Jump to content

புர்கா அணிய தடை… பாராளுமன்றம் ஒப்புதல்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

world-news-02.jpg

சுவிட்சர்லாந்து நாட்டில் பொது இடங்களில் புர்காக்கள் அணிய தடை விதித்து பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்விட்சர்லாந்து நாட்டில் வசித்து வரும் இஸ்லாமியர்கள் மற்றும் அந்நாட்டைச் சேர்ந்த சில பெண்கள் நிக்காப் எனும் முகத்தை மறைக்கும் துணிகள் மற்றும் புர்காக்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொது இடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் குழப்பம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதையடுத்து இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் கருத்து கணிப்பு  நடத்தப்பட்டது. இதில் பெரும்பான்மையானோர் நிக்காப்புகளை அணிய அனுமதிக்க வேண்டும் எனவும் புர்காக்களை அணிய தடை விதிக்கலாம் எனவும் வாக்களித்தனர்.

இதையடுத்து சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தெற்கு டிசினோ மற்றும் வடக்கு செயின்ட் காலன் ஆகிய மாகாணங்களில் விதிக்கப்பட்டிருந்த தடையை போலவே நாடு முழுவதும் தடை விதித்து சட்டம் இயற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

இதையடுத்து சுவிட்சர்லாந்து நாட்டின் மேலவை இதற்கு ஒப்புதல் அளித்து இருந்த நிலையில் நேற்று மக்களவையில் ஓட்டெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 151க்கு 29 என்ற வாக்குகள் வித்தியாசத்தில் புர்காக்கள் அணிவதை தடை செய்து சட்டம் இயற்றப்பட்டுள்ளது.

இதன்படி கண்கள் மட்டும் தெரியுமாறு நிக்காப் அணிவதற்கு தடை ஏதும் இல்லை. இருப்பினும் பொது இடங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் புர்காக்கள் அணிந்து பெண்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடையை மீறுவோருக்கு ஆயிரம் பிரான்க்ஸ் அபராதமாக விதிக்கப்பட உள்ளது. இது அமெரிக்க மதிப்பில் சுமார் 1,100 டொலர்கள் ஆகும். ஐரோப்பிய நாடுகளில் பெல்ஜியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய இரு நாடுகள் ஏற்கெனவே பொது இடங்களில் புர்கா அணிய தடை விதித்து சட்டம் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நன்றி – காமதேனு

https://thinakkural.lk/article/274003

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நம்ம காத்தான்குடி ஆட்கள்  அடுத்த வெள்ளிக்கிழமை மனுவுடன் ரெடியாகிவிடுவினம்....சுவிசில் புர்க்காவி மகிமைபற்றி சுவிசின்  ..காத்தான் குடி மாணவி விவுரஇ செய்தவ என்று யாழ் முசுலிம்பேப்பர் கொட்டை எழுத்த்ல் போட்டவையே அதுக்கு என்னாச்சு....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் குரானை வாசித்தால் ஏன் அவர்கள் அப்படி செய்யவேண்டுமென்று உங்களுக்கு விளங்கும். ஒருநாள் முஹம்மது அவர்கள் வழியில் போகும்போது தனது பெறா மகனின் மனைவி அரைகுறை ஆடையுடன் இருப்பதை கண்டு தன்னையே இழந்து விடடார். இது ஹதீஸில் எழுதப்பட்டுள்ளது. எனவே அவர்கள் இதனை தடுப்பதட்காகவே அப்படி செய்ய வேண்டுமென்று சொல்லுகிறார்கள். மற்றப்படி அந்த பெண்கள் யாருமே அப்படியான உடைகளை விரும்பி உடுப்பதில்லை. மேலும் அப்படி உடுத்தும்போது அவர்களுக்கும் (பெண்கள்) சில அனுகூலங்களுண்டு. அதனைஇன்கு எழுத விரும்பவில்லை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ஒரு குளிர் நாட்டில் எப்படி சாத்தியம் ஆகும் ?
குளிர்காலத்தில் எல்லோருமே முகத்தை மூடிக்கொண்டுதானே திரிவார்கள் ? 

