Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குருந்தூர்மலையில் விகாரைக்கு சென்று வழிபாடு நடத்தினார் மறவன்புலவு சச்சிதானந்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்+

http://www.vaarakesari.lk/article/10039

 

குருந்தூரில் பௌத்த விகாரையை நிர்மாணித்து அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூர் தமிழர்கள் மற்றும் இந்து பக்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்களின் எதிர்ப்புகளையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கையில் உள்ள இந்துத்துவ சிவசேனை தலைவர்கள், குறிப்பாக மறவன்புலவு சச்சிதானந்தம், முல்லைத்தீவு குருந்தூர்மலை தொல்பொருள் தளத்தில் நிறுவப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பௌத்த விகாரையில் கல்கோமுவே சாந்தபோதி தேரருடன் இணைந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Image

 

குருந்தூர் பௌத்த விகாரைக்கு சென்று வழிபட்டதோடு மட்டுமால்லாது இவர் பிக்குகளின் இந்த கட்டுமானத்திற்கு ஆதரவும் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது.

இதன் மூலம் மறவன்புலவு சச்சிதானந்தத்தின் சிறிலங்கா பௌத்த சார்பு நிலை தெரியவந்துள்ளதாகவும் அவரின் நோக்கம் எல்லாம் தமிழரை மத ரீதியில் பிளவு படுத்துவதே என்றும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Image

 

இந்த மறவன்புலவு சச்சிதானந்தத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் ஆரோ சில விசமிகள் தமிழ்க்காவலன் என்ற விருது கொடுத்து வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. 

இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது என்று பொதுமக்கள்ளோடு பேசிய எமது நிருபர்கள் தெரிவித்துள்ளனர்.

Image

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, நன்னிச் சோழன் said:

http://www.vaarakesari.lk/article/10039

 

குருந்தூரில் பௌத்த விகாரையை நிர்மாணித்து அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூர் தமிழர்கள் மற்றும் இந்து பக்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்களின் எதிர்ப்புகளையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கையில் உள்ள இந்துத்துவ சிவசேனை தலைவர்கள், குறிப்பாக மறவன்புலவு சச்சிதானந்தம், முல்லைத்தீவு குருந்தூர்மலை தொல்பொருள் தளத்தில் நிறுவப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பௌத்த விகாரையில் கல்கோமுவே சாந்தபோதி தேரருடன் இணைந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

குருந்தூர் பௌத்த விகாரைக்கு சென்று வழிபட்டதோடு மட்டுமால்லாது இவர் பிக்குகளின் இந்த கட்டுமானத்திற்கு ஆதரவும் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது.

இதன் மூலம் மறவன்புலவு சச்சிதானந்தத்தின் சிறிலங்கா பௌத்த சார்பு நிலை தெரியவந்துள்ளதாகவும் அவரின் நோக்கம் எல்லாம் தமிழரை மத ரீதியில் பிளவு படுத்துவதே என்றும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இந்த மறவன்புலவு சச்சிதானந்தத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் ஆரோ சில விசமிகள் தமிழ்க்காவலன் என்ற விருது கொடுத்து வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. 

இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது என்று பொதுமக்கள்ளோடு பேசிய எமது நிருபர்கள் தெரிவித்துள்ளனர்.

 

 

இது எப்படி இருக்குது? சச்சிதானந்தம் ஐயா இந்து தமிழ் காவலன் என்பதை நிரூபித்திருக்கிறார். இனியாவது இவரது சுத்துமாத்து விளையாடடை இந்து தீவிரவாதிகள் புரிந்து கொண்டால் சரிதான். ஐயோ ஐயோ.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+
1 minute ago, Cruso said:

இது எப்படி இருக்குது? சச்சிதானந்தம் ஐயா இந்து தமிழ் காவலன் என்பதை நிரூபித்திருக்கிறார். இனியாவது இவரது சுத்துமாத்து விளையாடடை இந்து தீவிரவாதிகள் புரிந்து கொண்டால் சரிதான். ஐயோ ஐயோ.

