Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

காதலும் வீரமும் எங்கே?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

31326529-0-FA5-4-EAC-A1-BF-24285-D1-FD68
யேர்மனி ஸ்ருட்கார்ட்
நகரத்தில் 8.10.2022முதல் 7.5.2023வரைஅகம் புறம்எனும் தலைப்பில்  ஒரு கண்காட்சி நடந்து கொண்டிருக்கிறது. அதைப்  பார்ப்பதற்கு ஆவல் இருந்தும் கொரோனா கெடுபிடிகளால் தள்ளிப் போட்டுக் கொண்டே வந்தேன். இன்னும் ஒரு மாதத்தில் கண்காட்சி முடிந்து விடும் என்பதால் இப்போது போயிருந்தேன்.

8268558-D-169-A-465-B-BB75-8-E75-B9-F7-A

உலகளாவிய ரீதியில் தமிழர்கள் வாழும் நாடுகள், தமிழ் மொழியைப் பற்றிய ஒரு சில ஆவணங்கள் மட்டுமே அங்கே இருந்தன. மற்றும்படி தமிழக சினிமா, தமிழகக் கடைகளின் பெயர்ப் பலகைகள், தமிழக திமு, திமுக தலைவர்கள், தஞ்சைப் பெரிய கோவில் பற்றிய சிறு குறிப்பு என தமிழ்நாடு பற்றிய தகவல்களைத் தவிர வேறெதுவும் பெரிதாக  உலகத் தமிழர்களைப் பற்றி அங்கே எனக்குக் கிடைக்கவில்லை. குறிப்பாக, ஈழத் தமிழர்கள் பற்றிய முக்கிய குறிப்புகள் அங்கே காட்டப் படவில்லைஎதற்கும் இருக்கட்டுமே என்று ஷோபா சக்தியின் இரு நூல்களை வைத்து அவரின் இடம் பெயர்வைப் பற்றிய ஒரு ஆவணப் படத்தையும் ஸ்ருட்கார்ட் நகரில் வாழும் ஒரு பெண் சொல்லும் அவரது இடம்  பெயர்வைப் பற்றிய தகவல்களையும் ஒரு மூலையில் வைத்திருந்தார்கள். அந்த மூலையின் தரையில்காதலிக்க நேரமில்லைஎன்ற வாசகம் இருந்தது. அது தமிழ் எழுத்துக்களால் ஆன கோலம் என்று குறிப்பிட்டு இருந்தார்கள். ஆனால் அதை புலம் பெயர்ந்த இருவரின் கதைகளுக்கு நடுவே ஏன் வைத்தார்கள்  என்று எனக்கு இன்னும் புரியவில்லை.

D258-B254-7870-4-C02-8072-8-FB6-BA9-CF54

கண்காட்சியை சுற்றி வந்து வெளியேறும் வாசலில் ஒருங்கிணைப்பாளர்களின் பெயர்களும் விபரங்களும் புகைப்படங்களுடன் இருந்தன. தமிழ்நாட்டைச் சேர்ந்த திவ்யா கார்த்திக், தமிழ் நாட்டில் உள்ள சில விடயங்களை புகைப்படங்களாகவும், பொருட்களாகவும், சிலைகளாகவும் காட்ட முயற்சித்திருக்கிறார். இலங்கையைச் சேர்ந்த யோகா புத்ரா, இவர் விடுதலைப் புலிகளின் பெரும் எதிர்ப்பாளர் மற்றும் யேர்மன்-தமிழ்  மொழிபெயர்ப்பாளர் என அறியப் பட்டவர்

இலங்கைத் தமிழர்கள் பற்றிச் சொல்வதற்கும் காண்பிப்பதற்கும் பல விடயங்கள் இருந்தும் தனது புலி எதிர்ப்பு கொள்கையை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு எல்லாவற்றையும் இருட்டடிப்புச் செய்திருக்கிறார்.

 

அகம் புறம்என்று கண்காட்சிக்கு தலைப்பிட்டிருந்தார்கள். என்னால் அந்த இரண்டையும் அங்கே காணமுடியவில்லை. கடாரம் வென்ற, கங்கை கொண்டவர்களை மறந்தாலும் எங்கள் கண்முன்னே களம் ஆடிய ஈழத் தமிழர்களைப் பற்றி ஏதாவது காண்பித்திருக்கலாமேசரி யோகா புத்ராவை விடுங்கள். தமிழ்க் கல்விக் கழகங்கள் வைத்து நடாத்துபவர்கள், தமிழீழ அமைப்பைச் சார்ந்தவர்கள்  தங்களுக்கே ஆண்டு விழாக்களை நடாத்தி குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு இருக்காமல் கொஞ்சம் வெளியே வந்து வெளிநாட்டவர்களுக்கு பலவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வரலாமே

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் ஈழத்தமிழினத்துக்கு எதிரானவர்களை வெளியே தேடத் தேவையில்லை........!