இனி குளிருக்கு முகத்தை மூடினவனும் வெளிநாட்டு காரனாக இருந்து 
துவேசம் பிடித்த போலீஸ் இடம் மாட்டினால் அபாரதம்தான் போல 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Cruso said:

நீங்கள் குரானை வாசித்தால் ஏன் அவர்கள் அப்படி செய்யவேண்டுமென்று உங்களுக்கு விளங்கும். ஒருநாள் முஹம்மது அவர்கள் வழியில் போகும்போது தனது பெறா மகனின் மனைவி அரைகுறை ஆடையுடன் இருப்பதை கண்டு தன்னையே இழந்து விடடார். இது ஹதீஸில் எழுதப்பட்டுள்ளது. எனவே அவர்கள் இதனை தடுப்பதட்காகவே அப்படி செய்ய வேண்டுமென்று சொல்லுகிறார்கள். மற்றப்படி அந்த பெண்கள் யாருமே அப்படியான உடைகளை விரும்பி உடுப்பதில்லை. மேலும் அப்படி உடுத்தும்போது அவர்களுக்கும் (பெண்கள்) சில அனுகூலங்களுண்டு. அதனைஇன்கு எழுத விரும்பவில்லை. 

முகமதுவை எல்லாம் தெரிந்த வல்லவர் கடவுள் என்று கும்பிடுகிறோம் 
பெறாமகனின் மனைவியை தெரியவில்லை என்றால் சிக்கல் ஆகாதா? 

இது அடிப்படைக்கே ஆப்படிக்கும் கதையாக இருக்கிறது 

உலகம் இயக்கத்தில் இருக்க வேண்டும் என்றால் காமம் இருக்கவேண்டும் 
காமம் இல்லாத உலகம் அழிந்துவிடும் எல்லா உயிர்களும் காமத்தில்தான் பிறப்பெடுக்கின்றன 

பாவம் புண்ணியம் எல்லாம் நாம் இடையில் சேர்த்தது 
அதிலும் குறிப்பாக "பாவம்" என்ற சொல்லே 6-7ஆம் நூற்றாண்டில் கிறிஸ்தம் உருவாக்கியது
பெண்களை அடக்குமுறைக்குள் முதன் முதலில் தள்ளியவர்கள் கிறிஸ்தவர்கள்தான் 
அவர்களிடம் இருந்து கற்றுக்கொண்ட இஸ்லாமியர்கள் பின்பு குருவை மிஞ்சிய சிஷ்யர் ஆக்கிவிட்டார்கள் 

இப்போதும் மற்ற மத பெண்கள் தான் சினிமா மற்றும் அரைகுறை ஆடை கவர்ச்சி போன்றவற்றால் 
முஸ்லீம் சமூகத்து ஆண்களுக்கு காமத்தை தூண்டி அவர்கள்  அவர்களை ஒரு இயங்கு நிலையில் வைத்திருக்கிறார்கள். 

உலகில் எல்லா பெண்களும் மூடி கொண்டு எந்த விதியையும் மீறாது திரிந்தால் 
முக்கால்வாசி ஆண்கள் முனிவராகத்தான் இருப்பார்கள் 