Image

 

புத்தரின்ட காவலன் சிங்களவனுக்காக புத்தர் சிலையை போய் நட்டுக்குடுத்துட்டு வந்திருக்குது...

என்னத்தச் சொல்ல....

 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, நன்னிச் சோழன் said:

Image

 

புத்தரின்ட காவலன் சிங்களவனுக்காக புத்தர் சிலையை போய் நட்டுக்குடுத்துட்டு வந்திருக்குது...

என்னத்தச் சொல்ல....

 

ஐயாவுக்கு பின்னால ஒருத்தன் வெள்ளையுடுத்தி கும்புடுறான் பாருங்க. அதுதான் அழகோ அழகு. 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, Cruso said:

ஐயாவுக்கு பின்னால ஒருத்தன் வெள்ளையுடுத்தி கும்புடுறான் பாருங்க. அதுதான் அழகோ அழகு. 

அவர், கோபுர தரிசனம் செய்கிறார். 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நன்னிச் சோழன் said:

http://www.vaarakesari.lk/article/10039

 

குருந்தூரில் பௌத்த விகாரையை நிர்மாணித்து அபிவிருத்தி செய்வதற்கு உள்ளூர் தமிழர்கள் மற்றும் இந்து பக்தர்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்களின் எதிர்ப்புகளையெல்லாம் பொருட்படுத்தாமல் இலங்கையில் உள்ள இந்துத்துவ சிவசேனை தலைவர்கள், குறிப்பாக மறவன்புலவு சச்சிதானந்தம், முல்லைத்தீவு குருந்தூர்மலை தொல்பொருள் தளத்தில் நிறுவப்பட்டுள்ள சர்ச்சைக்குரிய பௌத்த விகாரையில் கல்கோமுவே சாந்தபோதி தேரருடன் இணைந்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Image

 

குருந்தூர் பௌத்த விகாரைக்கு சென்று வழிபட்டதோடு மட்டுமால்லாது இவர் பிக்குகளின் இந்த கட்டுமானத்திற்கு ஆதரவும் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது.

இதன் மூலம் மறவன்புலவு சச்சிதானந்தத்தின் சிறிலங்கா பௌத்த சார்பு நிலை தெரியவந்துள்ளதாகவும் அவரின் நோக்கம் எல்லாம் தமிழரை மத ரீதியில் பிளவு படுத்துவதே என்றும் பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

Image

 

இந்த மறவன்புலவு சச்சிதானந்தத்திற்கு சில நாட்களுக்கு முன்னர் ஆரோ சில விசமிகள் தமிழ்க்காவலன் என்ற விருது கொடுத்து வாழ்த்தியமை குறிப்பிடத்தக்கது. 

இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது என்று பொதுமக்கள்ளோடு பேசிய எமது நிருபர்கள் தெரிவித்துள்ளனர்.

Image

 

இவ்வளவு தமிழர்கள், தமிழ் அரசியல்வாதிகள், சமூக அமைப்புகள் 
குருந்தூர் மலை விகாரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க…
நீதிமன்றமும் புதிய விகாரைக்கு தடை சொல்லி தீர்ப்பு அளித்திருக்கும் நிலையில்….
சச்சிதானந்தம் அங்கு போய் நின்று… முழுத் தமிழர்களின் முகத்திலும்
கரியை பூசி விட்டார். 

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Cruso said:

ஐயாவுக்கு பின்னால ஒருத்தன் வெள்ளையுடுத்தி கும்புடுறான் பாருங்க. அதுதான் அழகோ அழகு. 

உஸ்ஸ்ஸ் பக்தி பக்தி.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

உஸ்ஸ்ஸ் பக்தி பக்தி.

