Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வங்களாவிரிகுடாவில் அமெரிக்கா உட்பட 4 நாடுகள் கடற்படை பயிற்சி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வங்களாவிரிகுடாவில் அமெரிக்கா உட்பட 4 நாடுகள் கடற்படை பயிற்சி

வீரகேசரி இணையம்

வங்காள விரிகுடாவில் அமெரிக்கா , ஜப்பான், சிங்கப்பூர், அவுஸ்திரேலியா உட்பட 4 நாடுகளைச் சேர்ந்த கடற்படையினர் இன்று பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ளனர். 27 கப்பல்களும் படகுகளும் இப் பயிற்சியில் பயன்படுத்தப்படவுள்ளன.

இக் கடற்படைபயிற்சிகள் மிக பெரிய அளவில் முன்னெடுக்கப்படுவதுடன், நாடுகளிடையே நல்லுறவை மேம்படுத்தி படை பலத்தை மேம்படுத்த உதவும் என தெரிவிக்கப்படுகிறது.வங்காள விரிகுடாவில் இடம் பெறும் இப்பயிற்சிகள் இந்தியாவின் கிழக்கு பகுதியிலிருந்டு ஆரம்பித்து அந்தமான் மற்றும் இந்தோனேஷியா வரை இஅடம் பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாரை சீண்ட அல்லது மிரட்டுவதுக்கு இந்த பயிற்சி...??? சீனாவையா, இந்தியாவையா(இந்தியாவும் சேர்ந்து பயிச்சி செய்வதாகத்தான் கேள்வி)..?

Edited by தயா

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வங்கக் கடலில் 5 நாடுகளின் கூட்டு கடற்படை பயிற்சி: வைகோ, இந்திய இடதுசாரிகள் கண்டனம் [புதன்கிழமை, 5 செப்ரெம்பர் 2007, 17:35 ஈழம்] [ப.தயாளினி]

வங்கக் கடற்பரப்பில் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், அவுஸ்திரேலிய நாடுகள் மேற்கொண்டு வரும் கூட்டு கடற்படை பயிற்சிக்கு இந்திய இடதுசாரிகள் மற்றும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.

அமெரிக்காவுடன் இணைந்து வங்கக் கடலில் கடற்படை கூட்டுப் போர் பயிற்சியை மேற்கொள்ள எதிர்ப்பு தெரிவித்து இந்திய இடதுசாரி கட்சிகள் இந்தியா தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தின.

அமெரிக்கா, இந்தியா, ஜப்பான், சிங்கப்பூர், அவுஸ்திரேலிய ஆகிய நாடுகள் இணைந்து இந்தியாவின் விசாகப்பட்டினம் அருகே வங்கக் கடலில் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் கடற்படை கூட்டுப் போர்ப் பயிற்சியை நடத்தி வருகின்றன. இதில், 20-க்கும் மேற்பட்ட போர்க் கப்பல்கள் ஈடுபட்டுள்ளன.

பயிற்சி நடக்கும் பகுதி அருகே வர வேண்டாம் என்று வர்த்தக கப்பல்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அமெரிக்காவுடன் இணைந்து போர்ப் பயிற்சியை மேற்கொள்ள இந்திய இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இதனைக் கண்டித்து சென்னை மற்றும் கோல்கட்டாவில் இருந்து இரண்டு பேரணிகள் விசாகப்பட்டினத்துக்கு புறப்பட்டன.

தமிழ்நாட்டின் விருதுநகரில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ இக்கூட்டு கடற்படை பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவித்து கூறியதாவது:

இந்தியாவில் கூட்டு கடற்படை பயிற்சி என்ற பெயரில் அமெரிக்க அணு ஆயுதம் தாங்கிய கப்பல்கள் இந்தியா வந்துள்ளன.

பண்டித நேரு பாண்டூங் மாநாட்டில் அறிவித்த அணி சேரா கொள்கைக்கும் 1983 ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் இந்திரா காந்தி டெல்லியில் இந்தியா தலைமையிலான அணிசேரா நாடுகளில் அந்த கொள்கையை உறுதிபடுத்தியதற்கும் இந்த நடவடிக்கை எதிரானதாகும்.

இது இந்திய இறைமைக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுத்தும்.

ஈழ தமிழர்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்கிறது.

தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பழ. நெடுமாறன் செஞ்சிலுவைச் சங்கம் மூலம் பாதிக்கப்பட்ட ஈழ தமிழர்களுக்கு அனுப்பப்படும் பொருட்களை கொடுக்க அனுமதி மறுக்கிறது.

ஆனால் சிங்கள அரசுக்கு ராடார், பீரங்கி போன்ற அணு ஆயுதங்களை சப்ளை செய்கிறது என்றார் வைகோ.

