Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெளிநாட்டு இராஜதந்திரிகள் - வலிந்து காணாமலாக்கப்பட்டோரின்உறவுகளுக்கு இடையில் ஓகஸ்ட் முதல் வாரம் முக்கிய சந்திப்பு?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 JUL, 2023 | 06:13 PM
image
 

(நா.தனுஜா)

இலங்கையிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் இடையில் எதிர்வரும் ஓகஸ்ட் முதல் வாரத்தில் விசேட சந்திப்பொன்று நடைபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

வலிந்து காணாமலாக்கப்பட்ட தமது உறவுகளுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்தும் அதேவேளை, குற்றவாளிகளைப் பொறுப்புக்கூறச்செய்வதன் மூலம் நீதியை நிலைநாட்டுமாறு வலியுறுத்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் 2000 நாட்களுக்கும் மேலாகத் தொடர் கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

அதுமாத்திரமன்றி இவ்விடயத்தில் அரசாங்கத்தினால் நிறுவப்படுகின்ற உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு உள்ளிட்ட எந்தவொரு உள்ளகப்பொறிமுறையையும் ஏற்றுக்கொள்ளமுடியாது என்றும், மாறாக சர்வதேசப் பொறிமுறையின் ஊடாக தமக்கு நீதியை வழங்கவேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த வாரம் யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான கனேடியத்தூதுவர் எரிக் வோல்ஷுக்கும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் முக்கியஸ்த்தர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது.

அதன் நீட்சியாக எதிர்வரும் ஓகஸ்ட்மாத முதல் வாரத்தில் கொழும்பிலுள்ள முக்கிய வெளிநாட்டு இராஜதந்திரிகளுக்கும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நடைபெறக்கூடிய சாத்தியம் உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் அறியமுடிகின்றது.

https://www.virakesari.lk/article/161224

  • கருத்துக்கள உறவுகள்

காணாமல் போனோர் அலுவலக ஆணையாளர் இராஜினாமா !!

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு குறித்து தமக்கு எதுவும் தெரியாது – இராஜதந்திரிகள்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு தொடர்பான சட்டவரைபின் உள்ளடக்கம் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என அதற்கு ஒத்துழைப்பை வழங்கிவரும் தென்னாபிரிக்கா, சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.

ஆணைக்குழு தொடர்பாக சிவில் சமூகப்பிரதிநிதிகளின் நிலைப்பாட்டை கேட்டறிந்து, அதற்கு அமைவாக அரசாங்கத்திடம் சில நிபந்தனைகளை முன்வைப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக அந்த நாடுகளின் இராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்னாபிரிக்கா, சுவிட்ஸர்லாந்து மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இராஜதந்திரிகள் மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் கொழும்பில் நடைபெற்ற போதே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினால் எவ்வித பயனும் ஏற்படாது என்பதை சிவில் சமூகப்பிரதிநிதிகள் மீண்டும் அழுத்தம் திருத்தமாக இராஜதந்திரிகளிடம் எடுத்துரைத்தனர்.

இதேவேளை ஒரே நாளில் எல்லாம் மாறிவிடாது என்றும் இச்செயன்முறையை நடைமுறைப்படுத்துவதற்கும், அதன்மூலம் மாற்றம் ஏற்படுவதற்கும் காலம் எடுக்கும் என்றும் ஜப்பான் தூதுவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு இந்த விடயத்தில் நடுநிலையாகவே தாம் செயற்படுவோம் என தென்னாபிரிக்க உயர்ஸ்தானிகர் சிவில் சமூகப்பிரதிநிதிகளிடம் தெரிவித்திருந்தார்.

இதேநேரம் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை எனப் பாதிக்கப்பட்ட தரப்பினர் பகிரங்கமாகவே அறிவித்திருக்கும் பின்னணியில் சிவில் சமூகப்பிரதிநிதிகளுக்குப் பயிற்சிப்பட்டறை ஒன்றை நடாத்துவதற்கு இலங்கையிலுள்ள சுவிட்ஸர்லாந்து தூதரகம் திட்டமிட்டுள்ளது.

https://athavannews.com/2023/1342358

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொழும்பில் தூதரக அதிகாரிகள் சிலரை சந்தித்து கலந்துரையாடல்

Published By: VISHNU

01 AUG, 2023 | 02:45 PM
image
 

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கொழும்பில் தூதரக அதிகாரிகள் சிலரை சந்தித்து கலந்துரையாடினர்.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக தங்களுடைய உறவுகளை தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்ற அதே வேளையிலே சர்வதேச விசாரணையை கோரியே தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

இவ்வாறான பின்னணியில் இலங்கை அரசானது தொடர்ச்சியாக தங்களுக்கு தீர்வை வழங்காத நிலையில் தமக்கு சர்வதேச விசாரணை கோரி போராடும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கான நீதியினை பெற்றுத்தர ஆவண செய்ய வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதுவர்களை சந்தித்து தமது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/161416

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, ஏராளன் said:

கொழும்பில் தூதரக அதிகாரிகள் சிலரை

எந்த நாட்டு தூதரகங்கள்?

ரஸ்யா? சீனா?

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, goshan_che said:

எந்த நாட்டு தூதரகங்கள்?

ரஸ்யா? சீனா?

ரஸ்யா சீனா அதிகாரிகளுக்கு சார்பாக பெலருஸ் அதிகாரிகள் தோன்றுவார்களோ!

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.