Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜேர்மன் தொலைக்காட்சியில் ரணில்! நிலாந்தன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மன் தொலைக்காட்சியில் ரணில்! நிலாந்தன்.

ஜேர்மன் தொலைக்காட்சியில் ரணில்!    -நிலாந்தன்.-

ஜேர்மன் தொலைக் காட்சிக்கு ரணில் விக்கிரமசிங்க வழங்கிய பேட்டி உள்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை அவருக்கு ஆதாயமானது. அதே சமயம் வெளியுலகில் குறிப்பாக மேற்கு நாடுகளின் மத்தியில் அது அவருடைய பிம்பத்தை உடைக்க கூடியது.

முதலில் அது எப்படி உள்நாட்டில் அவருக்கு லாபகரமானது என்று பார்க்கலாம். அதில் அவர் மேற்கு நாடுகளுக்கு எதிரான ஆசியாவின் குரலை எதிரொலிக்கிறார். அதன்மூலம் இந்தியாவை,சீனாவை,ரஷ்யாவை சந்தோஷப்படுத்த முயற்சிக்கிறார். இன்னொருபுறம் யுத்த வெற்றிகளை அபகரிக்க முற்படும் மேற்குக்கு எதிரான சிங்கள பௌத்தத்தின் விட்டுக்கொடுப்பற்ற வீரமான குரல் போல அவர் காட்சியளிக்கிறார். அது உள்நாட்டில் அவருக்கு ஆதரவைப் பெருக்கும்.குறிப்பாக சிங்கள கடும்போக்காளர்கள் மத்தியில் அவருடைய பிம்பத்தை உயர்த்தும்.

அந்த நேர்காணலின் தொடக்கத்திலிருந்து நேர்கண்டவர் பெருமளவுக்கு எதிர்க் கணியமாகத்தான் கேட்கிறார்.பொருளாதார நெருக்கடியின் விளைவுகளைக் குறித்து அவருடைய கேள்விகள் ரணில் விக்கிரமசிங்கவை மெல்ல மெல்ல எரிச்சலடைய வைக்கின்றன. ஒரு கட்டத்தில் சனல் நாலு வெளியிட்ட வீடியோ தொடர்பான கேள்வியின் போது.ரணில் வெளிப்படையாகச் சினத்தைக் காட்டத் தொடங்குகிறார்.அதிலும் குறிப்பாக,அனைத்துலக விசாரணை பற்றிய கேள்வியின்போது அவர் ஊடகவியலாளரை கோபத்தோடு எதிர்கொள்கிறார். வெள்ளைக்கார நாடுகள் ஆசிய நாடுகளை இரண்டாம் தரமானவைகளாகப் பார்க்கின்றன என்ற குற்றச்சாட்டை அவர் முன் வைக்கின்றார்.அனைத்துலக விசாரணைக்கு முற்றுப்புள்ளி என்றும் கூறுகிறார்.

இதில்,மேற்கத்திய நாடுகள் ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளை தரக்குறைவாக பார்க்கின்றன என்ற விமர்சனம் புதியது அல்ல.இந்திய வெளியுறவு அமைச்சரின் உரைகளிலும் இதே தொனி காணப்படுகிறது. ஏற்கனவே தான் பதவியேற்ற புதிதில்,ரஷ்ய-யுக்ரைன் மோதல் தொடர்பான கேள்வி ஒன்றின்போது,ரணில் விக்கிரமசிங்க ஆசிய மைய அணுகுமுறை தொடர்பாக பேசியிருக்கிறார்.இது பொதுவாக ஆசிய,ஆபிரிக்க,லத்தீன் அமெரிக்க வட்டாரங்களில் காணப்படும் ஒரு கருத்து. உலகத்தை மேற்கத்திய கண்கொண்டு பார்க்க முடியாது என்பது. அது சரி.