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அனைவரும் ஒரு மாதிரி இல்லை. உண்மையில் தம்மை தமிழர் என உணர்வோர் சொற்பமாக இருக்கத்தான் செய்கிறனர். ஆனால் இவர் அணுகிய சூழமைவை வைத்து பார்த்தால் - காரியம் நடக்க கதை விட்டுள்ளார் என்றே நினைக்கிறேன்.
    • என்னது படம் இல்லாமலா🤣. படம் கதே பசுபிக்கில் ஏறும் போதே ஆரம்பித்து விட்டதே🤣. சுவாரசியமாக உள்ளது தொடருங்கள். அநேகமாக உங்கள் மூலம் டியூட்டி ப்ரீ விலையில் வாங்கி, வெளியில் விற்பார் என நினைக்கிறேன்.
    • எமது பக்கத்திலும்(பொதுமக்கள் தரப்பில்) யுத்தத்திற்கு கொடுத்த முன்னுரிமையை சமாதானத்திற்குக்/பேச்சுவார்த்தைக்குக் கொடுக்கவில்லை எனத் தோன்றுகிறது.  2005 பேச்சுவார்த்தை முறிவடைந்த சந்தர்ப்பத்தில் சமாதானத்திற்கு முன்னுரிமை கொடுக்கும்படி இருபகுதிப்  பொதுமக்களும் போராடியிருந்தால் நாட்டின் நிலை வேறுவிதமாக இருந்திருக்கலாம்.  🥲😥😥
    • Published By: RAJEEBAN 11 MAY, 2024 | 10:59 AM   தமிழ்நாட்காட்டியின் மிகவும் துயரமான நாட்களை முள்ளிவாய்க்கால் குறிக்கின்றது என தெரிவித்துள்ள அவர் முள்ளிவாய்க்காலின்  இறுதி இராணுவ நடவடிக்கையின் போது 169000 தமிழர்கள் கொல்லப்பட்டனர் என மதிப்பிடப்படுகின்றது இது ஒரு இனப்படுகொலை என பலர் கருதுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார். இலங்கை இராணுவம் யுத்தசூன்யவலயத்தில் கண்மூடித்தனமான குண்டுவீச்சினை மேற்கொண்டது படுகொலைகள் வலிந்து காணாமல் ஆக்கப்படுதல் போன்றவற்றில் ஈடுபட்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தமிழர்தாயகப்பகுதிகளான வடக்குகிழக்கில் நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு எதிரான இலங்கை இராணுவத்தின் தொடரும் ஒடுக்குமுறைகளை குறித்து கவலை வெளியிட்டுள்ள அவர் இந்த நினைவேந்தல் நிகழ்வுகளிற்கு எதிரான ஒடுக்குமுறைகள் குறித்து பிரிட்டன் தெளிவான எச்சரிக்கைகளை விடுக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். சுதந்திரமான வெளிப்படையான ஜனநாயக சமூகத்தில் மக்கள் நினைவேந்தலில் ஈடுபடுவதற்கு எதிராக அடக்குமுறையில் ஈடுபடமுடியாது சுதந்திரமான நியாயமான ஜனநாயகத்தில் நீங்க்ள இதனை செய்யவேண்டும் என கொல்பேர்ன் தெரிவித்துள்ளார். ஓவ்வொருவருடமும் நாங்கள் இதனை கேள்விப்படுகின்றோம் நினைவேந்தல் குழப்ப்படுவது குறித்த கதைகளை கேட்கின்றோம் மக்கள் காரணமில்லாமல் கைதுசெய்யப்படுகின்றனர் இதன் காரணமாக இதனை நிறுத்தவேண்டும் என்ற வலுவான செய்தியை பிரிட்டன் தெரிவிக்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். 2009 இல் இடம்பெற்ற சம்பவங்களை இனப்படுகொலை என பிரிட்டன் பிரகடனம் செய்வதற்கான தேவை குறித்த கேள்விக்கு பதிலளித்துள்ள அவர் இதற்கான முயற்சிகளில்  தானும் தமிழர்களிற்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவினரும் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். tamil guardian https://www.virakesari.lk/article/183220
    • கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரம் ஆரம்பம்   11 MAY, 2024 | 06:56 PM   கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வாரத்தை முன்னிட்டு  தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினரால் இன்று சனிக்கிழமை (11) கஞ்சி வழங்கும் நிகழ்வு ஆரம்பித்துவைக்கப்பட்டது. 2009 மே 18 முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்களுக்கு எதிராக இடம்பெற்ற இனப்படுகொலையை முன்னிட்டு மே 11ஆம் திகதி தொடக்கம் 18ஆம் திகதி வரை கஞ்சி வாரம் அனுஷ்டிக்கப்படுகிறது.  வருடாவருடம் கஞ்சி வாரம் இடம்பெற்றுவரும் நிலையில், இம்முறை தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர், கிழக்கில் மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மகிழடித்தீவில் 1990ஆம் ஆண்டு படுகொலை செய்யப்பட 152 பொதுக்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவுத்தூபியருகில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் வாரத்தை கட்சியின் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ் தலைமையில் ஆரம்பித்துவைத்தனர். இதன்போது கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு கஞ்சி வழங்கப்பட்டது.  https://www.virakesari.lk/article/183271
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.