Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

குடும்ப அரசியல் ஆதிக்கம்

Featured Replies

பசில் ராஜபக்ச நாளை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுகிறார்

சிறீலங்கா அரச அதிபரின் ஆலோசரும் சகோதரருமான பசில் ராஜபக்ச நாளை நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க உள்ளார்.

நாளை புதன்கிழமை காலை 9.30 மணியளவில் இவர் அரச அதிபர் முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்யப்பட்டு நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படவுள்ளார்.

இதற்கான அறிவித்தல் அரச வர்த்தமானி மூலம் வெளியிடப்படவுள்ளது.

இவர் சாவடைந்த பிரதி நீர்ப்பாசன அமைச்சர் அன்வர் இஸ்மாயிலின் வெற்றிடத்திற்கு தேசிய பட்டியல் மூலம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக சுதந்திர ஜக்கிய முன்னியின் செயலாளர் சுசில் பிரேம் ஜயந்த தேர்தல் ஆணையாளருக்கு அறிவித்துள்ளார்.

இதனை தேர்தல் ஆணையாளரும் பசில் ராஜபக்சவின் பெயரை ஏற்றுக்கொண்டார். இந்த நிலையில் நாளை பசில் ராஜபக்ச சத்தியப் பிரமாணம் செய்யவுள்ளார்.

http://www.pathivu.com/

அப்படி போடுங்கோ இனி 100% பட்ஜட்டும் ராஜபக்ஸ குடும்பத்தின் கட்டுப்பாட்டில்தான்

சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், அவரது முதன்மை ஆலோசகருமான பசில் ராஜபக்ச சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்க எதிர்க்கட்சியினர் இன்று கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் வாசிக்க

மகிந்த ராஜபக்ச பரம்பரையில் இருந்து அரசியலுக்கு பிரவேசிக்கும் எட்டாவது நபர் பசில் ராஜபக்ச என்பது குறிப்பிடத்தக்கது.

கடத்தலுக்கு ஒருவர், ஆயுதக் கொள்வனவு மோசடிக்கு ஒருவர்.... என்று ஒவ்வொரு துறைக்கும் குடும்ப அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரச பதவிகளுக்குள் புகுந்து, சுருட்டுவதைச் சுருட்டிக் கொண்டு, ஆட்சி மாறியவுடன் வெளிநாடுகளுக்குப் பாய்ந்துவிட வேண்டியதுதானே.

  • கருத்துக்கள உறவுகள்

10 வீத எம்.பியாகப் பதவியேற்ற சமயம் நாடாளுமன்றில் நேற்று அமளி துமளி! 10 வீத சுலோக அட்டைகளுடன் ஐ.தே.கட்சி உறுப்பினர்கள். ஜ வியாழக்கிழமைஇ 20 செப்ரெம்பர் 2007 ஸ ஜ யோகராஜன் ஸ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சகோதரரும் அவரின் சிரேஷ்ட ஆலோசகருமான பஸில் ரோஹண ராஜபக்ஷ நேற்றுப் புதிய நாடாளுமன்ற உறுப்பினராகப் பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோது சபையில் அமளிதுமளி ஏற்பட்டது. சபை நடவடிக்கைகளும் பத்து நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டன. சபை ஒத்திவைக்கப்பட்ட நிலையிலும் ஆளும் கட்சி உறுப்பினர்களின் அட்டகாசம் ஓயவில்லை.ஆளும்கட்சி உறுப்பினரான அமைச்சர் மேர்வின் சில்வா சபாநாயகரின் கடுமையான எச்சரிக்கைக்கும் கண்டனத்திற்கும் உள்ளானார்.பஸில் ரோஹண ராஜபக்ஷ சபாநாயகரின் முன் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தபோது எதிர் வரிசையில் ஐ.தே.க. உறுப்பினர்கள் "10மூ கொமிஷன்' எனப் பொறிக்கப்பட்ட சுலோக அட்டைகளை உயர்த்திப் பிடித்துக்கொண்டு "ராஜபக்ஷ சகோதர கம்பெனியில் கோட்டாபய மட்டுமே பாக்கி. அவர் எப்போது வருவார்?' எனக் கோஷமிட்டனர்.ஆளும் கட்சிஉறுப்பினர்கள் மிகவும் மோசமான வார்த்தைகளால் தூஷித்துக் கொண்டு சபை நடுவே வந்து எதிர்க்கட்சியினர் பக்கம் பாய்ந்தனர்.ஆளும்கட்சி உறுப்பினர்களைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டிய ஆளும்கட்சிக் கொரடாவே அவர்களைத் தூண்டிவிடும் வகையில் செயற்படுகின்றமை கவலைக்குரியது என அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே மீது சபாநாயகர் குற்றம் சாட்டினார்.நேற்றுக்காலை 9.30 மணிக்கு சபாநாயகர் டபிள்யூ. ஜே.எம். லொக்குபண்டார தலைமையில் நாடாளுமன்றம் கூடியது.சபாநாயகர் தனது ஆசனத்திற்கு வருவதற்கு முன் பஸில் ராஜபக்ஷ படைக்கல சேவிதரின் அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் வந்து அமர்ந்திருந்தார்.அமைச்சர்கள