ஆனால், எங்கே பிழைக்கின்றது என்றால், தன் நாட்டில் தமிழ் மக்களை இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தும் ஒரு அரசியல் பாரம்பரியத்திலிருந்து வந்த ரணில் விக்கிரமசிங்க, வெள்ளைக்கார நாடுகளைப் பார்த்து எங்களை இரண்டாம் தரமானவர் களாக நடத்துகிறீர்கள் என்று கூறுவதுதான். எனவே வெள்ளைக்கார நாடுகளைப் பார்த்து;ஒரு ஊடகவியலாளரை பார்த்து; எங்களை இரண்டாந்தரமாணவர்களகக் கருதுகிறீர்கள் என்று கூறத் தேவையான யோக்கியதை எந்த ஒரு சிங்கள அரசியல் தலைவருக்கும் கிடையாது.

மேலும்,பிரித்தானிய மைய ஊடகமான சனல் நாலின் மீதான கோபத்தில் அவர் ஜெர்மனிய ஊடகத்தின் மீதும் பாய்கிறார். அது மேற்கத்திய ஊடகங்கள் மீதான ஒரு பொதுவான விமர்சனமாகவும் வெளி வருகின்றது. ஆனால் இங்கு கேள்வி எதுவென்றால், மேற்கத்திய ஊடகங்களும் சரி, எனைய நாட்டு ஊடகங்களும் சரி, இலங்கை விவகாரத்தில் தலையிடும் அளவுக்கு இலங்கையின் நிலைமை இருக்கிறது என்பதுதான். இங்கே இனங்களுக்கு இடையே இடைவெளிகள் உண்டு என்பதுதான்.தனக்குள் பிளவுண்ட ஒரு நாட்டை வெளிச் சக்திகள் இலகுவாகப் பிரித்துக் கையாளப் பார்க்கும் என்பதுதான் கடந்த பல தசாப்தகால இலங்கையின் அனுபவம் ஆகும்.

அதிலும் குறிப்பாக, போர்க்காலத்தில் தமிழ் மக்களைத் தோக்கடிப்பதற்கு உலகம் முழுவதும் இருந்து உதவிகளைப் பெற்ற ஒரு நாடு, குறிப்பாக, தமிழ் மக்களை ஒடுக்குவதற்கு மேற்கத்திய நாடுகளின் ஆசிர்வாதத்தை பெற்ற ஒரு நாடு, இப்பொழுது அனைத்துலக விசாரணை என்று வரும்பொழுது மட்டும் அது உள்நாட்டு விவகாரம் என்று கூறப் பார்க்கின்றது. தமிழர்களைத் தோற்டிப்பதற்கு வெளிநாட்டு உதவிகள் வேண்டும். ஆனால் தமிழர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கு வெளிநாட்டு உதவிகள் வேண்டாம்.எப்படி இருக்கிறது தர்க்கம்?

ஆனால் இது ரணிலுடைய தர்க்கம் அல்ல. சிங்கள பௌத்த கூட்டு உளவியலின் தர்க்கம்.தமிழ் மக்களைத் தோற்கடிப்பதற்கு எந்தப் பேயோடும் கூட்டுச் சேரத் தயார் என்று 1980களில் ரணிலுடைய மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தன கூறியிருந்தார். தமிழ் மக்களைத் தோற்கடிப்பதற்கு நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட சில பேய்கள் நாட்டுக்குள் நிரந்தரமாகத் தங்கி விட்டன என்பதுதான் இப்போதுள்ள இலங்கை தீவின் யதார்த்தம் ஆகும்.

இதில் தொகுத்துக் கவனிக்க வேண்டிய விடயம் என்னவென்றால், தமிழ் மக்களைத் தோற்கடிப்பதற்கு வெளி உதவிகளைப் பெற்ற அதே அரசுக் கட்டமைப்பு இப்பொழுது தமிழ் மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கத்தக்க வெளிநாட்டு விசாரணையை வேண்டாம் என்று கூறுகின்றது. அதாவது இங்கே தமிழ் மக்களைத் தோற்கடிப்பதுதான் அவர்களுடைய ஏக இலக்கு. அனைத்துலக உதவிகளைப் பெறுவதும் அதற்கே, அனைத்துலக உதவிகளை நிராகரிப்பதும் அதற்கே.

