Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மயிலத்தமடு, மாதவனை விவகாரத்துக்கு உடனடித் தீர்வு இன்றேல் போராட்ட வடிவத்தை மாற்றி வீரியத்துடன் முன்னெடுக்க உத்தேசம் - சாணக்கியன் எச்சரிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

(நா.தனுஜா)

மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர் பிரச்சினைக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்ததைப்போன்று எதிர்வரும் ஓரிரு வாரங்களில் உரியவாறான தீர்வு வழங்கப்படாவிடின், தமது போராட்ட வடிவத்தை மாற்றி மேலும் வீரியத்துடன் முன்னெடுப்பதற்குத் திட்டமிட்டிருப்பதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

 மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு, மாதவனை கால்நடை வளர்ப்பு பண்ணையாளர்கள் தமது மேய்ச்சல் நிலங்கள் பெரும்பான்மையின சிங்களவர்களின் குடியேற்றங்களால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாகவும், அவர்களை அங்கிருந்து வெளியேற்றுமாறும் வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக அப்பகுதியில் தொடர் போராட்டத்தை முன்னெடுத்துவருகின்றனர்.

 இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் இவ்விவகாரம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது. 

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், மகாவலி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம், கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், இலங்கைத் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், இவ்விவகாரத்துடன் தொடர்புடைய ஏனைய கட்டமைப்புக்களின் அதிகாரிகள், கிழக்கு மாகாண சிரேஷ்ட பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் இச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

 இச்சந்திப்பின்போது மயிலத்தமடு, மாதவனை பிரதேச பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு உடனடியாக உரிய தீர்வை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணித்துள்ளார். 

இருப்பினும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொண்டு, போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பண்ணையாளர்களின் பிரச்சினைகளைத் தெளிவுபடுத்திக்கூறிய தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன், அச்சந்திப்பில் பங்கேற்றிருந்த பொலிஸ் மற்றும் இராணுவ அதிகாரிகள் இவ்விவகாரம் தொடர்பில் செயற்திட்ட விளக்கமொன்றை (Presentation) முன்வைத்ததாகவும், அது அப்பகுதியில் சட்டவிரோதமாகக் குடியேறியிருப்போரை நியாயப்படுத்தும் விதத்திலேயே அமைந்திருந்ததாகவும் சுட்டிக்காட்டினார்.

 அதேபோன்று ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராக இருந்தாலும்கூட, பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமால் குணரத்ன மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் என்போர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பொதுஜன பெரமுன சார்ந்தோராக இருப்பதனால், ஜனாதிபதியினால் பிறப்பிக்கப்படும் பாதுகாப்புசார் உத்தரவுகள் உரியவாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றதா என்பதில் சந்தேகம் நிலவுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 அதுமாத்திரமன்றி மயிலத்தமடு, மாதவனை பிரதேசத்தில் எத்தனை பேர் குடியேற்றப்பட்டிருக்கின்றார்கள் என்ற ஜனாதிபதியின் கேள்விக்கு பொலிஸ் அதிகாரி ஒருவர் 'சுமார் 40 குடும்பங்கள்' என்று பதிலளித்ததாகவும், அதனையடுத்து 'அங்கு சுமார் 300 பேர் வரை குடியேற்றப்பட்டிருப்பதாகக் கூறப்படுகின்றதே? அவ்வாறெனில் ஒரு குடும்பத்தில் 10 - 15 பேர் இருக்கின்றார்களா?' என ஜனாதிபதி மீண்டும் கேள்வி எழுப்பியதாகவும் சாணக்கியன் தெரிவித்தார்.

எனவே இவ்விடயத்தைப் பொறுத்தமட்டில் அச்சந்திப்பில் கலந்துகொண்டிருந்த அதிகாரிகளில் பலர் பொய்யான விடயங்களையே கூறியதாக சுட்டிக்காட்டிய சாணக்கியன், இப்பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வை வழங்குமாறு ஜனாதிபதி கூறினாலும், தீர்வு கிடைக்கும் வரை தாம் அதனை நம்பப்போவதில்லை என்றார். 

மேலும் எதிர்வரும் வாரம் வரை பொறுத்திருக்கப்போவதாகவும், அதற்குள் பண்ணையாளர்களின் பிரச்சினைக்கு உரியவாறான தீர்வை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படாவிடின் தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் போராட்டத்தின் வடிவத்தை மாற்றி, மேலும் வீரியத்துடன் முன்னெடுப்பதற்குத் உத்தேசித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

மயிலத்தமடு, மாதவனை விவகாரத்துக்கு உடனடித் தீர்வு இன்றேல் போராட்ட வடிவத்தை மாற்றி வீரியத்துடன் முன்னெடுக்க உத்தேசம் - சாணக்கியன் எச்சரிக்கை | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு புத்த சிலையே வைத்தாயிற்று...இனி என்ன செய்யப்போறியள்...