  • தொடங்கியவர்

குடும்ப அரசியல் ஆதிக்கம்

தெற்காசிய சமூகங்கள் இன்னும் நிலப்பிரபுத்துவ பாரம்பரியங்களுக்குள் மூழ்கிக்கிடப்பதன் காரணத்தினாலேயே அவற்றின் அரசியலில் குடும்ப அந்தஸ்து கூடுதல் முக்கியத்துவத்தைப் பெறக்கூடியதாக இருக்கிறது. மகனோ, மகளோ தந்தையின் நிலத்தையும் உடைமைகளையும் வாரிசு உரிமையாகப் பெறுவதைப் போன்று அரசியலிலும் குடும்பங்களின் ஆதிக்கம் தொடருகிறது. எமது பிராந்திய நாடுகளில் அரசியலில் குடும்பச் செல்வாக்கு ஆதிக்கம் செலுத்துவதைப் போன்று அபிவிருத்தியடைந்த மேற்கு நாடுகளில் காணப்படுவதில்லை.

இலங்கை அரசியலில் குடும்ப ஆதிக்கம் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழான பழைய சட்ட சபைக் காலத்திலிருந்தே தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் நேரு வம்சத்தின் ஆதிக்கம் அரசியலில் மிகவும் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. மகத்தான அரசியல் பாரம்பரியத்தைக்கொண்ட இந்திய காங்கிரஸ் கட்சிக்கு தலைமை தாங்குவதற்கு நேருவின் பேரனைத் திருமணம் செய்த இத்தாலியப் பெண்மணி இன்று தேவைப்படுகிறது. காலஞ்சென்ற ராஜீவ் காந்தியின் புதல்வர் ராகுல்காந்தி நேற்றைய தினம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவின் பல மாநிலங்களைப் பொறுத்தவரையிலும் கூட முன்னாள் முதலமைச்சர்களின் வாரிசு அரசியல் கணிசமானளவுக்கு ஆதிக்கம் செலுத்தித் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் குடும்பத்துக்கே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைப் பொறுப்புகள் முதுசமாக எழுதப்பட்ட ஒரு நிலைமையையே காணமுடிகிறது.

பாகிஸ்தானில் தூக்கிலிடப்பட்ட முன்னாள் பிரதமர் கல்பிகார் அலி பூட்டோவின் புதல்வியே பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவியாக இருந்துவருகிறார். பங்களாதேஷில் சதிப்புரட்சியின் போது கொல்லப்பட்ட ஜனாதிபதி ஷேய்க் முஜிபுர் ரஹ்மானின் புதல்வி ஹசினா அவாமி லீக் கட்சியின் தலைவியாகவும் படுகொலையுண்ட இன்னொரு ஜனாதிபதி ஸியாவுர் ரஹ்மானின் மனைவி பேகம் காலிதா பங்களாதேஷ் தேசிய வாதக் கட்சியின் தலைவியாகவும் இருக்கிறார்கள். மூன்று பெண்மணிகளும் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் பிரதமர்களாகவும் பதவி வகித்தனர். முன்னாள் தலைவர்களின் மனைவிமார், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள் கட்சித் தலைமைப் பதவிகளுக்கு வருவதும் அததைத் தொடர்ந்தும் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதுமான குடும்ப ஆதிக்க அரசியல் பாரம்பரியம் இவ்வாறாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இலங்கையைப் பொறுத்தவரை டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான முதலாவது அமைச்சரவை 1947 இல் அமைக்கப்பட்டபோது அது பெருமளவுக்கு ஒரு குடும்ப ஒன்றுகூடல் போன்றே காட்சியளித்தது. அப்போது காலி தொகுதியின் லங்கா சமசமாஜக் கட்சி எம்.பி.யாக இருந்த டபிள்யூ.தகநாயகா ஐக்கிய தேசியக் கட்சியை மாமன் மருமகன் கட்சி என்று நையாண்டி செய்தார். டி.எஸ்.சேனநாயக்கவின் மறைவுக்குப் பின்னர் மகன் டட்லி சேனநாயக்காவும் மருமகன் சேர் ஜோன் கொத்தலாவலையும் பிரதமர்களாகப் பதவி வகித்தனர். டட்லியின் மறைவையடுத்து ஐ.தே.க.வின் தலைமைத்துவத்தை ஜே.ஆர்.ஜெயவர்தன கைப்பற்றிய பிறகு சேனநாயக்க குடும்பத்தின் அரசியல் ஆதிக்கம் அஸ்தமித்தது. எஸ்.டபிள்யூ. ஆர்.டி.பண்டாரநாயக்கவின் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தலைமைத்துவம் கடந்த வருடம் நடுப்பகுதி வரை அவரது குடும்பத்தின் ஆதிக்கத்திலேயே இருந்தது. பண்டாரநாயக்கவின் மறைவுக்குப் பின்னர் மனைவியினதும் அடுத்து மகளினதும் தலைமையின் கீழ் இருந்த சுதந்திரக் கட்சி இப்போது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் ஆதிக்கத்திற்குள் வந்திருக்கிறது.

