Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் நோக்கங்களிற்காக ஏலத்தில் விடப்பட்ட விவகாரம் - ஐ. நா. விசாரணைகளை ஆரம்பித்துள்ளது

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

13 APR, 2023 | 12:32 PM
image

ஓமானில் இலங்கை பெண்கள் பாலியல் தொழிலாளர்களாக ஏலத்தில் விடப்பட்ட சம்பவம் குறித்து ஐநா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

அடிமைத்தனத்தின் தற்போதைய வடிவங்கள் தொடர்பிலான ஐநாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒபக்கட்டா மூலம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பில் பெப்ரவரி ஏழாம் திகதி அவர் ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

மனித உரிமைகள் மீறல்கள் குறித்து அவர் அதில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

image_ba57311b9a.jpgஇலங்கை அரசாங்கம் 60 நாட்களிற்குள் பதிலளிக்கவேண்டும் என்ற போதிலும் இதுவரை அரசாங்கம் பதிலளிக்கவில்லை.

ஜனாதிபதிக்கான குறிப்பிட்ட கடிதத்தில் கைச்சாத்திட்டுள்ள இரண்டு விசேட அறிக்கையாளர்களும் ஓமானிற்கு பாலியல் நோக்கத்திற்காக அல்லது தொழில்ரீதியான துஸ்பிரயோகத்திற்காக கொண்டு செல்லப்பட்ட பெண்கள் எதிர்நோக்கும் மனித உரிமை மீறல்கள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளனர்.

சுற்றுலா விசாவில் ஓமானிற்கு சென்ற 90 பெண்கள்  இலங்கை அரசாங்கத்தின் புகலிட இல்லம் உட்பட புகலிட இல்லங்களில் சிக்குண்டனர் என தமக்கு கிடைத்துள்ளதாக  அவர்கள் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

பல பெண்கள் ஓமானிற்கு பாலியல் நோக்கத்திற்காக அல்லது தொழில்ரீதியான துஸ்பிரயோகத்திற்காக கடத்தப்பட்டுள்ளனர் என தகவல்கள் கிடைக்கின்றன  ஐக்கிய அரபு இராச்சியத்தில் தொழில்வாய்ப்பு என்ற போர்வையிலேயே இவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர் எனவும் ஐநாவின் அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சில பெண்கள் ஏலத்தில் விடப்பட்டனர் தனியார் வீடுகளில் வைக்கப்பட்டு துஸ்பிரயோகங்களிற்கு உட்படுத்தப்பட்டனர் போதுமான உணவோ அல்லது உறங்குவதற்கான வசதிகளோ இருக்கவில்லை எனவும் ஐநாவின் அறிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/152807

  • கருத்துக்கள உறவுகள்

"இலங்கை அரசாங்கம் 60 நாட்களிற்குள் பதிலளிக்கவேண்டும் என்ற போதிலும் இதுவரை அரசாங்கம் பதிலளிக்கவில்லை."

🤣

  • கருத்துக்கள உறவுகள்

இது ஓமானில் மட்டுமல்ல, எல்லா Middle East லும் நடக்கின்றது, இலங்கை என்றவுடன் பட்டான் சிரிக்கு சிரிப்பை பார்க்க சகிக்கவில்லை, இலங்கை எப்படியிருந்திருக்க வேண்டிய நாடு

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்குக் கிடைக்கும் அந்நிய செலவாணியில் ஒரு பகுதியாக வெளிநாடுகளின் அதுவும் களவெடுத்தால் கைய வெட்டுகிற நாடுகளின் பெரும் முதலாளிகளுக்கு இலங்கைப் பெண்களைப் பந்திவிரிக்க வைத்து வரும் வருமானமும் அடக்கம் என்பது வரலாற்றுச்சாதனை. 

எங்களுக்கு பெற்றோல் மலிவாக வேணும் வரியைக் கூட்டினால் நீதிமன்றம் போய் இடைக்காலத் தடை வாங்குவம் பொருள் மலிவாகக் கிடைக்கவேணும். நாய் உழைத்த காசு குரைக்கவா போகுது.  ரணிலுக்கு அடுத்த தேர்தலில் பதவியைப் பிடிக்கவேண்டும் எனும் ஆசை.