இவ்வாறு கூறுவதன் மூலம் ரணில் விக்கிரமசிங்க உள்நாட்டில் சிங்கள பௌத்த கடும்போக்கு வாக்குகளைத் திரட்ட முடியும் என்று நம்புகின்றார். அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் வாக்குகள் தனக்கு கிடைப்பதில் நிச்சயமின்மைகள் உண்டு என்று அவருக்குத் தெரிகிறது.தன்னை ராஜபக்சக்களோடு சேர்ந்துப் பார்த்தால், தமிழ் மக்கள் தனக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்றும் அவர் அஞ்ச முடியும். மேலும் கிழக்கில் பிள்ளையானின் வாக்குகளும் வடக்கில் தேவானந்தாவின் வாக்குகளும் கிழக்கில் ஓரளவுக்கு முஸ்லிம் வாக்குகளும் தவிர வடக்கு,கிழக்கு தமிழ் மக்களின் வாக்குகள் கொத்தாக தனக்கு விழாது என்பது அவருக்கு தெரிகிறது. தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் தனக்கு எதிராக நிற்கும் என்பதும் அவருக்கு தெரிகிறது. தனக்குத் தமிழ் வாக்குகள் கிடைப்பதில் இருக்கும் நிச்சயமின்மைகளைக் கவனத்தில் எடுத்து அவர் சிங்கள பௌத்த வாக்குகளை அதிகம் கவர்வது என்று முடிவெடுத்திருக்கலாம்.

அதனால்தான் அந்த நேர்காணலில் அவ்வளவு கடுமையாக நடந்திருக்கலாம்.ஆனால் இந்த விடயத்தில் சனல் நாலைப் போலவே ஜேர்மனிய ஊடகமும் அவருக்கு மறைமுகமாக நன்மைதான் செய்கின்றது.இரண்டுமே யுத்தவெற்றி வாக்குகளை அவரை நோக்கி ஒப்பீட்டளவில் திருப்பக் கூடியவை. ஜேர்மனிய தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் முதல் விளைவு இது. இரண்டாவது விளைவு, மேற்கத்திய அரசியல் பரப்பில் அவருக்குள்ள கவர்ச்சியை அந்த நேர்காணல் குறைக்கும்.

அவர் இந்தியாவைப் போல, ரஷ்யாவைப் போல, சீனாவை போல,மேற்கின் ஆதிக்கத்துக்கு எதிரான ஆசியாவின் குரலாக தன்னைக் காட்டப் பார்க்கின்றார்.ஆனால் அடிப்படையில் அங்கே தர்க்க வழு உண்டு.நாடு மேற்கத்திய நாடுகளிடமும் மேற்கத்திய நிதி நிறுவனங்களிடமும் அதிகம் தங்கியிருக்கும் ஒரு காலகட்டம் இது.மேற்கைப் பகைத்தால் பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவிகள் நெருக்கடிக்கு உள்ளாகும் என்பது அவருக்கு நன்றாக விளங்கும்.எனினும் அவர் மேற்கத்திய நாடுகளுக்கு எரிச்சலூட்டும் விதத்தில் ஏன் அந்த நேர்காணலில் கதைத்தார்?

மேற்கு நாடுகளுக்கு தன்னை விட்டால் வேறு தெரிவு இல்லை என்று அவர் நம்புகின்றாரா? மேற்கத்திய நிதி நிதி முகவர் அமைப்புகள் தன்னை விட்டால் வேறு யாரையும் கையாள்வது கடினம் என்றும் அவர் நம்புகிறாரா? சஜித் தன்னை ஒரு தலைவராக இனிமேல்தான் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. அதற்கு அவர் ஜேவிபியுடன் கூட்டச் சேர வேண்டியுள்ளது. ஆனால் ஜேவிபியை மேற்கு நாடுகளும் இந்தியாவும் ஆர்வத்தோடு பார்க்கவில்லை.இடதுசாரிப் பண்புடைய ஜேவிபி பலமடைவதை மேற்கு நாடுகள் முன்னெச்சரிக்கையோடுதான் அவதானிக்கின்றன. எனவே தெற்கில் காணப்படும் தலைமைத்துவ வெற்றிடம் ரணிலுக்கு வாய்ப்புகளை அதிகப்படுத்துகிறது. அவருடைய பேரத்தையும் அதிகப்படுத்துகின்றது.

