Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்கா?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்காவிலுள்ள கோட்டாவின் மகனின் வீட்டுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம்!

போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்கா?

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்கா இருந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மறுத்துள்ளார்.

‘ஒன்பது – மறைக்கப்பட்ட கதை’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ‘அரகலய’ ஆர்ப்பாட்டத்தின் பின்னணியுடன் அமெரிக்க தூதுவரை தொடர்புபடுத்தி அவரை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்துள்ள டுவிட்டர் பதிவிலேயே இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது மறுப்பினை தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில், ‘புனைகதை’ என்று முத்திரை குத்தப்பட வேண்டிய புத்தகத்தில் ஒரு எம்.பி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி அப்பட்டமான பொய்களை பரப்பியிருக்கின்றார்.

75 ஆண்டுகளாக அமெரிக்காவும் இலங்கையும் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் செழிப்புக்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்டிருக்கின்றன.

அதேபோன்று தொடர்ந்தும் கூட்டாண்மையுடன் எதிர்காலத்தை நாம் உருவாக்குவோம். எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது ஜனாதிபதி மாளிக்கைக்குள் படைத்தளபதிகள் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டோர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவிருந்ததாகவும்,

அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் இராணுவத்தளபதி இந்தியாவுக்கு சென்றிருந்தமை சந்தேகத்தை தோற்றுவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கருத்தை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

‘கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் பக்க நிகழ்வாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 7ஆம் திகதி இந்தியாவில் இடம்பெற்றது.

நாட்டின் அப்போதைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை மற்றும் அனுமதியின் கீழ் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு பதவி நிலை தலைமை அதிகாரி, முன்னாள் விமானப்படைத் தளபதி சவேந்திர சில்வா குறித்த மாநாட்டில் பங்குபற்றியிருந்தார்.

இந்நிலையில் நூல் வெளியீட்டு விழாவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய விமல் வீரவன்ச, ‘2022 மே 9ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் ஜனாதிபதி மற்றும் படைத்தளபதிகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் சவேந்திர சில்வா இந்தியா சென்றிருந்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியது.’ என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து அடிப்படையற்றதாகும். சவேந்திர சில்வா கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்குபற்றுவதற்காக கடந்த ஆண்டு ஜூலை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தது அப்போதைய ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1330940

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்கா இருந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மறுத்துள்ளார்.

உலகில் அமெரிக்கா இல்லாத பின்ணணி ஒன்று கூறவும்? 😎

  • கருத்துக்கள உறவுகள்

ஒருநாளும் தங்கள் பிழையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், தங்கள் பிழைகளை மற்றவர் மேல் சுமத்தி தப்பித்துக்கொள்வர்.. சுத்தமானவர்கள். அமெரிக்கா சொல்லித்தான் கோத்தா நாட்டை விட்டு ஓடினாரோ? அமெரிக்கா சொல்லித்தான் நாட்டை சூறையாடினார்களோ?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

உலகில் அமெரிக்கா இல்லாத பின்ணணி ஒன்று கூறவும்? 😎

animiertes-nasenbohren-popeln-bild-0008.gif

சல்லடை போட்டு தேடிப் பார்த்தேன். ஹ்கூம்....
எல்லா நாட்டிலும், முந்திரி கொட்டை மாதிரி...  மூக்கை நுழைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.   😂

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2023 at 10:37, satan said:

ஒருநாளும் தங்கள் பிழையை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள், தங்கள் பிழைகளை மற்றவர் மேல் சுமத்தி தப்பித்துக்கொள்வர்.. சுத்தமானவர்கள். அமெரிக்கா சொல்லித்தான் கோத்தா நாட்டை விட்டு ஓடினாரோ? அமெரிக்கா சொல்லித்தான் நாட்டை சூறையாடினார்களோ?

கல்லைக் கண்டால் நாய் காலைத் தூக்குவது போல் விமல் வீரசிங்வுக்கு அமெரிக்கா....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be pop art of text

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, விசுகு said:

கல்லைக் கண்டால் நாய் காலைத் தூக்குவது போல் விமல் வீரசிங்வுக்கு அமெரிக்கா....

முஸ்லிம்களுக்கு பூனை குறுக்கான போனாலும் அமெரிக்கா அல்லது இஸ்ரேலிய சதி........

ஈழதமிழருக்கு அமெரிக்கா அல்லது இந்திய சதி......

  • கருத்துக்கள உறவுகள்
On 27/4/2023 at 12:39, தமிழ் சிறி said:

அமெரிக்காவிலுள்ள கோட்டாவின் மகனின் வீட்டுக்கு முன்பாகவும் ஆர்ப்பாட்டம்!

போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்கா?

இலங்கையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்கா இருந்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டினை இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மறுத்துள்ளார்.

