Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வழங்கிய மனிதாபிமான உதவிகள் குறித்து முன்னாள் கடற்படைத்தளபதி நினைவுகூரல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரில் பாகிஸ்தான் வழங்கிய மனிதாபிமான உதவிகள் குறித்து முன்னாள் கடற்படைத்தளபதி நினைவுகூரல்

18 Feb, 2023 | 10:02 AM
image

கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் இஸ்லாமாபாத் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகம் மற்றும் குவெட்டாவின் கட்டளை, பணியாளர்கள் கல்லூரியில் பயின்ற இலங்கை பட்டதாரிகளுக்கிடையே மற்றுமொரு ஒன்றுகூடல் மற்றும் இராப்போசன விருந்துபசார நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது.

 பாகிஸ்தான் கூட்டுப்படைத்தலைவர்கள் குழுவின் பிரதானி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சாவின் இலங்கை விஜயத்துடன் இணைந்ததாக இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இராப்போசன விருந்தில் இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட ஓய்வுபெற்ற மற்றும் சேவையாற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதியும், பாகிஸ்தானின் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மூத்த பட்டதாரியுமான ஓய்வுபெற்ற அட்மிரல் ஜெயந்த் பெரேரா இந்நிகழ்வில் கருத்து வெளியிடுகையில், முன்னாள் மாணவர்களுக்கு கூட்டுத்தலைவர்கள் குழுவுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பை வழங்கியமைக்கு தனது நன்றியைத் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் பங்களிப்பு குறித்து கருத்துரைத்த அவர், எப்போதும் இருநாடுகளும் வலுவான உறவைப் பேணிவருவதாகக் குறிப்பிட்டார். இராணுவ மற்றும் இராஜதந்திர வழிகள் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை ஒருபோதும் மறக்கமுடியாது என்றும் குறிப்பிட்ட அவர் பழைய மாணவர் சங்கங்களின் அவசியத்தையும் எடுத்துரைத்தார்.

இவ்விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட பாகிஸ்தான் கூட்டுப்படைத்தலைவர்கள் குழுவின் பிரதானி ஜெனரல் சாஹிர் ஷம்ஷாத் மிர்சா உரையாற்றுகையில், 'இலங்கையுடனான நெருக்கமான நல்லுறவு குறித்து பாகிஸ்தான் எப்போதும் பெருமையடைகின்றது. இருநாடுகளும் மிக நீண்டகாலமாக நெருங்கிய ஒத்துழைப்பினைப் பேணிவருகின்றன. அதேவேளை இருதரப்பு உறவுகள் மேலும் வளர்ச்சியடைந்திருப்பது மகிழ்ச்சிகரமான விடயமாகும்' எனக் குறிப்பிட்டார்.

குறிப்பாகப் பாதுகாப்புத்துறையில் இலங்கையும் பாகிஸ்தானும் தொடர்ந்து நெருக்கமானதும், சுமூகமானதுமான நல்லுறவைப் பேணிவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

'இரு நாடுகளும் நெருக்கடியான காலங்களில் பரஸ்பரம் உதவிகளை வழங்கியுள்ளன. பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவானது பரஸ்பர நம்பிக்கை மற்றும் பிராந்திய அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மையைப் பேணுதல் போன்ற விடயங்களை அடிப்படையாகக்கொண்டது.

இலங்கையின் ஐக்கியம், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு பாகிஸ்தான் எப்போதும் ஆதரவளித்து வருகிறது' என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் நன்றியுரையாற்றிய இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் ஃபாரூக் பர்கி, பாகிஸ்தானும் இலங்கையும் இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றில் வலுவான ஒத்துழைப்பைக் கொண்டுள்ள இரு நாடுகளாகும் என்று தெரிவித்தார்.

பாகிஸ்தானுக்கும் இலங்கைக்கும் இடையில் நிலவுகின்ற, எப்போதும் நிலைத்திருக்கின்ற நல்லுறவைப் பாராட்டிய அவர், கடந்த காலங்களில் இராணுவப்பயிற்சி மற்றும் உதவிகள் மூலம் இலங்கை ஆயுதப்படைகளின் திறனை மேம்படுத்தியது போன்று தற்போதும் பாகிஸ்தான் அர்ப்பணிப்புடன் செயற்படத்தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார். 

 

https://www.virakesari.lk/article/148482

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

கடந்த காலங்களில் இராணுவப்பயிற்சி மற்றும் உதவிகள் மூலம் இலங்கை ஆயுதப்படைகளின் திறனை மேம்படுத்தியது போன்று தற்போதும் பாகிஸ்தான் அர்ப்பணிப்புடன் செயற்படத்தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டார். 