புதினம்

இற்றைவரைக்கும் அமெரிக்கா தான் கொண்டிருந்த கொள்கைகளில் எந்தவித மாற்றத்தையும் செய்யவில்லை. மாறாக, தனக்கு சவாலாக இருந்த பெரும்பாலான நாடுகளின் வெளியுறவுக் கொள்கைகளில் அவர்களுக்கே தெரியாமல் தனக்கு சார்பாக மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. இன்றைய நிலையில், இந்திய சகோதரர்களிடம் இதைப்பற்றி பேசிப்பார்த்தால், "எதற்கு வீண்வம்பு. நான் ஒரு அமெரிக்க ஆதரவாளன்" என்ற கருத்தே பெரும்பாலும் வரும். அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கு கிடைத்த வெற்றியும் இதுதான்.

இன்றைய நிலையில், அமெரிக்கா இந்திய சந்தைவாய்ப்பை மிகவும் எதிர்நோக்கி இருக்கிறது. தனக்கு அடங்கிப் போகும் ஒரு நாடாக இந்தியாவை வைத்துக் கொண்டு, அதன் சந்தை வாய்ப்பை நுகர்வதும், அதேநேரம் தன் பிடியை மீறி தனக்கு சவாலாக வளரும் சீனாவை எதிர்ப்பதற்கான ஒரு பகடைக்காயாக இந்தியாவை பாவிக்க நினைக்கிறது. உண்மையில் அமெரிக்காவுக்கு இந்தியா ஒரு சவால் அல்ல. சீனாவை சுற்றி ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற பகுதிகளில் தன் துருப்புக்களை நிறுத்தி சீனாவை ஒரு போர்முறை தயாரிப்புகளில் அமிழ்த்துவதும் ஒரு நோக்கமே. எந்தவொரு நாடும் போர் என்று புறப்பட்டுவிட்டால் அதன் பொருளாதாரம் தண்ணீராய் கரைந்துவிடும். அமெரிக்க காங்கிரஸில் கூச்சலிடுவதும் இதற்காக தான் (துருப்புக்கள் சாகின்றனர் என்றல்ல, அது ஒரு வெற்று வார்த்தை). தம் பொருளாதாரம் வீணே கரைகிறது என்றுதான். ஒருமுறை "pbs" நேர்காணல் செய்த ஒரு இராசதந்திரி இதை அப்பட்டமாகவே வெளியிட்டிருந்தார். பின்லேடன் "அமெரிக்க பொருளாதாரத்தை சிதைக்கிறார். நாம் அவரை தேடி ஒவ்வொரு நாடாக சென்று வீணே பணத்தை செலவு செய்கிறோம்" என்று அவர் கூறியிருந்தார். ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற பகுதிகளில் பெரும் சண்டைகள் நடைபெறாமல், தன் துருப்புக்களை வைத்திருப்பதையே அமெரிக்கா விரும்புகிறது.

சீனா கடந்த 10 - 15 ஆண்டுகளில் எவ்வித போர்முனைப்பும் இன்றி தன் பொருளாதார பலத்தை செவ்வனே கட்டி எழுப்பி வருகிறது. அதன் வியாபார ஆணிவேர் தென்னமெரிக்கா தொடக்கம் ஆபிரிக்கா வரை பரந்து வேரூண்டி விட்டது. இதை அமெரிக்கா என்றும் சகித்துக் கொள்ளாது.

இந்த போர் ஒத்திகையின் நோக்கம், சீனாவை ஒரு போர்த் தயாரிப்புக்களில் மூழ்க வைப்பதுவும், இந்தியா எம்மோடுதான் நிக்கிறது என சீனாவை அச்சுறுத்துவதும் தான். இது இந்திய-சீன உறவுகளை மிகவும் பாதிக்கும்.

நீண்டகால திட்டங்களுடன் இந்து சமுத்திரத்தில் உள்நுளையும் அமெரிக்கா, தன் ஆக்டோபஸ் கால்களை பல இடங்களிலும் பரப்பி, பொருளாதாரத்தை உறிஞ்சப்போகிறது என்பதே வெளிப்படை. உதாரணமாக, மேலோட்டமாக பார்ப்போமாயில், கணனி மென்பொருட் துறையில் இந்தியா அசுர வளர்ச்சி பெறுவதாக தெரியும். உண்மையில் இந்தியாவின் அளவிடமுடியா மனித வளத்தை அமெரிக்கா மிகக்குறைந்த செலவில் கொள்ளையிடுகிறது எனவே தெரிகிறது.

