Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஜனாதிபதி தேர்தலில் பசில் போட்டி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜனாதிபதி தேர்தலில் பசில் போட்டி!

Digital News Team  
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை முன்னிறுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெரும்பான்மையான உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவின் தலைவரிடம் கடுமையாக கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுஜன பெரமுனவின் உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.எவ்வாறாயினும், அந்தத் தேர்தலில் பசில் ரபக்ஷ போட்டியிட்டால், அவர் தனது அமெரிக்கக் குடியுரிமையை விலக்கிக்கொள்ள வேண்டும் என்பதுடன், பசில் ராஜபக்ஷவும் அந்த விடயத்தை தற்போது பரிசீலித்து வருவதாகவும் அறியமுடிகிறது.இதன்படி, பசில் ராஜபக்ஷ தனது அமெரிக்க குடியுரிமையை துறந்து தேசியப்பட்டியல் எம்பியாக பாராளுமன்றத்திற்கு வந்து அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடும் வாய்ப்பு இருப்பதாக பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார் .

முன்னதாக, பொதுஜன பெரமுனவின் தேசியப் பட்டியலில் இருந்து பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் ஜயந்த கடகொட தனது தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து, பசில் ராஜபக்ஷவுக்கு அந்த ஆசனம் வழங்கப்பட்டது.

இந்த வருடம் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வந்தால் ஜயந்த கடகொட தனது தேசியப்பட்டியல் எம்.பி ஆசனத்தை வழங்க தயாராக இருப்பதாகவும், அவர் தவிர மேலும் பல பொதுஜன பெரமுன தேசியப்பட்டியல் எம்.பி.க்கள் தயாராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட மற்றும் பலம் வாய்ந்த உறுப்பினர்கள் கடந்த வாரம் பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் பல சுற்று விசேட கலந்துரையாடல்களை நடாத்தியதாகவும், இந்த விடயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டதாகவும் அறியமுடிகிறது. .

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் ஒருவரை நியமிக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் இந்த விடயம் தொடர்பில் பசில் ராஜபக்ஷ மேலதிக தகவல்கள் எதனையும் தெரிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் பேராசிரியர் ஒருவர், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கு தமது கட்சி தற்போது இரு வேட்பாளர்களை பரிசீலித்து வருவதாகவும் அவர்களில் ஒருவர் பொருளாதாரம் தொடர்பில் நன்கு அறிந்தவர் எனவும் மற்றையவர் நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு பொறுப்பேற்கக் கூடியவர் எனவும் தெரிவித்துள்ளார்.

பேராசிரியரின் கருத்துப்படி, பொருளாதாரம் பற்றி நன்கு அறிந்தவர் என்ற வகையில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே இருக்கலாம் என, கட்சியின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த விடயம் தொடர்பில் கட்சியில் மேலும் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாகவும் அதற்கமைய இறுதி முடிவு எட்டப்படும் எனவும் அறியமுடிகின்றது.

mawbima

Thinakkural.lk

  • கருத்துக்கள உறவுகள்

நான் அறிந்த வரையில் இப்போதைக்கு அவர் தயாராக இருப்பதாக தெரியவில்லை. இது விடயமாக ரணிலுடன் அவர் பேச்சு வார்த்தையில் இருக்கிறார். அநேகமாக இந்த பொருளாதார இஸ்திரத்தன்மை அடையும் வரைக்கும் ரணிலுக்கு அந்த வாய்ப்பு பிரகாசமாகவே இருக்கிறது.

பசிலுக்கும், நாமலுக்கும் இடையிலான உறவும் அவ்வளவு சீராக இல்லை. கட்சிக்குள்ளும் பிளவுகள் இருக்கின்றது. எனவே இது சம்பந்தமாக இந்த வருட முடிவு வரைக்கும் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் தனது பங்குக்கு அரசியல் கதிரை ஏறி துரத்தப்பட வேண்டும் என்று நியதி இருந்தால் யாரால் தடுக்க முடியும்?