‘ஒன்பது – மறைக்கப்பட்ட கதை’ என்ற நூல் வெளியீட்டு விழாவில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ‘அரகலய’ ஆர்ப்பாட்டத்தின் பின்னணியுடன் அமெரிக்க தூதுவரை தொடர்புபடுத்தி அவரை விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்துள்ள டுவிட்டர் பதிவிலேயே இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தனது மறுப்பினை தெரிவித்துள்ளார்.

அவரது டுவிட்டர் பதிவில், ‘புனைகதை’ என்று முத்திரை குத்தப்பட வேண்டிய புத்தகத்தில் ஒரு எம்.பி ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி அப்பட்டமான பொய்களை பரப்பியிருக்கின்றார்.

75 ஆண்டுகளாக அமெரிக்காவும் இலங்கையும் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் செழிப்புக்கான உறுதிப்பாட்டை பகிர்ந்து கொண்டிருக்கின்றன.

அதேபோன்று தொடர்ந்தும் கூட்டாண்மையுடன் எதிர்காலத்தை நாம் உருவாக்குவோம். எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, நாட்டில் கடந்த ஆண்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது ஜனாதிபதி மாளிக்கைக்குள் படைத்தளபதிகள் மற்றும் ஜனாதிபதி உள்ளிட்டோர் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்படவிருந்ததாகவும்,

அந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் இராணுவத்தளபதி இந்தியாவுக்கு சென்றிருந்தமை சந்தேகத்தை தோற்றுவிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ள கருத்தை பாதுகாப்பு அமைச்சு மறுத்துள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

‘கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் பக்க நிகழ்வாக தேசிய பாதுகாப்பு ஆலோசனைக் கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 7ஆம் திகதி இந்தியாவில் இடம்பெற்றது.

நாட்டின் அப்போதைய ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனை மற்றும் அனுமதியின் கீழ் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாதுகாப்பு பதவி நிலை தலைமை அதிகாரி, முன்னாள் விமானப்படைத் தளபதி சவேந்திர சில்வா குறித்த மாநாட்டில் பங்குபற்றியிருந்தார்.

இந்நிலையில் நூல் வெளியீட்டு விழாவொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய விமல் வீரவன்ச, ‘2022 மே 9ஆம் திகதி ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்தவர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் ஜனாதிபதி மற்றும் படைத்தளபதிகள் மீது தாக்குதல்களை மேற்கொள்ள திட்டமிட்டதாகவும், அந்த சந்தர்ப்பத்தில் சவேந்திர சில்வா இந்தியா சென்றிருந்தமை சந்தேகத்தை ஏற்படுத்தியது.’ என குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ள கருத்து அடிப்படையற்றதாகும். சவேந்திர சில்வா கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்குபற்றுவதற்காக கடந்த ஆண்டு ஜூலை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டிருந்தது அப்போதைய ஜனாதிபதியின் ஆலோசனைக்கமையவே என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம். எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2023/1330940

இந்த மனிதனுக்கு சொந்த புத்தி என்று ஒன்றும் கிடையாது. மற்றவர்கள் சொல்வதை எல்லாம் தொகுத்து எழுதி பணம் சம்பாதிப்பதும் , சிங்கள தீய்வரவாதியாகவும் தன்னை காட்டிக்கொள்ளுவதுதான் இவரது குறிக்கோள். 
ஏற்கனவே ஒரு புத்தகம் எழுதி, வழக்கு தொடரப்பட்டு டில்வின் சில்வாவுக்கு பத்து லட்ச்சம் நடட ஈடு கொடுக்கும்படி தண்டிக்கப்படடவர்தான் இவர். ரணில் தமிழர்களுக்கு சார்பானவர் என்று கடுமையாக கடந்த காலங்களில் திட்டியவர், இப்போது அமைச்சர் பதவிக்காக அவர் சார்பான கருத்துக்களை வெளியிடும் ஒரு பச்சோந்திதான் இவர்.

14 hours ago, விசுகு said:

கல்லைக் கண்டால் நாய் காலைத் தூக்குவது போல் விமல் வீரசிங்வுக்கு அமெரிக்கா....

சீன விசுவாசம்.

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Cruso said:

இந்த மனிதனுக்கு சொந்த புத்தி என்று ஒன்றும் கிடையாது.

இந்த மனிதனுக்கு மட்டும் தானா!?  🫤 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, வாலி said:

இந்த மனிதனுக்கு மட்டும் தானா!?  🫤 

நிறைய பேர் இருக்கிறார்கள். 

Just now, Cruso said:

நிறைய பேர் இருக்கிறார்கள். 

நிறைய பேர் இருக்கிறார்கள். கடந்த மூன்று நாட்களாக பாரளுமன்ற நிகழ்வுகளை கவனித்தால் விளங்கும். விசேடமாக சஜித்  ஆளும் கட்சியினரை நோக்கி பேசியவைகளை கேடடால் இது விளங்கும். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.