Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி தலைமையில் 14 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தலைமையில் 14 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு!

ஜனாதிபதி தலைமையில் 14 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு!

14 ஆவது இராணுவ நினைவு தின தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

இன்று (வெள்ளிக்கிழமை) ஸ்ரீ ஜயவர்த்தனபுர இராணுவ வீரர்களுக்கான நினைவுத்தூபியில் இராணுவ நினைவு நிகழ்வு நடைபெறவுள்ளது.

30 வருட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் போது, தாய்நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மைக்காக அர்ப்பணிப்புக்களை மேற்கொண்ட முப்படையினர், பொலிஸார் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இங்கு நினைவு கூரப்படவுள்ளனர்.

இந்த நிகழ்வில், பிரதமர், முன்னாள் ஜனாதிபதிகள், எதிர்கட்சித்தலைவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள், முப்படையினர் மற்றும் உயிரிந்த இராணுவ வீரர்களின் உறவினர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

https://athavannews.com/2023/1332230

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற தேசிய போர் வீரர் நினைவேந்தல் : பிரதமர் , எதிர்க்கட்சி தலைவர் , சபாநாயகரும் பங்கேற்பு

19 MAY, 2023 | 08:10 PM
image

 

(எம்.மனோசித்ரா)

உள்நாட்டு யுத்தத்தின் போது நாட்டுக்காக உயிர் தியாகம் செய்ய பாதுகாப்பு படை வீரர்களை நினைவு கூரும் 14ஆவது தேசிய போர் வீரர் நினைவேந்தல் நிகழ்வு பாதுகாப்பு படைகளின் பிரதானியான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மிகவும் எளிமையாக இடம்பெற்றது.

பத்தரமுல்லையிலுள்ள ஸ்ரீஜயவர்தனபுர நினைவு தூபிக்கருகில் வெள்ளிக்கிழமை (19) மாலை 4.30 மணியளவில் ஆரம்பமான இந்நிகழ்வில் பிரதமர் தினேஷ் குணவர்தன , சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச , பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா , முப்படை தளபதிகள் , பாதுகாப்பு செயலாளர் , பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா , போரில் உயிர் நீத்த வீரர்களின் நெருங்கிய உறவினர்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

படை வீரர் சேவைகள் அதிகாரசபையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த தேசிய படை வீரர் விழாவிற்கு கௌரவத்தை வழங்கும் வகையில் முப்படைய வீரர்கள் , ஓய்வு பெற்ற படை வீரர்கள் , பாடசாலை சாரணர் படையினரின் , உயிர் நீத்த வீரர்களின் நெருங்கிய உறவினர்கள் உள்ளிட்டோரின் பங்கேற்புடன் மரியாதை அணி வகுப்பு இடம்பெற்றது.

மரியாதை அணிவகுப்பைத் தொடர்ந்து தேசிய கீதத்துடன் நிகழ்வு ஆரம்பமானதையடுத்து , சர்வமத வழிபாடுகள் இடம்பெற்றன. தொடர்ந்து போர் களத்தில் உயிர் நீத்த வீரர்களுக்காக இரண்டு நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதையடுத்து பாதுகாப்பு படையினரை நினைவு கூறும் வாசகம் வாசிக்கப்பட்டது.

'எமது நாட்டின் இறையான்மை, சுயாதீனத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கான பாரிய போராட்டத்துக்கு பங்களிப்பையும் பலத்தையும் வழங்கிய , இராணுவ , கடற்படை , விமானப்படை , பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் வீரர்களை கௌரவத்துடன் நினைவு கூர்வோம்.

படை வீரர்களே , உயிரை தியாகம் செய்து நீங்கள் செய்த அர்ப்பணிப்பினை எதிர்கால சந்தியினருக்காக பாதுகாப்போம் என்று இந்த நினைவு தூபிக்கு மலரஞ்சலி செலுத்தி சபதமெடுப்போம். எமது உயிர் இருக்கும் வரை எந்த சந்தர்ப்பத்திலும் நாம் உங்களை நினைவு கூர்வோம். ' என்று குறித்த வாசகம் வாசிக்கப்பட்டது.