On 3/7/2023 at 12:35, nochchi said:

பொருளாதாரம் பற்றி நன்கு அறிந்தவர் என்ற வகையில், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவே இருக்கலாம்

ஏன்..... பொருளாதாரப்பிரச்சனை எகிறி, போராட்டம் வெடித்து அண்ணன் துரத்தப்படும்பொழுது இவர் நாட்டில் அந்தக்கட்சியில் தானே அங்கம் வகித்தார்? இவர்களால் முடியாது என்றுதானே ரணிலிடம் ஆட்சியை கையளித்தனர். அப்போ இல்லாத பொருளாதார அறிவு இனிமேல் எப்படி வரும்? எப்படியெல்லாம் மக்களை முட்டாளாக்குகின்றனர். தங்கள் ஊழல்கள் படியேற முன் தாங்கள் கதிரை ஏறி தடுத்துவிட முயற்சி.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, satan said:

ஏன்..... பொருளாதாரப்பிரச்சனை எகிறி, போராட்டம் வெடித்து அண்ணன் துரத்தப்படும்பொழுது இவர் நாட்டில் அந்தக்கட்சியில் தானே அங்கம் வகித்தார்? இவர்களால் முடியாது என்றுதானே ரணிலிடம் ஆட்சியை கையளித்தனர். அப்போ இல்லாத பொருளாதார அறிவு இனிமேல் எப்படி வரும்? எப்படியெல்லாம் மக்களை முட்டாளாக்குகின்றனர். தங்கள் ஊழல்கள் படியேற முன் தாங்கள் கதிரை ஏறி தடுத்துவிட முயற்சி.

கோத்தாவை நோக்கிச் சுட்டுப்பட்டிருக்கும் மாத்தளைப் புதைகுழி விவகாரத்திற்குப் பின்னர் அரசுத்தலைமைக்கான அவசரம் தெரிகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

காகத்துக்கு மட்டும் பதவி ஆசை இல்லானல் போகுமா?
காகத்தையும், நாமலையும் வைத்து மீண்டும் ஆட்சிக்கு வர முயல்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

சுனாமி நிவாரணமாக வெளிநாடுகள் வழங்கிய உதவியை கொள்ளையடித்து அது விசாரணைக்கு வரும்போது, அண்ணன் அடிச்சு பிடிச்சு கதிரை ஏறினார். ஆயுத கொள்வனவு மோசடி இன்னும் பல மோசடிகள் கிளம்பும்போது, குண்டுகளை வெடிக்க வைத்து சின்னண்ணா கதிரையேறி பாதியிலே பறிபோனது. இப்போ மனித புதைகுழி தோண்ட வெளிக்கிட சின்னத்தம்பி கிளம்புகிறார். நாட்டில என்ன அழிவை ஏற்படுத்தப்போகிறார்களோ? வைச்ச தீயிலே இவர்கள் தான் கருகுகிறார்களோ பொறுத்திருந்து பாப்போம். பெரும்பாலும் விகாரைதான் தற்போதைக்கு கைகொடுக்குமென எதிர்பார்ப்பார்கள். எவ்வளவு தூரம் எடுபடுமென்பது தெரியவில்லை.

19 hours ago, nunavilan said:

காகத்துக்கு மட்டும் பதவி ஆசை இல்லானல் போகுமா?
காகத்தையும், நாமலையும் வைத்து மீண்டும் ஆட்சிக்கு வர முயல்கிறார்கள்.

நாமலை கதிரையேற்ற மஹிந்த மாத்தையா போட்ட கணக்கு அவரையே கதிரையில் இருந்து பதவிக்காலம் முடிய முதல் இறக்கிவிட்டது. தொடர்ந்து வந்த சம்பவங்கள் அவருக்கு சாதகமாகவில்லை, முயற்சிக்கிறார்கள். கதிரை தப்பினால் இவர்கள் கதை கந்தல், ஆகவே இது அவர்களின் சாவா வாழ்வா போராட்டம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.