Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

‘பிரிக்கப்படாத இந்தியா’ சுவரோவியத்தால் எழுந்துள்ள சர்ச்சை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

‘பிரிக்கப்படாத இந்தியா’ சுவரோவியத்தால் எழுந்துள்ள சர்ச்சை

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 'பிரிக்கப்படாத இந்தியா' சுவரோவியம் - Tamilwin

இந்தியாவின் புதிய பாராளுமன்றத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள ” பிரிக்கப்படாத இந்தியா”-வை சித்தரிக்கும் சுவரோவியம் தொடர்பாக பல்வேறு நாடுகளும் அதிருப்தி வௌியிட்டுள்ளன.

இந்திய தலைநகர் புது டெல்லியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய பாராளுமன்ற கட்டிடத் தொகுதியை பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாத இறுதியில் திறந்து வைத்தார்.

இந்த புதிய கட்டிடத்தில் “பிரிக்கப்படாத இந்தியாவை” காட்சிப்படுத்தும் ஒரு சுவரோவியம் உள்ளமை தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரிக்கப்படாத இந்தியா சுவரோவியம் மேற்கில் ஆப்கானிஸ்தானிலிருந்து, பங்களாதேஷ், பூட்டான், மாலத்தீவுகள், மியன்மார், நேபாளம், பாகிஸ்தான் மற்றும் இலங்கை வரை இந்தியாவின் ஒரு பகுதியாக விரிந்துள்ளதாகக் காட்டுகிறது.

இந்த சுவரோவியம் பண்டைய மௌரிய பேரரசைக் காட்டுவதாகவும் அது “மக்கள் சார்ந்த” ஆட்சியின் செழிப்பான காலத்தை பிரதிபலிப்பதாகவும் இந்திய அரசாங்கத்தின் சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

இந்த சுவரோவியத்துடன் எவ்வித அரசியல் தொடர்பும் இல்லை என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும், ஓவியத்தில் அகண்ட பாரதம் தௌிவாக உள்ளதென புதிய பாராளுமன்ற திறப்புவிழா நடைபெற்ற தினத்தில் இந்திய பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி டுவிட்டரில் பதிவிட்டதை அடுத்து, இந்த சர்ச்சை வலுப்பெற்றது.

இதேவேளை, இந்த சுவரோவியம் பற்றிய விளக்கத்தை பெறுமாறு டெல்லியில் உள்ள தனது தூதுவருக்கு பங்களாதேஷ் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

பங்களாதேஷ் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் ஷஹ்ரியார் ஆலம் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த சுவரோவியத்தின் மீது பரவலான கோபம் உள்ளதாகவும் பங்களாதேஷ் வௌிவிவகார இணை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சின் செய்தி தொடர்பாளர் மும்தாஜ் பலூச்சும் சுவரோவியம் குறித்து கவலை தெரிவித்துள்ளார். மேலும் ஜோஷியின் கருத்துகளால் பாகிஸ்தான் திகைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“அகண்ட பாரதம்” என்ற தேவையற்ற கூற்று, இந்தியாவின் அண்டை நாடுகளின் அடையாளத்தையும் கலாசாரத்தையும் அடிபணியச் செய்யும், விரிவாக்க மனநிலையின் வெளிப்பாடு என பாகிஸ்தான் வௌியுறவுத்துறை அமைச்சின் செய்தி தொடர்பாளர் விமர்சித்துள்ளார்.

இந்த சுவரோவியத்திற்கு நேபாளமும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பழமையான ஜனநாயகத்தின் முன்மாதிரியாகக் கருதப்படும் இந்தியா ,நேபாள பகுதிகளை தனது வரைபடத்தில் வைத்து பாராளுமன்றத்தில் ஓவியத்தை தொங்கவிடுவது பொருத்தமற்றது என நேபாளத்தின் முன்னாள் பிரதமர் KP ஷர்மா ஒலி கூறியுள்ளார்.

 

https://thinakkural.lk/article/257510

  • கருத்துக்கள உறவுகள்

அருணாசல பிரதேசம்... ஏற்கெனவே சீனா வரை படத்தில் உள்ளது.
இந்தியா... அதையும், தன்னுடன் சேர்த்து.... வைத்திருப்பது சீனனுக்கு தெரிந்தால்,
இந்தியாவுக்கு... சங்குதான்.  🤣

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, தமிழ் சிறி said:

அருணாசல பிரதேசம்... ஏற்கெனவே சீனா வரை படத்தில் உள்ளது.
இந்தியா... அதையும், தன்னுடன் சேர்த்து.... வைத்திருப்பது சீனனுக்கு தெரிந்தால்,
இந்தியாவுக்கு... சங்குதான்.  🤣

சீ சீ

அதில இந்தியா  கவனமாக  இருக்கும்

யாரால  அடி  வாங்கமுடியும்??