- ஈழத்திருமகன் -

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வங்கக் கடலில் கூட்டுப் பயிற்சி: சிறிலங்கா வரவேற்பு

[புதன்கிழமை, 5 செப்ரெம்பர் 2007, 18:22 ஈழம்] [செ.விசுவநாதன்]

வங்கக் கடலில் அமெரிக்கா உள்ளிட்ட 5 நாடுகள் கூட்டு கடற்படை பயிற்சி மேற்கொண்டிருப்பதை சிறிலங்கா வரவேற்றுள்ளது.

இது தொடர்பாக சிறிலங்காவின் இந்தியாவுக்கான தூதுவர் சி.ஆர்.ஜயசிங்க கூறியுள்ளதாவது:

வங்கக் கடலில் எத்தகைய பயிற்சி மேற்கொண்டிருப்பினும் அனைத்துலக வர்த்தக மற்றும் பொருளாதார செயற்பாடுகளை வலுப்படுத்தினால் நாம் அதனை வரவேற்போம்.

இத்தகைய கூட்டு கடல்சார் நடவடிக்கையானது கடற்கொள்ளையர்கள் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக் கடத்தல்களிலிருந்து கடற்பரப்பை காப்பாற்ற உதவும் என்றார் அவர்.

puthinam

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்திய அமெரிக்க கூட்டு பயிற்சியை கண்டித்து இடதுசாரிகள் சென்னையில் பிரசார பயணம்

வீரகேசரி நாளேடு

வங்க கடலில் நடைபெறும் இந்திய அமெரிக்க கப்பற்படை கூட்டு பயிற்சியை கண்டித்து இடதுசாரி கட்சிகளின் பிரசார பயணம் சென்னையில் நேற்று தொடங்கியது.

விசாகப்பட்டினம் மற்றும் அந்தமான் இடையே உள்ள கடற்பகுதியில் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய நாடுகளுடன் இணைந்து இந்திய கப்பற் படையினர் கூட்டுப் பயிற்சியை நேற்று முன்தினம் தொடங்கினர். 20க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் பங்கேற்கும் இந்த போர் பயிற்சி நான்கு நாட்களுக்கு நடைபெறவுள்ளது. அமெரிக்க படைகள் இப்பயிற்சியில் ஈடுபடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி கட்சிகள் நாடு முழுவதும் பிரசார ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைதொடர்ந்து இடதுசாரிகள் நேற்று சென்னையில் இருந்து பிரசார பயணத்தை தொடங்கினர். இப் பிரசார பயணத்தை சென்னை துறைமுக வாசலில் மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் கரத் தொடங்கி வைத்தார். இந்த பிரசார பயணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா மற்றும் பவார்டு ப்ளாக் கட்சியின் தலைவர் தேவராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னையிலிருந்து புறப்படும் பிரசார பயணம் விசாகப்பட்டினத்தில் முடிவடைகிறது. முன்னதாக துறைமுக வாசலில் வைக்கப்பட்டிருக்கும் வ.உ.சி சிலைக்கு பிரகாஷ் கரத் மற்றும் டி.ராஜா ஆகியோர் மாலை அணிவித்தனர்.

நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு வங்கக் கடலில் நேற்று முன்தினம் தொட ங்கிய ஐந்து நாடுகள் பங்கேற்கும் கடற்படை போர் பயிற்சி குறித்து செய்தி மற்றும் படங்கள் சேகரிக்க இந்திய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. விசாகப்பட்டினம் அருகே வங்கக் கடலில், இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய ஐந்து நாடுகள் பங்கேற்கும் கடற்படை போர் பயிற்சி நேற்று முன்தினம் தொடங்கியது. இந்த பயிற்சி குறித்து செய்தி சேகரிக்க அமெரிக்க கடற்படையினர் அந்நாட்டு பத்திரிகையாளர்களை தங்களுடன் அழைத்து வந்துள்ளனர்.

குறிப்பாக சி.என்.என். தொலைக்காட்சி சேவையின் ஊடகவியலாளர்கள் வந்துள்ளனர். ஆனால், போர் பயிற்சி குறித்து நேரடியாக செய்தி சேகரிக்க இந்திய பத்திரிகையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. இந்த போர் பயிற்சிக்கு இடதுசாரி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருவதாலேயே பத்திரிகையாளர்களை அங்கு அழைத்து செல்லப்படாமைக்கு காரணம் என்று கருதப்படுகிறது. இது குறித்து இராணுவ அமைச்சகத்திடம் கேட்ட போது, பத்திரிகையாளர்களை அழைத்து செல்லக் கூடாது என்று உத்தரவு ஏதும் பிறப்பிக்கப்படவில்லை. போர் பயிற்சி நடக்கும் இடத்துக்கு பத்திரிகையாளர்கள் யாரும் அழைத்து செல்லப்படவில்லை என்பது உண்மை தான் என்றனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.