பகிர்வுக்கு நன்றி கவி அருணாசலம்......!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kavi arunasalam said:

கண்காட்சியை சுற்றி வந்து வெளியேறும் வாசலில் ஒருங்கிணைப்பாளர்களின் பெயர்களும் விபரங்களும் புகைப்படங்களுடன் இருந்தன. தமிழ்நாட்டைச் சேர்ந்த திவ்யா கார்த்திக், தமிழ் நாட்டில் உள்ள சில விடயங்களை புகைப்படங்களாகவும், பொருட்களாகவும், சிலைகளாகவும் காட்ட முயற்சித்திருக்கிறார். இலங்கையைச் சேர்ந்த யோகா புத்ரா, இவர் விடுதலைப் புலிகளின் பெரும் எதிர்ப்பாளர் மற்றும் யேர்மன்-தமிழ்  மொழிபெயர்ப்பாளர் என அறியப் பட்டவர்

இலங்கைத் தமிழர்கள் பற்றிச் சொல்வதற்கும் காண்பிப்பதற்கும் பல விடயங்கள் இருந்தும் தனது புலி எதிர்ப்பு கொள்கையை மட்டும் கையில் பிடித்துக் கொண்டு எல்லாவற்றையும் இருட்டடிப்புச் செய்திருக்கிறார்.

 

அகம் புறம்என்று கண்காட்சிக்கு தலைப்பிட்டிருந்தார்கள். என்னால் அந்த இரண்டையும் அங்கே காணமுடியவில்லை. கடாரம் வென்ற, கங்கை கொண்டவர்களை மறந்தாலும் எங்கள் கண்முன்னே களம் ஆடிய ஈழத் தமிழர்களைப் பற்றி ஏதாவது காண்பித்திருக்கலாமேசரி யோகா புத்ராவை விடுங்கள். தமிழ்க் கல்விக் கழகங்கள் வைத்து நடாத்துபவர்கள், தமிழீழ அமைப்பைச் சார்ந்தவர்கள்  தங்களுக்கே ஆண்டு விழாக்களை நடாத்தி குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு இருக்காமல் கொஞ்சம் வெளியே வந்து வெளிநாட்டவர்களுக்கு பலவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வரலாமே

கவி அருணாசலம்,  நியாயமான ஆதங்கத்துடன் எழுதப் பட்ட பதிவு.
சம்பந்தப் பட்டவர்கள் இனியாவது, திருந்தினால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Kavi arunasalam said:

அகம் புறம்என்று கண்காட்சிக்கு தலைப்பிட்டிருந்தார்கள். என்னால் அந்த இரண்டையும் அங்கே காணமுடியவில்லை. கடாரம் வென்ற, கங்கை கொண்டவர்களை மறந்தாலும் எங்கள் கண்முன்னே களம் ஆடிய ஈழத் தமிழர்களைப் பற்றி ஏதாவது காண்பித்திருக்கலாமேசரி யோகா புத்ராவை விடுங்கள். தமிழ்க் கல்விக் கழகங்கள் வைத்து நடாத்துபவர்கள், தமிழீழ அமைப்பைச் சார்ந்தவர்கள்  தங்களுக்கே ஆண்டு விழாக்களை நடாத்தி குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு இருக்காமல் கொஞ்சம் வெளியே வந்து வெளிநாட்டவர்களுக்கு பலவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வரலாமே

நிஞாயமான ஆதங்கம்.

பதிவுக்கு நன்றி கவி அருணாசலம்.

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, Kavi arunasalam said:

அகம் புறம்என்று கண்காட்சிக்கு தலைப்பிட்டிருந்தார்கள். என்னால் அந்த இரண்டையும் அங்கே காணமுடியவில்லை. கடாரம் வென்ற, கங்கை கொண்டவர்களை மறந்தாலும் எங்கள் கண்முன்னே களம் ஆடிய ஈழத் தமிழர்களைப் பற்றி ஏதாவது காண்பித்திருக்கலாமேசரி யோகா புத்ராவை விடுங்கள். தமிழ்க் கல்விக் கழகங்கள் வைத்து நடாத்துபவர்கள், தமிழீழ அமைப்பைச் சார்ந்தவர்கள்  தங்களுக்கே ஆண்டு விழாக்களை நடாத்தி குண்டுச் சட்டிக்குள் குதிரை ஓட்டிக் கொண்டு இருக்காமல் கொஞ்சம் வெளியே வந்து வெளிநாட்டவர்களுக்கு பலவற்றை வெளிச்சத்துக்கு கொண்டு வரலாமே

அதென்னவோ தெரியவில்லை.. புலி எதிர்ப்பாளர்கள் தமிழீழ எதிர்ப்பாளர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புக்களை எல்லாம் பாவிச்சு சொந்தத் தொழிலை சரியாகச் செய்து கொள்கிறார்கள்.. அது பிறரால்.. பெரும்பான்மையாகப் பார்க்கப்பட்டும் விடும். ஆதலால்.... பெரும்பான்மை தமிழ் மக்களின் எண்ண ஓட்டம் புறக்கணிக்கப்பட்டு விடுகிறது. இது இன்று நேற்றல்ல.. தாயகத்திலும் ஹிந்தியப்படை ஆக்கிரமிப்புக் காலமிருந்து நடக்குது. 

