Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தடையற்ற மின்விநியோகம் இடம்பெற வேண்டுமெனில் கட்டண அதிகரிப்பை தவிர்க்க முடியாது - காஞ்சன

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தடையற்ற மின்விநியோகம் இடம்பெற வேண்டுமெனில் கட்டண அதிகரிப்பை தவிர்க்க முடியாது - காஞ்சன

Published By: VISHNU

13 FEB, 2023 | 02:48 PM
image

(எம்.மனோசித்ரா)

தேர்தல் காலத்தில் நாட்டில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கான குறுகிய அரசியல் நோக்கங்களில் சில குழுக்கள் செயற்பட்டுக் கொண்டிருகின்றன. 

எவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டாலும் தடையற்ற மின் விநியோகத்தை வழங்குவதற்கு மின் கட்டண அதிகரிப்பை தவிர்க்க முடியாது என்று மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

மாத்தறை மாவட்டத்தில் 12 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மின் கட்டணம் அதிகரிக்கப்படுகின்றமையை நானும் முற்றாக எதிர்க்கின்றேன். கடந்த ஆட்சி காலங்களில் பல ஆண்டுகளாக எடுக்கப்பட வேண்டிய தீர்மானங்கள் எடுக்கப்படாமையின் காரணமாகவே இன்று இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்படவிருந்த சாம்பூர் மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் காரணமாகவே கடந்த ஆண்டு 8 மணித்தியாலங்கள் வரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்த வேண்டியேற்பட்டது. அது அமைக்கப்பட்டிருந்தால் குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கியிருக்க முடியும்.

எனவே தான் எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து பல்வேறு கடினமான தீர்மானங்களை நாம் நடைமுறைப்படுத்தியிருக்கின்றோம்.

தற்போது உயர்தர பரீட்சை காலத்தில் தடையின்றி மின்சாரத்தை வழங்காமையின் காரணமாக எம்மீது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால் நாம் கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் தடையற்ற மின் விநியோகத்திற்கான திட்டமிடலை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கினோம்.

அமைச்சரவைக்கும் அந்த செயற்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த வருடத்தைப் போன்று நீர் மின் உற்பத்தியை முழுமையாகப் பயன்படுத்தி விட்டால் மார்ச் , ஏப்ரலில் 5 மணித்தியால மின் துண்டிப்பிற்கு செல்ல நேரிடும். எனவே தான் தற்போது நாம் அதனை முகாமைத்துவம் செய்து கொண்டிருக்கின்றோம்.

மார்ச் 9 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதனை அடிப்படையாகக் கொண்டு மார்ச் 8 மற்றும் 9ஆம் திகதிகளில் நாட்டில் பாரிய பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு ஒரு சில குழுக்கள் முயற்சிக்கின்றன. 

சில ஆணைக்குழுக்களின் உறுப்பினர்கள் கூட இந்த அரசியல் நோக்கங்களுக்கு துணை போகின்றனர். எவ்வாறிருப்பினும் கட்டணத்தை அதிகரித்தால் மாத்திரமே தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/148101

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்காவிட்டால் பாரிய நெருக்கடி தோற்றம் பெறும் ; இலங்கை மின்சார சபை

Published By: T. SARANYA

13 FEB, 2023 | 04:50 PM
image

(செய்திப்பிரிவு)

மின்சார சபை கோரியுள்ள 60 சதவீத மின்கட்டண அதிகரிப்புக்கு அனுமதி வழங்காவிட்டால் எதிர்வரும் காலங்களில் பாரிய நெருக்கடி நிலை தோற்றம் பெறுவதுடன், மின்னுற்பத்திக்கான எரிபொருள் மற்றும் நிலக்கரி ஆகியவற்றை கொள்வனவு செய்வதற்கும் பாரிய பாதிப்பு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் தலைவர் தேசிய பேரவை கூட்டத்தில் வலியுறுத்தினர்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் எதிர்வரும் 15 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ள இறுதித் தீர்மானத்தை மேற்கொள்வதற்கு முன்னர் மின்சார சபை மற்றும் ஆணைக்குழு என்பன கூடிக் கலந்துரையாடுமாறு தேசிய பேரவை திங்கட்கிழமை (13) உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர்  தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில் தேசிய பேரவை  நேற்று திங்கட்கிழமை கூடிய போது இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.

மின்சார சபை 60 சதவீத கட்டண அதிகரிப்பு கோரியுள்ள பின்னணியில் தேவையான அளவு அதிகரிக்க அனுமதி வழங்கப்படவில்லை எனின் கடுமையான நெருக்கடிக்கு முகங்கொடுக்க நேரிடும் என மின்சார சபையின் தலைவர் இதன்போது குறிப்பிட்டார்.