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அதிகரிக்கும் உயிரிழப்புகள்!

“மயிலத்தமடு, மாதவனை பகுதியில் அத்துமீறிய குடியேற்றவாசிகளினால் பல்வேறு அட்டூழியங்கள் அரங்கேற்றப்பட்டு வருவதாகவும், எதிர்காலத்தில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம்” எனவும் பண்ணையாளர்கள் கவலை தெரித்துள்ளனர்.

சித்தாண்டி மகா வித்தியாலயத்திற்கு முன்பாக மயிலத்தமடு, மாதவனை பண்ணையாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டமானது 47வது நாளாகவும் இன்றும்(01) நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் நேற்றைய தினம்  முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது கருத்துத் தெரிவித்த பண்ணையாளர்கள்”  ஜனாதிபதி தமக்கு வழங்கி உறுதிமொழிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை. எமது மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய செயற்பாடுகள் தொடர்பில் இதுவரையில் நடவடிக்கையெடுக்காத பொலிஸார் தமது கோரிக்கையினை வலியுறுத்தி முன்னெடுத்த போராட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் அத்துமீறிய குடியேற்ற செயற்பாட்டாளர்கள் அப்பகுதியில் பல்வேறு அட்டூழியங்களை செய்துவருகின்றனர். குறிப்பாக வாய்பேச முடியாத கால்நடைகளைக்  கொடுமைப் படுத்தி வருகின்றனர். இதுவரையில் அத்துமீறிய குடியேற்ற செயற்பாட்டாளர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் முன்னெடுக்காத நிலையில் நாம் எமது தாம் வாழ்வாதாரத்தினை இழந்து தவித்து வருகின்றோம்” இவ்வாறு கவலை தெரிவித்துள்ளனர்.

https://athavannews.com/2023/1356583

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

மயிலத்தமடு மாதவனை விவகாரம் : நீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படுமா ? - வேலன் சுவாமிகள் கேள்வி

Published By: VISHNU 13 NOV, 2023 | 03:41 PM

image

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அரச காணியில் அத்துமீறிய குறியேறியவர்களை வெளியேறுமாறு ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி அன்வர் சதாத் கட்டளை பிறப்பித்துள்ள நிலையில் குறித்த கட்டளையை உரிய தரப்பினர்கள் நடைமுறைப்படுத்துவார்களா என பொத்துவில் பொலிக்கண்டி பேரியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வேலன் சுவாமிகள் கேள்வி எழுப்பினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் மகாவலி அதிகார சபைக்கு சொந்தமான அரச காணியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவித்து 13 பேருக்கு எதிராக ஏறாவூர் நீதிமன்றில் மகாவலி அதிகார சபையினால் கடந்த கடந்த 2023.09.22 அன்று தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு தீர்ப்புக்காக இன்று  திங்கட்கிழமை எடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறியதாக தெரிவிக்கப்பட்ட 13 பேரும் நீதிமன்றில் ஆஜராகி இருந்தனர்.

மகாவலி அதிகார சபை சார்பாக மன்றுக்கு அரச சட்டத்தரணி டில்கானி டி சில்வா ஆஜராகியிருந்தார். 

இந்நிலையில் அதிகாரம் பெற்ற அதிகாரிகளின் எந்த வகையான ஆவணமும் நீதிமன்றுக்கு அத்துமீறி குடியேறியவர்கள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்களினால் சமர்ப்பிக்கப்படாததால் மட்டக்களப்பு மயிலத்தமடு மாதவனை பகுதியில் அத்துமீறி குடியேறிய குறித்த 13 பேரையும் வெளியேறுமாறு நீதவான் கட்டளை பிறப்பித்தார்.

நீதிமன்ற தீர்ப்பை வரவேற்கின்ற நிலையில் ஏற்கனவே உயர் நீதிமன்றத்தில் மயிலத்தமடு மாதவனை சட்டவிரோத குடியேற்றக்காரர்களை வெளியேறுமாறு தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு கிடப்பில் கிடக்கிறது.

இதனை இழுத்தடிப்பு செய்வதற்காக மகாவலி அதிகார சபையும் வனவளத் திணைக்களமும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் வழக்கை தாக்கல் செய்தார்கள்.

எனினும் திங்கட்கிழமை (13) ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி சட்டவிரோத குடியேற்றக்காரர்களை வெளியேற்றுமாறு கட்டளை பிறப்பித்துள்ள நிலையில் குறித்த கட்டளை உரிய முறையில் நிறைவேற்றப்படுமாஎன்ற சந்தேகம் எழுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/169198

  • கருத்துக்கள உறவுகள்
On 17/10/2023 at 08:28, alvayan said:

அங்கு புத்த சிலையே வைத்தாயிற்று...இனி என்ன செய்யப்போறியள்...

அதை அகற்றி விடடார்கள். மீண்டும் வைத்தார்களோதெரியவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.