அண்ணனுக்கு பக்தி முத்திபோயிட்டுது 

  • கருத்துக்கள உறவுகள்

ஐம்பூதங்களை வணங்கும்  எங்களுக்கு கோயில்கள் எதற்கு என்றவர், ஏன் விகாரையில் போய் கும்பிடுகிறார்? இவருக்கு வெளிநாட்டுக்கு அழைத்தும் தமிழ் காவலன் என்று பாராட்டு செய்தவை தமிழர். தமிழ் பாரம்பரியம்  தெரியாதவர்கள், கிறிஸ்தவர்களை சீண்டுவதே தமிழ்ப்பணி என்று நினைக்கிறார்கள் போலும். அறிவு குறைந்த, செயற்றிறனற்ற, புகழுக்கு அடிமை பட்டவர்கள் எப்போதும் அடிமையாகவே இருப்பார்கள். இவர்களை புகழ்ந்து விட்டால் போதும் பைத்தியம்போல் உளறுவார்கள், இவர்களையே  இப்போது தமிழர் மத்தியில் அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள்.

1 hour ago, Cruso said:

ஐயாவுக்கு பின்னால ஒருத்தன் வெள்ளையுடுத்தி கும்புடுறான் பாருங்க. அதுதான் அழகோ அழகு. 

வடிவாய் பாருங்கோ! அவர் ஆகாயத்தை பாத்து  கும்பிடுகிறார், வீட்டிலேயே இருந்து கும்பிட்டிருக்கலாம், எதற்கு வீணாக  உடுத்தி படுத்தி, பிரயாணம் செய்து வந்து  விகாரையில கும்பிடவேணும்? இப்போ மக்களால் விரும்பப்படாதவர் அந்த மக்களின் அரசியல் தலைவர், சைவத்தை விட்டுக்கொடுப்பவர் சமயத்தின் காவலன். தமிழரை கூறு போடுவதில் சிங்களம் போட்டி போட்டு ஆள் பிடிக்குது. அண்மையில் சரத் வீர சேகர ஒரு கருத்து தெரிவித்திருந்தார் அதாவது, வெள்ளாளர் மற்ற மக்களை மதிப்பதில்லையாம் அவர்களுக்கெதிராக தமிழர் போராட வேண்டுமாம். எல்லாம் வரிசையாக கிளம்பி நிக்குது தமிழரை அழிப்பதற்கு. வெகு விரைவில் இன்னொரு குழப்பியை இறக்கும் சிங்களம் எங்களை குழப்பியடிக்க.

  • கருத்துக்கள உறவுகள்

ஆக மொத்தத்தில் அரசின் நிகழ்ச்சி நிரலில் பலர்

சத்தம் போடாம போயிடுவம் 🤫🤫🤫🤔

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்+

நான் ஒரு உண்மையைச் சொல்லட்டோ.... 

 எந்தவொரு தமிழ் நாளேடுகளோ இல்லை தமிழ் வலைத்தளங்களோ (யாழ் நீங்கலாக) இவன்(ர்) சென்று செய்த இந்தப் புல்லுருவித்தனத்தைப் பற்றி வாய்திறந்ததாகத் தெரியவில்லை... எல்லோரும் ஒன்றாய்ச் சேர்ந்து மறைச்சிட்டாங்கள் என்டு நினைக்கிறன். (பல வலைத்தளங்கள் இருப்பதால் உறுதிபடத் தெரியவில்லை)

நான் உந்தச் செய்தியை துவிட்டரிலை இருந்துதான் எடுத்தனான் (Lankanfiles). நான் கொடுத்திருக்கும் உந்தக் கொழுவி(link) போலியானது...😁👋😛

விசயம் என்னென்டால், உந்தாளின்ர புல்லுருவித்தனத்தை வெளிச்சம் போட்டுக் காட்டவேணும் என்டதுக்காகத் தான் உப்பிடிச் செஞ்சனான்!

உதிலிருந்தும் உந்தாளின் கடந்த கால செயற்பாடுகளிலிருந்தும் நாம் அறிவது யாதெனில், உந்த சச்சிதானந்தம் என்ட புல்லுருவி ஈழத் தமிழருக்குள் இருக்கும் மத ஒற்றுமையை பிரித்தெறிவதற்கென்று (இந்துக்கள் + வேதக்காரர்) தீயாய் உழைக்கிறான், சிங்கள & இந்திய அரசிற்காக என்பதை அறிந்து எச்சரிக்கையாக செயலாற்றுங்கள் தமிழர்களே! 