 

1 hour ago, கிருபன் said:

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது இலங்கையின் மனிதாபிமான நடவடிக்கைகளில் பாகிஸ்தானின் பங்களிப்பு குறித்து கருத்துரைத்த அவர், எப்போதும் இருநாடுகளும் வலுவான உறவைப் பேணிவருவதாகக் குறிப்பிட்டார். இராணுவ மற்றும் இராஜதந்திர வழிகள் மூலம் உள்நாட்டு மற்றும் சர்வதேச அரங்கில் பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கிய ஆதரவை ஒருபோதும் மறக்கமுடியாது

இதிலெங்கே மனிதாபிமான பணி இருக்கு? மனித குலத்துக்கு எதிரான  அழிவல்லவா  நடந்தேறியது. இவர்கள் எல்லாம் சேர்ந்து அழித்ததை சிங்கள இராணுவம் தனதென உரிமை கொண்டாடியது. ஆகவே ஐ. நா. தாபனம் இலங்கையில் நடந்த  மனித உரிமை மீறலுக்கு நடவடிக்கை எடுக்கும்போது சிங்களம் நன்றி செலுத்தும் நாடுகளையும் பதில் சொல்லும்படி  சேர்த்துக்கொண்டு வற்புறுத்தவும். ஒரு சிறிய இனத்தை எத்தனை நாடுகள் கூட்டுச்சேர்ந்து அழித்தது? இதை ஐ. நா. வேடிக்கை பாத்தது, இதுவும் குற்றமே! இப்போ அது விசாரிக்குதாம்.

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, satan said:

 

இதிலெங்கே மனிதாபிமான பணி இருக்கு? மனித குலத்துக்கு எதிரான  அழிவல்லவா  நடந்தேறியது. இவர்கள் எல்லாம் சேர்ந்து அழித்ததை சிங்கள இராணுவம் தனதென உரிமை கொண்டாடியது. ஆகவே ஐ. நா. தாபனம் இலங்கையில் நடந்த  மனித உரிமை மீறலுக்கு நடவடிக்கை எடுக்கும்போது சிங்களம் நன்றி செலுத்தும் நாடுகளையும் பதில் சொல்லும்படி  சேர்த்துக்கொண்டு வற்புறுத்தவும். ஒரு சிறிய இனத்தை எத்தனை நாடுகள் கூட்டுச்சேர்ந்து அழித்தது? இதை ஐ. நா. வேடிக்கை பாத்தது, இதுவும் குற்றமே! இப்போ அது விசாரிக்குதாம்.

முஸ்லீமிடம்... மனிதாபிமானத்தை எதிர்பார்க்க முடியுமா? சாத்தான்.

  • கருத்துக்கள உறவுகள்

சிறியர் எனக்கொரு அற்ப ஆசை! என்ன தெரியுமா? தேர்தல் என்று வந்தால் ஒரு இனவாதியை நிராகரித்து இன்னொரு இனவாதியை நாமே கதிரை ஏற்றி பதிலுக்கு குத்துது குடையுது என்று நாமே புலம்புமளவுக்கு அவர்கள் நம்மேல் கெடுபிடிகளை செய்கிறார்கள். இதை தவிர்த்து இந்த சிங்கள பவுத்த, நமக்கு சம்பந்தமில்லாத தேர்தலை நாம் பகிஸ்கரிக்க வழிமுறை கண்டுபிடிக்க வேண்டும். அடுத்தது நாம் எமது சுகந்திரத்திற்காய் பலவழிகளிலும் முயன்று ஏமாந்து தோற்றுவிட்டோம், வேறு வழிகளில் நியாயந்தேடி, யார்யாரையோ நம்பி, அணுகி, நம்மவர் தொடங்கி பல நாடுகள், முஸ்லிம்கள், சிங்களவர், ஸ்தாபனங்கள் என்று அலைந்து யாரும் உதவுவதில்லை, நம்மை பயன்படுத்தி தமது தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதோடு நம்மை அச்சுறுத்தி உள்ளதையும் பறித்தெடுக்கிறார்கள். இருப்பதைக்கொண்டு யாரையும் நம்பாமல், எதிர்பாராமல் நாமே நமது வேலையை செய்தால்; நம்மை வைத்து பிழைப்பவர்களுக்கு வேறு வழியில்லாமல் தமக்குள் பிடிபட ஆரம்பிப்பார்கள், தாங்களாகவே தமிழனின் அருமையுணர்ந்து தேடி வரவேண்டும், அதற்கான வழிமுறையேதும் கண்டுபிடிக்க முடியாதா என ஏக்கமாக இருக்கிறது. அப்போ நமக்கு ஒரு வழி பிறக்கலாமென தோன்றுகிறது. 

நிக்க, இந்தோனேஷியாவிலே நிலநடுக்கமாம். இலங்கை பிரித்தோதி வேண்டியிருக்குமோ தனக்கு வரவேணுமென்று? எங்கு வந்தாலும் இலங்கைக்கு வராது, வந்தாலும் தலைகீழாய் குதிக்கிறவையை மூடினால் நாட்டில் அமைதி நிலவும்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.