Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் தடை ஏற்படுத்துபவர்களை கைது செய்க - நீதிமன்றம் உத்தரவு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
image
 

யாழ்ப்பாணம் வண்ணை வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக இன்று வெள்ளிக்கிழமை (09)  காலை ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் தடைப்பட்டிருந்தது. 

இந்நிலையில் குறித்த வழக்கு நீதிமன்றில் இன்றைய தினம் வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

நீண்ட நேர வாதப்பிரதிவாதங்களின் பின் ஆலய மகோற்சவத்தினை சிவதர்சக் குருக்கள் தலைமையில் தடையின்றி நடத்துமாறும், உற்சவத்தினை குழப்புபவர்களை கைதுசெய்யுமாறும் நீதிபதியினால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.

இதனடிப்படையில் இன்று மாலை 5 மணிக்கு ஆலயத்தின் தடைப்பட்ட மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது.

வீரமாகாளி அம்மன் ஆலயத்தில் தடை ஏற்படுத்துபவர்களை கைது செய்க - நீதிமன்றம் உத்தரவு | Virakesari.lk

முன்னர் வந்த செய்தி 

 

 

யாழில் ஆலய பூசகர்களிடையே முரண்பாடு ; மகோற்சவம் தடைப்பட்டது

 

 

யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக ஆலயத்தின் மகோற்சவம் தடைப்படுள்ளது. வழிபடுவதற்காக வந்த பொதுமக்கள் ஆலயத்தில் காத்திருக்கும் அவலம் நிலவுகின்றது.

யாழ்ப்பாணம் அருள்மிகு ஶ்ரீ வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த பூசகர்களிடையே நீண்டகாலமாக முரண்பாடு காணப்பட்ட நிலையில் இவ் வருடத்திற்கான மகோற்சவத்தினை யார் நடாத்துவது என இரண்டு பூசர்களிடையே முரண்பாடு ஏற்பட்டுள்ளது. 

01__3_.jpg

ஆலயத் திறப்பினை உரிய பூசகரிடம் வழங்க மற்றுமொரு பூசகர் மறுத்ததால் வாய்த்தர்கம் அதிகரித்த நிலையில் வியாழக்கிழமை பொலிஸார் ஆலயத்தினை பூட்டிவிட்டு இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் திறப்பை ஒப்படைப்பதாகவும் அங்கு உரிய ஆதாரங்களை காட்டி பெற்றுக் கொள்ளுமாறும் ஆலயத் திறப்பினை எடுத்துச் சென்றுள்ளனர்.

இன்றையதினம்  காலை 10 மணியளவில் ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் பூசகர்களினுடைய முரண்பாடால் மகோற்சவம் தடைப்பட்டுள்ளது. நீதிமன்றில் இன்று வழக்கு மீள விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டவுள்ளது. 

01__5_.jpg

ஆலயக் கதவு மூடப்பட்டுள்ள நிலையில் வழிபடுவதற்காக வந்த பொதுமக்கள் காலைமுதல் ஆலயத்திற்கு வெளியில் காத்திருக்கும் அவலம் நிலவுகின்றது.

01__2_.jpg

யாழ்ப்பாண இந்து ஆலயங்களில் அண்மைக்காலங்களாக உள்ளக முரண்பாடுகள் அதிகரித்துவருகின்றன. அண்மைய நிகழ்வு ஒன்றில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபரும் இதனை வெளிப்படையாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

யாழில் ஆலய பூசகர்களிடையே முரண்பாடு ; மகோற்சவம் தடைப்பட்டது | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

பழம் பெரும் கோவிலில்… பூசகர்களிடையே இப்படியான முரண்பாடுகள் இருப்பது
வெட்கக்கேடானது மட்டுமல்ல, நகைப்பிற்கு உரியது.

  • கருத்துக்கள உறவுகள்

கோட்டை அடிபாட்டுக்க கூட விடாமல் திருவிழா நடந்த கோவில்.. அப்ப இருந்த பக்குவமும் பொறுப்புணர்வும் இப்ப இல்லை. ஏன்.. தாந்தோன்றித்தனமான மாக்கள் கூட்டமாகிவிட்டது.. ஆக்கிரமிப்புக்குள் தமிழ் சனம். குருமார் உள்ளடங்க. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
8 hours ago, தமிழ் சிறி said:

பழம் பெரும் கோவிலில்… பூசகர்களிடையே இப்படியான முரண்பாடுகள் இருப்பது
வெட்கக்கேடானது மட்டுமல்ல, நகைப்பிற்கு உரியது.

பூசாரிமாரை அடிச்சு கலைக்க வேண்டும்....நான் சொல்ல வாறது பார்ப்பனிய கூட்டத்தை இல்லாதொழிக்க வேண்டும்.


நான் வணங்கும் கடவுளுக்கு தரகன் தேவையில்லை.

விரும்பினால் பணியாளனாக இருக்கட்டும்.:cool:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.