Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நெல் விவசாயிகளுக்கு 3,820 தொன் யூரியா உரத்தை FAO வழங்குகிறது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பினால் (FAO) கொள்வனவு செய்யப்பட்ட 3,820 தொன் யூரியா நெல் விவசாயிகளுக்கு விநியோகிப்பதற்காக இன்று விவசாய அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பொலன்னறுவை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ள 72,200 சிறு நெல் விவசாயிகளுக்கு யூரியா உரத்தின் புதிய இறக்குமதி அனுப்பப்படும் என இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

இலங்கையில் விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதுடன், அடையாளம் காணப்பட்ட நெல் உற்பத்தியாளர்களிடையே ஒருங்கிணைந்த தாவர ஊட்டச்சத்து முகாமைத்துவ மூலோபாயத்தை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவளிக்கிறது.

இலங்கையின் நெற் செய்கை துறைக்கு புத்துயிர் அளிக்க ஐரோப்பிய ஒன்றியம் அளித்துள்ள ஆதரவு குறித்து பேசிய ஐரோப்பிய ஒன்றியத் தூதுவர் டெனிஸ் சாய்பி, “பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு யூரியா உரங்களை விநியோகிப்பது மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் சமூக-பொருளாதார நெருக்கடிக்கு பதிலளிக்க நாங்கள் மேற்கொண்ட பல நடவடிக்கைகளில் ஒன்றாகும்.

இலங்கையில் உள்ள மக்களின். இந்தப் புதிய ஆதரவின் மூலம் உடனடி உணவுப் பற்றாக்குறையைத் தடுக்க முடியும், மேலும் எதிர்காலத்தில் மிகவும் நிலையான மற்றும் நெகிழக்கூடிய விவசாயத் துறைக்கு மாறுவதற்கு பங்களிக்க முடியும் என்று நாங்கள் நம்புகிறோம் என்றார்.

இத்திட்டத்தின் மூலம், இலக்கு நிர்ணயிக்கப்பட்ட மாவட்டங்களில் 0.5 ஹெக்டேர் நிலம் வரை பயிரிடும் தகுதியுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் எதிர்வரும் போகத்தில் 50 கிலோ யூரியா உரம் வழங்கப்படவுள்ளது.

மேலதிகமாக இத்திட்டம் உயர்தர நெல் விதைகள் மற்றும் உரத்தின் திறமையான பயன்பாட்டை அதிகரிக்க தேவையான தொழில்நுட்பம்/திறன் மேம்பாட்டையும் வழங்கும்.

“EU மற்றும் FAO இன் இந்த முயற்சி, பொருள் உள்ளீடுகளை வழங்குவதைத் தாண்டி, உள்ளூர் விவசாயத் துறையின் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கான நாட்டின் நீண்டகாலத் தேவையை நிவர்த்தி செய்கிறது. இலங்கையை உணவுப் பாதுகாப்பு நாடாக மாற்றுவதற்கு இது பெரிதும் உதவும் என்பதால் எங்கள் விவசாயிகளுக்கு வழங்கப்படும் இந்த ஆதரவை பாராட்டுகிறேன் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

https://thinakkural.lk/article/248763

  • கருத்துக்கள உறவுகள்

இயற்கை உரங்களை பயன்படுத்தினல் நல்ல விளைச்சல் வரும், மக்களுக்கும் நல்லது👍, எரித்த உமி, புளியமிலை, .ஆட்டு புழுக்கைகள், மாட்டு சாணம், ...

எனக்கும் நல்ல விளைச்சல் மரக்கறி & பழங்களில் இந்த முறை இயற்கை பசளைகளை பயன்படுத்துவதால், 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, உடையார் said:

இயற்கை உரங்களை பயன்படுத்தினல் நல்ல விளைச்சல் வரும், மக்களுக்கும் நல்லது👍, எரித்த உமி, புளியமிலை, .ஆட்டு புழுக்கைகள், மாட்டு சாணம், ...

எனக்கும் நல்ல விளைச்சல் மரக்கறி & பழங்களில் இந்த முறை இயற்கை பசளைகளை பயன்படுத்துவதால், 

ஓம் கடந்த முறை மச்சாளுடைய வயலில் புளியஞ் சருகு, வேறு இலை தளை குப்பைகள் மட்டும் போட்டு நெல் விளைவித்தோம். விளைச்சல் சராசரியாக இருந்தது.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஏராளன் said:

ஓம் கடந்த முறை மச்சாளுடைய வயலில் புளியஞ் சருகு, வேறு இலை தளை குப்பைகள் மட்டும் போட்டு நெல் விளைவித்தோம். விளைச்சல் சராசரியாக இருந்தது.

