Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலகிற்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும் – ஐ.தே.க நம்பிக்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புதிய பயணம் ஒன்றை மேற்கொள்ள 76 ஆவது ஆண்டு நிறைவில் ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு

உலகிற்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும் – ஐ.தே.க நம்பிக்கை!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டம் உரிய முறையில் அமுல்படுத்தப்பட்டால் உலகிற்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.

ஒரு நாடு கடனை வாங்கும் போது, வாங்கிய கடனை கையாளும் முறைகள், கடனை செலுத்தும் முறை ஆகியவற்றை முறையாக கையாள வேண்டும் எனவும், அப்போதுதான் அந்த நாடு உலகில் சக்திவாய்ந்த நாடாக மாற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் அபிவிருத்திக்கும் நாட்டை உலகத்தின் முன் முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும் எனவும், அதற்கு பயங்கரவாத தடைச்சட்டத்தை அமுல்படுத்துவது மிகவும் முக்கியமானது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிராக சில அரசியல் குழுக்கள் பல்வேறு அறிக்கைகளை வெளியிடுவதாகவும், பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த இலங்கையில் மாத்திரமன்றி உலகின் ஏனைய நாடுகளிலும் இவ்வாறான செயற்பாடுகள் அமுல் படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

https://athavannews.com/2023/1330718

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
41 minutes ago, தமிழ் சிறி said:

உலகிற்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும் – ஐ.தே.க நம்பிக்கை!

முதல்ல வாங்கின கடன குடுக்க வழிய பாருங்கப்பு....😎

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, தமிழ் சிறி said:

பயங்கரவாதம் ஒடுக்கப்பட வேண்டும்

பயங்கரவாதத்தை அடக்கி வைத்தவர்கள் நாங்கள் என்று கொண்டாடி உலகத்துக்கு பாடம் நடத்தியவர்கள் சுருட்டிக்கொண்டு ஒதுங்கி விட்டார்கள். இப்போ, நீங்கள் வேறு பயங்கரவாதம் என்று யாரை காட்டி கடன் பெற்று, எந்தப்பயங்கரவாதத்தை ஒடுக்கப்போகிறீர்கள்? மீண்டும் தமிழர்தானா?

37 minutes ago, தமிழ் சிறி said:

உலகிற்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும்

வஜிர அபேவர்தன புழுகலாம், அதுக்கு இப்படியெல்லாம் புழுகக்கூடாது. பிறகு மக்கள் நம்பமாட்டார்கள்.

38 minutes ago, தமிழ் சிறி said:

பயங்கரவாதத்தை கட்டுப்படுத்த இலங்கையில் மாத்திரமன்றி உலகின் ஏனைய நாடுகளிலும் இவ்வாறான செயற்பாடுகள் அமுல் படுத்தப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவனுகளுக்கு இந்த வட்டத்தை விட்டு வெளியில வரமுடியாது. செக்கு சுத்துற மாடு மாதிரி அதை சுற்றிச்சுற்றியே வருவானுகள். இப்போ தமிழரை பயங்கரவாதிகளாக காட்டி குளிர் காய துடிக்கிறானுகள். இத்தனை நடக்குது, எங்கட தலைகளின் சத்தத்தை காணேல்லை, என்னவாயிருக்கும்? தாடியர் ஓடித்திரியுறார், குத்தகை குடுத்துவிட்டினமோ? 

  • கருத்துக்கள உறவுகள்

அட இலங்கையைப் பிச்சைக்காற நாடாக மாற்றியதே நீங்தள்தானப்பூ.... 😏

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

 

புதிய பயணம் ஒன்றை மேற்கொள்ள 76 ஆவது ஆண்டு நிறைவில் ஐக்கிய தேசிய கட்சி அழைப்பு

உலகிற்கு கடன் வழங்கும் நாடாக இலங்கையை மாற்ற முடியும் – ஐ.தே.க நம்பிக்கை!

 

உண்மைதான் குரங்குகளைக் கடன்களாகத்தனும் நாங்கள் வழங்க ரெடி.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.