Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள மிக உயரமான விகாரைக்கு கலசம் வைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Sasi_varnam said:

சிங்களவன் விகாரை கட்ட, இந்தியன் ராமர் கோயில் கட்ட, கொஞ்ச சனம் பத்மநாபாவுக்கு சிலை கட்ட, மிச்ச தமிழ் சனம் கனவிலே கோட்டை கட்ட

😂

அங்கே இப்படி சிலைகள் கோயில் விகாரை கட்டி கட்டி தமிழர்கள் நாட்டை நாசபடுத்துகிறார்கள் என்றால்
மேற்குலநாடுகளில் நிரந்தரமாக வாழ்கின்ற தமிழர்களில் கொஞ்ச சனம் ரஷஂயா உலகை ஆளவேண்டும் என்று கனவு கோட்டை கட்டுகிறார்களே

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, nedukkalapoovan said:

நீங்கள் துரையப்பா காலத்து ஆள் என்பது விளங்குது. யாழ்ப்பாண மக்களுக்கு மகிழ்ச்சிக்கு எப்பவும் குறை இருக்கவில்லை. போர் காலத்திலும் இசை நிகழ்ச்சிகள்.. முத்தமிழ் விழாக்கள் நடந்தன. தேனிசை செல்லப்பா.. சொர்ணலதா போன்று பல தென்னிந்திய.. தமிழக கலைஞர்கள் வந்தே போயினர்.

நீங்கள் ஒருவேளை அந்த வேளைகளில்.. ஓடி ஒளித்திருந்திருக்கலாம்.

ஆனால்.. ஒரு பிரதான தமிழ் தேசியக் கட்சி என்று சொல்லுபவர்களின் அதுவும் இருதேசம் ஒரு நாடு கொள்கை கொண்டவர்களின் நிகழ்ச்சி நிரலில் திட்டமிட்ட ஆக்கிரமிப்பு நீக்கத்திற்கு எதிரான.. குறுகிய கால.. நீண்ட கால செயற்திட்டங்கள் எதுவும் நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. களத்தில் எத்தனையோ முக்கிய விடயங்கள் வெளிக்கொணரவும் பேசப்படவும் தீர்க்கப்படவும் உள்ள நிலையில்..

மான்சியை தூக்கிப் பிடிக்க.. வேறு அமைப்புக்கள் இருக்கினம். அவை அதை மக்களுக்காகவும் வருவாய்க்காகவும் செய்து கொள்ளுவினம். அங்கு அதற்கு எந்தச் சவாலும் இல்லை.

ஆனால்.. மண்ணின் இருப்புக்கும் மக்களின் இருப்புக்கும் உள்ள ஆபத்தை சிறுமைப்படுத்தி.. பல விடயங்களை மறைக்க மான்சியை தூக்கிப் பிடிக்க வேண்டியது ஒரு அரசியல் கட்சிக்கு அவசியமா என்பது தான் கேள்வி..?! இது தானா தமிழ் தேசிய அரசியலின் தேவை இப்போ..??!

புலம் பெயர் நாடுகளில் தீவிர தமிழ் தேசியம் பேசி வாழ்பவர்களும் இப்படியான கொண்டாட்டங்களை இசை நிகழ்மசசிகளை மகிழ்வாக அனுபவித்து, தமது  தனிப்பட வாழ்வை என்ஜோய் பண்ணி வாழும் போது தாயகத்தில் தேசியம் பேசுபவர்களும் அப்படி வாழ்வதில் தவறு இல்லை. வாழ்க்கை ஒரு முறை தான் ஜாலியாக வாழட்டும். 