ஓ அப்படியா, இதை தொடர்ந்து செய்யுங்கள்👍, மண்ணும் வளமாக மாறும், உமியை போட்டு எரித்தால் பல புல் விதைகளை அழித்துவிடலாம் 

வீட்டில் தினம் தினம் வரும் வரும் மரக்கறி , உணவுக்கழிவுகளை நான் அரைத்து மரகன்றுகளுக்கு உற்றிவிடுவேன், நல்ல பசலை நீங்களும் வீட்டு தோட்டதிற்கு செய்து பார்க்கலாம், ஒரு கிரைட்டர் இருந்தால் சரி, தேயிலை நல்ல பசளை👍

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
11 hours ago, ஏராளன் said:

ஓம் கடந்த முறை மச்சாளுடைய வயலில் புளியஞ் சருகு, வேறு இலை தளை குப்பைகள் மட்டும் போட்டு நெல் விளைவித்தோம். விளைச்சல் சராசரியாக இருந்தது.

ஆடு,மாடுகளை வளர்த்து வீட்டு குப்பைகளையும் சேர்த்தாலே நல்ல பசளை வரும்.
முன்னரெல்லாம் வயல்களில் பட்டி அடைப்பார்கள். இப்போது ஒன்றும் இல்லையா?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

ஆடு,மாடுகளை வளர்த்து வீட்டு குப்பைகளையும் சேர்த்தாலே நல்ல பசளை வரும்.
முன்னரெல்லாம் வயல்களில் பட்டி அடைப்பார்கள். இப்போது ஒன்றும் இல்லையா?

இதனைதான் கூட்டு பண்ணை முறமை என கூறுகிறார்களா? தாவர கழிவுகள் கால்நடைகளுக்கு இரை, கால்நடை கழிவுகள் பயிர்களுக்கு உரம் இதில் விரயம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

முன்பெல்லாம் வீட்டுக்கதியால் போகம்தவறாமல் வெட்டி, பழ ஓலை, தட்டி கட்டி நாளாந்தம் வீட்டில் சேரும் இலை தழை குப்பைகளை சேர்த்து கூட்டுப்பசளை என மாரி காலத்தில் தெருவுக்கு தெரு வண்டில்களில் கூவி கூவி வாங்கி தாட்டு விவசாயம் செய்தார்கள். தோழமை முறையிலும் கூலி முறையிலும் வேலை செய்தார்கள். இப்போ இயந்திரங்கள், செயற்கை உரங்கள், கல்வீடுகள் மதில்கள் தோன்றி மாடுகளும் இல்லை உழவும் இல்லை மனித வளம் அழிந்து  மக்களை சோம்பேறிகளாக  கட்டிப்போட்டு எல்லா சுகாதார முறைகள் நட்பு முறைகள் ஒழிந்து நோயும், தனிமையும் சுகாதார கேடுகளும் நிரம்பி அலைக்கழிக்குது..

13 hours ago, ஏராளன் said:

பொலன்னறுவை, பதுளை, அம்பாறை, மாத்தளை, புத்தளம், குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ள 72,200 சிறு நெல் விவசாயிகளுக்கு யூரியா உரத்தின் புதிய இறக்குமதி அனுப்பப்படும் என இலங்கையில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

ம் ...ம் .....ஐக்கிய நாடுகள் சபைக்கு வடக்கில் விவசாயிகள் இருப்பது கண்ணுக்குத் தெரியவில்லை, இதில் எங்களுக்கு  நீதி பெற்றுத்தரப்போகுதாம் என்று காத்திருக்கிறோம்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, குமாரசாமி said:

ஆடு,மாடுகளை வளர்த்து வீட்டு குப்பைகளையும் சேர்த்தாலே நல்ல பசளை வரும்.
முன்னரெல்லாம் வயல்களில் பட்டி அடைப்பார்கள். இப்போது ஒன்றும் இல்லையா?

அண்ணை நாங்கள் பாடசாலை செல்லும் காலங்களில் பசு மாடு வளர்த்தோம். பெற்றோர் வயதானதால் பராமரிக்க சிரமம் என்று வித்தாச்சு.
எங்கட பக்கம் சின்னனில ஆட்டுப்பட்டி, மாட்டுப்பட்டி வயல்களில் பார்த்திருக்கிறேன். இப்ப வன்னி, கிழக்குப் பக்கம் தான் பட்டி அடைக்க மாடுகள் இருக்கு. 90-95 காலம் உரமுமில்லை, பூச்சிக்கொல்லியும் இல்லை, எருவும் சருகும் தான். புல்லை ஆட்கள் பிடுங்குவினம், அது மாட்டுக்கு உணவாகும். மழை சரியான நேரங்களில் பெய்தால் நல்ல விளைச்சல் வரும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.