அந்த துணிச்சலில்தான் அவர் துணிந்து இந்திய வெளியுறவு அமைச்சரைப் போல ஆசிய மைய நோக்கு நிலையில் இருந்து கருத்து தெரிவிக்கின்றாரா? அண்மையில் அவர் கியூபாவுக்கு சென்றிருந்த போதும், ஐநா கூட்டத் தொடரில் பங்கெடுப்பதற்கு அமெரிக்காவிற்குச் சென்றிருந்த போதும், பெர்லினுக்கு சென்றிருந்தபோதும், அவர் பேசியவற்றைத் தொகுத்துப் பார்த்தால் ஒரு சுயாதீனமான ஏனைய நாடுகளில் தங்குகிறாத முன்னுதாரணம் மிக்க ஒரு நாட்டின் தலைவரைப் போல அவர் பேசுவதைக் காணலாம்.

ஆனால் அவ்வாறு பெருமைப்படத்தக்க ஒரு அரசியல் கலாச்சாரத்தை அவர் பிரதிபலிக்கவில்லை என்பது அவருக்கும் தெரியும்; மேற்கு நாடுகளுக்கும் தெரியும். இங்கே உறவுகளை தீர்மானிப்பது அற நெறிகளோ நீதி நெறிகளோ அல்ல முழுக்க முழுக்க பச்சையான வியாபாரத்தனமான அரசியல், பொருளாதார,ராணுவ நலன்சார் தேவைகளே உறவுகளைத் தீர்மானிக்கின்றன. அந்த நலன் சார் விளையாட்டுக்குள் தன்னுடைய பேரம் அதிகமானது என்று ரணில் நம்புகிறார். அதனால்தான் ஜேர்மன் தொலைக்காட்சியில் அவ்வளவு வீரத்தைக் காட்டினார்.

https://athavannews.com/2023/1352863

 

  • கருத்துக்கள உறவுகள்

முழு­மை­யாக  கோட்­டா­வாக மாறிய ரணில்

Published By: VISHNU

09 OCT, 2023 | 12:45 PM
image

என்.கண்ணன்

ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஜேர்­ம­னிக்­கான பய­ணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்­பிய நிலையில், ஜேர்­ம­னியில் 'டி. டபிள்யூ' ஊட­கத்­துக்கு அவர் வழங்­கிய செவ்வி, கடந்த திங்­கட்­கி­ழமை வெளி­யா­கி­யது.

இது­வரை காலமும் யாரும் பார்த்­தி­ராத ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் முகத்தை- அந்த செவ்வி வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது. இலங்­கை­யிலும் உலகம் முழு­வ­திலும், பர­ப­ரப்­பாக பேசப்­பட்ட, பார்க்­கப்­பட்ட, விமர்­சிக்­கப்­ப­டு­கின்ற செவ்­வி­யாக இது அமைந்­தி­ருக்­கி­றது.

முழு­மை­யாக கோட்­டா­பய ராஜபக்ஷவாக மாறிய ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை இந்தச் செவ்­வியில் காண முடிந்­தது.

ஜனா­தி­ப­தி­யாக பொறுப்­பேற்ற பின்னர் அவர், ‘அர­க­லய’ போராட்­டக்­கா­ரர்­களை ஒடுக்க ஆரம்­பித்த போதே ரணில் விக்­கி­ர­ம­சிங்க, கோட்­டா­பய ராஜபக்ஷவாக மாறத் தொடங்­கினார்.

2009ஆம் ஆண்டு போர் இறுதிக் கட்­டத்தை எட்டிக்  கொண்­டி­ருந்த போது, அவுஸ்­தி­ரே­லிய ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ருக்கு, அப்­போது பாது­காப்புச் செய­ல­ராக இருந்த கோட்­டா­பய ராஜபக்ஷவாக செவ்­வி­ய­ளித்­தி­ருந்தார்.