அதற்கமைய எதிர்வரும் காலங்களில் நிலக்கரி இறக்குமதி செய்வதற்குக் கூட நிதி இல்லாமல் போவதால் நீண்ட நேர மின் துண்டிப்புக்குச்செல்லவேண்டிய நிலைமை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை எதிர்வரும் 15 ஆம் திகதி அறிவிப்பதற்கு தற்பொழுது நடவடிக்கை எடுத்து வருவதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இதன்போது தெரிவித்தனர்.

மின்சார சபையின் தரவுகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரின் கருத்துக்கள் இதுவரை பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

இந்த சந்தர்ப்பத்தில் மின்சார சபை மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு என்பவற்றின் கருத்துக்களை கலந்துரையாடி ஒரு கருத்துக்கு வந்து தீர்மானம் எடுப்பது மிக முக்கியமானது என்றும் அவ்வாறில்லை எனின் பொதுமக்கள் கஷ்டத்துக்கு உட்படுவதை தவிர்க்க முடியாமல் போகும் என சுட்டிக்காட்டிய தேசிய பேரவை இது தொடர்பில் விரைவாகக் கலந்துரையாடி தீர்மானம் எடுப்பதன் தேவையை வலியுறுத்தியது.

அதேபோன்று, குறுகிய,மத்திய மற்றும் நீண்டகால தேசியக் கொள்கைகளைத் தயாரிக்கும்போது முன்னுரிமைகளை அடையாளம் காணல் பற்றிய தேசிய பேரவையின் உப குழுவினால் முன்வைக்கப்பட்டுள்ள தேசிய கொள்கை குழு தொடர்பில் உப குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தேசிய பேரவைக்கு விளக்கமளித்தார்.

இதுதொடர்பில் எண்ணக்கருப் பத்திரத்தை தயாரித்து முடித்த பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளை பெற்றுக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் இதன்போது ஆலோசனை வழங்கினார். அதற்கமைய தேசிய பேரவையூடாக தேவையான எதிர்கால நடவடிக்கைகளை எடுப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/148126

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி நிறைவு

Published By: T. SARANYA

14 FEB, 2023 | 04:56 PM
image

(செய்திப்பிரிவு)

மின்சாரக் கட்டணம் அதிகரிப்பு  தொடர்பில்  இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் மின்சார சபை இணைந்து நேற்று திங்கட்கிழமை நடத்திய கலந்துரையாடல் இணக்கப்பாடு இன்றி நிறைவடைந்ததாக இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள்  தேசிய பேரவைக்கு அறிவித்தனர்.

மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பில் இரண்டு தரப்பினரும் கூடிக் கலந்துரையாடி இறுதித் தீர்மானம் எடுக்குமாறு நேற்று கூடிய தேசிய பேரவை அறிவித்திருந்தது. அதற்கமைய இவ்விடயம் தொடர்பில் இலங்கை  பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் சந்தித்துக் கலந்துரையாடியதாகவும் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்க முடியாமல் போனதாகவும்  மின்சார சபை  அதிகாரிகள்  தேசிய பேரவைக்கு அறிவித்தனர்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன மற்றும் பிரதமர்  தினேஷ் குணவர்தன ஆகியோரின் தலைமையில்  பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று தேசிய பேரவை  கூடிய போது இந்த விடயம் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது சபாநாயகர்  மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில் மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பது தொடர்பான இறுதித் தீர்மானத்தை 15 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிப்பதாக இதற்கு முன்னர் தேசிய பேரவை கூடிய போது பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு பேரவைக்கு அறிவித்ததாகவும் அதனால் நாளை (15)  இது தொடர்பில் தீர்மானமொன்று எடுக்கப்படும் என தான் நம்புவதாகக் குறிப்பிட்டார்.

https://www.virakesari.lk/article/148217

  • கருத்துக்கள உறவுகள்
On 13/2/2023 at 12:39, ஏராளன் said:

கடந்த காலங்களில் நிர்மாணிக்கப்படவிருந்த சாம்பூர் மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டங்களின் காரணமாகவே கடந்த ஆண்டு 8 மணித்தியாலங்கள் வரை மின் துண்டிப்பை நடைமுறைப்படுத்த வேண்டியேற்பட்டது. அது அமைக்கப்பட்டிருந்தால் குறைந்த விலையில் மின்சாரத்தை வழங்கியிருக்க முடியும்.

எப்படி ஆர்ப்பாட்டம் செய்தாலும் புத்தர் கோவில்களை மட்டும் அமைப்பீர்கள். மின்நிலையத்தை மட்டும் அமைக்க முடியவில்லை??)

