Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனேடியப் பிரதமரின் குற்றச்சாட்டுகளுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் - சரத் வீரசேகர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

16 JUN, 2023 | 05:19 PM
image
 

இலங்கை இராணுவத்தின் உறுப்பினர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள சர்வதேச பயணத் தடை மற்றும் கனேடியப் பிரதமரின் இனப்படுகொலை தொடர்பான பொய்க் குற்றச்சாட்டுகளுக்கு எதிராகக் கடுமையான நிலைப்பாட்டை மேற்கொள்ள வேண்டும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் சரத் வீரசேகர அறிவுறுத்தினார்.

பாராளுமன்றத்தில்  கடந்த வாரம் கூடிய தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக்குழுவுக்கு தலைமைதாங்கியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இலங்கையின் இராணுவ அதிகாரிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள சர்வதேச பயணத் தடையானது இராணுவத்தினரின் மன உறுதியைப் பாதிப்பதால், அதற்கு எதிராக செயற்பட வேண்டியதன் அவசியத்தையும், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வெளிவிவகார அமைச்சின் தலையீட்டின் முக்கியத்துவத்தையும் தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர வலியுறுத்தினார். 

இது தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை அந்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு தூதுவர்கள் ஊடாகவும் உயர்மட்ட இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் ஊடாகவும் வலுவாகத் தெரிவிக்கப்பட்டிருப்பதாக இதற்குப் பதிலளித்த வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். இவ்வாறான முடிவுகளை மறுபரிசீலனை செய்ய சம்பந்தப்பட்ட அரசுகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அத்துடன் இந்த நாட்டின் இராணுவ உறுப்பினர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத்தடையை எதிர்ப்பதற்கு தேவையான அனைத்து உண்மைகளையும் சேகரித்து உரிய தூதுவர்களிடம் வழங்குமாறு வெளிவிவகார அமைச்சின் செயலாளருக்குக் குழுவினால் பணிப்புரை விடுக்கப்பட்டது. 

அத்துடன், தருஸ்மன் மற்றும் OICL ஆகிய இரண்டு அறிக்கைகளாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளபடி, இலங்கை ஒரு சர்வதேச இராணுவ மோதலைக் கொண்டிராத நாடு என்பதால் இவ்வாறு பயணத்தடை விதிப்பது ஜெனீவா உடன்படிக்கைக்கு எதிரானது என்ற விடயத்தை வலியுறுத்துமாறும் குழுவின் தலைவர் தெரிவித்தார்.

இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றிருப்பதாக கனேடியப் பாராளுமன்றத்தில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டு அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது. 

இதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பதற்கு எடுக்கக் கூடிய நடவடிக்கைகள் மற்றும் இவ்வாறான கருத்துக்களுக்கு இலங்கை பொறுப்பல்ல என்பதை மற்ற நாடுகளுக்கு அறிவித்தமை குறித்த விபரங்களை சமர்ப்பிக்குமாறும் குழு வெளிவிவகார அமைச்சின் செயலாளரிடம் இதன்போது கோரியது.

இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கையை சரியான அளவில் பேணுவது, சில கிராமப் பகுதிகளில் இருந்து இராணுவத் தளங்களைத் திரும்பப் பெறுவது மற்றும் அது தேசிய பாதுகாப்பில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்தும் குழு கேட்டறிந்தது.

இராணுவத்தினரை முறைப்படுத்துவது ஆட்குறைப்புச் செய்வது அல்ல என்றும், முகாம்களை அகற்றுவது தேசிய பாதுகாப்பு, பிராந்தியத்தின் பாதுகாப்பு மற்றும் புனித இடங்களில் பாதுகாப்புக்கு பாதிப்பாக அமையாது எனவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் குழுவில் தெரிவித்தார்.

மேலும், இலங்கையில் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது தொடர்பில் குழு கவனம் செலுத்தியதுடன், தீவிரவாதத்தை தோற்கடிக்க செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியது.

https://www.virakesari.lk/article/157877

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை தமிழ் மக்களுக்கு எதிராக இனப்படுகொலை இடம்பெற்றிருப்பதாக கனேடியப் பாராளுமன்றத்தில் பிரேரணையொன்று கொண்டுவரப்பட்டு அது ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது

 

அதுதானே..கொழும்பு  ஆங்கிலப் பேப்பருக்கு...கனடிய வெளிவிவ்கார அமைச்சர் ..இனப்படுகொலையல்ல என்று சொல்லிவிட்டாராமே...இதனை யாப்புன முசுலிமும் தூக்கிப்பிடிக்குது...இலங்கை அரசியல்போல் கனடா மாறிவிட்டதோ..பிரதமர் ஒன்று..அமைச்சர் ஒன்று சொல்வதாக பத்திரிகையின் பினாத்தல் ..இதுவும் உண்மையோ

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் என்ன நடந்தது, ஜெனீவாவுக்கு ஏன் இலங்கை அமைச்சர்கள் கோப்புகளை தூக்கிக்கொண்டு போகிறார்கள் என்று கூடத் தெரியாத, தெரிந்துகொள்ள அறிவில்லாத, விரும்பாதவர்கள், சருகுச்சத்தம் கேட்டாலும் வாலைகிளப்பி குரைக்கத்தான் செய்வார்கள். வெளிவிவகார அமைச்சர் அங்கொன்றும் இங்கொன்றும் சொல்லி அவர்களை சமாளிக்க வேண்டியதுதான். உண்மையை சொல்லி பதவியிழக்க பயம், இல்லை தாங்கள் அநீதியிழைத்தோம் என ஏற்றுகொள்ளத் தயக்கம். எப்போதும் மற்றவர்களின் உரிமைகளை, உடமைகளை அடாவடியாகவோ நயவஞ்ச்கமாகவோ பறிப்பவர்கள்; பாதிக்கப்பட்டவர்களின் குரலை, பாதிப்பை மறைத்து, அவர்களுக்கு ஆதரவு கொடுப்பவர்களை தடுத்து, தனிமைப்படுத்தி, பழி கூறி, எதிரிகளை உருவாக்கி, விரக்தியிலும், இயலாமையிலும், அடக்குமுறையிலும்,, அச்சுறுத்தலிலும் தங்கள் கண்காணிப்பிலும் வைத்து,  தங்களை நிஞாயப்படுத்தி வருவார்கள். பாதிக்கப்பட்டவன் துரோகத்தை மறக்கடிக்க முடியாது, சம்பந்தப்பட்டவர் தன்னை நீதியாளனாக காட்டிக்கொண்டாலும் அவன் அமைதியடைவதில்லை. அவன் செய்தது அவன் கண்முன்னே எந்நாளும் உறுத்திக்கொண்டே இருக்கும். அதனால் எப்போதும் கூக்குரலிட்டுக்கொண்டேயிருப்பான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.