Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமி : 10 நோயாளர்கள் கண்பார்வை இழக்க காரணம் என்கின்றார் வைத்தியர் !!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமி : 10 நோயாளர்கள் கண்பார்வை இழக்க காரணம் என்கின்றார் வைத்தியர் !!

இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமி : 10 நோயாளர்கள் கண்பார்வை இழக்க காரணம் என்கின்றார் வைத்தியர் !!

கண் சத்திரசிகிச்சை செய்யப்பட்ட 10 நோயாளர்களுக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் நுவரெலியாவில் பதிவாகியுள்ளது.

இவர்கள், நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்துகொண்டவர்கள் என தெரியவருகின்றது.

கண் சத்திரசிகிச்சை செய்துகொண்ட குறித்த 10 நோயாளர்கள் உரிய பார்வை கிடைக்காமல் தொடர்ந்து வைத்தியசாலையில் தாங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல் சத்திரசிகிச்சைக்குள்ளான 50 வயதுக்கும் மேற்பட்ட 10 நோயாளர்களே இவ்வாறு தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தில் கிருமிகள் கலந்துள்ளதால் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்ட பார்வை பலவீனமடைந்துள்ளதாக நுவரெலியா பொது வைத்தியசாலையின் பணிப்பாளர் டொக்டர் மகேந்திர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், சத்திரசிகிச்சைகள் முடிந்து வீடுகளுக்குச் சென்ற நோயாளர்கள் கண்பார்வை முற்றாக இழந்த நிலையில் மீண்டும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான சிகிச்சைகளை மேற்கொண்டு படிப்படியாக குணமடைந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1331542

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காண்பார்வை பாதிப்பிற்கு உள்ளனா 13 பேர் இதுவரை அடையாளம்-சுகாதார அமைச்சு!

கண்பார்வை பாதிப்பிற்கு உள்ளனா 13 பேர் இதுவரை அடையாளம்-சுகாதார அமைச்சு!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மருந்தை பயன்படுத்தி கண் அறுவை சிகிச்சை செய்ததால் கண்பார்வை பாதிப்பிற்கு உள்ளன 13 பேர் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை நுவரெலியாவில் மட்டும் 10 நோயாளர்களுக்கு பார்வை பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் சுகாதார அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

தேசிய கண் வைத்தியசாலை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலை மற்றும் கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்களில் இரண்டு நோயாளிகளின் பார்வை குறைந்துள்ளது என்றும் மற்றவர்களின் பார்வை பலவீனம் அடைந்துள்ளதாகவும் மருத்துவ விநியோகப் பிரிவின் பணிப்பாளர் கபில விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பத்து நோயாளிகளும் தேசிய கண் வைத்தியசாலையில் மூவர் கண்டறியப்பட்டுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்தார்.

இது மருத்துவத்தில் காணப்படும் ஒரு பிரச்சினை என்றும் இந்த சம்பவம் குறித்து அமைச்சகம் விசாரணையைத் தொடங்கப்பட்டுள்ளது என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் ஒவ்வொரு வைத்தியசாலைகளிலும் குறித்த மருந்தின் முழு தொகுப்பையும் திரும்பப் பெறுவதற்கான விரைவான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அடையாளம் காணப்பட்ட வைத்தியசாலைகளில் கண் அறுவை சிகிச்சைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளார்.

மேலும், இதுபோன்ற சம்பவங்கள் பதிவாகிஇருந்தால் அவை குறித்து தங்களுக்குத் தெரிவிக்குமாறு அனைத்து வைத்தியசாலை பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாகவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.

https://athavannews.com/2023/1331589

  • கருத்துக்கள உறவுகள்

கிருமி தொற்று இனங்காணப்பட்ட மருந்து பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டுள்ளது - விசேட கண் வைத்திய நிபுணர் கபில் பந்து திலக

(எம்.மனோசித்ரா)

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சத்திர சிகிச்சையின் போது பயன்படுத்தப்பட்ட மருந்தொன்றில் காணப்பட்ட கிருமி காரணமாக, சத்திர சிகிச்சை மேற்கொள்ள சிலர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் தற்போது அந்த மருந்து பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதால் நோயாளர்கள் அச்சமடையத் தேவையில்லை என்று கண் சத்திர சிகிச்சை தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சங்கத்தின் தலைவர் விசேட கண் வைத்திய நிபுணர் கபில் பந்து திலக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மேற்கொண்ட சிலருக்கு ஒரு வகை கிருமி தொற்று இனங்காணப்படுவதற்கு முன்னரே இவ்வாறான நிலைமை , நுவரெலியா பொது வைத்தியசாலையில் பதிவாகியுள்ளது.

எவ்வாறிருப்பினும் தற்போது இது தொடர்பில் முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வழமை போன்று தற்போது கண் சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சத்திரசிகிச்சையின் பின்னர் பயன்படுத்தப்பட்ட மருந்தில் கிருமிகள் காணப்பட்டதை பரிசோதனை அறிக்கைகள் உறுதிப்படுத்தியிருந்தன. எனவே அந்த மருந்து தற்போது பயன்பாட்டிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது.

நுவரெலியா பொது வைத்தியசாலையில் கண் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் சிலர் விழிப்புலனை இழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

புத்தாண்டுக்கு சில தினங்களுக்கு முன்னர் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலை மற்றும் பல வைத்தியசாலைகளில் இவ்வாறான தொற்றுக்கள் பதிவாகியிருந்தன. இவை குறித்து முறையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன.

கண் சத்திர சிகிச்சை நிபுணர்கள் மற்றும் சுகாதார அமைச்சின் தலையீட்டில் ,  இந்த வகையான அவசரநிலை முறையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதற்கமைய அதற்கான அனைத்து பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் போதே குறிப்பிட்ட மருந்தொன்றில் கிருமி இருப்பது இணங்காணப்பட்டது.

ஆய்வறிக்கைகள் இதனை உறுதிப்படுத்தியதையடுத்து அந்த மருந்து பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. எனினும் தற்போது மருத்துவமனைகளில் சாதாரண முறையில் கண் சத்திர சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன. இது குறித்து நோயாளர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றார். 

கிருமி தொற்று இனங்காணப்பட்ட மருந்து பயன்பாட்டிலிருந்து விலக்கப்பட்டுள்ளது - விசேட கண் வைத்திய நிபுணர் கபில் பந்து திலக | Virakesari.lk

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

No photo description available.

  • கருத்துக்கள உறவுகள்

உலகம் முழுதிலும் உள்ள குப்பைகளை இலவசம் உதவி என்கிற பெயரில் தள்ளுவதுக்கு  ஒரு நாடு உண்டு அதுதான் சொறிலங்கா இவ்வளவு பட்டும்  இன்னும் சிங்களவர்கள்  இனவாதமும் மதவாதமும் கொண்டு அலைகிறார்கள் இன்னும் மோசமாகும் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

உலகம் முழுதிலும் உள்ள குப்பைகளை இலவசம் உதவி என்கிற பெயரில் தள்ளுவதுக்கு  ஒரு நாடு உண்டு அதுதான் சொறிலங்கா இவ்வளவு பட்டும்  இன்னும் சிங்களவர்கள்  இனவாதமும் மதவாதமும் கொண்டு அலைகிறார்கள் இன்னும் மோசமாகும் .

முன்பு... இந்தியாவில் தயாரிக்கப் பட்ட குழந்தைகளுக்கு கொடுக்கும் இருமல் மருந்திலும் 
சந்தேகம் எழுந்து, இலங்கை அதை மூடி மறைத்து விட்டது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.