Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

திருகோணமலையில் புத்தர் சிலையை நிறுவவேண்டாம் - உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியிருப்பதாக சுமந்திரனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

திருகோணமலையில் புத்தர் சிலையை நிறுவவேண்டாம் - உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியிருப்பதாக சுமந்திரனிடம் ஜனாதிபதி தெரிவிப்பு

Published By: Nanthini

14 May, 2023 | 12:36 PM
image

(நா.தனுஜா)

திருகோணமலையில் கோயில் அமைந்துள்ள மற்றும் இந்துக்கள் செறிந்து வாழும் பகுதியில் புத்தர் சிலையை நிறுவக்கூடாது என உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியிருப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

கண்டி, அஸ்கிரிய பீடத்தின் ஏற்பாட்டுக்கு அமைய தாய்லாந்திலிருந்து வரும் 40 பௌத்த தேரர்கள் அடங்கிய குழு திருகோணமலை நெல்சன் தியேட்டருக்கு முன்பாக இருக்கும் நிலத்தில் புத்தர் சிலையொன்றை கொண்டுவந்து வைத்து, பிரித் ஓதி, அங்கிருந்து கண்டிக்குப் பாத யாத்திரை மேற்கொள்ளவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது இந்துக் கோயிலான வில்லூன்றி கந்தசுவாமி கோயிலுக்குச் சொந்தமான காணி என்றும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் நேற்று சனிக்கிழமை (13) காலை இதுகுறித்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் தொலைபேசி ஊடாக கலந்துரையாடியுள்ளார்.

இதன்போது குறித்த பகுதியில் புத்தர் சிலையை நிறுவக்கூடாது என்றும் வில்லூன்றி கந்தசுவாமி கோயிலுக்கு அண்மையில் பிரித் ஓதும் நிகழ்வில் ஈடுபடவேண்டாம் என்றும் உரிய தரப்பினருக்கு அறிவுறுத்தியிருப்பதாக ஜனாதிபதி எம்.ஏ.சுமந்திரனிடம் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை திருப்தியளிக்கிறதா என்று வினவியபோது அதற்கு பதிலளித்த சுமந்திரன், 

"காணி விவகாரம் தொடர்பில் ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வரவேற்கத்தக்கது எனும்போதிலும் அது உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதை அடிப்படையாகக் கொண்டே இவ்விடயத்தில் இப்பேச்சுவார்த்தை பயனுள்ளதா, இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும். 

ஏனெனில், கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட இதனையொத்த உத்தரவுகளுக்கு மதிப்பளிக்கப்படவில்லை என்பதுடன், அவை உரியவாறு நடைமுறைப்படுத்தப்படவும் இல்லை. எனவே, தற்போது காணி விவகாரம் தொடர்பான ஜனாதிபதியின் உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்டால், அவ்விடயத்தில் மாத்திரம் ஓரளவு முன்னேற்றம் அடையப்பட்டிருப்பதாக கருதமுடியும்" என்று குறிப்பிட்டார்.

மேலும், நாளைய தினம் (15) நடைபெறவுள்ள ஜனாதிபதியுடனான அதிகாரப்பகிர்வு குறித்த பேச்சுவார்த்தையில், ஏற்கனவே இணக்கம் காணப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்துவது குறித்து வலியுறுத்தப்படும் என்றும், ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.

இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த பேச்சுவார்த்தைகளின் நீட்சியாக அதிகாரப்பகிர்வு தொடர்பில் ஆராயும் நோக்கில் ஜனாதிபதிக்கும் வடக்கு, கிழக்கு தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த இரண்டாம் நாள் சந்திப்பு பிற்போடப்பட்டுள்ள நிலையில், அச்சந்திப்பு நாளைய தினம் (15)மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

  •  

 


https://www.virakesari.lk/article/155234

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆக இவர் அறியத்தான் எல்லாம் நடக்குது. அப்ப ஏன் வடக்கில் இதனை தடுக்கல்ல..??!

  • கருத்துக்கள உறவுகள்
May be an image of 3 people and text
 
May be an image of 2 people and temple
 
May be an image of 1 person, temple and text
 
தாய்லாந்து ( பாங்கொங் ) நாட்டில் ஆண்களை விட பெண்களுக்கே பல மடங்கு மதிப்பு வழங்கப்படுகின்றது . அதற்கான காரணியாக அங்கு காணப்படுகின்ற பிரதான தொழில் அமைந்துள்ளது .
இந்தியாவில் பெண்பிள்ளைகளை பெற்றால் கள்ளிப்பால் வாயில் ஊற்றுகின்ற கொடூரம் நிலவியது போன்று இங்கு ஆண் குழந்தை பிறந்தால் குப்பைத்தொட்டியில் வீசுகின்ற சம்பவங்கள் ஏராளமாகவே நடைபெற்றிருக்கின்றன .
அவ்வாறு குப்பைத்தொட்டியில் வீசப்பட்ட,ஆண் குழந்தைகள் பின்னர் உணவுக்கு வழியின்றி பௌத்த பிக்குகளாக மாற்றம் பெறுகின்றனர் .
 
அவ்வாறான பிக்குகளில் சிலர் பிச்சையெடுக்கும் நோக்கில் தமிழ் ஈழத்தின் திருகோணமலை நகருக்கு கடல் வழியாக சில நூறாண்டுகளுக்கு முன்பு வந்துள்ளனர் .
 
இதுவரை காலமும் புத்தர் பெருமான் இலங்கையில் அதுவும் தமிழர் தாயகத்திலுள்ள பல பிரதேசங்களில் காலடிவைத்ததாக குறிப்பிட்டு அப்பகுதிகளில் பௌத்த சிங்கள ஆக்கிரமிப்பு சின்னங்கள் வைக்கப்பட்டுவந்தன . இது என்ன கேவலமென்றால் குப்பைத்தொட்டியில் வீசப்பட்டு பின்னர் பிச்சையெடுத்து வந்த இந்த தாய்லாந்து செங்குரங்குகள் திருகோணமலைக்கு வந்து இறங்கிய இடமென்று கணிப்பிட்டு தற்போது அப்பகுதியில் IMF நிதியில் துரிதகதியில் பௌத்த விகாரையொன்று அமைக்கும் ஈனத்தனமான செயற்பாடொன்று முன்னெடுக்கப்படுகின்றது . வழமைபோன்று சிங்கள பேரினவாத அரக்கர்களின் இவ்வாறான ஈனச்செயலுக்கு செம்பு தூக்கும் நடவடிக்கைகளில் டக்ளஸ் , பிள்ளையான் , அங்கஜன் தரப்பினர் ஈடுபட்டுள்ளனர் .

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

இருக்கிறவர்கள் தருகிற பிரச்சினை போதாதென்று, தாய்லாந்து பிக்குகளும் கூடுதுகளா? பிறகு, சீனப்பிக்குகள் சும்மா இருக்குங்களா? அதுகளும் வந்திறங்கப்போகுதுகள்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.