அந்தச் செவ்வி பதிவு செய்­யப்­ப­டு­வ­தற்கு முன்னர் தான் ஊட­க­வி­ய­லாளர் வித்­தி­யா­தரன் கொழும்பில் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

அவ­ரது கைது தொடர்­பாக அந்தச் செவ்­வியில் அவுஸ்­ரே­லிய ஊட­க­வி­ய­லாளர் கேள்வி எழுப்­பிய போது, கோட்­டா­பய ராஜபக்ஷ அடைந்த சீற்­றமும், அதற்கு அவர் பதி­ல­ளித்த முறையும் - அந்தக் காலத்து அச்­சு­றுத்தல் நிலைக்கு உதா­ர­ண­மாக அமைந்­தி­ருந்­தது.

அந்தச் செவ்­விக்கு இணை­யா­ன­தாக, குறிப்­பிடக் கூடிய வகையில் தான், ஜனா­தி­பதி ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் ஜேர்­ம­னியின் டி.டபிள்யூ ஊட­கத்­துக்­கான செவ்வி அமைந்­தி­ருக்­கி­றது.

கோட்­டா­பய ராஜபக்ஷ பாது­காப்புச் செய­லா­ள­ராக, ஜனா­தி­ப­தி­யாக இருந்த கால­கட்­டங்­களில் பல செவ்­வி­களை வழங்­கி­யி­ருந்­தாலும், அவுஸ்­ரே­லிய ஊட­க­வி­ய­லா­ள­ரு­ட­னான செவ்­வியின் போது நடந்து கொண்­டது போல, அவர் கோபப்­பட்­ட­தில்லை. நிதா­ன­மா­கவே பதி­ல­ளித்­தி­ருந்தார்.

மஹிந்த ராஜபக் ஷ ஜனா­தி­ப­தி­யாக இருந்த கால­கட்­டத்­திலும் சரி, பத­வி­யி­ழந்த போதும் சரி- கடி­ன­மான கேள்­வி­க­ளுக்குக் கூட, சிரித்­த­படி அல்­லது சிரித்து சமா­ளித்­த­படி, பதி­ல­ளித்­தி­ருக்­கிறார்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் கூட இது­வரை காலத்­திலும், அவ்­வா­றான ஒரு­வ­ராகத் தான் ஊட­கங்­க­ளினால் அறி­யப்­பட்­டி­ருந்தார். ஆனால், இப்­போது அவர், தனது இன்­னொரு பக்­கத்தை ஊட­கங்­க­ளிடம் காண்­பித்­தி­ருக்­கிறார்.

நாட்டு மக்­க­ளுக்கும், சர்­வ­தேச சமூ­கத்­துக்கும் அவர் தனது மற்­றொரு முகத்தை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்­கிறார்.

அவர் தனது இயல்பு நிலையை இழந்து இந்தச் செவ்­வியை எதிர்­கொண்­ட­மைக்கு செவ்வி கண்ட ஊட­க­வி­ய­லா­ளரின் கேள்­விகள் தான் கார­ணமா? அல்­லது அதற்கு முன்­ன­ரான தொடர் நிகழ்­வுகள் அவரை கடுப்­பான நிலைக்குத் தள்­ளி­யதா என்ற கேள்­விகள் இப்­போது இருக்­கின்­றன.

ஏனென்றால், இந்தச் செவ்­வியில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, வெளி­யிட்ட கருத்­துக்கள், ஊட­க­வி­ய­லா­ளரை நோக்கி எழுப்­பிய கேள்­விகள், கேள்­வி­களை எழுப்­பிய தொனி, ஊட­க­வி­ய­லா­ளரை அச்­சு­றுத்தும் வகையில் பதி­ல­ளித்த முறை எல்­லாமே, வேறு­பட்ட ஒன்­றாகத் தான் இருந்­தது.

அவர் செவ்­வியின் தொடக்­கத்தில் இருந்தே, முகத்தை இறுக்­க­மாக வைத்­தி­ருந்தார். இது அவர் ஜேர்­ம­னியில் எதிர்­கொண்ட இறுக்க நிலையை அல்­லது அண்­மைய அர­சியல் மற்றும் பிற சூழ்­நி­லை­களால் அவர் நெருக்­க­டிக்குள் தள்­ளப்­பட்­டி­ருக்­கின்ற நிலையின் விளை­வாக இருக்க கூடும்.