 

Edited by நன்னிச் சோழன்

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

இவ்வளவு தமிழர்கள், தமிழ் அரசியல்வாதிகள், சமூக அமைப்புகள் 
குருந்தூர் மலை விகாரைக்கு எதிர்ப்பு தெரிவிக்க…
நீதிமன்றமும் புதிய விகாரைக்கு தடை சொல்லி தீர்ப்பு அளித்திருக்கும் நிலையில்….
சச்சிதானந்தம் அங்கு போய் நின்று… முழுத் தமிழர்களின் முகத்திலும்
கரியை பூசி விட்டார். 

சிவ பூமிக்கே இப்படியொரு  நிலைமை. ஒரு கிறிஸ்தவ ஆலயமாக இருந்திருந்தால் ராக்கெட் லாஞ்சர் வைத்து அடித்திருப்பார். சிவபூமி மக்களுக்குவிளங்கினாள் சரி. 

22 hours ago, satan said:

 இப்போ மக்களால் விரும்பப்படாதவர் அந்த மக்களின் அரசியல் தலைவர், சைவத்தை விட்டுக்கொடுப்பவர் சமயத்தின் காவலன். தமிழரை கூறு போடுவதில் சிங்களம் போட்டி போட்டு ஆள் பிடிக்குது. அண்மையில் சரத் வீர சேகர ஒரு கருத்து தெரிவித்திருந்தார் அதாவது, வெள்ளாளர் மற்ற மக்களை மதிப்பதில்லையாம் அவர்களுக்கெதிராக தமிழர் போராட வேண்டுமாம். 

தமிழர்களுக்குள் சாதி பிரச்சினை இல்லை என்பதல்ல. இருந்தாலும் பொதுவாக தமிழர்கள் இப்போது அதனை அலட்டிக்கொள்ளுவதுமில்லை, பேசுவதுமில்லை. ஆனால் சிங்களவன் அதை மனதில் வைத்திருக்கிறான். அப்படியான காரியங்களை சொல்லி தமிழனை பிரிப்பதில் எவ்வளவு கரிசனையாக இருக்கிறார்கள்ப்பாருங்கள். இருந்தாலும் இந்த ஐயாவுக்கு வயதுபோன காலத்தில் அறளை பேந்துவிடடதோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

அணைந்து போவதை ஊதிப்பெருப்பித்து அதில் குளிர் காய்ந்து தன்னை தக்க வைப்பதே சிங்களம். ஒற்றுமையாக வாழ்ந்த சைவ, கிறிஸ்தவர்களை பிரிக்க, இந்த வாழ்ந்து முடிந்த ஒருவரை சதிராட இறக்கவில்லையா? அவருக்கு மாலையும் வரவேற்பும் தமிழராலேயே வழங்கப்படவில்லையா? அந்த கையோடு விகாரையில் வழிபாடு சொல்லும் செய்தியென்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, satan said:

அணைந்து போவதை ஊதிப்பெருப்பித்து அதில் குளிர் காய்ந்து தன்னை தக்க வைப்பதே சிங்களம். ஒற்றுமையாக வாழ்ந்த சைவ, கிறிஸ்தவர்களை பிரிக்க, இந்த வாழ்ந்து முடிந்த ஒருவரை சதிராட இறக்கவில்லையா? அவருக்கு மாலையும் வரவேற்பும் தமிழராலேயே வழங்கப்படவில்லையா? அந்த கையோடு விகாரையில் வழிபாடு சொல்லும் செய்தியென்ன? 

அதாவது இவர் ஒரு சிங்களவர்களின் முதலாம் தர கைக்கூலி என்று சொல்ல வருகிறீர்கள். அப்படியே.

  • கருத்துக்கள உறவுகள்

அவரின் வயதுக்கு செய்யும் வேலையை பாத்தா வேறு என்னத்தை சொல்லலாம்? கிறிஸ்தவர்களோடு மல்லுக்கு நிக்கிறார் அதே நேரம் விகாரையில் வழிபடுகிறார். சைவருக்கு வழிபடுவதற்கு கட்டிடம் தேவையில்லை என்றவர் விகாரைக்கு ஏன் போனவர்? யாரை மகிழ்விக்க? யாரை தலைகுனிய வைக்க?  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.