  • கருத்துக்கள உறவுகள்
On 14/2/2023 at 05:00, ஏராளன் said:

எதிர்வரும் காலங்களில் நிலக்கரி இறக்குமதி செய்வதற்குக் கூட நிதி இல்லாமல் போவதால்

On 14/2/2023 at 05:00, ஏராளன் said:

மின்சார சபை மற்றும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு என்பவற்றின் கருத்துக்களை கலந்துரையாடி ஒரு கருத்துக்கு வந்து தீர்மானம் எடுப்பது மிக முக்கியமானது என்றும் அவ்வாறில்லை எனின் பொதுமக்கள் கஷ்டத்துக்கு உட்படுவதை தவிர்க்க முடியாமல் போகும்

தற்போது மட்டும் மக்கள் கஷ்ரமில்லாமல் சுகபோகமாக வாழ்வதுபோல் கதையளக்கிறார். மக்களின் பணத்தில்  சுகபோகம் அனுபவிப்பது அரசியல்வாகிகள், கஸ்ரத்தை சுமப்பது மக்கள். விவசாயிகளுக்கு, கடற்தொழிலாளிகளுக்கு தமது தொழிலை செய்வதற்கு வேண்டிய மூலப்பொருள் இல்லை, ஏனையவர்கள் தொழிலில் இருந்து நிறுத்தப்படுகிறார்கள், அப்படியிருக்க அரசாங்கத்திடம் இல்லாத பணம் எப்படி மக்களிடமிருந்து வரும்? முதல் அரசியல்வாதிகளின் ஊழல்களை விசாரித்தறிந்து பதுக்கிய பணத்தை நாட்டுக்கு கொண்டு வாருங்கள் நாட்டின்மேல்  அக்கறையிருந்தால்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்று முதல் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்க நடவடிக்கை என்கிறார் காஞ்சன!

Published By: T. SARANYA

16 FEB, 2023 | 11:13 AM
image

நாடளாவிய ரீதியில் இன்று (பெப் 16) முதல்  தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக  மின்சக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் அங்கீகாரத்துடன், நிலக்கரியை கொள்வனவு செய்யப்படவுள்ளது. 

இதன்படி  22 பில்லியன் ரூபா மேலதிக கடனாக வழங்குவதற்கு இலங்கை வங்கி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும்  அமைச்சர் காஞ்சன விஜேசேகர  கூறியுள்ளார்

மக்களுக்கு தொடர்ந்து மின்சாரத்தை வழங்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக  தெரிவித்துள்ள அவர், இதனை உடனடியாக அமுல்படுத்துவதற்கான  நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும் கூறியுள்ளார்.

https://www.virakesari.lk/article/148330

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இன்றில் இருந்து மின்வெட்டு இல்லையாம்! மின்சாரக் கட்டணம் 60% ஏற்றியாச்சே!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் எடுக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து ஜனாதிபதியின் பணிப்பு

Published By: T. SARANYA

16 FEB, 2023 | 10:08 AM
image

தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகைகளை வழங்கவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பணிப்பு விடுத்துள்ளார்.

கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் தடையில்லா மின்சாரம் வழங்குவதை உறுதி செய்யவும், குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு சலுகைகளை வழங்கவும், மத ஸ்தலங்கள் மற்றும் அரச கல்வி நிறுவனங்களுக்கு சூரிய மின்சக்தி அமைப்புகளை வழங்கவும் ஜனாதிபதி மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மின் கட்டண திருத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன் குறைந்த வருமானம் உள்ள குடும்பங்களுக்கு சலுகைகள் வழங்கவும், மத ஸ்தலங்கள் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களுக்கு சூரிய ஒளி அமைப்புகளை வழங்கவும் ஜனாதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

https://www.virakesari.lk/article/148318

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மின் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்ட போதிலும் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் அறிகுறி

 

மின்சாரக் கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும், நாட்டில் மீண்டும் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபை மற்றும் மின் பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

1645449119-power-cuts-large-1-300x161.jp
நாளாந்தம் இரண்டு மணித்தியால மின்வெட்டு தொடர்ந்தும் அமுல்படுத்தப்படாவிட்டால் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும் என சங்கத்தின் தலைவர் நிஹால் வீரரத்ன தெரிவித்தார்.

மின்வெட்டை நிறுத்துவதன் விளைவு எதிர்காலத்தில் தெரியும் என்றார்.
தொடர்ந்து மக்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டாலும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல் கிடைக்காததால் மக்கள் வழமையான முறையில் மின்சாரத்தைப் பயன்படுத்த பழகி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

https://thinakkural.lk/article/242225

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.