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, விசுகு said:

சீ சீ

அதில இந்தியா  கவனமாக  இருக்கும்

யாரால  அடி  வாங்கமுடியும்??

இனி அடி வாங்க வெளிக்கிட்டால்.... இந்திய வரைபடம் மிக சிறிதாக போகும்.
சீனனும், பாக்கியும் சேர்ந்து... தமது நாட்டை பெரிதாக்கி விடுவார்கள். 😂

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

இனி அடி வாங்க வெளிக்கிட்டால்.... இந்திய வரைபடம் மிக சிறிதாக போகும்.
சீனனும், பாக்கியும் சேர்ந்து... தமது நாட்டை பெரிதாக்கி விடுவார்கள். 😂

 

அண்மையில் சீன இராணுவ  தளபதி? 

இந்தியா எமக்கு கணக்கிலில்லை  என்று சொல்லியிருப்பதும் மோடிக்கு  வயித்தை  கலக்கியிருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, விசுகு said:

அண்மையில் சீன இராணுவ  தளபதி? 

இந்தியா எமக்கு கணக்கிலில்லை  என்று சொல்லியிருப்பதும் மோடிக்கு  வயித்தை  கலக்கியிருக்கும்

சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்  என்பதே நோக்கம்" - BBC News தமிழ்

சீன அதிகாரிகள் வருகைக்கு தமிழ் மக்கள் அதிருப்தி! - ஜே.வி.பி நியூஸ்

ஏற்கெனவே... சீன தூதுவர், காங்கேசன் துறையில் நின்று,
இங்கிருந்து  இந்தியா எவ்வளவு தூரம் என்று கேட்டு அறிந்து விட்டு,
நல்லூர் கோவிலுக்கு,  வெறும் மேலுடன் போய்... அர்ச்சனையும் செய்து விட்டுப் 
போனதும்... கண்ணுக்கு முன்னாலே வந்து போகும்.animiertes-tanzen-smilies-bild-0009.gif

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, தமிழ் சிறி said:

சீனத் தூதுவர் யாழ்ப்பாணம் பயணம்: ''தமிழர் மனங்களில் இடம்பிடிக்க வேண்டும்  என்பதே நோக்கம்" - BBC News தமிழ்

சீன அதிகாரிகள் வருகைக்கு தமிழ் மக்கள் அதிருப்தி! - ஜே.வி.பி நியூஸ்

ஏற்கெனவே... சீன தூதுவர், காங்கேசன் துறையில் நின்று,
இங்கிருந்து  இந்தியா எவ்வளவு தூரம் என்று கேட்டு அறிந்து விட்டு,
நல்லூர் கோவிலுக்கு,  வெறும் மேலுடன் போய்... அர்ச்சனையும் செய்து விட்டுப் 
போனதும்... கண்ணுக்கு முன்னாலே வந்து போகும்.animiertes-tanzen-smilies-bild-0009.gif

 

இந்தியாவைச்சுற்றி மாலை போட்டாச்சு

இனி  கழுத்தை  வெட்டவேண்டியது  தான்

தமிழகத்தை  மட்டும்  சேதமில்லாமல்  பிரிச்சு  விட்டால்  போதும்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, விசுகு said:

 

இந்தியாவைச்சுற்றி மாலை போட்டாச்சு

இனி  கழுத்தை  வெட்டவேண்டியது  தான்

தமிழகத்தை  மட்டும்  சேதமில்லாமல்  பிரிச்சு  விட்டால்  போதும்

அமெரிக்கா இந்தியாவை பிளவுபட விரும்புமா? இந்தியா பிளவு பட்டால் சீனா உலகப்பெரும் வல்லரசாகிவிடும் என்பது அமெரிக்காவுக்கு தெரியாமல் இருக்குமா?

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, விசுகு said:

 

இந்தியாவைச்சுற்றி மாலை போட்டாச்சு

இனி  கழுத்தை  வெட்டவேண்டியது  தான்

தமிழகத்தை  மட்டும்  சேதமில்லாமல்  பிரிச்சு  விட்டால்  போதும்

 

8 hours ago, குமாரசாமி said:

அமெரிக்கா இந்தியாவை பிளவுபட விரும்புமா? இந்தியா பிளவு பட்டால் சீனா உலகப்பெரும் வல்லரசாகிவிடும் என்பது அமெரிக்காவுக்கு தெரியாமல் இருக்குமா?

இந்தியாவின் ரஷ்ய சார்பு அமெரிக்காவுக்கு எப்போதும் ஒரு சந்தேகத்தை ஏற்படுத்தும்.......சந்தர்ப்பம் கிடைத்தால் அமெரிக்காவே அதை செய்யும்.......!   😎

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.