இந்தச் செவ்­வியில் அவர், கேள்வி கேட்க உங்­க­ளுக்கு என்ன உரிமை என்று ஊட­க­வி­ய­லா­ளரைப் பார்த்து கேட்­கிறார் ரணில்.

ஜனா­தி­பதி ரணில் இவ்­வ­ளவு சிறு­பிள்­ளைத்­த­ன­மாக கேள்­வியை எழுப்­பி­யி­ருப்­பதும், முட்­டாள்­த­ன­மாக பேசு­கி­றீர்கள் என்று அதட்­டி­யதும், சாதா­ரண விட­யங்கள் அல்ல.

“எங்­களை இரண்டாம் தரத்­த­வர்­க­ளாக நினைக்­கி­றீர்­களா? இந்த மேற்­கு­லக மனோ­நி­லையில் இருந்து வெளியே வர வேண்டும். அதனை நிறுத்­துங்கள், நான் நிறுத்­து­கிறேன்.” என்று கூறும் அவர் ஒரு கட்­டத்தில் செவ்­வியில் இருந்து வெளியே போவ­தா­கவும் அச்­சு­றுத்­து­கிறார். இவை­யெல்லாம் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விடம் இருந்து எதிர்­பார்த்­தி­ராத பிர­தி­ப­லிப்­புகள்.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை எப்­போதும் நரித்­த­ன­மான அர­சி­யல்­வா­தி­யா­கவே இலங்கை மக்கள் பார்த்­தி­ருக்­கி­றார்கள். அவர் சிரித்துச் சிரித்துப் பேசுவார். ஆனால்,  செய­ல­ளவில் அந்த நெகிழ்வு இருக்­காது என்­பது பொது­வாகத் தெரியும்.

அதற்கு மாறாக, ஜேர்­ம­னிய ஊட­கத்­திடம் அவர் மேற்­கு­லக ஊட­கங்­களை விமர்­சித்த விதம், சனல் 4 போன்ற ஊட­கங்­களின் அறிக்­கை­களால் அவர் மிகவும் பாதிக்­கப்­பட்­டி­ருக்­கிறார், நெருக்­க­டியை எதி்ர்­கொண்­டி­ருக்­கிறார் என்­பதை புரிந்து கொள்ள முடி­கி­றது.

சனல் 4 குற்­றச்­சாட்டு என்று குறிப்­பிட்­டதும் அவர் கொந்­த­ளிக்க ஆரம்­பித்து விடு­கிறார். “முன்னாள் சட்ட மா அதிபர் குற்­றம்­சாட்­டினார், முன்னாள் குற்றப் புல­னாய்வுப் பணிப்­பாளர் குற்­றம்­சாட்­டினார் அதை­யெல்லாம் விட்டு விட்டு, சனல் 4 குற்­றச்­சாட்டை தூக்கிக் கொண்டு வரு­கி­றீர்­களே, சனல் 4 என்றால் புனி­த­மா­னதா?” என்று அவர் சீற்­ற­ம­டை­கிறார்.

அதன் தொடர்ச்­சி­யாக சுதந்­தி­ர­மான சர்­வ­தேச விசா­ரணைக் கோரிக்கை தொடர்­பாக கேள்வி எழுப்­பிய போதும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இன்னும் கோபப்­ப­டு­கிறார்.

அவர் ஈஸ்டர் ஞாயிறு தாக்­குதல் தொடர்­பாக மாத்­தி­ர­மன்றி, எந்­த­வொரு விவ­காரம் குறித்தும் சர்­வ­தேச விசா­ர­ணையை அர­சாங்கம் நடத்­தாது என்று அறு­தி­யிட்டுக் கூறு­கிறார்.

இதனை ரணில் விக்­கி­ர­ம­சிங்க அமை­தி­யாக கூற­வில்லை. மேற்­கு­லக ஊட­கங்­க­ளையும், மேற்கு நாடு­க­ளையும் அவர், வம்­புக்கு இழுக்­கிறார்.

