Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கையிலிருந்து கடத்திச் சென்ற தங்கக் கட்டிகளை இந்திய கடலில் வீசிய கடத்தல்காரர்கள் : ஸ்கூபா வீரர்களின் உதவியோடு தங்கத்தை மீட்ட இந்திய கடலோர காவல்படை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
02 JUN, 2023 | 01:20 PM
image
 

இலங்கையிலிருந்து சட்ட விரோதமாக கடத்திச் செல்லப்பட்டு, கடலுக்குள் வீசப்பட்ட தங்கக் கட்டிகளை ஸ்கூபா வீரர்களின் உதவியோடு இந்திய கடலோர காவல்படையினர் மீட்டுள்ளனர்.

இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தமிழகத்திற்கு தங்க கட்டிகள் கடத்தப்பட்டு வருவது வாடிக்கை நிகழ்வாக இருந்து வருகிறது. இந்த கடத்தல் சம்பவங்களை தடுப்பதற்காக சர்வதேச கடலோர எல்லையில் இந்திய-இலங்கை கடற்படை தீவிரமாக ஈடுபட்டு வந்தாலும், பாதுகாப்பு நடவடிக்கையை மீறி கடத்தல் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வரப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் கூட்டு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பதிவு எண் இல்லாத பைபர் படகு ஒன்று சந்தேகப்படும்படி, மணலி தீவு அருகே நின்று கொண்டிருந்தது. இந்திய கடலோர காவல் படையினரை பார்த்த உடன் படகிலிருந்தவர்கள் தப்பி செல்ல முயன்றதுடன் கடலில் இரண்டு பார்சல்களை வீசியுள்ளனர்.

இதனால் சந்தேகமடைந்த அதிகாரிகள் பைபர் படகை மடக்கி பிடித்தனர். படகில் இருந்தவர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். இதனால் படகில் இருந்த வேதாளையை சேர்ந்த இருவர் மற்றும் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த ஒருவர் என மூவரையும் இந்திய கடலோர காவல் படை மண்டபம் முகாமில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் கடலில் வீசப்பட்ட பார்சல்களை மீட்பதற்காக மண்டபம் தெற்கு மீன்பிடி துறைமுகம் அருகில் இருந்து ஸ்கூபா டைவர்ஸ், முத்து குளிக்கும் மீனவர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பிடிபட்ட இருவரை அழைத்து கொண்டு மணலி மற்றும் சிங்கிலி தீவு அருகே உள்ள கடல் பகுதிக்கு சென்று கடலுக்கு அடியில் தங்கத்தை தீவிரமாக தேடினர்.

ஆனால் மாலை வரை தேடியும் கடத்தல் தங்கம் கிடைக்காததால் அவர்கள் வெறும் கையுடன் கரை திரும்பினர். இந்நிலையில் இன்றும் தொடர்ந்த இந்த தேடுதல் பணியில், சுமார் 2 முதல் 3 மணி நேரத்திற்கு உள்ளாகவே கடலில் வீசப்பட்ட பார்சல்களை ஸ்கூபா வீரர்கள் உதவியுடன் கடலோர காவல்படை அதிகாரிகள் மீட்டனர். மேலும் கைப்பற்றப்பட்ட தங்கத்தை மண்டபம் கடலோர காவல் படை முகாமில் வைத்து நகை மதிப்பீட்டாளரை கொண்டு எடை போடும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

https://www.virakesari.lk/article/156786

  • கருத்துக்கள உறவுகள்

இது அவனுகளுக்கென்ன புதுசே! 

  • கருத்துக்கள உறவுகள்

இருபது கோடி இந்திய ரூபா மதிப்பான 21.5 கிலோ தங்கம்.

தாராப்பா, இலங்கை பொருளாதார கஸ்டத்தில இருக்குது எண்டது?

https://www.dailymirror.lk/breaking_news/Indian-Coast-Guard-DRI-seize-INR-20-crore-worth-of-gold-smuggled-from-Sri-Lanka/108-260288

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

70 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்கத்துடன் இலங்கையர்கள் ஐவர் இந்தியாவில் கைது

Published By: DIGITAL DESK 5

03 JUN, 2023 | 01:16 PM
image
 

(எம்.வை.எம்.சியாம்)

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு சட்டவிரோதமான முறையில் கொண்டு செல்லப்பட்ட 70 கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான தங்கத்துடன் 5 பேரை இந்திய பாதுகாப்பு படையினர் கைது செய்துள்ளனர்.

இந்திய கடலோரக் பாதுகாப்பு படை  வருவாய் புலனாய்வு கண்காணிப்புப் பிரிவு மற்றும் சுங்கத் திணைக்களம் இணைந்து நடத்திய விசேட சோதனை நடவடிக்கையில் இரண்டு படகுகளில் கொண்டு செல்லப்பட்ட 32 கிலோ கிராம் தங்கத்தை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சட்டவிரோத பொருட்கள் கடத்தல் தொடர்பாக இந்திய புலனாய்வு அமைப்புகள் நடத்திய விசேட நடவடிக்கையில் பிரகாரம் கடத்தல் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

அதன்படி, மன்னார் வளைகுடாவைச் சுற்றியுள்ள இந்திய-இலங்கை சர்வதேச கடல் பகுதியில் மீன்பிடி படகுகளை  கண்காணித்தபோது தமிழகத்தின் மண்டபம் பகுதிக்கு சென்று கொண்டிருந்த சந்தேகத்துக்குரிய இரண்டு படகுகளை சோதனையிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

முதல் படகில் பயணித்த கொண்டிருந்தவர்களை பாதுகாப்பு படையினர் கைது செய்வதற்கு முயன்ற போது அவர்கள் 11 கிலோ தங்கத்தை கடலில் வீசியுள்ளனர். இருப்பினும்  இரண்டாவது கப்பலிலிருந்து 21  கிலோ நிறையுடைய தங்கத்தை பாதுகாப்புப் படையினர் கைப்பற்றியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போது கடத்தல்காரர்கள் கடலில் வீசிய தங்கமும் மீட்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் தொடர்பில் இந்திய வருவாய் புலனாய்வு கண்காணிப்பு பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

https://www.virakesari.lk/article/156833

களவெடுத்த நகைகளை உருக்கி பிஸ்கற்றாக கடத்திறாங்களோ?!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.