Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்பது படையினரின் கெடுபிடிக்கு பொதுமக்கள் உள்ளாகலாம் - அருட்தந்தை மா.சத்திவேல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்பது படையினரின் கெடுபிடிக்கு பொதுமக்கள் உள்ளாகலாம் - அருட்தந்தை மா.சத்திவேல்

Published By: T. Saranya

16 Feb, 2023 | 11:09 AM
image

தலைவர் உயிருடன் இருக்கின்றார் என்ற கூற்று படையினரின் கெடுபிடிக்கு பொதுமக்கள் உள்ளாகலாம் என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

அவரால் இன்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"தமிழ் ஈழத்தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் உயிருடன் இருக்கின்றார்" என பழ நெடுமாறன் அவர்கள் பற்ற வைத்த அரசியல் தீ அவர் எதிர்பார்த்ததை விட , அவர் நினைத்ததை விட அனைத்து திசைகளிலும் காட்டுத் தீ போல் பரவிக் கொண்டிருக்கின்றது. கொல்லப்பட்டவர் என்று கூறப்படுகின்ற ஒருவர் உயிருடன் இருக்கின்றார் என்பது மகிழ்ச்சியே.

காணாமலாகக்கப்பட்டோரின் உறவுகளும் தம் உறவுகள் மீண்டும் உயிரோடு வரவேண்டும், அவர்களை காண வேண்டும் என்றே போராடிக் கொண்டிருக்கின்றனர். ஆனால் தலைவர் அவர்கள் உயிருடன் இருக்கின்றார். அவருடைய உறவுகள் எங்களுடன் தொடர்புகள் இருக்கின்றனர். என அரசியல் குளிர்காய நினைப்பவர்கள் நீண்ட காலம் குளிர் முடியாது என்பது மட்டும் உண்மை.

இக்கூற்றினைத் தொடர்ந்து ஜனநாயக வழியில் கொள்கை அரசியல் செய்பவர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் குறிவைக்கப்படலாம். மேலும் படைமுகாம்கள் பலப்படுத்தப்படலாம். படையினரின் கெடுபிடிக்கு பொதுமக்கள் உள்ளாகலாம், எதிர்ப்பு போராட்டம் தமிழர் பகுதிகளில் விரிவடையலாம், இத்தகைய சூழ்நிலையை விரும்புகின்றவர்களும் இன அழிப்பார்களே.

தமிழ் ஈழத்தலைவர் உயிருடன் இருக்கின்றாரா? இல்லையா? என்பதை அறிவது இந்திய, இலங்கை புலனாய்வாளர்களின் வேலை.அவ்வாறு இருந்தால் இந்திய அரசு அவருக்கு கொடுக்கின்ற அதி உயர் கௌரவமாக அரசியல் கைதி நிலையிலிருந்து விடுவித்து விடுதலைப் புலிகளின் தலைமையகத்தை பழ நெடுமாறன் பாதுகாப்பு படையுடன் ஆதரவுடன் தமிழகத்தின் தென்கோடியில் வைத்திருக்க இடம் கொடுக்குமா?

விடுதலைப்புலிகள் தலைவரின் மூச்சுக்காற்றினை எவராலும் தடுக்கவோ, அழிக்கவோ, கொலை செய்யவோ முடியாது.தியாகிகளின் வரலாறும் அவ்வாறே என்பது மட்டும் வரலாற்று உண்மை.

2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரும் புலம்பெயர் தேசத்தில் அவர்களின் மூச்சு காற்றின் வேகத்தில் தான் தமிழர்களின் அரசியல் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அதுவே சர்வதேசத்தின் அரசியல் நீதி கதவை தட்டிக் கொண்டும் இருக்கின்றது.

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் பின்னரும் நடைபெறுகின்ற முள்ளிவாய்க்கால் ஈகை சுடரேற்றும் தினம்,மாவீரர் வாரம் என்பவற்றிலும் ஆயிரக்கணக்கில் தமிழ் மக்கள் ஒன்று கூடுகின்றார்களே அவர்களை உந்தித் தள்ளுகிக்கின்ற சக்தி எது? 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த அதே அரசியல் சக்தி மேலோங்கி மக்களை திரளவைப்பதை காணலாம்.அங்கு எழுகின்ற மக்கள் குரல் சர்வ தேசத்தின் காதுகளுக்கு எட்டவில்லை.

சர்வதேச நீதி செயல்பாட்டாளர்களின் காதுகளை திறக்கவும், தமிழர்களின் அரசியல் கோரிக்கைளுக்கு கதவை திறக்கவும் வழி செய்யாதவர்கள்; தமிழர்களின் இன அழிப்பிற்கு தொடர்ந்தும் துணை போய்க்கொண்டிருப்பவர்கள் தலைவர் தொடர்பில் புதிய கதையை அவிழ்த்து விட்டு இலங்கையில் தனது நலனுக்கான அரசியல்,பொருளாதார பாதுகாப்பு பிடியை தக்கவைக்க நினைக்கின்றார்கள். இதனை இலங்கை அரசுடன் சேர்ந்து இனப்படுகொலை , இன அழிப்பு செய்யும் முன்னால் சிந்தித்திருக்க வேண்டும். காலம் கடந்த ஞானம் சுடுகாட்டு ஞானமே என மேலும் தெரிவித்தார்.

 

 

https://www.virakesari.lk/article/148319

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப மட்டும் என்ன கெடுபிடி இல்லாமலா இருக்குது. சந்திக்கு சந்தி இராணுவம் நிற்குது. இராணுவ முகாம்கள் இருக்குது. யாழ் நகர் பூரா இராணுவம் சிவிலும்.. சீருடையிலும் திரியுது. கடைக்காரர் ஆமிக்காரனை கண்ட உடன.. சிங்களத்தில் மிகச் சிறப்பான கவனிப்பு. ஏலவே நிற்கிற வாடிக்கையாளர்களையும் இடிச்சத் தள்ளி முந்திக் கொண்டு இராணுவம்.. திமிரில் கடைகளில் பொருள் வாங்குது. கடைக்காரரும் விழுந்து விழுந்து கவனிக்கினம். இராணுவ வாகனங்கள் வரிசை கட்டி நிற்கு. கடற்படை வேறு. 

போர் முடிந்து 13 ஆண்டுகளில்... இராணுவப் பிரசன்னம் இல்லாத இடம் வடக்குக் கிழக்கில் இருக்குதா..?! இருந்தா சொல்லிட்டு இந்த வெருட்டை விட்டால்... சனம் நம்பலாம். 

தலைவர் இருப்பதும் இல்லாததும் எதையும் இப்போது தீர்மானிக்காது இலங்கைத் தீவில். ஏனெனில் அது சிங்கள பெளத்த பேரினவாத இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்குது. சீன ரகனின் காலடியில் கிடக்குது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.