ஜேர்­ம­னி­யிலோ, பிரித்­தா­னி­யா­விலோ ஏதா­வ­தொரு விட­யத்­துக்கு சர்­வ­தேச விசா­ரணை நடத்­தப்­பட்­டி­ருக்­கி­றதா, இலங்­கை­யையும். ஆசி­யா­வையும் மட்டும் ஏன் அவ்­வாறு நடத்­து­கி­றீர்கள்? என்று ரணில் விக்­கி­ர­ம­சிங்க வெளிப்­ப­டுத்­திய கோபம், மேற்­கு­ல­கத்தின் அண்­மைய நகர்­வுகள் அவரை கடும் அதி­ருப்­திக்­குள்­ளாக்­கி­யி­ருக்­கி­றது என்­பதை உணர்த்­து­கி­றது.

மனித உரிமை மீறல் குற்­றச்­சாட்­டு­க­ளையும், நாட்டில் ஜன­நா­யக விரோத செயல்கள் இடம்­பெ­று­வ­தான குற்­றச்­சாட்­டு­க­ளையும் நிரா­க­ரித்­தி­ருக்­கின்ற ரணில் விக்­கி­ர­ம­சிங்க, ஐ.நா மனித உரி­மைகள் ஆணை­யாளர் பணி­ய­கத்தின் அறிக்­கை­யையும் நிரா­க­ரித்­தி­ருக்­கிறார்.

சாந்­த­மான அர­சி­யல்­வா­தி­யாக அறி­யப்­பட்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்க, நிதா­ன­மாகப் பதி­ல­ளிக்க கூடி­யவர். அவர் ஏன் இவ்­வாறு ஜேர்­ம­னிய ஊட­கத்தின் செவ்வி முழு­வதும் கடு­க­டுப்­பா­ன­வ­ராக இருந்தார், சீற்­றத்தை வெளிப்­ப­டுத்­தினார் என்­பது முக்­கி­ய­மான கேள்­வி­யாக இருக்­கி­றது.

இதற்கு இரண்டு கார­ணங்கள் சொல்­லப்­ப­டு­கி­றது. ஒன்று, அண்­மைக்­கா­லத்தில் அர­சாங்கம் எதிர்­கொண்­டுள்ள நெருக்­க­டிகள்.

சனல் 4 வெளி­யிட்ட ஆவ­ணப்­ப­டத்தில் கூறப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுகள், அர­சாங்­கத்தை நெருக்­க­டிக்குள் தள்­ளி­யி­ருக்­கி­றது. இந்த விவ­காரம் அர­சாங்­கத்தை எந்த நிலைக்குள் தள்ளி விடுமோ என்ற பயத்தை அவ­ருக்குள் ஊட்­டி­யி­ருக்­கி­றது.

அது­போ­லவே, நீதி­பதி சர­வ­ண­ராஜா நாட்டை விட்டு வெளி­யே­றிய விடயம், அந்தச் செவ்­வியில் இடம்­பெ­றாத போதும், அவர் செவ்­வி­ய­ளித்த கால­கட்­டத்தில், அந்த விவ­கா­ரமும் சர்­வ­தே­சத்தின் கைக்குச் சென்­றது, ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு சீற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும். மேற்­கு­லகின் செல்­லப்­பிள்ளை என்று கரு­தப்­பட்ட ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வுக்கு மேற்­கு­லகம் அளித்து வரு­கின்ற நெருக்­க­டிகள், அவரால் எதிர்­பார்க்­கப்­ப­டா­த­தாக இருக்­கலாம்.

சீனா விட­யத்தில் அவ­ரது அர­சாங்கம் இந்­தியா, அமெ­ரிக்கா, ஜப்பான் போன்ற நாடு­களின் அழுத்­தங்­க­ளுக்கு முகம் கொடுத்­தி­ருக்­கி­றது.

அண்­மையில் அமெ­ரிக்கா சென்­றி­ருந்த வெளி­வி­வ­கார அமைச்சர் அலி சப்ரி, புவிசார் அர­சியல் குறித்த கரி­ச­னைகள் குறித்து, இலங்­கை­யுடன் அமெ­ரிக்கா அல்­லது ஜப்பான் பேச­லாமே தவிர, மூன்­றா­வது தரப்பு நாடு பற்றி பேசக் கூடாது என்று தகவல் அளித்­தி­ருக்­கிறார்.

