Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கடந்த இரண்டு வருடங்களில் 25,000 இராணுவ வீரர்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் -சரத் பொன்சேகா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த இரண்டு வருடங்களில் 25,000 இராணுவ வீரர்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர் -சரத் பொன்சேகா

 

கடந்த இரண்டு வருடங்களில் சுமார் 25,000 இராணுவத்தினரும் 1,000 பொலிஸாரும் தமது பதவிகளை விட்டு விலகியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா இன்று தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை மீதான ஒத்திவைப்பு விவாதத்தில் உரையாற்றிய அவர், கடந்த வருடத்தில் சுமார் 1,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பதவிகளை விட்டு விலகியுள்ளதாவும், இந்த வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் சுமார் 200 பொலிஸார் பதவிகளை விட்டு விலகியுள்ளதாகவும் அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

தவறான செயல்களை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் அவர்கள் வெளியேறினர் என்றார்.

“யுத்த காலத்தில் கூட இவ்வளவு படையினர் பதவிகளை விட்டு வெளியேறிய அனுபவத்தை நாங்கள் அனுபவித்ததில்லை. அவர்களுக்கு வழங்கப்பட்ட கிளப்புகளை பயன்படுத்த வேண்டாம் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். எந்தவொரு சிப்பாயும் அல்லது பொலிஸாரும் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கிளப்புகளை பயன்படுத்தாததற்காக நீக்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட வேண்டும். போராட்டக்காரர்களே, தைரியமாக வீட்டிற்குச் செல்லுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் உங்களுக்கு நிலுவைத் தொகையை மீண்டும் வழங்குவோம்,” என்று அவர் உறுதியளித்தார்.

போராட்டக்காரர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் கோழைத்தனமான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் போராட்டக்காரர்களை ஒடுக்கும் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

https://thinakkural.lk/article/246004

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவிசயம். 

மாறி மாறி - மேற்கு, இந்தியா, சீனா என சொப்பனசுந்தரி லீலைகள் காட்டி சமாளிக்கலாம். அதுக்கு வெளிநாட்டமைச்சும் கொஞ்சம் திறமையான தமிழ் அமைச்சர், அதிகாரிகளும் போதும்.

சும்மா பெயருக்கு இந்த ஆமியை வச்சி கட்டி அழாமல் துபாய், பஹ்ரேன், ஜப்பான், கொரியா எண்டு அனுப்பி விட்டால் அவங்கள் ஒட்டகத்துக்கு சவரம் செய்தாவது பிழைத்துக்கொள்வார்கள்.

அத்தோடு வெளிநாடு போய் பார்த்தால் - உலகம் பிக்குகளின் கமண்டலத்துக்குள் இல்லை என்பதும் விளங்கும்.

ஊரில சனமும் நிம்மதியாய் இருக்கும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்

உந்த 3 1/2 யோ 4 1/2 யோ லட்சத்திலை 25 ,000 தானே போச்சுது...மிச்சம் இருக்குத்தானே...புத்த கோயில் கட்டுறதிற்கு காணும்தானே...அல்லது இவர் பதவிக்கு வந்து மீண்டும் ஒரு புலிப்போர் நடத்த யோசிக்கிறாரோ..கிருசாந்தி பகழ் பொன்னருகு...வாய் சும்மா கிடவாது..🙃

  • கருத்துக்கள உறவுகள்
On 23/3/2023 at 22:25, ஏராளன் said:

போராட்டக்காரர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களை ஒடுக்குவதற்கு அரசாங்கம் கோழைத்தனமான செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும்

அப்பாவி தமிழருக்கு எதிராக இவர் செய்த போரை மட்டும் வெற்றி விழாவாக கொண்டாடலாம். எப்படி இவரது நிஞாயம்? எதெது செய்தோமோ அதது நமக்காக காத்திருக்கும், தக்க சமயத்தில் தலை காக்கவும், கழுத்தறுக்கவும், அப்போ விளங்கிக்கொள்வார் எது சரியென்று. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.