Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உதய கம்மன்பிலவின் குருந்தூர்மலை விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: DIGITAL DESK 3

21 JUN, 2023 | 02:33 PM
image
 

பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் முல்லைத்தீவு குருந்தூர்மலை விஜயத்தை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலைக்கு இன்று புதன்கிழமை (21)  உதய கம்மன்பில விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில வருகை தருவதற்கு முன்னதாக குருந்தூர்மலை அடிவாரத்தில் ஒன்றுகூடிய தண்ணிமுறிப்புக்குரிய மக்களும், மக்கள் பிரதிநிதிகள் சிலரும் இணைந்து ஆர்ப்பாட்டமொன்றினை முன்னெடுத்திருந்தனர்.

IMG-20230621-WA0117.jpg

அதன்படி, தண்ணிமுறிப்புப் பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள காணிகளை விடுவிக்குமாறும், தண்ணிமுறிப்புப் பகுதியில் மீள்குடியேற்றம் செய்யுமாறும் வலியுறுத்தியே இவ்வாறு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.

அத்தோடு, திட்டமிடப்பட்ட சிங்களமயமாக்கல் மற்றும் பௌத்தமயமாக்கல் செயற்பாடுகளுக்கு ஆர்ப்பாட்டக்காரர்களால் இதன்போது கடுமையான எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டது.

IMG-20230621-WA0132.jpg

இவ்வார்ப்பாட்டத்தில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், கந்தையா சிவநேசன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இ.சத்தியசீலன், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் செயற்பாட்டாளர் அ.பீற்றர் இளஞ்செழியன், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

IMG-20230621-WA0265.jpg

மேலும், இவ்வாறு உதயன் கம்மன்பில குருந்தூர்மலைக்கு விஜம் மேற்கொள்ளவுள்ள நிலையில், குருந்தூர்மலை அடிவாரம் மற்றும் குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் அதிகளவில்  பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/158235

  • கருத்துக்கள உறவுகள்

எங்கப்பா ஆர்ப்பாட்டம்?

அந்தாளக் கூப்பிட்டு பால்சோறு கொடுத்து, விகாரையை கட்டுங்கோ, கும்பிடுங்கோ, ஆனால் நாங்கள் விவசாயம் செய்த நிலங்களை கையகப்படுத்தாமல் திருப்பித்தருவதை நீங்கள் உறுதிப்படுத்துங்கோ மாத்தையா என்று குழையடிக்க, அவரும் வலு சந்தோசமா, செய்யிறன் எண்டு கிளம்பீட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்

கம்மன்பில சனாதிபதித் தேர்தலுக்கு தயாராகிட்டார்..

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பவுத்த மக்களுடைய ஆதரவை பெறுவதட்கு பொய்க்காகவேனும் எங்கே அடிக்க வேண்டுமென்று கம்மன்பில, வீரவன்ச, சரத் போன்றோருக்கு நன்றாகவே தெரியும். காவிகளிடமும் இது நன்றாகவே எடுபடும்.

எனவே தான்  பிரச்சினைகள் இல்லாவிடடாலும்,  இப்படியான பிரச்சினைகளை முன்னிலைப்படுத்திகிறார்கள். இவர்களை பொறுத்த வரைக்கும் தங்களிருப்புக்காக இப்படியான இனவாத புரளிகளை கிளப்பிக்கொண்டு இருப்பார்கள். தேர்தல்கள் நெருங்குவதால் இவை இன்னும் வேகமெடுக்கும். 

இன்னும் கொஞ்ச நாட்களில் ராஜபக்சேக்களும் இதே ஆயுதத்தை தீவிரமாக எடுப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தென்பகுதியில் இருந்து ஊடகவியலாளர்களை அழைத்துக் கொண்டு குருந்தூர் மலைக்கு சென்ற உதயகம்பன்பில

Published By: DIGITAL DESK 3

22 JUN, 2023 | 10:57 AM
image
 

கே .குமணன் 

முல்லைத்தீவு மாவட்டத்தில் தண்ணிமுறிப்பு குருந்தூர் மலைப் பகுதியில் நீதிமன்ற கட்டளைகளை மீறி   விகாரை அமைக்கப்பட்ட  விவகாரம் இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியில் பாரிய ஒரு விவகாரமாக உருவெடுத்துள்ளது.

குருந்தூர் மலையில் தொல் பொருள் திணைக்களத்தால் கையகப்படுத்தப்பட்ட 79 ஏக்கர் காணியில் நீதிமன்ற கட்டளைகளை மீறி   விகாரை அமைக்கப்பட்ட நிலையில்  அதற்கு மேலதிகமாக    தமிழ்மக்களின் பூர்வீக வாழ்விட ,விவசாய காணிகள் உள்ளடங்கலாக  279 ஏக்கர் தொல்பொருள் திணைக்களத்தினால் மீள எல்லையிடப்பட்டுள்ள நிலையில் காணிகளை விடுவிக்க மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்தனர். 

IMG_8949.jpg

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் அண்மையில் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்ட பின்னணியில் தொல்பொருள் திணைக்கள பணிப்பாளர் அவர்களும் பதவி விலகியிருந்தார்.

IMG_8996.jpg

இவ்வாறான பின்னணியில்  பாராளுமன்ற  உறுப்பினர் உதய கம்மன் பில அவர்கள்  நேற்று புதன்கிழமை (21) முல்லைத்தீவு மாவட்டத்தில் குருந்தூர் மலைக்கு தென்பகுதியில் இருந்து சிங்கள ஊடகவியாலர்கள் பலரையும் தேரர்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு  குறித்த பகுதிக்கு சென்றிருந்தார்.

IMG_8880.jpg

இதனைதொடர்ந்து, பௌத்த பூசை பொருட்களுடன் மலைக்கு ஏறிய தேரர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஆகியோர்  புதிதாக அமைக்கப்பட்ட குருந்தூர் மலை விகாரையில் வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்கள். இதன்போது சுடர் ஏற்றி மலர் வைத்து ஊதுபத்தி கொழுத்தி வழிபட்டுள்ளார்கள்.

IMG_8936.jpg

தொடர்ந்து பௌத்தமுறையில்   வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு குருந்தூர் மலையில் உள்ள ஏனை இடங்களையும் பார்வையிட்டுள்ளார்கள்.

IMG_8984.jpg

இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் உதயகம்மன்பில மற்றும் குறித்த விகாரையினை நீதிமன்ற கட்டளைகளை மீறி அமைத்துவரும் வட மாகாண பிரதான சங்க நாயக்கர்  கல்கமுவ சந்தபோதி தேரர்  ஆகியோர் கருத்து தெரிவித்தனர்.

IMG_8844.jpg

குறித்த நிகழ்வுக்கு சென்ற தமிழ் ஊடகவியலாளர்கள் புலனாய்வாளர்கள் மற்றும் அங்கு வருகைதந்த தேரர்களால் புகைப்படம் வீடியோ எடுத்து அச்சுறுத்தப்பட்டதோடு, குறித்த தமிழ் ஊடகவியலாளர்கள் சிலரை சுட்டிக்காட்டி   இவர்கள்  தான் இந்த விடயங்களை ஊடகங்களுக்கு கொண்டு சென்று பிரச்சினை ஆக்குவதாக வட மாகாண பிரதான சங்க நாயக்கர்  கல்கமுவ சந்தபோதி தேரர் அவர்களால் அங்கு வருகைதந்தவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

https://www.virakesari.lk/article/158293

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.