Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சாணக்கியனை போடா என்று கூறிய அமைச்சர் சந்திரகாந்தன் : அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் சர்ச்சை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சாணக்கியனை போடா என்று கூறிய அமைச்சர் சந்திரகாந்தன் : அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் சர்ச்சை!

சாணக்கியனை போடா என்று கூறிய அமைச்சர் சந்திரகாந்தன் : அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் சர்ச்சை!

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுக்கூட்டம் இன்று நடைபெற்ற நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனை நோக்கி, ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் தகாத வார்த்தைப் பிரயோகத்தைப் பயன்படுத்தியமையால் அங்கு சர்ச்சை ஏற்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி மீளாய்வுகூட்டம் இன்று பலத்த பாதுகாப்புக்கு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், கிழக்கு மாகாண ஆளுனர் செந்தில் தொண்டமான், அமைச்சர் ஹாபீஸ் நசீர் ஹகமட், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

அத்தோடு, அரச அதிகாரிகள், பாதுகாப்புப் பிரதானிகள் உள்ளிட்டவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர்.

இந்தக் கூட்டத்தில் மாவட்டத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக கருத்துக்கள் வெளியிடப்பட்ட நிலையில், அண்மையில் பொலன்னறுவை, மன்னம்பிட்டிய பகுதியில் விபத்துக்குள்ளான பேருந்து விவகாரம் குறித்தும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தார்.

குறித்த தனியார் பேருந்து சேவைக்கு இரண்டு அனுமதிப் பத்திரங்கள் மாத்திரம் இருக்கும் நிலையில், சட்டவிரோதமான முறையில் பல வழித்தடங்களில் இது இயங்குவதாக குற்றஞ்சாட்டியிருந்தார்.

விபத்துக்குள்ளான வழித்தடத்தில் பயணிக்க குறித்த தனியார் பேருந்து சேவைக்கு அனுமதி இல்லாத நிலையில், நேற்று இரவும், குறித்த பேருந்து சேவைக்கு சொந்தமான பேருந்தை பொலன்னறுவை பகுதியில் வைத்து தான் கண்டதாகவும் சாணக்கியன் தெரிவித்திருந்தார்.

இந்த விவகாரங்கள் தொடர்பாக அபிவிருத்திக் குழுக்கூட்டத்தில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், தன்னால் வழங்கப்பட்ட காணொளியொன்றை ஒளிபரப்புமாறு அதிகாரிகளிடத்தில் கோரினார்.

இதன்போது குறுக்கிட்ட ஆளும்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினரான சிவநேசதுரை சந்திரகாந்தன், அவ்வாறு காணொளிகளை ஒளிபரப்ப முடியாது என்று எதிர்ப்பினை வெளியிட்டார்.

எனினும், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் காணொளியொன்றை ஒளிபரப்ப முடியுமானால் தனக்கும் அந்த உரிமையை வழங்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தொடர்ந்தும் குரல் எழுப்பிய நிலையிலேயே இந்த முரண்பாடு ஏற்பட்டது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினரான சிவநேசதுரை சந்திரகாந்தன் சாணக்கியனை நோக்கி, ஒறுமையில் பேசியதுடன் தகாத வார்த்தைப் பிரயோகத்தையும் பயன்படுத்தினார்.

இதனால் இரு உறுப்பினர்களுக்கும் இடையே முரண்பாடு ஏற்பட்டதுடன், அமர்விலும் சலசலப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்த நிலையில், மக்களின் சில பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டதுடன், தீர்மானங்களும் எடுக்கப்பட்டன.

https://athavannews.com/2023/1341577

 

  • கருத்துக்கள உறவுகள்

image_9d70489f47.jpg

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி குழுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை (25) இடம்பெற்றது.

இந்த கூட்டத்தில் தனியார் போக்குவரத்து சேவையில் சட்டவிரோதமாக  அனுமதிபத்திரமின்றி சேவையில் ஈடுபடும் சச்சின் ரவல் பஸ்வண்டி தொடர்பாக  நடவடிக்கை எடுக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கோரினார்.

கூட்டத்துக்கு தலைமை தாங்கிய மாவட்ட அபிவிருத்தி குழு தலைவரும் இராஜாங்க அமைச்சருமான சி.சந்திரகாந்தன், சாணக்கியதை பார்த்து ”போடா” என காட்டமாக தெரிவித்ததையடுத்து அங்கு அமளிதுமளி ஏற்பட்டது.

மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம்  பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிள்ளையான் என அழைக்கப்படும் இராஜாங்க அமைச்சர் சி.சந்திரகாந்தன்  தலைமையில் இடமபற்றது. இதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், அமைச்சர் ஹாபீஸ் நஸீர் அஹ்மத், இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், இரா.சாணக்கியன், மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பத்மராஜா கலாமதி,  மற்றும் திணைக்கள பணிப்பாளர்கள் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது ஆளுநர் மயிலத்தமடு மாதவனை மேச்சல் தரை கால்நடைகளின் மேச்சல் தரைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கான நடவடிக்கை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்தார். இதனை தொடர்ந்து இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் வாகரை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள தமிழ் மன்னர்களின் வரலாற்றை குறிக்கும் தொல்லியல் பகுதியான குளத்தை சட்டவிரோதமாக மணல் அகழ்வும் வீடியோ காட்சியை ஏனையவர்கள் பார்ப்பதற்காக  புரடெக்டரில் போடுமாறு தெரிவித்த போது அங்கு பிள்ளையானுக்கும் வியாழேந்திரனுக்கும் இடையே வாக்குவாம் ஏற்பட்டது

இந்த நிலையில் அமைச்சர்  ஹாபீஸ் நஸீர் அஹ்மத் தற்போது காத்தான்குடி கல்வி அதிகாரியை மாற்றியது மற்றும் ஏறாவூரிர் நகரசபை குப்பைகளை கொட்டுவதற்கான இடம் தொடர்பாகவும் கடந்த காலத்தில் கிழக்கு முதலமைச்சாரக இருக்கும் போது கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு கொள்வனவு செய்து கொடுத்த வாகனத்தை எவ்வாறு தற்போதைய ஆளுநர் பாவிக்க முடியும் எனவும் ஒரு குழு அமைக்க வேண்டும் என தெரிவித்தார்

இதன் போது குறுக்கீடு செய்த பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரன் இந்த அபிவிருத்தி குழு கூட்டத்தில் உங்களுடைய தனிப்பட்ட பிரச்சனை கதைப்பற்கு இங்குவரவில்லை அப்படியென்றால் நாங்கள் வெளியேறுவதாகவும் இந்த  குழுவை எக்காரணம் கொண்டும் நாங்கள் அனுமதிக்க முடியாது இந்த அபிவிருத்தி கழு கூட்டத்தை துஸ்பிரயோகம் செய்வதாகும் எனறார்.

 

இதனிடையே கருத்துரைத்த இரா. சாணக்கியன் எம்.பி, தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சச்சின் ரவல் ட்ரவல்ஸ், அனுமதிப்பத்திரத்தை  மீறி சட்டவிரோதமாக சேவையில் ஈடுபடுவதாக ஆளுநரிடம் தெரிவித்ததையடுத்து குறுக்கீடு செய்த பிள்ளையான் வாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் போடா என சாணக்கியன் மீது காட்டமாக தெரிவித்தார். இதனால், சாணக்கியனுக்கும் பிள்ளையானுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதுடன் அங்கு அமளிதுமளி ஏற்பட்டது

இந்த வாக்குவாதத்தை அடுத்து வேறு ஒரு கூட்டத்துக்கு செல்வதற்காக கூறி, ஆளுநர் அங்கிருந்து வெளியேறினார்.  அபிவிருத்திக் குழு கூட்டத்தில் எடுக்க வேண்டிய சில தீர்மானங்கள் சரியாக எடுக்கப்படாமல் கூட்டம் முடிவுக்கு வந்தது. அதனையடுத்து அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.

Tamilmirror Online || சாணக்கியனை போடா என்றார் பிள்ளையான்

  • கருத்துக்கள உறவுகள்

அவரை அரசியல் வைத்திருப்பது எதற்கு என்பது இப்பவாவது புரிந்திருக்கும். சக பாராளுமன்ற உறுப்பினரை மதிக்கத்தெரியாதவர், எப்படி ஓர் சாதாரண பொதுமகனை நடத்துவார் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு! 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நடந்த சம்பவங்களை பார்க்கும்போது யார் சடட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள் என்று நன்றாகவே விளங்குகின்றது. சடடம் எல்லாம் தன கடமையை செய்யவில்லை என்பதும், அரசியல் அதிகாரம் எப்படி துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றது என்பது விளங்குது. மக்கள்தான் இனி வரும் காலங்களில் நல்லதை தீர்மானிக்க வேண்டும்.

மேலும் , நஸீர்  அவர்களுக்கு ஒரு தமிழன் ஆளுநராக இருப்பது எவ்வளவு மனகஸ்ட்டத்தை ஏட்படுத்தி இருக்கிறது என்பதையும் காண கூடியதாக இருக்கின்றது. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.