இலங்கையிலே குடும்ப அரசியல் ஆதிக்கம் என்பது பெருமளவுக்கு பண்டாரநாயக்க குடும்பத்துடனேயே அடையாளப்படுத்தப்பட்ட ஒன்றாக இருந்துவந்தது. சுதந்திரக் கட்சியின் தலைமைத்துவத்தை மகிந்த ராஜபக்ஷ கைப்பற்றியதையடுத்து கட்சிக்குள்ளும் ஆட்சியதிகாரத்திலும் அவரது குடும்பத்தவர்களின் செல்வாக்கு ஊடுருவுகின்ற விதத்தை நோக்கும்போது முன்னைய அரசியல் ஆதிக்கக் குடும்பங்கள் காட்டியிராத அதீத அதிகார முனைப்பொன்றை காணக்கூடியதாக இருக்கிறது. 2005 நவம்பர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற உடனடியாகவே மகிந்த ராஜபக்ஷ தனது மூதாதையரின் அரசியல் வாழ்வு பற்றிய பெருமைகளை நினைவூட்டத் தொடங்கினார். பெரிய தந்தையார் டி.எம்.ராஜபக்ஷ , தந்தையார் டி.ஏ.ராஜபக்ஷ போன்றவர்கள் ஏனைய அரசியல் ஆதிக்க குடும்பத்தவர்களுக்கு எந்தவிதத்திலும் குறைந்தவர்கள் அல்ல என்ற தோரணையில் அவர்களின் புகழ் பாடப்பட்டது.தெற்கில் நிலப்பிரபுத்துவ ஆதிக்க பாரம்பரியத்தைக் கொண்ட தனது குடும்பத்தின் செல்வாக்கை மேலும் வலுப்படுத்துவதற்கு ஜனாதிபதி ராஜபக்ஷ தற்போது தன்னாலான சகலதையும் செய்து கொண்டிருக்கிறார். ஜனாதிபதியின் விசேட ஆலோசகராக இருந்த இளைய சகோதரர் பசில் ராஜபக்ஷ கடந்த வாரம் பாராளுமன்றப் பிரவேசம் செய்திருக்கிறார். அவர் எந்த நேரத்திலும் அமைச்சரவைக்குள் சேர்க்கப்படலாம். எற்கெனவே மூத்த சகோதரர் சமால் ராஜபக்ஷ முக்கிய அமைச்சுப் பொறுப்புகளை தன்வசம் வைத்திருக்கிறார். முப்படைகளின் தளபதியான ஜனாதிபதியின் இன்னொரு இளைய சகோதரர் தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர். அதேவேளை, ஜனாதிபதியின் மூத்தபுதல்வர் நாமல் ராஜபக்ஷ அரசியல்களத்தில் முழுமூச்சாக இறங்குவதற்காக பயிற்சியெடுத்துக்கொண்டிருக

Edited by yarlpaadi

அரசியல் என்பது ஒரு வியாபாரம். இதன்மூலம் பெருமளவு பணத்தை சம்பாதிக்க முடிகின்றது. எனவே, பெற்றோர் தமது பிள்ளைகளை இந்த துறையில் பயிற்றுவிற்று வியாபாரத்தில் ஜாம்பவாங்களாக எதிர்காலத்தில் உருவாகுவதற்கு தீவிர முயற்சி எடுக்கின்றார்கள், திட்டங்கள் வகுக்கின்றர்கள். இதில் பிழை என்று கூறுவதற்கு எதுவும் இல்லை. வசதி, வாய்ப்புக்கள் உள்ளவர்கள் அனைவரும் இந்த வியாபாரத்தில் ஈடுபட முடியும். லாபம் அல்லது நட்டம் அடைவது அவரவர் திறமையை பொறுத்து இருக்கின்றது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.