  • கருத்துக்கள உறவுகள்
50 minutes ago, island said:

புலம் பெயர் நாடுகளில் தீவிர தமிழ் தேசியம் பேசி வாழ்பவர்களும் இப்படியான கொண்டாட்டங்களை இசை நிகழ்மசசிகளை மகிழ்வாக அனுபவித்து, தமது  தனிப்பட வாழ்வை என்ஜோய் பண்ணி வாழும் போது தாயகத்தில் தேசியம் பேசுபவர்களும் அப்படி வாழ்வதில் தவறு இல்லை. வாழ்க்கை ஒரு முறை தான் ஜாலியாக வாழட்டும். 

 

உங்களுக்கு கருத்துக்களை வாசிச்சு உள்வாங்குவதில் பிரச்சனை இருக்குது அல்லது.. தலைப்புக்கு சம்பந்தமில்லாததை தீவிரமாக்கிக் காட்டும் நோக்கமிருக்கிறது.

இங்கு பிரச்சனை யாழ்ப்பாணம் அல்லது வடக்குக் கிழக்கு வாழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க நிகழ்ச்சி நடத்துவதா இல்லையா என்பதல்ல..

பிரச்சனை.. பல்வேறு வகையான ஆக்கிரமிப்பு வடிவங்களை கவனித்து மக்களையும் சர்வதேசத்தையும் தெளிவூட்ட வேண்டிய தமிழ் தேசியக் கட்சிகள்.. அதைவிட்டுவிட்டு.. யாரோ மான்சி குழுவை கூட்டி வந்து மக்களைக் குசிப்படுத்துவதாக வருவாய் தேடுவதற்கு விளம்பரம் செய்து கொண்டு இருப்பது தான். இதாவது புரிகிறதா இங்கு.

அங்குள்ள மக்களின் மகிழ்ச்சியை வெறும் இசை நிகழ்ச்சிகள் மட்டும்.. தீர்மானிக்க முடியாது.. அவர்களைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு நீக்கமும் அங்கு.. முதன்மை அவசியமாகும். புலம்பெயர் நாடுகளில் தமிழர்கள் முப்படை ஆயுத ஆக்கிரமிப்பின் கீழ் அடாத்தான.. ஆக்கிரமிப்புச் செயற்பாடுகளின் கீழ் வாழவில்லையே. அதையேன் சுட்டிக்காட்டி படைவெளியேற்றம் தான் அந்த மக்களின் நீடித்த மகிழ்ச்சிக்கு உதவும் என்பதை வலியுறுத்த பின்னடிக்கிறீர்கள் நீங்கள் சிலர். அப்போ.. அந்த ஆக்கிரமிப்பின் கீழ் ஆதாயம் தேடும் நபர்களா நீங்கள் எல்லாம்.

உங்களை எல்லாம் கடந்து இந்தச் சவால்களை எல்லாம் கடந்து.. ஆக்கிரமிப்பு நீக்கம் செய்யப்பட வேண்டியது அவசியம் என்பதை வலியுறுத்துவது.. மிக அவசியமானது..வேண்டியதும் கூட.. அதனை செய்ய வேண்டியவர்களும்.. அதனைச் செய்யாமல் காலம் கடத்துவதுதான் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது விளங்குதா..??!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, nedukkalapoovan said:

 

உங்களுக்கு கருத்துக்களை வாசிச்சு உள்வாங்குவதில் பிரச்சனை இருக்குது அல்லது.. தலைப்புக்கு சம்பந்தமில்லாததை தீவிரமாக்கிக் காட்டும் நோக்கமிருக்கிறது.

இங்கு பிரச்சனை யாழ்ப்பாணம் அல்லது வடக்குக் கிழக்கு வாழ் மக்கள் மகிழ்ச்சியாக இருக்க நிகழ்ச்சி நடத்துவதா இல்லையா என்பதல்ல..

பிரச்சனை.. பல்வேறு வகையான ஆக்கிரமிப்பு வடிவங்களை கவனித்து மக்களையும் சர்வதேசத்தையும் தெளிவூட்ட வேண்டிய தமிழ் தேசியக் கட்சிகள்.. அதைவிட்டுவிட்டு.. யாரோ மான்சி குழுவை கூட்டி வந்து மக்களைக் குசிப்படுத்துவதாக வருவாய் தேடுவதற்கு விளம்பரம் செய்து கொண்டு இருப்பது தான். இதாவது புரிகிறதா இங்கு.

