்கு தமிழ் அரசியல்வாதிகள்  விடுவார்களோ? அவர்கள் உங்கள் போர்வையில் குளிர் காய்ந்தவர்கள் அல்லவோ? அவர்கள் இருக்க இந்தியாவுக்கு ஏனிந்த வீண் பயம்? சும்மா உடல் நலத்தைக் கெடுக்குது இந்தியா!

  • கருத்துக்கள உறவுகள்

கலப்படம் மிக்க அரிசி என அங்குள்ளவர்கள் சொல்லி உள்ளார்கள். அங்குள்ள மக்களுக்கு பரீட்சியம் இல்லாத அரிசி எனவும் கூறுகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, nunavilan said:

கலப்படம் மிக்க அரிசி என அங்குள்ளவர்கள் சொல்லி உள்ளார்கள். அங்குள்ள மக்களுக்கு பரீட்சியம் இல்லாத அரிசி எனவும் கூறுகிறார்கள்.

முந்தி அம்மாப்பச்சை, வெள்ளைப்பச்சை என்றெல்லாம் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாம் அதுவும் சீனாவிலிருந்து, அப்போ இது வேறு புதுவிதமான அரிசியோ? அது என்ன பச்சை அரிசி?

  • கருத்துக்கள உறவுகள்
16 hours ago, satan said:

முந்தி அம்மாப்பச்சை, வெள்ளைப்பச்சை என்றெல்லாம் அரிசி இறக்குமதி செய்யப்பட்டதாம் அதுவும் சீனாவிலிருந்து, அப்போ இது வேறு புதுவிதமான அரிசியோ? அது என்ன பச்சை அரிசி?

அப்படி புதுவிதமான அரிசி இப்போது கிடைத்தால் அவர்கள் எற்று கொள்ளமாட்டார்களாம்.இதுபற்றி அறிந்தோர் சொன்னார்கள். தாங்கள் தேங்காய் பால் இல்லாமலே பெரும்பாலும் சமைப்பதாகவும், அங்கே கட்டாயம்  தேங்காய் பால் கலந்து தான் அவர்கள் சமைப்பார்கள். தேனீர் தயாரிப்பது என்றால் Anchor என்கின்ற பால் மா மட்டும் தான்  பாவிப்பார்களாம்.பரீட்சியம் இல்லாத புதுமையானவை பாவிக்க பயம். ஆனால் பயம் இல்லாமல் விஷ பாம்புக்கு பால் கொடுத்து வணங்குவார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.