நாங்கள் பட்டினி கிடந்தாலும் பரவாயில்லை மத்திய கிழக்கு நாடுகளுக்கு இனிமேல் பெண்களை வேலைக்கு அனுப்பவேண்டாம் எனச் சொல்ல யாருக்கும் மானம் ரோசம் இருந்த்தால்தானே.

நெளபியா எனும் மூதூரில் பராயமடையாத சிறுமியை கள்ள சேட்டிபிக்கற் தயார் செய்து செளதிக்கு அனுப்ப அவங்கள் மரண தண்டனை விதிக்க மக்கள் அரசாங்கத்திடம் போக அரசாங்கம் விடுங்கோ எனப் பெளயமாகக் வினவ செளதி சொல்லிச்சுது இதைப்பற்றிக் கதைக்க நீங்கள்  ஆக்களை அனுப்புங்கோ என அனுப்பிய இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் அரசியல்வாதிகளுக்கு செளதி அரசாங்கத்தால் நல்ல கவனிப்பு உல்லாச விடுதி வரவேற்பு பொறுக்கிகள் காசைக் கட்டிக்கொண்டு பெட்டையை நீங்கள் என்ன வேணுமாகிலும் செய்யுங்கோ எனக்கூறிவிட்டு வந்திட்டாங்கள் 

இறந்த குழந்தையில் தாயார் அதே வயதுச் சிறுவர் சிறுமிகளுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர், அரசாங்கத்திடம் கேட்டிருந்தார் பெட்டையது தலையை வெட்டும்போது நான் பாக்கவேணும் என அவசர அவசரமாக பள்ளிவாசலுக்கு முன்னாலுள்ள மைதானத்துக்குப் பெட்டையைக் கூட்டி வந்து தாயாருக்கு தகவல் அனுப்பி வரவைத்து சிறுவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஒரு பெண்ணான அவர் முன்னாலையே தலை துண்டாடப்பட்டது.

இதே நேரம்  பிச்சைக்காரச் சிறீலங்கா அரசு என்ன செய்திருக்கவேண்டும்? கள்ள சேட்டிபிக்கற் தயாரித்து அனுப்பிய ஏஜன்ஸிக்காரண தூக்கில போட்டிருக்கவேணும் ஆனால் பிச்சைக்காரனுக்கு இதைபற்றிக் கவலை இல்லை.

கடைசியில சிறீலங்கா இராணுவம் தங்களது சம்பளப் பணத்தில நெளபியாவது பெற்றோருக்கு வீடுகட்டிக்கொடுத்ததுடன் விசையம் முடிந்துவிட்டது.

இப்படி ஆயிரமாயிரம் நெளபியாக்கள் தலை துண்டிக்கப்படாமல் மத்திய கிழக்கு நாடுகளின் செல்வச்செழிப்பில் மரணமடைகிறார்கள்.

பேய்கள் அரசாண்டால் பிணம்தின்னும் சாத்திரங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, Elugnajiru said:

இதே நேரம்  பிச்சைக்காரச் சிறீலங்கா அரசு என்ன செய்திருக்கவேண்டும்? கள்ள சேட்டிபிக்கற் தயாரித்து அனுப்பிய ஏஜன்ஸிக்காரண தூக்கில போட்டிருக்கவேணும் ஆனால் பிச்சைக்காரனுக்கு இதைபற்றிக் கவலை இல்லை.

பேய்கள் அரசாண்டால் பிணம்தின்னும் சாத்திரங்கள்.

சட்டத்தின் ஆட்சி இல்லாமல் செய்யப்பட்டால் இதுதான்  நிலை. 

 

முன்னர் மார்க்கோஸ் காலத்து பிலிப்பைன்ஸ், சுஹாட்டோ காலத்தி இந்தோனேசியா நிலைக்கு  இலங்கையைக் கொண்டுவரும் வேலைகள் மிக வேகமாக நடைபெறுகிறது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பெண் ஏலங்கள் ஐரோப்பாவிலும் உண்டு. நிறையவே உண்டு,

ஏழ்மை ஒழிய ஏலங்களும் தானாக ஒழியும்.

poor-food.jpg?ssl=1

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.