அங்குள்ள மக்களின் மகிழ்ச்சியை வெறும் இசை நிகழ்ச்சிகள் மட்டும்.. தீர்மானிக்க முடியாது.. அவர்களைச் சுற்றியுள்ள ஆக்கிரமிப்பு நீக்கமும் அதற்கு முதன்மை அவசியமாகும். அதையும் செய்ய வேண்டியது அவசியம். அதனை செய்ய வேண்டியவர்களும்.. அதனைச் செய்யாமல் காலம் கடத்துவதுதான் இங்கு சுட்டிக்காட்டப்படுகிறது. அதாவது விளங்குதா..??!

நெடுக்கு,  அப்படி அவர்கள் செய்ய மாட்டார்கள் எனபது எல்லோருக்கும் தெரியும். நீங்களும் நானும் இங்கு பொழுது போக்காக எழுதுவதை விட வேறு ஒன்றும் செய்யப்போவதில்லை. இன்னும்  20 வருடத்துக்கு பிறகும் நீங்களும் நானும் உயிரோடு இருந்தால்,  இதை தான் எழுதி பொழுது போக்குவோம். இப்போது எமக்கு தேவை எமது இருப்பை காப்பாற்றுவது மட்டுமே. உண்மையு சொன்னால் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலை தான். அது உங்களுக்கும் தெரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, island said:

நெடுக்கு,  அப்படி அவர்கள் செய்ய மாட்டார்கள் எனபது எல்லோருக்கும் தெரியும். நீங்களும் நானும் இங்கு பொழுது போக்காக எழுதுவதை விட வேறு ஒன்றும் செய்யப்போவதில்லை. இன்னும்  20 வருடத்துக்கு பிறகும் நீங்களும் நானும் உயிரோடு இருந்தால்,  இதை தான் எழுதி பொழுது போக்குவோம். இப்போது எமக்கு தேவை எமது இருப்பை காப்பாற்றுவது மட்டுமே. உண்மையு சொன்னால் பிச்சை வேண்டாம் நாயை பிடி என்ற நிலை தான். அது உங்களுக்கும் தெரியும். 

வெளியில் இருந்து சொல்லும் கருத்துக்களுக்கு அப்பால்.. ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள மண்ணில் இருந்து தொடர்ச்சியாக முன்வைக்கப்படும் வேண்டுகோள்களே.. ஒரு நாள் உலகால் கருத்தில் கொள்ளப்படும். அதுவே அவர்களின் விடிவுக்கு உதவி நிற்கும்..! அப்படித்தான் பல தேசங்கள் உருவாகின.. மக்கள் விடிவைச் சந்தித்தார்கள். அதைச் செய்யாமல்.. வாழாதிருப்பதும்.. பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று பயங்காட்டி.. அச்சுறுத்தி வைப்பது ஆக்கிரமிப்பாளனின் செயலை தான் தீவிரமாக்குமே தவிர ஆக்கிரமிப்பு வலியை சுமக்கும் மக்களுக்கு.. அதில் இருந்து மீள உதவாது. இதுவே எங்கள் நிலைப்பாடு. இது உங்களதில் இருந்தும் மிகவும் மாறுபட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2023 at 05:25, nedukkalapoovan said:

சிவசேன இலங்கையில் சிங்கள பெளத்த மயமாக்கலை எதிர்ப்பதாகத் தெரியவில்லை. ஏன் இலங்கையில் சைவத் தமிழர்கள் கொன்றொழிக்கப்பட்டு கோவில்கள் அழிக்கப்பட்ட போது கூட சிவசேன கவலை தெரிவிக்கவில்லை. தடுக்கக் கோரவில்லை.

