Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கடற்கரைச்சாலை ஓரம்

Featured Replies

2617083479be6eedcc0bv6.jpg

கடற்கரைச் சாலையோரம்

அந்தி சாயும் மாலை நேரம்

கடல் மகள் கலைந்த கோலம்

கண்களில் காதல் ஜாலம்

அலைகளின் ஆட்டம் எல்லாம்

கரைகளை கரைத்து சீண்டும்

கடலிடை நாரைக்கூட்டம்

காத்திடும் இரைகள் தேட

மணலிலே நண்டுக்குடைகள்

கடலுடன் தூது பேசும்

தவழ்ந்திடும் தென்றல் காற்று

உடலதை வருடிச்செல்லும்

கரைந்திடும் காக்கை

உறைவிடம் நாடிச்செல்லும்

இயல் இசைக்கவிதையாக

இயற்கையைப் போற்றிப்பாடும்

Edited by இலக்கியன்

  • கருத்துக்கள உறவுகள்

அலைகளின் ஆட்டம் எல்லாம்

கரைகளை கரைத்து சீண்டும்

கடலிடை நாரைக்கூட்டம்

காத்திடும் இரைகள் தேட

மணலிலே நண்டுக்குடைகள்

கடலுடன் தூது பேசும்

அழகான வரிகள் இலக்கியன் .

  • தொடங்கியவர்

அலைகளின் ஆட்டம் எல்லாம்

கரைகளை கரைத்து சீண்டும்

கடலிடை நாரைக்கூட்டம்

காத்திடும் இரைகள் தேட

மணலிலே நண்டுக்குடைகள்

கடலுடன் தூது பேசும்

அழகான வரிகள் இலக்கியன் .

வணக்கம் கறுப்பி உங்கள் கருத்துக்கு நன்றி

மற்றயவரிகள் பிடிக்க வில்லையோ B) :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இலக்கியனின் மற்ற வரிகளும் பிடிக்காமல் போகுமா?

இந்த வரிகளில் பொதிந்திருக்கும் நாரைக்கூட்டங்கள், நண்டுக்குடைகள் எடுத்து வியம்பிய விதம் அதிகமாகவே ஈர்த்திருக்கின்றது கவிஞரே .

இனிய மாலை பொழுதில் கடற்கரை சாலையை ஆர்பரிக்கும் அலை போல் இல்லாம மெதுவாக வீசும் தென்றல் காற்றை போல் சொல்லி சென்ற விதம் அருமை வாழ்த்துகள் அண்ணா!! :)

கடல் மகள் கலைந்த கோலம்

கண்களில் காதல் ஜாலம்

இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் நல்ல ஒரு கற்பனை.........மிகவும் அழகான வரிகள்!! :)

இலக்கியன் கவிதை அருமை அப்படியே கடற்கரையில் உலாவந்தமாதிரி இருக்கு வாழ்த்துக்கள் :)

  • தொடங்கியவர்

இலக்கியனின் மற்ற வரிகளும் பிடிக்காமல் போகுமா?

இந்த வரிகளில் பொதிந்திருக்கும் நாரைக்கூட்டங்கள், நண்டுக்குடைகள் எடுத்து வியம்பிய விதம் அதிகமாகவே ஈர்த்திருக்கின்றது கவிஞரே .

நன்றி கறுப்பி உங்கள் கருத்துக்கு

நான் நகைச்சுவையாக கூறினேன்

  • தொடங்கியவர்
இனிய மாலை பொழுதில் கடற்கரை சாலையை ஆர்பரிக்கும் அலை போல் இல்லாம மெதுவாக வீசும் தென்றல் காற்றை போல் சொல்லி சென்ற விதம் அருமை வாழ்த்துகள் அண்ணா!! :rolleyes: இந்த வரிகள் எனக்கு மிகவும் பிடித்த வரிகள் நல்ல ஒரு கற்பனை.........மிகவும் அழகான வரிகள்!! :lol:
யமுனா உங்கள் கருத்துக்கு நன்றி அழகாக கருத்து சொன்னீர்கள்
இலக்கியன் கவிதை அருமை அப்படியே கடற்கரையில் உலாவந்தமாதிரி இருக்கு வாழ்த்துக்கள் :lol:
பாலன் உங்கள் வாழ்த்து கிடைத்ததே பெருமை நன்றி

Edited by இலக்கியன்

அழகாய் இருக்கின்றது கவிதை, காட்சிகளை போலவே.

  • தொடங்கியவர்

அழகாய் இருக்கின்றது கவிதை, காட்சிகளை போலவே.

உங்கள் கருத்துக்கு நன்றி

மாலை நேரக் கடற்கரைக் காட்சியை கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள். இலக்கியன் வாழ்த்துக்கள்.

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

மாலை நேரக் கடற்கரைக் காட்சியை கண்முன் கொண்டுவந்து விட்டீர்கள். இலக்கியன் வாழ்த்துக்கள்.

உங்கள் கருத்துக்கு நன்றி இரசிகை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.