இவ்வாறு யுத்தத்தில் உயிர் நீத்த வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் ரனபெர வாத்தியம் இசைக்கப்பட்டது. அதனையடுத்து ஸ்ரீஜயவர்தனபுர படை வீரர் நினைவு தூபிக்கு ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களால் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. அஞ்சலியின் பின் தேசிய கீதத்துடன் நிகழ்வு நிறைவடைந்தது.

WhatsApp_Image_2023-05-19_at_19.48.04.jp

WhatsApp_Image_2023-05-19_at_19.48.06.jp

WhatsApp_Image_2023-05-19_at_19.48.01.jp

WhatsApp_Image_2023-05-19_at_19.47.56.jp

WhatsApp_Image_2023-05-19_at_19.47.58.jp

WhatsApp_Image_2023-05-19_at_19.47.59.jp

WhatsApp_Image_2023-05-19_at_19.48.00.jp

WhatsApp_Image_2023-05-19_at_19.48.02.jp

WhatsApp_Image_2023-05-19_at_19.48.07.jp

WhatsApp_Image_2023-05-19_at_19.48.03.jp

WhatsApp_Image_2023-05-19_at_19.48.05.jp

WhatsApp_Image_2023-05-19_at_19.48.08.jp

WhatsApp_Image_2023-05-19_at_19.48.13.jp

WhatsApp_Image_2023-05-19_at_19.48.10.jp

WhatsApp_Image_2023-05-19_at_19.48.11.jp

WhatsApp_Image_2023-05-19_at_19.48.12.jp

WhatsApp_Image_2023-05-19_at_19.48.14.jp

https://www.virakesari.lk/article/155713

  • கருத்துக்கள உறவுகள்

போரின் கதாநாயகர்களை அழைத்தபோதும் பங்கேற்பதை தவிர்த்துவிட்டனர் மைத்திரி உட்பட. ரணிலாரை உரையாற்ற அழைப்பு விடுத்த போதும் தவிர்த்துவிட்டாராம். இந்தப்பக்கம் சுமந்திரன் விளக்கேற்றல்! அரசியல் அதிகாரத்தை கைப்பற்ற சிங்கள வாக்குகளை  இலக்காக கொண்டு  போர் வெற்றியை கொண்டாடியோர் அரியணை ஏறி விரட்டியடிக்கப்பட்டதும், இனிமேல் மனம் வருந்துவதுபோல் நடித்து தமிழரை அரவணைக்க வேண்டிய நிலை அவர்களுக்கு. ரணிலுக்கோ ஏற்கெனவே சிங்கள வாக்குகள் இல்லை, கடந்த முறையும் தமிழர் வாக்கினாலேயே தலை தப்பியவர். இந்த நேரத்தில் விஷப்பரீடசை எழுத அவரும் தயாரில்லை. அடுத்த வருடம் இந்த விழா கொண்டாட படையினரே விரும்புவாரோ தெரியவில்லை. நாட்டின் வழங்களை விற்று ஊதியம் பெற்றவர்களுக்கு கவுரவம். எதுவும் எதிர்பாராமல் மக்களுக்காக தன்னுயிர் ஈந்தவர்களை நினைவு கூரக்கூடாதாம்.  கொண்டாட்ட அரசியலை துறந்து, புறக்கணிப்பு அரசியல் நடத்த ஆயத்தம். எதற்கும் அரசியலே முக்கியம்!            

  • கருத்துக்கள உறவுகள்

வருட வருடம்  இந்த விழாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து கொண்டாடுவது    நல்லிணக்கத்தை பாதிக்காத   ??? வெளி     ......நாட்டு  அமைச்சரே   

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

May be an image of text that says 'morning sunday he 14 YEARSOF WAR VICTORY TRUTH JUSTICE JUSTICE RECONCILIATION ACCOUNTABILITY 2023.05.21. Suceep'

நீதி, நேர்மை, பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், சமரசம்... எல்லாவற்றையும் 
மூடி மறைக்க... 14´வது  இராணுவ நினைவு தினம் கொண்டாடுகிறார்கள் 
என்பதை விளக்கும்... கருத்து ஓவியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.