Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ் விஜயத்தை கண்டித்து போராட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ் விஜயத்தை கண்டித்து போராட்டம்

Published By: T. SARANYA

25 MAR, 2023 | 03:18 PM
image

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகளின் யாழ்ப்பாண விஜயத்தை கண்டித்தும் யாழ்ப்பாணத்தை குழப்ப வேண்டாமென தெரிவித்தும் போராட்டமொன்று நடத்தப்பட்டது.

இன்று சனிக்கிழமை காலை 10.30 மணியளவில் யாழ் நகரில் ஒன்று கூடியவர்கள் திடீரென பேரணியாக வந்து ரிம்மர் மண்டபம் முன்பாக ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது காணமல்போனோரை விடுதலை செய், அரசியல் கைதிகளை விடுதலை செய், வன்முறை வேண்டாம், யாழ்ப்பாணத்தை குழப்பாதே போன்ற கோஷங்களை எழுப்பினர்.

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள் யாழ்ப்பாணம் ரிம்மர் மண்டபத்தின் ஒன்றுகூடியபோதே குறித்த போராட்டம் இடம்பெற்றது.

https://www.virakesari.lk/article/151387

வடக்கின் பிரச்சினையினை அறியும் தெற்குமனிதர்களும், தெற்கின் பிரச்சினையினை அறியும் வடக்கு மனிதர்களும் உருவாக்கப்பட வேண்டும் - வசந்த முதலிகே

Published By: T. SARANYA

25 MAR, 2023 | 03:51 PM
image

வடக்கின் பிரச்சனையினை அறியும் தெற்குமனிதர்களும், தெற்கின் பிரச்சனையினை அறியும் வடக்கு மனிதர்களும் உருவாக்கப்பட வேண்டும்  எனஅனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளரும், தலைவரும் வசந்த முதலிகே தெரிவித்தார்.

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டில், பயங்கரவாத தடைச்சட்டத்தினை உடனடியாக  நீக்க வேண்டும், மக்கள் சக்தியினை கட்டியெழுப்புதல் தொடர்பாக பொதுக்கருத்தரங்கு இன்று யாழில், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளரும், தலைவருமான வசந்தமுதலிகே தலைமையில் நடைபெற்றது.

இதன்போது கருத்துதெரிவிக்கையிலேயே அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் எற்பாட்டாளரும், தலைவருமான வசந்தமுதலிகே இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மீதியாக இருக்கும் விடயம் போராட்டம், அதில் ஒன்றிணைந்து போராடுவதே நிலைப்பாடு அதனை பல்கலைக்கழக மாணவ ஒன்றியம் நம்புகின்றது.

வடக்கில் காணிப்பிரச்சினை, இராணுவ மாயக்கப்பட்ட பிரச்சினை, வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் ஏனைய பிரச்சினைகள் தீர்த்துவைக்ககூடிய முதற்படியின் பயங்கரவாதச்சட்டத்தின் ஊடாக கொண்டுசெல்ல முடியும்.

வடக்கின் பிரச்சினையினை அறியும் தெற்குமனிதர்களும், தெற்கின் பிரச்சினையினை அறியும் வடக்கு மனிதர்களும் உருவாக்கப்படவேண்டும். அதுதான் எமது நிலைப்பாடு. அதற்கான முதற்கட்டமாகவே கருத்தரங்கு யாழில் இடம்பெற்றுள்ளது.

இந்த பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கவேண்டும், அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதே ஆணித்தரமான கருத்தாகவே காணப்படுகின்றது.

கடந்த காலத்தில் மக்கள் அணிவகுப்பில் நின்றதை அவதானித்துக் கொண்டிருக்கும் இந்த நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள், போராட்டம், என்ற விடயத்திற்கு துணைநின்ற எங்களுக்கு அரசின் மூலம் அறிவிக்கப்பட்டது பயங்கரவாதம் என்றனர்.

டிலான் அலெஸ், ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்கவின் ஒன்று சேர்ந்து பொய்யான சாட்சிகளை உருவாக்கி தடுத்துவைத்து விசாரணை செய்யும் நோக்கில் அவர்கள் இரண்டு வருடங்கள் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு உள்ளாக்கினர்.

1979 ஆவது ஆண்டில்  ஆரம்பிக்கப்பட்ட பயங்கரவாதச்சட்டம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இன்றுவரையான காலம் வரை 100க்கு மேற்பட்டவர்கள் இன்னும் தடுக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இப்போது அரசாங்க புதிதாக சட்டம் ஒன்றினை உருவாக்கியுள்ளனர் அதில் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் ஒன்றினை கொண்டுள்ளனர்.

அதில் போராட்டங்களின் போது சமூக ஊடங்களின் மூலம் அரசுக்கு எதிராக செயற்பட முடியாது என்பதை கொண்டுவந்துள்ளனர்.

இப்போது பொஸிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் மூலமாக பயங்கரவாத தடைச்சட்டத்தினை நிலைநாட்டமுடியும் என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார்கள் - என்றார்.

https://www.virakesari.lk/article/151394

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் சொல்லுறது என்னவோ சரியாத்தான் இருக்கு. ஆனால் 1979ம் ஆண்டிலிருந்து இந்தச் சட்டத்தால் தமிழர்கள் மட்டும் பழிவாங்கப்படும்போது எல்லோரும் சரியென்று வேடிக்கைதானே பார்த்து, அதை நீடிப்பதற்கு கையுயர்த்தினீர்கள். நீங்கள் என்பது; உங்கள் இனம். இப்போ மட்டும் அதை  எதிர்க்க தேவையென்ன வந்தது? எங்களை வைத்து கரகாட்டம் ஆடிவிட்டு விரட்டியடிப்பதுதானே இன்றுவரை உங்கள் பழக்கம். இப்போ எங்களை இழுத்துவிட்டு நீங்கள் தப்பிக்க வேண்டும் அவ்வளவே, பிக்குவின் பாதயாத்திரை, உங்களின் திடீர் யாழ் வருகை எங்களுக்கு தெரிவிக்கிறது. நாங்கள் ஏற்கெனவே உங்களுடன் போராடி வீழ்த்தப்பட்டுவிட்டோம், தோல்விகண்டு விட்டோம் அப்போவெல்லாம் நீங்கள் வெடி கொழுத்தி ஆரவாரம் செய்து இனிப்பு வழங்கி  கொண்டாடினீர்கள். எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு ஆனால் உங்களுக்கு கைதர முடியாமைக்கு வருந்துகிறோம்,  உடைந்த கைக்கு கட்டு தேடியலைகிறோம். வேண்டுமென்றால்; சுமந்திரன், டக்கிளஸ், அங்கயனை கேட்டுப்பாருங்கள் வந்தால், கூட்டிபோங்கள் உங்களுடன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.