இதுவும் மேற்­கு­லக அழுத்­தங்­களின் வெளிப்­பா­டு­களில் ஒன்று தான்.

பல பக்க நெருக்­கு­வா­ரங்­களில் சிக்­கி­யி­ருக்கும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, சர்­வ­தேச விசா­ரணைக் கோரிக்கை தொடர்­பான கேள்­வி­களை சீற்­றத்­துடன் எதிர்­கொண்­டி­ருக்­கலாம்.

செவ்­வியில் ஊட­க­வி­ய­லா­ளரை விஞ்சி கேள்­வி­களைத் தொடுத்து அவரைக் குழப்பி, அவ­ரது இலக்கை அடைய விடாமல் தடுப்­பது ஒரு உத்தி.

ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும் அவ்­வாறு தான், தனக்­கெ­தி­ராக போடப்­படக் கூடிய பந்­து­களை தவிர்ப்­ப­தற்­காக, அந்தக் களத்தில் இயல்­பற்ற சூழலை உரு­வாக்க முனைந்­தி­ருக்­கிறார்.

அதன் மூலம் அவர் உரு­வாக்க முயன்ற விம்பம் தான், இரண்­டா­வது காரணம்.

அதா­வது, சர்­வ­தேச அரங்கில் இலங்­கையின் பெயரை காப்­பாற்றி விட்டார், குற்­றச்­சாட்­டு­களை ஒதுக்கி விட்டு மேற்­கு­ல­கத்தை பிளந்து கட்டி விட்டார் என்­றெல்லாம், சிங்­களத் தேசி­ய­வா­திகள் சிந்­திக்கக் கூடிய வகையில் ஒரு உள­வியல் போரை நடத்­தி­யி­ருக்­கிறார் ரணில்.

விரைவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் வேட்பாளராக இருப்பாரா- இல்லையா என்ற உறுதியான நிலை இல்லாத போதும், தன்னைக் கதாநாயகனாக நிறுவுவதற்கு இந்தச் செவ்வியைப பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் ரணில்.

மேற்குலக ஊடகங்களை கடுமையாக எதிர்த்து, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை அவர் காட்டமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

மஹிந்த ராஜபக் ஷ ஆட்சியில் இருந்த போது எதனைக் கூறினாரோ, கோட்டாபய ராஜபக் ஷ எதனை கூறினாரோ அதனையே தான் ரணிலும் கூறியிருக்கிறார்.

ஆனால், அவர் முன்னையவர்களை விட ஆக்ரோசமாக கொடுத்திருக்கும் பதிலும், செவ்வியை எதிர்கொண்ட விதமும், அவரை சிங்கள மக்கள் கதாநாயகனாக பார்க்கக் கூடிய நிலையை உருவாக்கியிருக்கிறது.

இதுதான் ரணில் எதிர்பார்த்த இலக்காக இருந்தால்- இந்தச் செவ்வி அவருக்கு 100 சதவீத வெற்றி எனலாம்.

அதேவேளை, ரணில் விக்கிரமசிங்க தன்னைப் பிரபலப்படுத்திக் கொள்ள ஜேர்மனிய ஊடகத்தைப் பயன்படுத்தியிருந்தாலும் கூட, இன்னொரு கோட்டாவை சிங்கள மக்கள் விரும்புவார்களா என்பதை அவர் சிந்திக்கத் தவறினாரா என்ற கேள்வியும் இருப்பதை மறந்து விடக் கூடாது.

https://www.virakesari.lk/article/166447

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
On 9/10/2023 at 05:56, தமிழ் சிறி said:

முதலில் அது எப்படி உள்நாட்டில் அவருக்கு லாபகரமானது என்று பார்க்கலாம். அதில் அவர் மேற்கு நாடுகளுக்கு எதிரான ஆசியாவின் குரலை எதிரொலிக்கிறார். அதன்மூலம் இந்தியாவை,சீனாவை,ரஷ்யாவை சந்தோஷப்படுத்த முயற்சிக்கிறார்.

பிராந்திய அரசியல் என்பது இது தான்..... அதை மீறி யாரும் கை வைக்க முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.