Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

போதைப் பொருள் விவகாரத்தில் உணர்வு ரீதியான செயற்பாடு அவசியம் - அமைச்சர் டக்ளஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
12 SEP, 2023 | 04:02 PM
image
 

யாழ்ப்பாண மாவட்டத்தில் போதைப்பொருள் பாவனை மற்றும் பரவலை கட்டுப்படுத்துவதற்கு மாவட்ட மட்டத்திலான குழு ஒன்றினை அமைத்து இணைந்த நடவடிக்கையினை மேற்கொள்ளவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் யாழ் மாவட்ட செயலகத்தில் இன்று(12.09.2023) நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அரசாங்க அதிகாரிகள், வைத்திய அதிகாரிகள், பொலிஸார், மற்றும் பாதுகாப்பு தரப்பினர் உள்ளடக்கப்பட்டுள்ள குறித்த குழுவின் ஊடாக தகவல்களை பரிமாறி நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வடக்கு மாகாணத்தில் புனர்வாழ்வு நிலையம் அமைப்பது தொடர்பாகவும் அவதானம் செலுத்தினார்.

இதன்போது, கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, போதைப் பொருள் பாவனை என்பது இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தினையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கி வருகின்றமையினால், அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளில் அதிகாரிகள் உணர்வு ரீதியான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார். 

மேலும்,  இக்கலந்துரையாடலில், யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வனவளப் பாதுகாப்பு திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள காணிகளை விடுவிப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், சட்ட விரோத மணல் அகழ்வினை கட்டுப்படுத்தல், முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்துவது உட்பட பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டன.

இக்கலந்துரையாடலில், மாவட்ட அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், சுகாதார தரப்பினர் உட்பட்ட அரச அதிகாரிகள் மற்றுமா பொலிஸ் மற்றும் பாதுகாப்பு தரப்பினரும் கலந்து கொண்டனர்.

 

duk-5.jpg

 

duk-2.jpg

https://www.virakesari.lk/article/164419

  • கருத்துக்கள உறவுகள்

இருக்காத கஞ்சாவை புலிகள் கொண்டு வந்ததாக கதையளந்து எஜமானப் பிச்சை வாங்கித் திரிஞ்சவை.. இப்ப கஞ்சா வியாபாரத்திலும் கப்பம் வாங்கித்தான்.. வாழ்க்கையை ஓட்டினம். எல்லாம் ஒரு உணர்வோட தான் நடக்குது கண்டியளோ.

சாத்தான்கள் எல்லாம் வேதம் ஓதும் தேசமாகிவிட்டது சொறீலங்கா. அதுக்கு எனி மீட்சியே இல்லை. 

  • கருத்துக்கள உறவுகள்

அறிக்கை, ஆராய்வு, கலந்துரையாடல், தரவு  தீர்மானம் எடுப்பு,  எஜமானரிடம் கையளிப்பு. செயல் ...... பூச்சியம்.  அவர்கள் ஐ. நாவை ஏமாற்றுவது, இவர் மக்களை ஏமாற்றுவது.

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, satan said:

அறிக்கை, ஆராய்வு, கலந்துரையாடல், தரவு  தீர்மானம் எடுப்பு,  எஜமானரிடம் கையளிப்பு. செயல் ...... பூச்சியம்.  அவர்கள் ஐ. நாவை ஏமாற்றுவது, இவர் மக்களை ஏமாற்றுவது.

விடுதலைப் புலிகளது தாக்குதல்களுக்கான அச்சம் கொழும்பில் அதிகரித்திருந்தபோது சிறீலங்காப் புலனாய்வுத்துறை அப்போது டக்ளஸ் தேவானந்தாவின் உதவியை நாடியது,

அகன் பிரகாரம் கொழும்பிலும் அதன் சுற்றுவட்டாரப்பகுதியிலும் காணப்படும் தொலைபேசி உரையாடல்கள் அனைத்தையும் ஒட்டுக்கேட்டு தாக்குதலுக்கான சந்தர்ப்பங்கள் எனக் கருதக்கூடிய உரையாடல்கள் அனைத்தையும் கண்காணித்து அது எந்தப்பகுதியிலிருந்து வருகிறது என அறிந்து கண்ணிமைக்கும் நேரத்தில் ஈபிடிபியும் விசேட அதிரடிப்படை மற்றும் புலனாய்வுத்துறையினர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு கொழும்பில் ஏற்படக்கூடிய தாக்குதல்களைக் கட்டுப்படுத்துவதில் வெற்றியும் கண்டனர்,

இவைகள் அனைத்தையும் தாண்டியே சாதூர்யமாகப் புலிகளின் தாக்குதல்கள் அமைந்தன. இதில் புலிகள் பாவிக்கக்கூடிய சங்கேதச் சொற்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு அனைத்தும் கணணிமயப்படுத்தப்பட்டு அதிலிருந்து தகவல்களும் திரட்டப்பட்டன இவை அனைத்தையும் திறனாய்வு செய்வதற்கு ஈபிடிபி டக்ளஸ் குழு மலையகத்திலிருந்தும் நூற்றுக்கணக்கில் இளைஞர்களை பெரும்தொகை பணத்துக்காக ஆசைவார்த்தை சொல்லிப் பணிக்கமர்த்தியது.

அவர்களில் பலர் நிரந்தரமாக வாக்ணர் கூலிப்படைபோல டக்ளசுடன் பணத்துக்கான படையாகத் தொழில்பட்டனர் மலையக் இளையோரது வறுமையை சிங்களமும் டக்ளசும் பயன்படுத்திகொண்டார்.

பின்னர் இவர்களில் ப்ரும்பகுதியினர் வடக்குக்கு நகர்த்தப்பட்டு யாழ் நகரப்பகுதியிலும் அதிகளவாணோர் நெடுந்தீவிலும் முகாமில் கிட்டத்தட்ட கைதியாகவே வைத்திருந்தனர் அவர்களில் மாற்றுக்கருத்துடையோர் முரண்டுபிடிப்போரை கொலை செய்துவிட்டு லொறிற் டயர் போட்டு எச்சங்கள் எதுவுமில்லாது டிஸ்போஸ் பண்ணிவிட்டனர் இவைகளைக் கண்டவர்களில் சிலர் இப்போதும் வெளிநாடுகளில் வாழ்கிறார்கள், 

சரி விடையத்துக்கு வருகிறேன் அரசாங்கமும் டக்ளசும் நினைத்தால் சுமார் மூன்று மாத காலத்துக்குள் போதைப்பாவனை வினியோகம் விற்பனை மற்றும் வலைப்பின்னல்களை இல்லாது ஒழிக்கமுடியும் மேலே கூறியதுபோல் கொழும்பில் அமைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறைகளை வடிவமைத்தால் இலகுவாக இதை நிர்மூலமாக்க முடியும்.

ஏன் இதைவிட மிகவும் நவீன வழிமுறைகள் மற்றும் மென்பொருள்கள் இப்போது புளக்கத்தில் இருக்கு இதை வாசிக்கும் யாராலுமே இந்தப்போதைவஸ்து தொடர்பான அனைத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும்,

ஆனால் ஒன்று இப்ப்டிச் செயற்பட சிங்களம் அனுமதிக்காது காரணம் அவர்களது நோக்கமே எமது வலுவைச் சிதைப்பது டக்ளசதும் நோக்கமும் அதுவே.

பின்னர் எப்படி முடியும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.