எங்களுடன் வேலை செய்யும் ஒரு எரித்திரிய நண்பர் சொன்னார்.. 2006 வாக்கில்.. எரித்திரிய அரசை அமெரிக்கா கேட்டுக்கொண்டதாம்.. புலிகளை தடை செய்யவும் தொடர்புகளை துண்டிக்கவும். ஆனால்.. அதன் அதிபர் அமெரிக்காவுக்கு செய்தி அனுப்பினாராம்.. புலிகளால் எங்கள் நாட்டிற்கு எந்த ஆபத்தும் இல்லை.. அமெரிக்கா கேட்டுக்கொள்வது போல்.. செய்ய முடியாது ஏனெனில்.. எங்கள் நாட்டுச் சட்டதிட்டம் அதற்கு இடமளிக்காது என்று. மேலும் அந்த நண்பர் சொன்னார்.. எரித்திரியாவில்.. ஈழத்தமிழ் மக்களின் போராட்டம்.. மற்றும் புலிகளின் தியாகங்கள் பற்றி மக்கள் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்று. அவர் பேசும் போது ஒரு போதும்.. எல் ரி ரி ஈ என்று சொல்லவில்லை. ரமிழ் ரைகேர்ஸ் என்றே சொல்லிக் கொண்டு வந்தார். 

இந்தளவுக்கு எம்மவர்கள் கூட எமது போராட்டத்தின் நியாயத்தை சொல்வார்களோ என்று அப்போ யோசிக்க வேண்டி இருந்தது. அந்தளவுக்கு இருக்கு எம்மவர்களின் அணுகுமுறைகள்..!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Kavi arunasalam said:

கண்காட்சியை சுற்றி வந்து வெளியேறும் வாசலில் ஒருங்கிணைப்பாளர்களின் பெயர்களும் விபரங்களும் புகைப்படங்களுடன் இருந்தன. தமிழ்நாட்டைச் சேர்ந்த திவ்யா கார்த்திக், தமிழ் நாட்டில் உள்ள சில விடயங்களை புகைப்படங்களாகவும், பொருட்களாகவும், சிலைகளாகவும் காட்ட முயற்சித்திருக்கிறார். இலங்கையைச் சேர்ந்த யோகா புத்ரா, இவர் விடுதலைப் புலிகளின் பெரும் எதிர்ப்பாளர் மற்றும் யேர்மன்-தமிழ்  மொழிபெயர்ப்பாளர் என அறியப் பட்டவர்

கண்காட்சி நடாத்த ஊக்கத்தொகை கிடைத்திருக்கும். அதைப் பெற இப்படி ஏதாவது உப்புச்சப்பில்லாத விடயங்களை காட்டுகின்றார்கள். ஸ்பொன்ஸர் சரியான அமைப்புக்களை தொடர்புகொள்ளவில்லை என்று தெரிகின்றது!

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

கண்காட்சி நடாத்த ஊக்கத்தொகை கிடைத்திருக்கும். அதைப் பெற இப்படி ஏதாவது உப்புச்சப்பில்லாத விடயங்களை காட்டுகின்றார்கள். ஸ்பொன்ஸர் சரியான அமைப்புக்களை தொடர்புகொள்ளவில்லை என்று தெரிகின்றது!

கண்காட்சி நடத்திய   அவர்களை எனக்கு நன்கு  தெரியும்.
அவர்கள் தமிழுக்கு நல்லது செய்ய வேண்டும் என்று பொது நோக்கில் சிந்தித்து இருந்தால்...
இங்கு பல அமைப்புகளை தொடர்பு கொள்ளக் கூடிய வசதியும், ஆற்றலும் இருந்தும்
புலி எதிர்ப்பு என்ற கொள்கையை மட்டுமே... முன் நிறுத்தி நாப்பது வருடமாக இயங்கி வருவதால்,
அவர்களால்... தமிழுக்காக இறங்கி வர முடியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, தமிழ் சிறி said:

கண்காட்சி நடத்திய   அவர்களை எனக்கு நன்கு  தெரியும்

அவர்களை கண்காட்சி நடாத்த உதவியவர்களும், ஊக்கத்தொகை கொடுத்தவர்களும் background சோதனை செய்திருந்தால் அவர்கள் இக்கண்காட்சியை நடாத்த வேண்டிய தகுதி உள்ளவர்களா என்று தெரிந்திருக்கும். இப்போதும் இக்கண்காட்சி பற்றிய குறைகளையும், போதாமைகளையும் கண்காட்சி நடாத்த உதவிய ஸ்பொன்ஸர்களுக்கு விரிவாக முறையிடலாம் என்று நினைக்கின்றேன். அது எதிர்காலத்தில் ஒழுங்காக நடைபெற உதவும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.