ஆனால்.. தமிழர்கள் வெறுமனவே சிங்கள பெளத்த ஆக்கிரமிப்பு விரிவாக்கத்துக்கு மட்டும் முகம் கொடுக்கவில்லை.. அதோடு இன்னும் பல திட்டமிட்ட செயற்பாடுகளுக்கும் முகம் கொடுக்கின்றனர். அதில் ஒன்று மதமாற்றங்கள். அதிலும் கிறிஸ்தவ மதமாற்றத்தை தான் சிவசேன எதிர்க்கிறது. இஸ்லாமிய மதமாற்றங்களை அது இலங்கையில் எதிர்ப்பதாகத் தெரியவில்லை.

அந்தவகையில்.. வெளிப்படையாக தன்னை சிவசேன ஆள் என்று அறிவித்துவிட்டுள்ள சச்சியிடம் வேறு எதனை எதிர்பார்க்கிறீர்கள்.

குறைந்தது மதமாற்றங்களையாவது எதிர்க்கினமே என்று தான் கொள்ள வேண்டி இருக்குது. ஏனெனில் ஈழத்தமிழர்கள் இன்று பலதலைக் கொள்ளி எறும்புகளிடம் மாட்டிய புழுக்களாகிக் கிடக்கின்றனர். புலிகளாய் வாழ்ந்த இனம்.. புழுவாகிக் கிடக்கையில் இதுதான் நிகழும். 

இந்தியா பெளத்தமதத்திற்கு ஆதரவான கொள்கையுடையது......

இஸ்லாம்,மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு எதிரான கொள்கையுடையவர்கள்....

இலங்கை ஒர் பல்லின நாடாக இருப்பதை விட
சர்வமத நாடாக இருப்பதை இந்தியா விரும்புகிறது.....இதை பயன்படுத்தி சிங்கள அரசுகள் தங்கள் பெளத்த விரிவாக்கத்தை செய்கின்றனர்....

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2023 at 11:58, alvayan said:

தையிட்டியில் விகாரை கட்ட காணியை நம்ம அங்கசன்ரை அப்பாதான் உதவினார் என்ற கதையும் உண்டு...அவருதான் விகாரை புரோக்கர்

பின் எதற்கு இவர்களுக்கு அமைச்சரவையில் கதிரை ஒதுக்கியது? இதைவிட வேறு என்ன திறமை இருக்கிறது இவர்களுக்கு? இதற்கு இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் வளர்க்கினமாம் என்று விளக்கம் வேறு. நல்லிணக்கம் என்றால் என்னவென்று தெரியாததுகளை அழைத்து பதவியை காட்டியவுடன், அது நிஜமென்று கூவிக்கூவி விக்குதுகள் மக்களையும் இனத்தையும். ஒரு இனத்தை அவர்களின் பூர்வீக நிலங்களில் இருந்து துரத்துவது, அவர்தம் மதம்சாராத வழிபாட்டுத்தலங்களை பிரமாண்டமாக அவர்களின் நிலைத்தில் உருவாக்குவது, இராணுவத்தை நிறுத்தி அச்சுறுத்துவது நல்லிணக்கமாம். இதுகளை ஏவிவிட்டு அவன் தன் காரியங்களை விரைவாக நிறைவேற்றுகிறான், இதுகள் பின்வாசலால் வந்ததுகளுக்கு எது போனாலென்ன, வந்தாலென்ன? 

எதிரியோடு பந்தியில் முன் வரிசையில் ஆசனம் இருந்தால் அதுவே பெருமை அவர்களுக்கு. எழுந்து நின்று பாடுவது; இனஎதிர்ப்பு, எதிரிக்கு புகழாரம். முட்டாள்களின் திறமை அதுவே. அதனாற்தான் சிங்களம் தேடி பிடித்து வருகிறது இவர்களை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.