Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தவறான அறிக்கை: மன்னிப்பு கேட்டது இலங்கை

Featured Replies

கொழும்பு, செப்.9: பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக இந்தியா-இலங்கை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை வாபஸ் பெற்றது இலங்கை.

தவறான தகவல் காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டு விட்டதாக இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கும் இலங்கை பிரதிநிதிகள் குழுவுக்கும் மன்னிப்பு தெரிவித்துள்ளது இலங்கை.

கடந்த வாரம் அதிபர் அலுவலக வட்டாரங்கள் தூதரக வட்டாரங்களை மேற்கோள்காட்டி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் உயர்நிலை இந்திய-இலங்கை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதிபர் அலுவலக செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலர் கொத்தபய ராஜபட்சய, அதிபரின் முதுநிலை ஆலோசகர் அடங்கிய இலங்கை பிரதிநிதிகள் குழு தில்லியில் செப்டம்பர் 3 மற்றும் 4ம் தேதி இந்திய குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் இது அமைக்கப்பட்டது என்றும் அந்த அறிக்கை மேலும் தெரிவித்தது.

ஆனால், இந்த அறிக்கை வெளியான உடனேயே, இந்தியா தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டதாக இலங்கை பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.

இந்நிலையில், தவறான செய்தி அடிப்படையில் பாதுகாப்பு குழு அமைப்பு தொடர்பாக அறிக்கை வெளியாகிவிட்டதாக தெரிவித்துள்ள இலங்கை, அதற்காக இலங்கை, இந்திய குழுக்கள், பத்திரிகைகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டது

Edited by navam

கெட்டிக்காரன் பொய்யும் புரட்டும் எட்டு நாளைக்கே! சிலரைப் பலநாட்கள் ஏயக்கலாம். பலரைச் சிலநாட்கள் ஏய்க்கலாம். ஆனால் எல்லாரையும் எந்நாளுமே ஏய்த்துக் கொண்டிருக்க முடியாது. இப்படியெல்லாம் அனுபவப்பட்டவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

பொய்க்கோபுரம் கட்டும் புரட்டு நாயகர்களின் வரட்டு வீரம் விரைவில் தெரியும்போதுதான் உலகமும் அயலகமும் கண் திறக்கும் போலும்.

சரியாகக் காலம் கனிந்ததும் சரியாக எல்லாமே நடக்கும். அதுவரை தமிழினம் துணிவுடன் விழித்தருpப்பதே அறிவு.

எழிலன்

சிறிலங்கா மற்றும் இந்தியா இடையே பாதுகாப்பு தொடர்பிலான உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்திகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துள்ளது.

மேலும் வாசிக்க

  • கருத்துக்கள உறவுகள்

அட மன்னிப்பு கேட்கிற அளவுக்கு வளர்ந்து விட்டார்கள்.

இந்திய அரசு இரகசியமாய்ச் செய்ய விரும்புகின்ற விடயத்தை தன்னுடைய அரசியல் ஆதாயத்துக்காக பரகசியமாக்க சிங்கள் அரசு முனைந்தது. அவ்வளவு தான். இதில் தமிழர்களாகிய நாம் சந்தோசப் படுவதற்கு எதுவுமில்லை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

:lol:ஒப்பந்தம் நடந்ததும் உண்மை

அறிக்கை விட்டதும் உண்மை

இந்தியா அடக்கி வாசிக்க விரும்புது

இலங்கை அறிக்கை விட்டு

யாரையோ வெருட்டப்பாக்குது :angry:

சுதாகரன் சொன்ன மாதிரி தான் உண்மையும் ஆனால் யாரை வெருட்ட பாக்கிறார்கள்?

உண்மையில் தமிழ்நாட்டு மக்களை தான் ஏமாற்ற பாக்கிறார்கள் வேற ஒன்றும் இல்லை..

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தொடர்பாக இந்தியாவின் இருதலைக் கொள்ளி எறும்பின் நிலையை வெளிப்படுத்தியிருக்கும் கொழும்பின் `குத்துக்கரணம்'

இனமோதலை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் இலங்கை திணறிக் கொண்டிருக்கும் தருணத்தில் இந்தியாவுடன் பாதுகாப்புக் குழுவொன்றை உருவாக்கியதாக அறிவித்துவிட்டு பின்னர் சங்கடமான முறையில் இலங்கை மறுத்திருப்பதானது கொழும்பானது மேலும் தன்னைச் சிக்கலுக்குட்படுத்தியுள்ளத

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.